Saturday, October 04, 2014

நேர்மையே உன் விலை என்ன?

மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நள்ளிரவு வரைக்கும் அலைபேசியில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டேயிருந்தது. புதிய எண்கள். புதிய குரல்கள். ஆனால் சொல்லி வைத்தாற் போல் வசைமாறி பொழிந்து தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். 

நீங்கள் மிரட்டப்பட்டவரா? அல்லது மிரட்டியவரா? இரண்டு இடத்திலும் கொஞ்சம் தான் வித்தியாயம் இருக்கும். 


ஒவ்வொரு இடத்திலும் மிரட்டுபவரை கவனித்துப் பாருங்கள். மனதளவில் கோழையாக, தன் உழைப்பை நம்பாமல், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு போட்டி போட முடியாமல், விரும்பாமல், போட்டிக்கான தன் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அத்தனை பேர்களும் மிரட்டும் நபர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் திறமைசாலிகள் அத்தனை பேர்களும் எதிரிகளாகத் தான் தெரிவார்கள். 

இது தான் சமூக நியதியாக உள்ளது. 

வாழ்க்கையென்பது "இப்படித்தான் வாழ வேண்டும்" என்று கட்டுப்பெட்டி தனத்திற்குள் உங்களைப் பொறுத்தியிருந்தால் இது போன்ற சமயங்களில் உங்கள் நிலைமை  திண்டாட்டமாகத்தான் இருக்கும். அல்லது "என் வாழ்க்கை இப்படித்தான். ஆனால் 'எதையும் தாங்கும் இதயம்' எனக்குண்டு" என்பவராயின் இன்னும் கொஞ்சம் மேலே வந்து படபடப்பு குறைந்து பக்குவமாக அணுக முடியும். 

இதற்கு அடுத்த நிலை ஒன்றுண்டு. எப்பேற்பட்ட மோசமான குணாதிசியங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச் சூழ்நிலையிலும் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருத்தல். நான் பலபடிகளைக் கடந்து இந்த நிலைக்குத் தான் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்து இருந்தேன். 




3 comments:

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி!

ESWARAN.A said...

ஜோதிஜியிடம் ...இந்த மிரட்டெலெல்லாம் செல்லாது... என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது...

Rathnavel Natarajan said...

இவர்கள் அரசாங்கத்தை மிஞ்சி விடுவார்கள் போலும். அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.