Wednesday, June 26, 2013

(பிரிக்கப்பட்ட) திவ்யா இளவரசனுக்கு ஒரு கடிதம்

இன்று வரையிலும் அரசியல் மற்றும் சமூக தளத்தில் பலரின் கடிதங்கள் குறித்து இன்னமும் பெருமையாக பேசப்பட்டு கொண்டு தான் வருகின்றது. குறிப்பாக பண்டித ஜவர்ஹர்லால் நேரு தனது சிறைக்காலத்தில் தனது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதப்பட்ட கடிதத்தை முக்கிய இடத்தில் வைத்து போற்றுகின்றார்கள். 

கலைஞர் கூட இன்றுவரைக்கும் தனது உடன்பிறப்புகளுக்கு மடல் தீட்டிக் கொண்டு தான் இருக்கின்றார். அந்த வகையில் சென்ற வாரம் ஒரு கடிதம் படித்தேன்.

மருத்துவர் ராமதாஸ் குறித்து எனது பார்வையை எழுதிய போது எட்டுத் திசையிலும் இருந்து ஏராளமான அம்புகள் என் மேல் வந்து தாக்கியது. அதனைத் தொடர்ந்து இந்த சாதி குறித்த பார்வையை சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரையாக எழுதிய போது கூட அது மாறவில்லை.  

ஆனால் சென்ற வாரம் கல்கி இதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் வன்னி அரசு அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தைப் படித்த போது அடுத்து அரை மணி நேரம் எந்த வேலையிலும் ஈடுபட முடியாத அளவுக்கு  யோசிக்க வைக்கும்படி  எழுதியிருந்தார்.  

மாற்றுப் பார்வை, மாற்றுச் சிந்தனைகள் என்று எல்லா நிலையிலும் நாம் பார்க்கும் சமூகம் நமக்கு தினந்தோறும் ஏதோவொன்றை நமக்கு கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது.

நிச்சயமாக வன்னி அரசு எழுதிய கடிதம் என்பது ஒரு ஆவணப் பொக்கிஷம். 

முக்கியமாக இந்த கடிதத்தில் சமூகத்தில் உள்ள ஆட்சி, அதிகாரம், அரசியல், நிர்வாகம், பல்வேறு சங்கங்கள் என்று எல்லா இடங்களிலும் புரையோடிப் போன இந்த சாதியின் தாக்கத்தை இதைவிட அழகாக எவரும் விவரித்து விட முடியாது.  

தனிபபட்ட கட்சி சார்ந்த ஒருவரின் பார்வையாக இந்த கடிதத்தை நீங்கள் படித்து விட்டு என் மேல் பாய்ந்தால் அறிஞர் அண்ணா சொன்ன "எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்" என்பதால் கல்லெறிபவர்களை அன்போடு வரவேற்கின்றேன். 

நிச்சயம் இந்த கடிதம் என் பதிவில் இருக்க வேண்டும் என்பதால் இன்று இதை இங்கே வெளியிடுகின்றேன்.. 
                                       ))))))))((((((((((((((

செல்லங்கொட்டாய் திவ்யாவுக்கு வணக்கம்.

திவ்யா தவறாக நினைக்க வேண்டாம். இக்கட்டான ஒரு மன நிலையில் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போது இப்படி ஒரு மடல் எழுதுவது உறுத்தலாக இருக்கலாம். இரண்டு தனி நபர்களின் காதல் திருமணமாக இருந்தால் கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். இரண்டு சமூகங்களுக்கிடையிலான மோதாலாக ஊதிப் பெருக்கப்பட்டு தலித் மக்களின் குடிசைகள் வரை எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டதால் மட்டுமே இதை எழுத வேண்டி நேர்ந்தது.

அக்டோபர் 14 (2012) ஆம் நாள் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 

ஊராரின் குடும்ப கௌரவ பேச்சும் சாதிவெறியர்களின் நயவஞ்சகத்தையும் கொடூரமான அவமதிப்பையும் தாங்கமுடியாத உனது தந்தை நாகராஜ் மரணத்திற்குப் பிறகு, நத்தம் காலனி ரத்தச் சிவப்பாய் தீக்கிரையானதை மறந்துவிட முடியாது. 

இளவரசனோடான உங்கள் திருமணத்துக்குப் பிறகு நத்தம் காலனியிலுள்ள அத்தனை வீடுகளுமே தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டிலிருந்த டி.வி., வாசிங் மெசின், பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் என அனைத்துமே உடைத்து நொறுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டன. 

வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டு எலும்புக்கூடுகளாய் நின்றுகொண்டிருந்தன. உனது ஆசைக் கணவன் இளவரசனின் வீடு பார்க்கவே பரிதாபமாய்க் கிடந்தது. கொஞ்சம் பாத்திரங்களும் பாதி எரிந்த நிலையிலிருந்த மின் விசிறிகளுமே வீடு இருந்ததற்கான சாட்சியங்களாய் இருந்தன. 

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாற்றிக்கொள்ள துணிமணிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் நத்தம் காலனி மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கொண்டிருந்தார்கள். நத்தம் காலனியே சுடுகாடு போலக் காட்சியளித்ததை தொலைக்காட்சிவழி நீ பார்த்திருப்பாய்.

நத்தம் காலனி மட்டுமல்லாது, கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனிகள்கூட சாதிவெறியர்களிடமிருந்து தப்பவில்லை. 

அடுத்தவேளை சாப்பிடக்கூட வழியில்லாமல் பொதுமந்தையில் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். சேமித்து வைத்த நெல், வரகு, கம்பு போன்ற உணவு தானியங்கள் கருகிக் கிடந்ததைப் பார்க்கும்போது 'இந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன?' என்று நெஞ்சுருகாதோர் இருக்க முடியாது. சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாமே பறிபோய்விட்டன. 

பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர்களது சான்றிதழ்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இன்னமும் அந்த சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் எத்தனையோ பிள்ளைகள் பரிதவித்துக் கிடக்கிறார்கள். நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும் எந்தப் பயனும் இல்லை.

நர்சிங் படித்த உன்னைப் போன்றோருக்குக் கல்விச் சான்றிதழின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் எதற்காக நடத்தப்பட்டன என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! தனிப்பட்ட முறையில் உனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நீ விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்ய முடிவெடுத்ததுதான் காரணம். 

இளவரசன் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்து திருமணம் செய்தாய். தனிப்பட்ட உனது வாழ்க்கையை விரும்பியவனோடு அமைத்துக்கொள்ள இளவரசன் சார்ந்த சமூகம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல என்பதை நீ அறிவாய். அத்தனையையும் அம்மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.

உனது காதல் திருமணம் போலவே பல திருமணங்கள் உங்கள் பகுதிகளில் நடந்திருந்தாலும் உன்னுடைய காதலுக்கு ஏற்பட்ட நெருக்கடிபோல் யாருக்கும் ஏற்பட்டதில்லை. உன்னைக் காப்பதற்காகவே வாராது வந்த மாமணிபோல் களமிறங்கினார் மருத்துவர் இராமதாசு. 

நாடகக் காதல் செய்து உன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தார். 

ஆனாலும், அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் நீ இளவரசனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தாய். 

உன்னுடைய ஒற்றைக் காதல் திருமணம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டது. காதல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நத்தம் காலனிதான் எடுத்துக்காட்டு என்று மருத்துவர் இராமதாசு தலைமையிலான குச்சிக்கொளுத்திக் கும்பல் கொள்ளிக்கட்டைகளோடு பிரச்சாரம் செய்ததை நீ கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாய்.

இளவரசனிடமிருந்து உன்னைப் பிரிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார்கள். உன்னைக் கெஞ்சினார்கள்; அச்சுறுத்தினார்கள். உன் தாய் தேன்மொழி, தம்பி மணிசேகரனைக் காட்டி 'பாச மிரட்டல்' செய்தார்கள். ஆனாலும் நீ எதற்கும் அஞ்சாது இளவரசனின் குடும்பத்தோடுதான் வாழ்ந்தாய். அப்போது உனக்காக இளவரசனின் குடும்பம் பட்டபாடுகள் சாதாரணமானதல்ல என்பதை உடனிருந்தே அறிந்திருப்பாய். 

வீடு கூட வாடகைக்குக் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பாய். எப்போது யார் வந்து என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு உன்னையும் இளவரசன் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. 

உன்னை மட்டுமல்லாது சேரியையும் அந்தப் பதைபதைப்பு விட்டுவைக்க வில்லை. எந்தச் சேரி எந்த நேரத்தில் எரியுமோ என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது.

பயந்ததைப் போலவே, மரக்காணத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மா மரங்கள், பலா மரங்கள் எரிக்கப்பட்டன. மரக்காணம் சேரியின் காவல்தெய்வமான அங்காளம்மனைக்கூட சாதிவெறியர்கள் விட்டுவைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க எத்தனையோ பேருந்துகள் கொளுத்தப்பட்டன. சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மருத்துவர் இராமதாசு உள்ளிட்டோரைக் கைது செய்த பிறகு ஓரளவு குறைந்தது. 

ஆனாலும் பதற்றம் குறையவில்லை. இவை அத்தனைக்கும் உனது காதல் திருமணத்தையை அடிப்படைக் காரணமாகக் காட்ட முனைந்ததை நீ அறிவாய்.

பாவம், உனது காதலுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன தொடர்பு? 

தமிழகம் முழுக்க தலித் எதிர்ப்புணர்வை, தலித்துகள் மீதான காழ்ப்புணர்வைப் பரப்பிவிட்டார்கள். அனைத்து சமுதாயத்திற்கும் பொது எதிரியாக தலித்துகளைச் சித்தரித்தார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் என்று பொது விதியை உருவாக்க முயற்சித்தார்கள். 

ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த பொதுப்புத்தி இதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்தை, மானுட நாகரிகத்தை நூறாண்டுகளுக்குப் பின் இழுத்துச் சென்றதை, படித்த உன்னால் உணராமல் இருக்க முடியாது.

இதிகாசங்களில் இலக்கியங்களில் இல்லாத காதலையா நீயும் இளவரசனும் செய்துவிட்டீர்கள்? 

மலைசாதிப் பெண்ணான வள்ளியை முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பின்பும் அவனே தமிழ்க் கடவுள் என்று வணங்கினார்கள். 

ஆனால் அந்த முருகன் வழியில் நீ திருமணம் செய்தவுடன் உன்னையும் இளவரசனையும் கொல்லத் துடிக்கிறார்கள். நீ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ஆனபோது உன் முகத்தில் அந்தக் கொலை பயத்தைப் பார்க்க முடிந்தது. 

வழக்கறிஞர்கள் புடைசூழ நீ மிரட்சியோடு வந்ததைப் பார்த்தபோது உனது நிலை என்ன என்று தெரிந்தது. உன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்களோ? 

தைலாபுரம் தோட்டத்தில் எத்தனை நாள் சிறை வைக்கப்பட்டாயோ? 

"கீழ்சாதிப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதி கவுரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டியே!" என்கிற வசைச் சொற்களால், நடைபிணமாய் நிலைகுலைந்துபோய் நீ நீதிமன்றம் வந்ததைப் பார்க்க முடிந்தது. 

செய்தியாளர்களிடம்கூட சுதந்திரமாகப் பேசவிடாமல், உன்னை இழுத்துச் சென்ற போக்கு பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு உள்ளது என்பதைத்தான் காட்டியது. அம்மா வீட்டிற்கே போவதாய் நீதிபதிகளிடம் சொல்லிவிட்டதாகத் தீர்ப்பில் சொன்னார்கள். நீ மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

சகோதரி திவ்யா, உனக்குப் பிடித்த இளவரசனோடு பத்து மாதங்கள் வாழ்ந்தாய். இப்போது உங்கள் குடும்பத்தோடு போகப்போவதாய்ச் சொல்கிறாய். யாருடன் இருப்பது என்பது உன் அடிப்படை உரிமை. தாராளமாகப் போகலாம்.

ஆனால்...நீ போகும்போது ஏனம்மா அழுதாய்?

இளவரசன் முகத்தைக்கூடப் பார்க்காமல் எப்படியம்மா போக முடிந்தது?

நீ எடுத்த முடிவு உன் சுயமான முடிவுதானா அல்லது மிரட்டலால் எடுத்த முடிவா?

அம்மா, தம்பியின் அழுகையால் எடுத்த முடிவா?

நாடகக் காதல்.. நாடகக் காதல் என்று ஊர் ஊராய்ப் புலம்பிய சாதிச் சொந்தங்களின் அழுத்தங்களால் எடுத்த முடிவா? 

அல்லது இந்தச் சமூகத்தில் வாழவே விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

தான் வாழ்ந்த காலமெல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணில் இன்னமும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

எத்தனையோ புரட்சிகரக் குழுக்கள் உருவாகி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போராடும் தமிழ் மண்ணில் விரும்பியவனோடு வாழ்வதுகூட முடியாத காரியம் என்கிற கோபத்தால் எடுத்த முடிவா?


ஜீன்ஸ் போட்டும், டி-சர்ட் போட்டும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதால்தான் தலித்துகள் இப்படி திருமணம் செய்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, பெண்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்கிற கோபத்தில்கூட பெண்ணுரிமை இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடாத போக்கால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாயா?

சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக அனைத்துச் சமுதாயப் பேரவை என்கிற பெயரில் ஊர் ஊராய் சாதிவெறியைத் தூண்டிக் கலவரம் செய்த பிறகும் அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்காமல், கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவு தருகிற திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரே இப்படி முடிவெடுக்கிறாரே, 

நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயத்தினால் எடுத்த முடிவா?

'ஏனம்மா தாலியைக் கழற்றிவிட்டாய்? அம்மாவோடு தானே போகப் போகிறாய், போய்விட்டு வரவேண்டியதுதானே' என்று கேட்காமலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மவுனம்தான் இந்த முடிவுக்குக் காரணமா? 

'உன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தானே மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, குடியிருக்கக்கூட வீடுகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அம்மாவுடன் போ' என்று நீதிபதிகள் சொல்லாததால்தான் உன்னால் இப்படி எளிதாக முடிவெடுக்க முடிந்ததா?

துப்பட்டாவால் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறியபோது நீதியே சாதி அமைப்பு முறைக்குள் முடங்கிக் கிடக்கிறது என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்ந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததா திவ்யா?

இத்தனை அவநம்பிக்கைகளோடு வாழ முடியாதுதான். உன்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணைக்கூட பாதுகாக்க முடியவில்லையென்றால், வெறுமனே புரட்சி, பெண்ணுரிமை, சமூகநீதி, சட்டம், நீதி இவையெல்லாம் என்ன எழவுக்கு என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. 

உனது மனசாட்சியைப் போலவே. உன்னுடைய இயலாமையும், சாதி ஆதிக்கமும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகிவிட்டது. 

பரவாயில்லை! 

உன்னுடைய சொந்த ஊரான செல்லங்கொட்டாய்க்குப் போகும்போது நத்தம் காலனியைக் கடந்துதான் நீ போவாய். 

உன்னுடைய காதலுக்குச் சாட்சியமாய், தியாகமாய் நின்றுகொண்டிருக்கும் அந்த நத்தம் காலனியை ஒரு முறை பார். 

உனக்காகப் பாதிப்பை ஏற்றுக்கொண்ட அந்த மக்களைப் பார். 

நானும் உன்னை துன்புறுத்த விரும்பவில்லை. 

ஆனால் உன் வாழ்வு முழுவதும் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் நெடி இருக்கத்தான் செய்கிறது. 

ஆனாலும் திவ்யா, நீ ஓணாய்களை நம்பிப் போகிறாய். 

உன் அப்பாவை சாதிவெறியர்கள் கொன்றதைப் போல, உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. 

ஏனென்றால் நீ எங்கள் வீட்டு மருமகள். சாதி அமைப்பை உடைத்து நீ விரைவில் வருவாய் என நம்புகிறோம்.

எதிர்பார்ப்புடன்
சாதி அமைப்பை உடைக்கும் களத்தில்..
வன்னி அரசு

52 comments:

saidaiazeez.blogspot.in said...

என்று தணியும் இந்த "வெறி"?

நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?

தனி மனித சுதந்திரம் என்பது ஏட்டிலும் சினிமாவிலும் சாராய கடைகளிலும் மட்டுமே கிடைக்கும் போல!

தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா...
என்று பொட்டில் அடித்தது போல இருக்கிறது கடிதம்!

எம்.ஞானசேகரன் said...

No Coments......

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமை...

வவ்வால் said...

"எழுத்து சித்தர்"ஜோதிஜி,

//மருத்துவர் ராமதாஸ் குறித்து எனது பார்வையை எழுதிய போது எட்டுத் திசையிலும் இருந்து ஏராளமான அம்புகள் என் மேல் வந்து தாக்கியது.//

சும்மா அம்பு விட்டாங்களா? காரணம் என்னனே தெரியாதவரா?

அப்படி எனில் இப்போ "வன்னியரசுவின்" கடிதத்தினை ஏன் பகிர வேண்டும், இக்கடிதத்தில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு "காரணக்கர்த்தா" யார் என இன்னும் உங்களுக்கு தெரியலையா?

வன்னியரசுவின் கடிதம் "ஜாதிய அரசியலின் கோரமுகத்தினை" பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது,ஆனால் அதனை நீங்கள் சிலாகிச்சு பகிர்வது தான் மிகப்பெரிய காமெடியா தெரியுது :-))

எந்த அரசியல் கட்சில சேர்ந்தாலும் உங்களூக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு,அமைதிப்படை அம்மாவாசை எல்லாம் பிச்சை எடுக்கணும் :-))

Aruna said...

திவ்யா

கூட்டுறவுத்துறையில் பணிப்புரிந்த அவள் அப்பாவுக்கு பென்சன் கிடையாது. தம்பி இப்பொழுது தன் +2 முடித்து இருக்கிறான். அம்மாவுக்கு வீட்டிக்கு வெளியே ஒன்றும் தெரியாது. சொத்தாக இருக்கும் ஒன்றை ஏக்கர் நிலம் வானம் பார்த்த பூமி. ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அது பத்தாது. வாழ்க்கையின் கடுமையை அந்தக் குழந்தைப் பெண் உணர்ந்து பார்க்கும் பொழுது அவளுக்குத் தென்படுகிற ஒரே நம்பிக்கை அவளின் கல்வி மட்டும் தான்.

இன்றைய மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவை கல்வியே. வேலைப் பெற தகுதி தரும் கல்வியைப் பெறுவதே இளம் வயதின் தலையாயக் கடமை.

ப்ளஸ் டூ படிப்பு ஒரு இன்றியமையாத காலம். இந்த இரண்டாண்டுக் காலத்தில் சரியாக உழைத்து மதிப்பெண் பெறுகின்ற குழந்தைகளுக்கு சரியான மேற்படிப்பிற்கான இடம் கிடைத்து வாழ்கை எளிதாகிவிடும்.இந்தக் காலத்தில் படிப்பை விட்டு விட்டு காதல் என்று ஏமாந்து போகிற பெண்கள் வாழ்க்கை சீரழிவை மட்டுமே சந்திக்கின்றன.
இப்படிப் படிப்பை பாதியில் விட்ட பெண்கள் தங்கள் படிப்பை முடிப்பதே இல்லை. சில மாதங்களில் காதல் கசந்து,வாழ்க்கையின் கடுமையும், வறுமையின் தாக்கமும் ஏற்படும் பொழுது உணர்கிற குழப்பங்கள் காரணமாக பலர் தற்கொலை முடிவுக்கு போகிறார்கள். இந்த ஆபத்தான கலாச்சாரம் பரவுவதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாக்கள் தான். தொடர்ந்து ப்ளஸ் டூ படிக்கும் பெண்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுவதாகவும் காட்டுவதன் மூலம் அந்த இளம் வயது பெண்களுக்கு தவறான மனோபாவத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தன்னை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றிப் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தை இட வேண்டிய வாழ்வின் மிக மிக்கியமான காலம் 17வயதிலிருந்து 22 வயது வரை. அந்தக் காலம் தான் பருவ மாற்றம் ஏற்பட்டு ஆண், பெண் இடையே அபரிதமான ஈர்ப்பு உண்டாகும் காலமும், இந்த கவர்ச்சியால் வாழ்க்கையின் முக்கியக் கடமைகளை மறந்து பாதை மாறிச் செல்லாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இளம் பருவதினரைப் பாதுகாக்க வேண்டும்.

திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொன்னான வயதில் திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற பெரிய பொறுப்புகளைப் பற்றி நினைப்பதோ, ஈடுபடுவதோ வாழ்க்கையையே அழித்துவிடும்.

திவ்யா போன்ற பெண்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், காதலின் மூலம் சமத்துவத்தைத் நிறுவத் துடிக்கும் அரசியல்வாதிகளையும், காதல் திருமணம் மூல்ம் சாதியை ஒழிக்கத் திட்டம் போடும் புரட்சியாளர்களையும், கலப்பு மணத்தால் சமூக நீதியை நிலைநாட்ட மேடைப்போட்டு கூச்சல் போடும் கிழவர்களையும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்:

'தயவு செய்து அவர்களைப் படிக்க விடுங்கள்!’ 'தயவு செய்து அவர்களைப் படிக்க விடுங்கள்!’

Thanks to http://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-Dr-Senthil-Divya-Interview.html

Anonymous said...

புர்ச்சி ( புரட்சி அல்ல , புர்ச்சி ) செய்யும் , புர்ச்சியை பிளான் பண்ணி செய்யும் , ரோமியோக்களே எங்கள் தங்கைகளையும் , மகள்களையும் தயவு செய்து படிக்க விடுங்கள்.

விவசாயம் பண்ணி ஓட்டாண்டியாய் நாங்கள் இருந்தது போதும். அய்யாவின் உதவியுடன் எங்கள் அடுத்த தலைமுறை தலையெடுக்க வேண்டிய நேரத்தில் , புர்ச்சி பண்ணி , புர்ச்சி பண்ணி எங்க நிம்மதியை கெடுக்காதீர்கள். உங்க புர்ச்சி ல தீய வைக்க.

புர்ச்சி பண்ண எங்கள் வீட்டு படுக்கை அறையை தேர்வு செய்யாத.

நல்லா படி .. நிறைய சம்பாதி .. எல்லாம் சரியாகும் .

திரும்பவும் கேட்டுகிறேன் ...
எங்கள் தங்கைகளையும் , மகள்களையும்
தயவு செய்து படிக்க விடுங்கள்.
தயவு செய்து படிக்க விடுங்கள்.
தயவு செய்து படிக்க விடுங்கள்.

வல்லவன் said...

எல்லாம் சரிதாங்க

தப்பா எடுக்கலன்ன நான் ஒன்னு கேட்கலாமா ?

உங்களுக்கு 3 பொண்ணுங்க இருக்காங்க இல்ல

காலேஜ் படிக்கும் போது இப்படி நான் ஒருத்தரை லவ் பண்ணுறேன்னு சொன்ன ஓகே சொல்லுவீங்களா என்ன ??? உடனே கல்யாணம் பண்ணி வச்சிருவேங்கள ?????

படிச்சி வேலைக்கு சேந்து நல்ல செட்டில் ஆகி அப்பறம் லவ் பண்ணட்டும் ....


அத விட்டுட்டு படிக்குற புள்ளைய தள்ளிகிட்டு போவன்கலாம் கேட்ட லவ்வாம் ....

அந்த பொண்ணு மேலயும் தப்பு இருக்கு.....

Unknown said...

கவுண்டர் சாதியும், வன்னியர் சாதியும் கூட்டம் நடத்தினால் அது சாதியம்... ஆனால் நாம, நம்ம சாதிக்கூட்டம் நடத்துனாலும் சரி, எல்லா இடத்துலயும் நம்ம சாதிய புகுத்தி அத எப்புடி எல்லாம் நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்த முடியுமோ அப்புடியெல்லாம் பயன்படுத்தினாலும் சரி, என்ன பிரச்சினை வந்தாலும் சரி, அதுக்கு நம்ம சாதிய கேடயமா பயன்படுத்தலாம். இத பத்தி எழுதறதுக்கும் பேசுறதுக்கும் பல அறிவு ஜீவிங்க ஓட்யாராங்க... அதனால நல்லா புரிஞ்சிக்கோ... எப்ப வேணாலும் நாம காதலிக்கலாம், வேலை படிப்பு தொழில் எது இருந்தாலும் இல்லாட்டாலும் காதலிக்கலாம், வேற ஊருக்கு கூட்டிகிட்டுபோயி கல்யானம்பண்ணதா சொல்லிக்கலாம்.. அதுக்கு அப்புறம் என்ன செய்ய போறோம்? என்ன உத்தியோகம்? எங்க குடியிருப்பு? அத பத்தி எல்லாம் நினைக்கவோ பேசவோ கூடாது.. அதுதான் சாதனை! அப்பதான் அறிவு ஜீவிங்க எல்லாம் நம்ம பக்கம் பக்கமா பாராட்டுவாங்க... அது தான் புர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்சிசிசிசிசி...... அதுக்கு பெரியாரு, சின்னவரு, நடுலவரு அப்புடி இப்புடின்னு பல பேரு பேர சொல்லிக்கலாம். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!

kamalakkannan said...

கனத்த மனதுடன் சொல்ல வேண்டும் என்றால் இந்த கடிதம் பொய்களின் அழகான தொகுப்பு , தங்களின் சுவையானா பதிவு விருந்தில் பரிமாறப்பட்ட நரகல் :(

saidaiazeez.blogspot.in said...

ஆக மொத்தத்துல, "நம்ம" புள்ளைங்க படிக்க எத்தன கிராமங்க/சேரிகளையும் கொளுத்துவோம்!
அதத்தானே சொல்லவறீங்க, ஞ்...ஞ்...ஞா...ய்...ய்...யமார்...ர்களே!

vishwa said...

இது தனிப்பட்ட ஆழமான ஒரு பார்வையாகத் தெரியவில்லை. ஜாதிக்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறதோ அதே கோணத்தில் தான் பார்க்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த ஒரு புதிய சிந்தனையோ மாற்று யோசனையோ இருப்பதாகத் தெரியவில்லை அதிகாரமும் பொருளாதாரமும் அனைத்தையும் தீர்மானிக்கும் தவிர்க்க இயலா சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது.
அனுதாபத்தின் மூலம் அதனை அடையும் முயற்சிதான் இது.
தலித் சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருப்போரோ வசதியான வாழ்க்கை வாழ்கிறவர்களோ இல்லாமல் இல்லை. யாரவது ஒருவர் முன்வந்து
அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில்
உத்திரவாதம் கொடுத்திருந்தால் அந்தப் பெண் ஒருவேளை இந்த முடிவை எடுதிருக்காமல் இருந்திருக்கலாம்.

சிவ.சரவணக்குமார் said...

//நிச்சயமாக வன்னி அரசு எழுதிய கடிதம் என்பது ஒரு ஆவணப் பொக்கிஷம். //


இதெல்லாம் ரொம்ப ஓவர்........எந்த பிரச்சினையையும் உணர்ச்சிவசப்படாமல் , தள்ளி நின்று எடைபோடாவிட்டால் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கே செல்ல நேரிடும்.....


இளவரசன் , திவ்யா இருவருமே படிப்பை முடிக்காதவர்கள்.........படித்த‌வனே வேலைக்கு திண்டாடும் இந்தக்காலத்தில் அரைகுறைப்படிப்பை வைத்துக்கொண்டு இவர்கள் எப்படி வாழப்போகிறார்கள்? எதிர்காலம் பற்றி எந்த திட்டமிடலும் இல்லாமல் இன்றைக்கு சேர்ந்தால் போதும் என்றால் அதன்பெயர்தான் காதல் அல்ல........வெறும் இனக்கவர்ச்சி....



சாதியை விடுங்கள்....ஒரு சராசரி தந்தையாக திவ்யாவின் அப்பாவின் நிலையை யோசித்துப்பாருங்கள்......

சரியான வயதும் வந்து , மகளின் எதிர்காலம் பற்றிய உத்தரவாதமும் இருந்தால் எந்த தந்தையும் ஒரு அளவுக்கு மேல் தன் மகளின் காதலை எதிர்க்கமாட்டார்.......இதுதான் எதார்த்தம்.......அதுபோன்ற சாதி இணக்க திருமணங்களுக்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை என்னால் காட்ட‌முடியும்.......

ஒரு பெண்ணுக்கு கல்யாணம் என்றால் , நாம் முதலில் கேட்கும் கேள்வி என்ன? மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார் என்பதுதானே?இதே இளவரசன் , ஒரு நல்ல வேலையில் இருந்திருந்தாலோ, நிலையான வருமானம் உள்ளவராக இருந்திருந்தாலோ இந்த அளவு எதிர்ப்பு [ திவ்யாவின் தந்தையை பொறுத்தவரை ] இருந்திருக்காது....

திவ்யாவை விட வயது குறைந்த , படிப்பை முடிக்காத , வேலைவெட்டி இல்லாத இள‌வரசன் வந்து பெண்கேட்டால், அவள‌து தந்தை பெண்கொடுத்துவிட வேண்டும்.....மறுத்தால் , அவர் சாதி வெறியர் ..அப்படித்தானே..? உண்மையில் இள‌வரசன் வன்னியராகவே இருந்திருந்தாலும் அவருக்கு திவ்யாவை மனம்செய்து கொடுத்திருக்கமாட்டார்.......

இன்று இவ்வளவு தன்மையாக கடிதம் எழுதும் வன்னி அரசும் , திருமாவளவ‌னும் சென்ற திமுக ஆட்சியில் போட்ட ஆட்டங்கள் மறக்கக்கூடியதா என்ன?

என்னுடன் பணியாற்றும் இரு நண்பர்கள் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள்......ஒருவர் அரூர்.........மற்றவர் ஊத்தங்கரை........ஒருவர் தலித்.......மற்றவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த‌வர்...... அந்த பகுதியின் சமூக அமைதியை குலைப்பதில் திருமா மற்றும் ராமதாஸ் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதை இருவருமே [ தலித் நண்பர் உட்பட ] ஒப்புக்கொள்கின்றனர்.......அதற்கு பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளனர்.....சென்ற திமுக ஆட்சியில் தனியார் காலி இடங்களை ஆக்கிரமிப்பதும் , பின்பு அதை காலி செய்வதற்காக கணிசமான தொகை மிரட்டிப்பெறப்பட்டதும் வட மாவட்டங்களில் பொது அறிவு........வன்னி அரசு மீது [ஆயுதக்கடத்தல் உட்பட] மிகக்கடுமையான வழக்குகள் உள்ளன........

// கனத்த மனதுடன் சொல்ல வேண்டும் என்றால் இந்த கடிதம் பொய்களின் அழகான தொகுப்பு , தங்களின் சுவையானா பதிவு விருந்தில் பரிமாறப்பட்ட நரகல் //

திரு.கமலக்கண்ணன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்....... வருத்தத்துடன்........

Anonymous said...

காஞ்சு போன மரத்துக்கும் , கூரைக்கும் கவலை படுற நீ . தூக்குல தொங்குனவன பத்தியும் கவலை படு. மொதல்ல எது நடந்துச்சி ? புர்ச்சி யால போனது உயிர் . உயிரால போனது மரமும் , கூரையும்.

அடுத்தவன் பெத்த பொண்ணு வாழ்க்கையில புர்ச்சி பண்ணாத.

விஜயன் said...

எனக்கு நெஜமாவே ஒண்ணு புரியல.. இந்தப்பதிவுல சம்பந்தப்பட்ட அத்தனைப்பேருமே arguement பண்ண ரெடியா இருக்காங்களே தவிர பிரச்சினைக்கு முடிவப்பத்தி யாருமே யோசிக்கிறமாதிரி தெரியல.

://தயவு செய்து படிக்க விடுங்கள். //
படிச்சிட்டு அப்புறம் யாரை வேணும்னாலும் காதல்/கல்யாணம் பண்ணினா நீங்க ஒத்துப்பீங்க...

//பொய்களின் அழகான தொகுப்பு//
பொய் இல்ல. அரசியல் ஆதாயத்திற்காக வேறு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. (விருமாண்டி ஸ்டைல்)

ஆளாளுக்கு இவ்ளோ feel பண்றதுக்குப்பதிலா ஏன் இந்த வன்னி அரசுவோ, ஜோதிஜியோ, அருணாவோ, வீர வன்னியனோ, மத்தவங்களோ அந்த இளவரசன் and திவ்யாவைக்கூப்பிட்டு உங்களுடைய கம்பெனியிலோ அல்லது தெரிஞ்ச இடத்திலோ வேலை வாங்கிக்கொடுக்ககூடாது. அப்படிப்பண்ணினா அவங்க பொருளாதாரம் சரியாய்டுமே.

இவ்ளோ நெஞ்ச ...ற மாதிரி கடிதம் எழுதறதை விட அவனுக்கு ஒரு வேலைய வாங்கிகுடுத்து அந்தப்பொண்ணுக்கு நர்சிங் course முடியறவரைக்கும் பினான்சியல் சப்போர்ட் பண்ணலாமே.

//என்று தணியும் இந்த "வெறி"?...கொடுமை.... தயவு செய்து படிக்க விடுங்கள்... அந்த பொண்ணு மேலயும் தப்பு இருக்கு... பொய்களின் அழகான தொகுப்பு... புர்ச்சி...//
போங்க பாஸ்.. போங்க..

Anonymous said...

ஒரே பதில், இது நாடக காதல். இது எல்லாருக்கும் தெரியும். இது ஒரு pattern னா எல்ல இடத்துலயும் , திட்டம் போட்டு நடக்குது. தனிப்பட்ட ரெண்டு பேரோட தெய்வீக காதல் சொல்லறதுக்கு இங்க ஒன்னும் இல்ல. மைனர்ங்க வாழ்க்கையை பத்தி அதிகம் யோசிக்காம அவசரபட்டுடாங்க.

இங்க எவனும் அவன் பொண்ண கட்டி குடுக்குறத பத்தி இங்க பேசுல.

அடுத்தவன் பெத்தது மேல புர்ச்சி பன்றனுங்க.

லெமூரியன்... said...

காதலிக்க இலக்கணம் இருக்கிறதா? நன்று. படித்த நன்றாக சம்பாதிக்கும் மென்பொருள் துறை தலித் இளைங்கர்களுக்கும் இளவரசன் நிலைதான். ஜாதி பார்க்காமல் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு வாதம் பேசுறதை பார்த்த சிரிப்புதான் வருது. நான் காதலித்த பெண்ணையும் கல்யாணம் செய்ய முடியாமல் போனதற்கு நான் பிறந்த சாதிதான் காரணமாச்சு.

நாடக காதல் நாடக காதல்னு சொல்றாங்க. எனக்கு புரியல. அது என்ன நாடக காதல்னு.

ஐயா ராமதாசு உண்மையா காதலிக்கிறது எப்படின்னு ஒரு பயிற்சி பட்டறை வைச்சி சொல்லிகுடுக்கலாம்.

காட்டுமிராண்டிதனமா நடந்துகிட்ட எந்த பொண்ணுக்குதான் காதல் வரும்? அதான் அந்த பொண்ணுங்க எல்லாம் தலித் இளைங்கர்கள காதலிக்கிறாங்க.

உங்க ஐயா கிட்ட சொல்லி மனுசதனமா எப்டி நடந்துக்கிறது அப்டின்னு பாடம் நடத்த சொல்லுங்க.

காடுவெட்டி மனுசவெட்டினு அலையிறத அவர் நிறுத்துனா எல்லாமே நல்லாத்தான் நடக்கும்.

படிக்கணும். அந்த விஷயத்தை நான் ஒத்துக்குறேன். சரி. படிச்சா காதலர்கள சேர்த்து வைப்பீங்களா? இல்ல ஜாதிதான் தடையா இல்லையா. ஏண்டா பேசுறதுக்கு ஒரு அளவு முறை இல்லையா?

அடுத்தவன் பெத்த பொண்ணுக்கு பேசுறானுங்க அப்டின்னு ஒரு பாயிண்ட்.

நான் பேசலாம் தம்பி. என் சகோதரி காதலித்துதான் திருமண செய்திருக்கிறார்.

லெமூரியன்... said...

ஆனா இந்த விஷயத்தில் கொஞ்சம் நிதானமா நடந்திருக்கலாம் அந்த பெண்ணும் பையனும்.

என்ன விலை இந்த காதலுக்கு கொடுக்க வேண்டி வரும் என யோசித்திருக்கலாம்.

தலித் இளைஞன் காதலிக்கிறான் என்றால் தைலாபுரமும் சங்கர மடமும் ஒரே அலைவரிசையில் தான் யோசிப்பார்கள்.

வட மாவட்டங்களில் இத்தகைய காதல்கள் அழகாக பிரிக்கபடுகிறது வன்னிய கட்சிகளின் பலத்தால்.

லாபம் மட்டும் அரசியல் ஆதாயமாக மாற்றபடுகிறது.

Anonymous said...

உன்ன சொல்லி குத்தம் இல்ல. கொஞ்சம் அக்கறை இருந்தா .. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் ன்னு ஆராய டைம் இருந்தா .. ஏன் இப்படி கமெண்ட் போடுறானுங்க ன்னு நீ யோசிச்சி இருப்ப.

நாடக காதல் ன்ன என்னன்னு தெரிஞ்சிக்க கடுவேட்டு குரு மக்கள் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியை பாரு.

நீ என்ன காதலிச்ச பொண்ணு கிடைக்கததால பிச்சையா எடுக்குற ?

அது என்னடா காதல். சொத்துக்கு வக்கில்ல பொண்ண பாத்தா ஆச வருதோ. காதல் பிச்ச எடுக்குரவ மேல , தன்ன விட பொருளாதரத்துல கீழ இருக்குரவ மேல வரதில்ல ? அப்படி வந்தா பொண்ணோட அப்பனே சந்தோஷமா கட்டி குடுப்பான்.

சிவ.சரவணக்குமார் said...

கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவத்தை , ஒத்திசைவு திரு.ராமசாமி அவர்கள் தமது தளத்தில் குறிப்பிட்டிருந்தார்........அதை சற்று படியுங்கள்.......

// ஒரு இணைப்புச் சாலை வழியாக மல்லச்சந்திரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம் – ஹோசூர்-கிருஷ்ணகிரி சாலையை நோக்கி. காலை மணி 11. திடீரென்று அந்தச் சிறு சாலையில் விர் விர்ரென்று SUV வண்டிகள் (மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா சுமோ, டாடா சபாரி இன்னபிற மகாமகோ வாகனங்கள் – மொத்தம் 11 அல்லது 12 இருந்திருக்கலாம்) எங்கள் பள்ளிச் சிறார்கள் நிரம்பிய சிறு வாகனங்களை அபாயகரமாக இடமிருந்தும் வலமிருந்தும் முந்திச் சென்றன – ஒரே புழுதிப் படலம்.

இந்த பிணிவகுப்பில் முதல் வாகனங்கள் திமுகவினுடையவை. பின் காங்கிரஸ். பின் பாமக வண்டிகள். கடைசி இரு வண்டிகள் தொல்(லை) திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்.

இந்தப் படை ஒரு சாலையோர உடம்பொடுங்கின ஏழை தலித் கிராம மக்களின் கூட்டத்தருகில் நின்றது.

ஒரு சுமோவிலிருந்து இறங்கிய ‘ஊர் கவுடர்’ – “அல்லாம் எப்டி இருக்கீங்க? ‘வேணுங்றது’ கிடச்தா? ” என்றபடி இறங்கினார்.

ஒரு குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து வெளியே வராமல் அமைச்சர் முல்லை வேந்தன், இப்பாவப்பட்ட மக்களை நோக்கி கைஅசைத்து, அலுங்காமல், நலுங்காமல் கை விரித்து ‘உதய சூரியன்’ காட்டினார். திமுக வினரால் கூட்டி வரப்பட்ட உதிரிகள் விசிலடித்தனர்.


பின்பு இன்னொரு சுமோவிலிருந்து கட்டு கட்டாக திமுக நிறங்களுடைய மப்ளர்கள் (கருப்பு-சிவப்பு) கூட்டத்தை நோக்கி விட்டெறியப் பட்டன. அத்தலித் மக்கள் ஒருவருடன் ஒருவர் முண்டிக்கொண்டு, அவசரம் அவசரமாக தங்களுக்கு ஒரு துணியாவது கிடைக்குமா என்று அல்லாடினர். ஊர் கவுடர் அவர்களை வெறுப்புடன் பார்த்தார்…

நான் சிறிது தள்ளி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் ‘தொண்டர்களுடன்’ பேசினேன் – இதை, – மமதையுடன் நாய்களுக்கு விட்டெறியும் ரொட்டித் துண்டுகளைப் போல திமுகவினர் அம்மக்களை அசிங்கப் படுத்துவதை – சுட்டிக் காட்டி, இப்படி உங்கள் மக்களை பிச்சைக் காரர்கள் போல உதாசீனம் செய்கிறார்களே, ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “பெருசு, இந்த ஜனங்க இப்படித்தான், இவங்க தெளுங்கனுங்க, ஆடு ஒட்ரவனுங்க. தமிள் ஆதி திராவிடர் இல்லை – எங்க மக்களை இப்படி செஞ்சா பொறுத்துப்போமா என்ன ? “., என்று சொன்னார்கள். “இருக்கலாம், ஆனால் இவர்களும் தலித்துகள் தானே” என்றேன். அதற்கு அவர்களில் ஒருவர் வண்டி ஓட்டுனரிடம், “வண்டியை எட்றா!” என்றார்…

இச்சமயம் அந்த பாவப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒரு வேகமான இளைஞர், இவர்களிடம் கை குலுக்கிப் பரவசமாகி “திருமா வாழ்க” என்றார். நான் வி.சி. ‘தொண்டர்களைப்’ பார்த்தேன். அவர்கள் திரும்பி வேறு எங்கோ பார்த்தனர்…

இவர்களா தலித் இயக்கத்தவர்கள்? இவர்களா அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது? இவர்களா சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்கப் போகிறார்கள்? பதர்கள்.- அவர்களின் வாய்ப்பேச்சு வீரத் தலைவன் எவ்வழி, இத்தொண்டர்கள் அவ்வழி.//

சாதி படி நிலையில் தங்களுக்கு கீழ் உள்ள அருந்த‌தியர்களை , ''சமூகப்புரட்சியாளர்கள் '' நடத்திய லட்சணத்தைப்பாருங்கள்......... வன்னி அரசுவின் சாதியைச்சேர்ந்த பெண்ணை ஒரு அருந்ததிய இளைஞர் காதலித்திருந்தால் , அப்போது தெரியும் ......இவர்களின் உண்மையான முகம்........

எம்.ஞானசேகரன் said...

ஜோதிஜியின் இந்த பதிவு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது. அதற்கு அவர் கொடுத்த முன்னுரை அதைவிட அபத்தம். அதனால்தான் படித்தவுடன் வெறுத்துப்போய் No comments! என்று போட்டுவிட்டு பின்னர் வந்து அதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியமேயில்லாமல் பின்னால் வந்தவர்கள் பின்னூட்டத்தில் அசத்தியிருக்கிறார்கள்!
இதைப் பற்றிய எனது கருத்தை பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில்.......

லெமூரியன்... said...

ஆதிக்க சாதிக்காரனான எண்ணிய ஒரு ஆக்கங்கெட்ட சாதிக் கார பய கேள்வி கேட்டானேனு உங்க ரத்தம் கொதிக்கிறது தெரியுது வீர வன்னியன்.

அது சரி காதலிச்ச பொண்ணு கிடைக்கலேன்னா பிச்சை எடுக்கனும்ன்க்ராதுதான் உங்க காடுவெட்டி சொன்ன உண்மை காதலா.

காமெடி என்னனா ஒரு கட்டபஞ்சாயதுகாரன் காதல பத்தி பாடம் நடத்துறான் அதையும் நீங்க எண்ணிய படிக்க சொல்லி சிபாரிசு பண்றீங்க பாத்தீங்களா? உங்களுக்கு நகைசுவை உணர்வு அதிகம்னு நெனைக்கிறேன்.

கொஞ்சம் ஆழமா சிந்திக்க நீங்க முயற்சி செஞ்ச நா சொல்ல வந்த விஷயம் புரிஞ்சிருக்கும்.

நான் காதலித்த பெண்ணும் நானும் வசதியிலும் வாய்ப்பிலும் சமம் தான். ஆனாலும் ஜாதியின் காரணமாக அப்பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். வயசான காலத்துல அவங்களோட சாபத்துல நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனுமானு யோசிச்சிதான் விலகிட்டோம் நானும் அந்த பெண்ணும்.


\\அது என்னடா காதல். சொத்துக்கு வக்கில்ல பொண்ண பாத்தா ஆச வருதோ. காதல் பிச்ச எடுக்குரவ மேல , தன்ன விட பொருளாதரத்துல கீழ இருக்குரவ மேல வரதில்ல ?//

நீங்க சொன்ன மாதிரி சொத்து பத்து பாத்து குலம் கோத்திரம் நட்சத்திரம் பாத்து காதலிக்கிறதுக்கு பேருதான் நாடக காதல்.

ஒத்துக்கிறேன் தலித் மக்கள் அந்தஸ்தில் உங்கள விட குறைந்தவர்களா இருக்கலாம் ..

அதுக்காக வன்னியர்கல்லாம் கோடிஸ்வரன் மாதிரியும் தலித் இளைங்கர்லாம் சோறு தேடி அலையுற மாதிரியும் பேசுறது உங்க ஆதிக்க சாதி புத்திய காமிக்கிது.

வவ்வால் said...

"எழுத்து சித்தர்" ஜோதிஜி,

இப்படி ஒரு நிலையில் சிக்குவீங்கனு எதிர்ப்பார்த்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கலை, இராமதசர் பற்றி எழுதிய போது "உங்களுக்கு அரசியல்ப்புரியப்போவதில்லை" என சொன்னதற்கு வருத்தப்பட்டீர்கள், ஆனால் இப்பொழுது நான் சொன்னதன் பொருள் புரிந்திருக்கும்.

அந்தப்பதிவில் உங்களுக்கு அபிமானவர்கள் எப்படி "சொம்பு தூக்கினார்கள்" எனப்ப்பாருங்கள், ஆனால் இந்தப்பதிவில் அதே நபர்களே தங்களின் சுயரூபத்தினைக்காட்டியுள்ளார்கள், இனியாவது நேர்மையாக யார் கருத்து சொல்கிறார்கள் எனப்புரிந்துக்கொள்ளவும்,நான் அப்பதிவுக்கும் பாராட்டித்தள்ளவில்லை, இப்பதிவையும் பாராட்டித்தள்ளவில்லை, அரசியல் நிலையை மட்டுமே சொல்லி செல்கிறேன், ஆனால் மற்றவர்களோ அவர்களுக்கு பிடித்த கருத்தை சொன்னதும் இனிக்க பேசினார்கள்,அவர்களே இப்பொழுது எப்படி பொங்குகிறார்கள் எனப்பாருங்கள்.

இராமதசர்ப்பதிவில் கவிப்பிரியன் கக்கிய தத்துவ முத்துக்கள்,
//கவிப்ரியன்May 12, 2013 at 8:51 AM
இன்றைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான அரசியல். துணிச்சலான முயற்சி. ஜாதிக் கட்சித் தலைவர் என்கிற முத்திரை இவருக்கு மட்டும் ஏன்? மற்ற ஜாதிக்கட்சிகளே தமிழ்நாட்டில் இல்லையா என்ன? மற்ற யாருமே சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கவில்லையா என்ன? இவருக்கு மட்டும் ஏன் இந்த அவப்பெயர். யாருமே மாநாடு பொதுக்கூட்டம் நடத்தவில்லையா என்ன? இவருக்கு மட்டும் ஏன் இந்த சதிவலை?

சாமானியர்கள் யாருமே சிந்த்திப்பதில்லை. ஆள் கிடைத்தால் போதும் எல்லாருமே கும்முகிறார்களே நாமும் கும்முவோம் என்பது மனிதர்களின் இயல்பான குணம்தானே! சமூகத்தில் அடித்தட்டு ஜாதியின மக்கள் முன்னேற வேண்டும் என்ற போதுவான இலக்குதான் ஜாதிக் கட்சிகளுக்கு. அல்லது இதைச்சொல்லி ஓட்டு வாங்குவது! இதை தமிழ்நாட்டில் யார் செய்யவில்லை? எந்தக்கட்சி செய்யவில்லை?

குதிரைக்கு சேனம் பூட்டிவிட்டதைப்போல இவர்கள் எந்தப்பக்கமும் பார்க்கமாட்டார்கள். விவாத்ததிற்குப் பதில் விதண்டாவாதம் செய்வார்கள். இது பதிவுலகில் அதிகமிருக்கிறது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் நடுநிலையான கட்டுரையைத் தொடருங்கள் ஜோதிஜி!//

இப்போ அதே கவிப்பிரியன் என்னமா பொங்குறார் பாருங்க, ஒரு மாசத்துக்குள்ள "உங்க நடுநிலைமை" தவறிப்போச்சாம் :-))

//கவிப்ரியன்June 27, 2013 at 4:20 PM
ஜோதிஜியின் இந்த பதிவு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது. அதற்கு அவர் கொடுத்த முன்னுரை அதைவிட அபத்தம். அதனால்தான் படித்தவுடன் வெறுத்துப்போய் No comments! என்று போட்டுவிட்டு பின்னர் வந்து அதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியமேயில்லாமல் பின்னால் வந்தவர்கள் பின்னூட்டத்தில் அசத்தியிருக்கிறார்கள்!
இதைப் பற்றிய எனது கருத்தை பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில்.......//

இது போல ஆளுங்க தான் உங்கள பாராட்டி எழுத ஊக்குவிக்கிறாங்கனு நீங்க நினைச்சுக்கிறது :-))

# இன்னொரு ஆளு "உருளு" அப்போ அப்படியே உங்கள தலை மேல தூக்கி வச்சு ஆடினாரு, அவ்வப்போது "சொம்பு தூக்கினாரு :-))

//அருள்May 10, 2013 at 10:31 PM
அன்புள்ள ஜோதிஜி

உங்களது துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.//

//இனி உங்களை பதிவுலகில் காப்பாற்ற முடியாது என்றுதான் கருதுகிறேன். நன்றி.//

ஹி...ஹி இந்தப்பதிவுக்கு அப்புறம் உங்களை உருளுக்கு கிட்டே இருந்து யாராலும் காப்பாத்த முடியாது, கடிச்சு வைக்கப்போவுது :-))

வவ்வால் said...

லெமுரியன்,

உங்க கருத்து யதார்த்தமாக உண்மையை பேசுகிறது.(ஆதிக்காலத்தில் ஏதோ விவாதம் செய்துள்ளோம்னு நினைக்கிறேன்)

//கொஞ்சம் ஆழமா சிந்திக்க நீங்க முயற்சி செஞ்ச நா சொல்ல வந்த விஷயம் புரிஞ்சிருக்கும்.//

கள்ளச்சாராயம் காய்ச்சுரவனுங்களை சிந்திக்க சொன்னா எப்பூடி சிந்திப்பாங்க :-))

வன்னிய இளைஞர்கள் பல ஊர்களிலும் படிக்கிற பொண்ணுங்களை காதலிச்சு கல்யாணம் செய்றாங்க, அதுவும் அவர்களை விட வசதியான , உயர் ஜாதிப்பெண்களை, இவனுங்க ரவுடித்தனத்துக்கு பயந்துக்கிட்டு பெண்னைப்பெற்றோர் ஏதும் கேட்க முடிவதில்லை, அப்போ சொல்ல வேண்டியது தானே படிக்கிற பொண்ணுங்களை படிக்க விடுங்க, இப்படி நாடக காதல் செய்யாதிங்கன்னு, ஆனால் அப்போ என்ன சொல்லுவானுங்கன்னா ,டேய் நீ தூக்கிட்டு வந்து கட்டுறா எவன் குறுக்க வந்தாலும் வெட்டுறானு சொல்றானுங்க :-))

இந்த சம்பவத்திலேயே , பொண்ணுக்கு தான் வயசு அதிகம்,எனவே திருமண வயசு ஆகாத வாலிபனை "காதல் ஆசைக்காட்டி" மயக்கி ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டதாக வழக்கே போடலாம்.

ஏன்யா ஒரு பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி குடும்பம் நடத்திட்டு , கையவிரிச்சா உடனே மகளீர் காவல் நிலையத்தில் போய் புகார் செய்து,அவனை புடிச்சு " காதல் ஆசைக்காட்டி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது"னு நியூஸ் போட வைக்கிறாங்க, அதே போல இந்த பொண்ணயும் கைது செய்ய வச்சால் என்னானு கேட்கிறேன், பொண்ணுக்கு ஒரு நியாயம் ,ஆணுக்கு ஒரு நியாயமா?

தேவதையை கண்டேன்னு தனுஷ் நடிச்சப்படம் கூட இப்படியான கதை தான்.

# அந்த பொண்ணைப்பார்த்தால் "ஆண்டி போல மொக்கையா" இருக்கு ,இப்படி ஒரு மொக்கை ஃபிகருக்கா அந்த பையன் அவ்ளோ ரிஸ்க் எடுத்தான்?

பையணுக்கு நல்ல நண்பர்கள் இல்லை போல, நானா இருந்த இந்த மொக்கை ஃபிகர் பின்னால எல்லாம் சுத்தாத நல்ல பொண்ணா பாருடானு சொல்லி ,ஆரம்பத்திலேயே "நல்ல வழியை" காட்டியிருப்பேன் :-))

? said...
This comment has been removed by the author.
? said...

//அந்த பொண்ணைப்பார்த்தால் "ஆண்டி போல மொக்கையா" இருக்கு ,இப்படி ஒரு மொக்கை ஃபிகருக்கா அந்த பையன் அவ்ளோ ரிஸ்க் எடுத்தான்?

பையணுக்கு நல்ல நண்பர்கள் இல்லை போல, நானா இருந்த இந்த மொக்கை ஃபிகர் பின்னால எல்லாம் சுத்தாத நல்ல பொண்ணா பாருடானு சொல்லி ,ஆரம்பத்திலேயே "நல்ல வழியை" காட்டியிருப்பேன் :-)//

நல்லாத்தானே போயிகிட்டு இருத்துச்சு... தீடீர்னு ஏன்?

நல்ல அழகான பிகர்தான் வேணும்னா எதுக்குயா ரிஸ்க்கு? ஒழுங்கு மரியாதையா அப்பனாத்தாகிட்ட சொன்னா கட்டி வைக்குறாங்க! கூடவே வருமானமும் வரும்!
Delete

Anonymous said...

ஆமாண்டா மத்தவங்கெல்லாம் சாராயம் காச்சுறவங்க , நீங்க சுதந்தர போராட்ட தியாகிங்க. அஹிம்சை , நன்னடத்தை , ஒழுக்கம் , அடுத்தது நீங்க.

அது சரி ,
அம்மா ... அம்மம்மா ... இதிகாசம் ... மலை .. னு கடிதம் எழுதி இருக்காரே அவரு சாப்ட்வேர் என்ஜினியரா வொர்க் பண்றாரா ? அவர் எழுதுறத படிச்சிட்டு , பாடம் பண்ணி வையிங்க. பின்னால் வரும் சந்ததியும் கூலிங் கிளாஸ் போட்டுட்டு பஸ்ஸ்டான்ட்ல நிக்கும்.

உங்களுக்கு என்னன்னா ...... நாடக காதல் மூலமா வர்ற கட்ட பஞ்சாயத்துக்கு இனிமே வழி இல்ல. பொண்ண பெத்தவங்கள மிரட்டி பணம் வாங்க முடியாது. தொழிலுக்கு மோசமாயிடிச்சே ன்னு பயம்.

அதனால ..

அம்மா ... அம்மம்மா ... ஏனம்மா ...
புர்ச்சி .. புர்ச்சி ... புர்ச்சி ...
அம்மா ... அம்மம்மா ... ஏனம்மா ...
புர்ச்சி .. புர்ச்சி ... புர்ச்சி ...
புர்ச்சி .. புர்ச்சி ... புர்ச்சி ...

னு கடிதம் எழுதி காலத்த ஓட்டுங்க . இல்ல பாட்டாவே பாடிகிட்டு இருங்க .

புர்ச்சி .. புர்ச்சி ... ( ஆப்பு ... ஆப்பு )

Anonymous said...

இங்க பாரு இவன, கலவர பூமில புள்ளி விவரம் குடுத்துகிட்டு இருக்கான்.

கமெடி பீசா நீ ?

உனெக்கெல்லம் பதில் சொல்லிக்கிட்டு .... நேரம்.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

"மூதறிஞர்" நந்தவனத்தார்,

//நல்லாத்தானே போயிகிட்டு இருத்துச்சு... தீடீர்னு ஏன்?

நல்ல அழகான பிகர்தான் வேணும்னா எதுக்குயா ரிஸ்க்கு? ஒழுங்கு மரியாதையா அப்பனாத்தாகிட்ட சொன்னா கட்டி வைக்குறாங்க! கூடவே வருமானமும் வரும்!//

நீங்க வர வரிக்கும் எல்லாம் நல்லாத்தேன் போயிட்டுந்த்இருச்சு, இனிமே போக விடுவீரா :-))

ஆமாம் உங்க வலையுலக "moto" நான் என்ன சொன்னாலும் குறுக்க கட்டைய போடுறது தானா :-))

நீர் தான் எல்லாத்துக்கும் "அமெரிக்கன் பிலாசபி" ஒன்னு சொல்வீரா ,அமெரிக்கவில "அந்தந்த எக்ஸ்பெர்ட்" தான் கருத்து சொல்லலாம்னு, இப்போ எப்பூடி லவ் எக்ஸ்பெர்ட்டாகிட்டீரா என்ன?

உம்ம அமேரிக்க சித்தாந்தம்படி "அமெரிக்காவில வயசு வந்த" பசங்கக்கிட்டே நீ இன்னாரை தான் "பாய் பிரண்டு,கேல்பிரண்டா வச்சிக்கனும்,அப்பனாத்தா பார்த்த பையன கட்டிக்கிடனும் சொல்லிட்டு அப்பாலிக்கா இங்க கருத்து சொல்ல வாங்களேன்.

அமேரிக்காவ பாரு ரோடு எப்படி இருக்கு, அமேரிக்காவ பாரு எவ்ளோ சுத்தமா இருக்கு, அமேர்க்காவ பாரு கல்வித்தரம் எப்பூடி இருக்கு, அமேரிக்காவப்பாரு பவர் கட்டேயில்லனு எல்லாத்துக்கும் அமேரிக்காவ ஒப்பிடும் கோமான்களே,அமேரிக்காவப்பாரு ஆண்,பெண் பழக ஜாதி,மதம்,இனமெல்லாம் இல்லைனு சொல்ல வேண்டியது தானே ,அப்போ மட்டும் அப்பனாத்தா நியாபகம் வந்துடும் அமேரிக்க சீமான்களுக்கு :-))

-----------

எலே அனாமத்து வீர பன்னியன்,

நான் சொன்ன "வன்னிய வாலிபர்களின் காதல் நாடகங்களுக்கு" என்னயா பதில் சொல்லப்போற, நீங்க மட்டும் ஒசந்த சாதி,வசதியான பொண்னாப்பார்த்து தூக்கிட்டு வருவீங்க,அதெல்லாம் "மெய்யான காதல்" முதலில் அந்த எழவை தடுத்துட்டு அப்பாலிக்க இங்க வா , உன்ன மாதிரி டோமருக்கெல்லாம் நான் பதில் சொல்வதில்லை, போனாப்போவுதுனு சொல்லுறேன், இன்னொருக்கா எதுனா பேசிட்டு வந்தே " பொளந்து கட்டிருவேன் ,ஓடிப்போயிடு சொல்லிட்டேன்.

Anonymous said...

காமெடி ,
கூல் . ஏன் டெங்சன் ஆவுற ? மத்தவன் எவனும் உன்கிட்ட விவாதம் கூட பண்ணமாட்டான். அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானுந்தான்.

நீ புர்ச்சி ன்னு நினைச்சி கிட்டு பண்றது தான் எனக்கு பிடிக்கல. காமெடி.

//பொளந்து கட்டிருவேன் ,ஓடிப்போயிடு சொல்லிட்டேன்.//

உன் காமெடி சென்ஸ் அபாரம். போ ... சிரிப்பு சிரிப்பா வருது.

லெமூரியன்... said...

இணையத்தில் எனக்கான இடத்தில் நான் எனது எண்ணங்களை பதிகின்றேன்.

அது என்னோட தனிப்பட்ட உரிமை. நான் எவனையும் என் பதிவுகளை படிக்கவோ அல்லது கருத்து கூறவோ பணித்ததில்லை.

நீங்கள் எப்பொழுதாவது என் இடுகைகளை திரட்டிகளில் பார்த்திருந்தால் அப்பொழுது சொல்லுங்கள் பாடம் பண்ணி வைக்க சொல்லி.

அது சரி வீர வன்னியன் ஒரு கருத்துக்கு பதில் கருத்திட்டு ஆரோக்கியமாக கொண்டு செல்ல வேண்டிய விவாதத்தை ஏன் இப்படி சின்ன புள்ள மாதிரி கருத்து பேசி உங்கள் கருத்துக்கள் மீதிருந்த மதிப்பை குலைத்து போட்டு விட்டீர்கள்.

அதென்ன ஆனா ஊனான கூலிங்கிளாசு கூளிங்கிலாசுங்க்றீங்க.

உங்க ராமதாசு ஐயா, உங்க சின்னையா ...ஏன் காடுவெட்டி கூடத்தான் கருப்பு கண்ணாடி போட்டு இஸ்டைல போசு குடுக்குறாங்க .

நாங்க எப்டி இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நாங்க ....

நீங்களோ உங்க சின்ன பெரிய ஐயாக்களோ இல்ல ....

லெமூரியன்... said...

நண்பர் வவ்வால் ..

நீங்க சொன்னது சரிதான் நாம் முன்பொருமுறை வினவு தளத்தில் இதே போல இனம் சார்ந்த ஒரு இடுகைக்கு கை கோர்த்துக் கொண்டு கருத்தாடியிருக்கிறோம் ...

Anonymous said...

//உங்க ராமதாசு ஐயா, உங்க சின்னையா ...ஏன் காடுவெட்டி//
ஏன் தேவையில்லாம அவங்கள இழுக்குற ? ஒரு சமுதாயத்தை முன்னேற்ற அவங்களால முடிஞ்சத பண்றாங்க.

நாம பேசலாம்...

ஆனா வௌவால் காமெடி உங்களுக்கே சிரிப்பு வருதா இல்லையா ? இதுல அது கடைசியா எழுதி இருக்குற வார்த்தைய பாத்திங்களா ? பஸ் ஸ்டாண்ட்ல கேட்ட மாதிரி இல்ல ?

லெமூரியன்... said...

கண்டிப்பாக எனக்கு உங்கள் மீதுதான் சிரிப்பாக வருகிறது.

அவரின் கருத்துக்கு உங்களின் பதில் என்னவென்பதை அறியவே நானும் காத்திருந்தேன் ..

ஆனால் சிறுபிள்ளைத் தனமாக பதில் பேசி பள்ளி மாணவனைப் போல நடந்து கொண்டீர்கள்.

இதற்கும் மேல் உங்களோடு கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டுமா என எண்ணுகிறேன்.


வவ்வால் - அவரின் பல அடர்த்தியான பின்னுன்டங்கள் வாயிலாக அவரின் நிலைப்பாடு நன்கறிவேன்.

சிரிக்கும்படி அவர் அப்படி எதுவும் நகைசுவை பகிர்ந்ததாக நான் நினைக்கவில்லை.

Anonymous said...

//
இந்த சம்பவத்திலேயே , பொண்ணுக்கு தான் வயசு அதிகம்,எனவே திருமண வயசு ஆகாத வாலிபனை "காதல் ஆசைக்காட்டி" மயக்கி ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டதாக வழக்கே போடலாம்.

ஏன்யா ஒரு பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி குடும்பம் நடத்திட்டு , கையவிரிச்சா உடனே மகளீர் காவல் நிலையத்தில் போய் புகார் செய்து,அவனை புடிச்சு " காதல் ஆசைக்காட்டி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது"னு நியூஸ் போட வைக்கிறாங்க, அதே போல இந்த பொண்ணயும் கைது செய்ய வச்சால் என்னானு கேட்கிறேன், பொண்ணுக்கு ஒரு நியாயம் ,ஆணுக்கு ஒரு நியாயமா?

தேவதையை கண்டேன்னு தனுஷ் நடிச்சப்படம் கூட இப்படியான கதை தான்.

# அந்த பொண்ணைப்பார்த்தால் "ஆண்டி போல மொக்கையா" இருக்கு ,இப்படி ஒரு மொக்கை ஃபிகருக்கா அந்த பையன் அவ்ளோ ரிஸ்க் எடுத்தான்?

பையணுக்கு நல்ல நண்பர்கள் இல்லை போல, நானா இருந்த இந்த மொக்கை ஃபிகர் பின்னால எல்லாம் சுத்தாத நல்ல பொண்ணா பாருடானு சொல்லி ,ஆரம்பத்திலேயே "நல்ல வழியை" காட்டியிருப்பேன் :-))

//


இத படிச்சும் சிரிப்பு வரலைன்னா .. ஐயோ பாவம்.

வேற எதாவது நாடக காதல் சம்பந்த பட்டு பதிவில் சந்திக்கலாம்.

அப்புறம் கடைசியா ஒரு விண்ணப்பம் ....

கூலிங் கிளாஸ் ... அத மறந்துடாதீங்க ... எவனையாவது பஸ் ஸ்டாண்டிலோ ... பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல் க்கு முன்னாலோ கூலிங் கிளாசோட பாத்தா ... அறிவுரை சொல்லுங்க.

எங்க பிள்ளைகளை படிக்க விடுங்க.

பை .. பை ..

லெமூரியன்... said...

ஜோதிஜி.

இதை உங்களிடம் வெகு நாட்களாக வகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் நண்பா.

இப்போது சரியான நேரம்.

எழுத்தாளர் என சொல்லிக் கொள்ளும் கூட்டம் இணையத்தில் பல காலமாக உண்டு

தற்பொழுது அதில் நீங்களும் இப்பொழுது உறுப்பினர் என நினைக்கிறேன்.

சமீப காலமாக எனது எழுத்து ..எனது வெற்றி..என உங்களை முன்னிறுத்துவதால்

உங்களின் எழுத்துக்கள் பின்செல்கின்றது ...

சமீபத்திய பல பதிவுகளில் எழுத்தின் அடர் தன்மை நலிந்து போயிருக்கின்றது.

ஒரு வித பரபரப்பு உங்களை தொற்றிக் கொண்டு தொல்லை செய்கின்றது என நினைக்கிறேன்.

காலங்காலமாக தலித்துகளுக்கு இதே போன்ற கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. வெளியே தெரிந்து சிலது.(அதற்க்கு ஒரு பதம் இந்த பதிவுக்கு கிடைத்த பின்னூட்டம்)

வன்னி அரசு எழுதியதால் அதை பொக்கிஷம் என நீங்கள் சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது.

தீர்க்கமான கருத்து கொண்டிருப்பவராக நீங்கள் (முன்பு போல) இருந்திருந்தால் ..பின்னூட்டங்களில் தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொள்பவர்க்கு தக்க பதிலடி தந்திருக்க வேண்டும்.

அதை விடுத்து பரபரப்பான செய்தியை காபி பேஸ்ட் செய்து ஹிட்ஸ் அடிக்கும் தந்திரம் என்பதாக நினைக்க தோன்றுகிறது.

அப்படி ஒரு அவதாரம் நீங்க கொண்டிருந்தாள் இனி உங்களுக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன் .

உங்களுக்கு தெரியும் நான் குப்பைகளை நுகர்வதில்லை. அடர் கருத்துக்களை எதிர்கொள்ளவே எப்பொழுதும் விரும்புவேன்.

? said...

@ இணைய புர்ச்சித்தலைவர் வவ்வால்

//நீர் தான் எல்லாத்துக்கும் "அமெரிக்கன் பிலாசபி" ஒன்னு சொல்வீரா ,அமெரிக்கவில "அந்தந்த எக்ஸ்பெர்ட்" தான் கருத்து சொல்லலாம்னு, இப்போ எப்பூடி லவ் எக்ஸ்பெர்ட்டாகிட்டீரா என்ன?//

நான் சொல்ல வந்தது உமக்கு புரியவில்லை. அடுத்தவன் பொண்டாட்டி- இன்னும் டெக்னிக்கலாக திவ்யா என்பவர் இளவரசனின் மனைவிதான். இன்னைக்கு சமூக காரணங்களால் பிரிந்திருப்போர் சேர்ந்துவிடலாம். ஆக அடுத்தவன் மனைவியை "ஆண்டி போல மொக்கையா / மொக்கை ஃபிகருக்கா" என்றெல்லாம் பொது இடத்தில் விமர்சனம் செய்யும் உரிமை உமக்கு எப்படி வந்தது என்பதுதான் எனது பின்னூட்டத்தின் சாரம்! அழகோ அசிங்கமோ இளவரசனுக்கு மட்டும் தன் துணையை தேர்தெடுக்கும் தகுதி உண்டு, என்ன காரணங்களால் திவ்யா என்ற பெண்ணை தேர்தெடுத்தார் என்பதும் அவருக்கு மட்டுமே உரிமையான விடயம். சாதியை காட்டி திருமணத்தை எதிர்க்கிறார்கள் சிலர், உம்மை மாதிரி புர்ச்சியாளர்கள் பெண்ணின் உடலை காட்டி திருமணத்தை கேலி செய்கிறார்கள், பலே!

இணையம் என்பது இப்போது எல்லோரால் படிக்கப்படும் விடயம். யாரவது உங்கள் விவகாரம் இணையத்தில் பேசப்பட்டுள்ளது என இந்த பதிவை திவ்யா அல்லது இளவரசனிடம் அளித்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை யோசித்தீரா? நீர் சாதியை எதிர்த்து மொக்கை போடுவதால் யாரும் இங்கு மாறிவிடப்போவதில்லை, ஆனாப்பட்ட பெரியாரும் அம்பேத்கரும் சொல்லி திருந்தாதவனுங்க நீங்கு இணையத்தில் பின்னூட்டம் கிறுக்கி தள்ளினால் மாறிவிடமாட்டானுங்க. ஆனால் உமது பின்னூட்டம் சிலரை காயப்படுத்தக்கூடும்.உமக்கு சாதி ஆட்களோடு பிரச்சனை அல்லது இணையத்தில் புர்ச்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கு இது வழி அல்ல!

நான் லவ் எக்ஸ்பர்ட்தான். நான் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவன்தான், அதுவும் சமூகத்துடன் போராடி பலவருடம் காத்திருந்து பெற்றவர் சம்மத்துடன். இதை முன்பே ஒரு விவாதத்தில் எழுதிவிட்டேன். நீர் அடுத்தவனுக்கு மட்டும் புத்தி சொல்லும் இணையப் புர்ச்சியா என்பதை உமக்கு மட்டுமே தெரிந்த விடயம்!


//நீங்க வர வரிக்கும் எல்லாம் நல்லாத்தேன் போயிட்டுந்த்இருச்சு, இனிமே போக விடுவீரா :-)) ஆமாம் உங்க வலையுலக "moto" நான் என்ன சொன்னாலும் குறுக்க கட்டைய போடுறது தானா :-))//

மேற்கண்ட கருத்து சாதிமறுப்பு திருமண விவாதத்தை நீர்த்துப்போகும் என்பதினால் அதிக அழுத்தமில்லாமல்தான் என் பின்னூட்டத்தை போட்டேன். மேலும் உம்மை நோக்கி வேறு பிற நகைச்சுவை பின்னூட்டங்களையும் போட்டேன். ஆனால் ஒரு பின்னூட்டக்காரர் அவன் இவன் என ஆரம்பித்தார், இங்கு சண்டை போட விருப்பம் இல்லாத காரணத்தால் அதை நீக்கிவிட்டேன். நீர் ஆரம்பிக்கிறீர். எப்படி இருப்பினும் இனி நீர் இணையப் புர்ச்சி செய்ய இனி ஒருபோதும் நான் தடையாக இருக்கமாட்டேன். சாதி ஒழிப்பு, நாத்திக வளர்ப்பு, அறிவியல் அழிச்சாட்டியம், சினிமாவுக்கு சிக்கெடுத்தல் என தடையில்லாமல் பல்துறை புர்ச்சி செய்ய வாழ்த்துக்கள், நன்றி! :)

? said...

//
நல்ல அழகான பிகர்தான் வேணும்னா எதுக்குயா ரிஸ்க்கு? ஒழுங்கு மரியாதையா அப்பனாத்தாகிட்ட சொன்னா கட்டி வைக்குறாங்க! கூடவே வருமானமும் வரும்!//

நான் இட்ட பின்னூட்டத்தில் அழுத்தம் குறைவாக இருக்கவேண்டும் என்பதினால் மறைமுகமாக நான் சொல்ல வந்த கருத்து இதுதான்.

அழகு என்பது காதலில் ஒரு முதன்மையான அம்சம் அல்ல. அது தூண்டியாக இருக்க முடியுமே தவிர அதைத்தாண்டி அதற்கு காதலில் வேலையில்லை. ஆனால் அழகுதான் முக்கியம் என்றால் சாதியை எதிர்த்து சிக்கலில் சிக்காமல் பெற்றோரை அழகியை தேர்தெடுக்க வைத்து மணம் செய்து வாழலாமே என்பதும் இப்படி ஒரு பெண்ணை மொக்கை பிகர் என பொதுவிடத்து குறிப்பிடலாகாது என்பதும்தான் நான் சொல்ல வந்தது. ஆனால் சாதி மறுப்பு பிரச்சனையை நீர்த்துப் போக வைக்கும் சண்டையாக மாற வேண்டாம் எனவே அதை மாற்றி அப்பின்னூட்டத்தை போட்டேன். ஆனால் அப்பின்னூட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் இவ்விளக்கம். அனைவருக்கும் நன்றி!

? said...

லெமூரியனுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மிதான் போல! ;)

வவ்வால் said...

@ இணைய நீதியரசர்"மூதறிஞர்" நந்தவனத்தார்,,

//இணையம் என்பது இப்போது எல்லோரால் படிக்கப்படும் விடயம். யாரவது உங்கள் விவகாரம் இணையத்தில் பேசப்பட்டுள்ளது என இந்த பதிவை திவ்யா அல்லது இளவரசனிடம் அளித்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை யோசித்தீரா?//

இந்த வெட்டி நியாய வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியுமுங்க, ஆனால் ஒரு பையன் காதலித்தான் "அதை நாடக காதல்னு" எப்படி துப்பறிஞ்சு சொன்னானுங்க, சரி அந்த பையன் காதலை தான் நாடக காதலுன்னு சொன்னாங்க,அதோட விட்டானுங்களா, ஒரு சமூகத்தையே "ஜீன்ஸ்& கூலிங்க் கிளாஸ்" போட்டுக்கிட்டு "நாடகக்காதல்" நடத்துறானுங்கனு சொல்லுறாங்க,அதுவும் இணையத்தில தான் வருது,அதுக்கு உம்ம செங்கோலைத்தூக்கி தீர்ப்பு எதுனா சொல்லுறது,ஆனால் கண்ணுல படாத போல "ஜென்டில்மேனா" போயிடுவீங்க.

நாடகக்காதல் போட ஒன்னு அந்த பொண்ணு பேரழகியா இருக்கணும்,இல்லை பெரும்பணக்காரியா இருக்கனும் ரெண்டுமே இல்லாத நிலையில் நாடகக்காதல் எல்லாம் போடத்தேவையில்லைனு சொல்லவே "மொக்கை ஃபிகருக்கா" இந்த ரிஸ்க் எடுத்தானு சொல்லி இருக்கிறேன், நாடகக்காதல்னு சொன்னவனுங்களுக்கு "counter attack" அது.

நாடகக்காதல்னு சொன்னவனுங்களால அச்சமுகத்தினை சேர்ந்த இளைஞர்கள் எத்தனப்பேரு மனசு வருத்தப்பட்டிருக்கும்,ஏன் அந்த பையன் மனசும் தான் வருத்தப்பட்டிருக்கும், அதுக்குலாம் நீர் கவலைப்பட மாட்டீர், ஆனால் நான் சொல்லிட்டா மட்டும் உம்ம "பிஞ்சு மனசு" வலிக்குது :-))

நாடகக்காதல் செய்றாங்கன்னு சொல்லி ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்கி ,மற்ற சமூகத்தினரை எல்லாம் ஒன்னு கூட்டி எதிர்ப்பு காட்ட வைப்பவனுங்களுக்கு என்னால அப்படித்தான் பதில் கொடுக்க முடியும், நானேல்லாம் பூவே பூவே பூப்போடு,மயிலே மயிலே இறகு போடுனு கேட்கிற ரகமில்லை, மோசமானவனுங்களுக்கு ரொம்ப மோசமானவன்,ஹி...ஹி நல்லவனுக்கு நல்லவன் :-))

// நீர் அடுத்தவனுக்கு மட்டும் புத்தி சொல்லும் இணையப் புர்ச்சியா என்பதை உமக்கு மட்டுமே தெரிந்த விடயம்!//

நான் எவனுக்கு எப்போ புத்தி சொன்னேன், இல்லை நீர் இப்போ எனக்கு சொல்வது என்ன ?,புத்திமதியா இல்லை சும்மா கருத்து சொன்னீரா? நீர் எனக்கு சொன்னது எவ்வகையோ,நான் சொன்னதும் அவ்வகையே?
அடுத்தவனுக்கு புத்தி சொல்லாதே என எனக்கு நீர் சொல்வதானால்,அதையே "கண்ணாடிப்பார்த்து" உமக்கும் நீரே சொல்லிக்கொள்ளும்,ஹி..ஹி நானே என் வாயால அதை சொல்லவிரும்பவில்லை :-))

#//சாதி ஒழிப்பு, நாத்திக வளர்ப்பு, அறிவியல் அழிச்சாட்டியம், சினிமாவுக்கு சிக்கெடுத்தல் என தடையில்லாமல் பல்துறை புர்ச்சி செய்ய வாழ்த்துக்கள்//

நானும் ஆரம்பத்தில இருந்தே கவனித்து வருகிறேன்,அது எப்படி ஒருத்தன் பல்ல துறையில கருத்து சொல்லலாம், எல்லாத்துலயும் எப்படி எக்ஸ்பெர்ட்டா இருக்கமுடியும்னே என்னைப்பார்த்து கேட்டு வருகிறீர்கள், அதனை வைத்தே பேசுகிறீர்கள் ,நான் எல்லாம் தெரிஞ்சவனில்லை , சும்மா இணையத்தில் கூகிள் மூலம் தெரிஞ்சுக்கிட்டு தான் "ஜல்லியடிக்கிறேன்" அதனால் உமக்கு என்ன நட்டம்,கஷ்டம், நான் பல்துறையில் கருத்து சொல்வதால் உமக்கு பதவி உயர்வு பாதிக்கப்படுதா, இல்லை சம்பளம் குறைச்சுட்டாங்ளா? எதுக்கு அதையே தேய்ஞ்ச ரெக்கார்டு போல சொல்லிட்டு இருக்கீர்?

நான் தான் கத்துக்குட்டி ,எக்ஸ்பெர்ட்டான நீர் எதுனா எழுதி தொலையிறது, ஆனால் அதுவும் செய்ய மாட்டீர், தானும் படுக்க மாட்டாங்க,தள்ளியும் படுக்க மாட்டாங்கன்ற கதையா உம்மை போல சிலர் கிளம்பிடுறாங்க, ஆனால் பேசுறது எல்லாம் "நீதியரசர்" போல :-))

இனிமே உம்மப்பேரைப்பார்த்தால் " லூஸ்ல" விட்ற வேண்டியது தான், நீரே ஆகச்சிறந்த "இணைய நீதியரசர்" ஆக இருந்துக்கொள்ளும் , அடியேனுக்கு அதனால் ஒன்றும் கஷ்டமில்லை,வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

தோழர் லெமுரியன் ,

//சமீபத்திய பல பதிவுகளில் எழுத்தின் அடர் தன்மை நலிந்து போயிருக்கின்றது.

ஒரு வித பரபரப்பு உங்களை தொற்றிக் கொண்டு தொல்லை செய்கின்றது என நினைக்கிறேன்.
//

இதனை ஒத்த அபிப்பிராயத்தினை நானும் ஜோதிஜிக்கு சொல்லி இருக்கிறேன், அவரது ஆக்கங்களில் இத்தகைய தன்மை மேலோங்கி இருப்பதை சுட்டிக்காட்டி "கெட்டவன்" பேரு தான் வாங்கிக்கொண்டேன் :-))

நண்பர் ஜோதிஜியிடம் உள்ள ஒரு நல்ல பண்பு என்னவெனில் அனைவர் கருத்துக்களையும் அனுமதிக்கிறார், எனவே எனக்கு அடர்த்தி இருக்கோ இல்லையோ வாசித்து கருத்துக்களை சொல்லிவிடுவேன், நிறைய பேர வாசிக்க வர வைக்க வேண்டும், தினசரி "கருத்து" பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அவசரக்கதியில் இப்படியெல்லாம் நடக்கிறது, போகப்போக சீர்ப்படுத்திக்கொள்வார் என்ற நம்பிக்கையுள்ளது.

வவ்வால் said...

தோழர் லெமூரியன்,

//வவ்வால் - அவரின் பல அடர்த்தியான பின்னுன்டங்கள் வாயிலாக அவரின் நிலைப்பாடு நன்கறிவேன்.//

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி!

அக்கருத்து நாடகக்காதல் என சொன்னதற்கு "counter attack" ஆக சொன்னதே, நாடகம் போட்டு காதல் வலையில் வீழ்த்தும் அளவுக்கு "ஒர்த்" இல்லை,அப்படி இருக்கும் போது ஏன் நாடகம் போடவேண்டும் என்பதை வலியுறுத்த சொன்னது,ஆனால் சில கூமுட்டைகளுக்கு புரியவில்லை :-))

வடமாவட்டங்களில் "வன்னிய வாலிபர்கள்' நடத்தும் "நாடகக்காதல்" பற்றி ஏன் பேசமாட்டேங்கிறாங்க, எத்தனையோ "காதல் கட்டப்பஞ்சாயத்துக்கள்" வன்னிய சமூகத்தால் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொண்ணு தூக்கிட்டு போனதாக சில வழக்குகளாவது "வன்னிய வாலிபர்கள்" மீது இருக்கும், இத்தனைக்கும் பல சம்பவங்கள் "காவல் நிலையத்தில் வழக்காக பதிவாகாமல், காவல் நிலையத்தில் வச்சே கட்டப்பஞ்சாயத்தாக பேசி முடிக்கப்படுவதும் உண்டு, கிராமம்னா என்னானே தெரியாத மக்களா இவர்கள்? நானெல்லாம் இப்பவும் கிராமத்தான் தான் பல சம்பவங்களை நேராகவும் பார்த்துள்ளேன் ,அதப்பத்திலாம் இந்த "இணைய மிராசுகள்" பேசமாட்டார்கள் :-))

ஜோதிஜி said...

பதிவு வெளியிட்டதும் வெளியூர் சென்றவன் இப்போது தான் உள்ளே வந்தேன் வவ்வால். அதற்குள் எனக்கு பலவிதமான பட்டங்களை தந்தமைக்கு நன்றி. என்னைத் தொடர்ந்து நண்பர் நந்தவனத்துக்கும் பட்டங்களை வாரி வழங்கியமைக்கும் அவர் சார்பாக என் நன்றி.

என் நோக்கம்......

மருத்துவர் ராமதாஸ் என்ற தலைவரை வெறுமனே சாதி சார்ந்த தலைவராக பார்க்காமல் அவரின் நிறை குறைகளை அலசினேன்.

அடுத்து சமுத்துவ சர்க்கரை பதிவில் எழுதிய போது ஏன் திருமாளவளமும் கிருண்ஷ்சாமியும் ஒன்று சேர மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்டேன். எப்போதும் போல அதற்கு இன்று வரை நீங்கள் பதில் அளிக்கவே இல்லை.

இப்போது இந்த காப்பி பேஸ்ட்பதிவை வெளியிட்டதற்கு முக்கிய காரணம் நீதித்துறை வரை சமூக நீதிக்கு போராட்டம் நடத்துவதாக சொல்லும் பெண் உரிமை சங்கங்கள் வரைக்கும் இந்த பிரச்சனையில் அப்படியே அமுங்கி ஒதுங்கிவிட்டார்கள். வன்னி அரசு இதைத்தான் குறிப்பிட்டு இதில் எழுதியிருக்க அந்த ஒரு விசயமே என்னைக் கவர்ந்தது.

வார்த்தைகளுக்காக என்ன வேண்டுமென்றாலும் நீங்க சிலம்பாட்டம் நடத்தலாம். அவன் செய்தான், இவன் செய்தான், இவன் செய்யவில்லை அவன் செய்யவில்லை, அவன் தூண்டி விட்டான் இவன் தூண்டிவிட்டான் என்று தான் இன்னமும் இங்கே சொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றது.,.....

இதைப் பற்றி இங்கே விரிவாகவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் உரையாடியிருக்கின்றார்கள்.

லெமூரியன் ஏற்கனவே ஒத்துக்கொண்டதைப் போல என் கருத்து ஒவ்வொருவரும் எவரை நம்பியிராமல் அவரவர் கற்ற கல்வி மட்டுமே அவரை சமூகத்தில் மேலே உயர்த்தும். அதுவே காலப்போக்கில் இந்த தீண்டாமை கொடுமையிலிருந்து வெளியே வர உதவும்.

ஜோதிஜி said...

வவ்வால் லெமூரியன் இவருவருக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

எந்த இடத்திலும் எழுத்தாளர் என்று என்னை நான் எழுதிக் கொண்டதும் இல்லை. அது குறித்து பேசியதில்லை. பெரிதாக எழுதினால் எவரும் படிக்கமாட்டார்கள் என்று பதிவுலகில் உள்ள ஒரு தன்மையை உடைகக வேண்டியதன் பொருட்டே பல சமயம் அவ்வாறு குறிப்பிடுகின்றேன்.

என் கருத்துக்களை எந்த அச்சமும் இன்றி நான் எழுதியே வருகின்றேன். மாற்றுக் கருத்தை அனுமதிக்கவும் செய்கின்றேன். இது எனக்கான பதிவல்ல. ஒரு ஆரோக்கியமான விவாத களத்திற்கு உதவ வேண்டும் என்பதே என் குறிக்கோள். மற்றபடி நீங்கள் சொல்கின்றபடி நான் ஒவ்வொருவரிடமும் போராடிக் கொண்டிருந்தால் அது மேலும் மேலும் வன்மத்தைத்தான் வளர்த்தெடுக்கும்.

பிரபல்யம் என்ற வட்டத்திற்குள் இருக்க விரும்புவர்கள் செய்யும் எந்த காரியத்தையும் நான் செய்வதும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. நான் எழுதுவதைப் போல சில சமயம் உருப்படியான விசயங்கள் பலரின் பார்வைக்கு படாமல் இருக்கும். அதையும் இனி என் பதிவின் வாயிலாக பலரின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்திருப்பதால் இது போன்ற எழுத்துக்களை என் பதிவில் வெளியிடுகின்றேன்.

வவ்வால் உங்களை கலாய்ப்பதில் உரிமை உள்ளவன் என்ற நிலையில் இருப்பதால் என் கருத்துக்கள் மூலம் உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் ரியலி சாரி.

வவ்வால் said...

ஜோதிஜி,

நிதானத்துக்கு வாங்க இன்னும் படபடப்பாவே இருக்காப்போல தெரியுது!

//வவ்வால். அதற்குள் எனக்கு பலவிதமான பட்டங்களை தந்தமைக்கு நன்றி. என்னைத் தொடர்ந்து நண்பர் நந்தவனத்துக்கும் பட்டங்களை வாரி வழங்கியமைக்கும் அவர் சார்பாக என் நன்றி.//

உங்களுக்கு எங்கே பலப்பட்டங்கள் தந்தேன் "எழுத்து சித்தர்" முன்னரே சொல்வது தானே ஒரு வேளை பலப்பட்டங்கள் தரச்சொல்லி இப்படி மறைமுகமாக வேண்டுகோள் விடுறிங்களோ :-))

நந்தவனத்தார் நமக்கு "தாதா, வாத்தியார், அப்ரண்டீசு, இணையப்புர்ச்சி தலைவர்னு" பலப்பட்டங்கள் அளித்தமையால் நன்றிக்கடனாக தான் திருப்பி சில பட்டங்கள் அளித்துள்ளேன், வழமைப்போல நான் சொன்னால் "கொலக்குத்தம்" போலவே இப்போதும் பார்க்கிறீர்கள்.

# //மருத்துவர் ராமதாஸ் என்ற தலைவரை வெறுமனே சாதி சார்ந்த தலைவராக பார்க்காமல் அவரின் நிறை குறைகளை அலசினேன்.//

அப்பதிவில் ஜாதிய நீக்கிட்டு பார்த்தால் சமூகத்துக்கு தேவையானவர் என சொன்னதோடு அல்லாமல், அவரது அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் முட்டுக்கொடுத்து தான் எழுதினீர்களே அன்றி "குறை,நிறை"களை அலசவேயில்லை,ஆனால் அப்படியான ஒரு நினைப்பு தங்களுக்கு சரிப்போகட்டும் அது உங்கள் மனப்பிராந்தி அதுக்கெல்லாம் மருத்துவம் பார்க்க இயலாது :-))

# // எப்போதும் போல அதற்கு இன்று வரை நீங்கள் பதில் அளிக்கவே இல்லை.//

இதை விட அபாண்டமான ஒரு கூற்றை நான் கேட்டதில்லை, உங்களுக்கு எண்ணற்ற பின்னூட்டங்கள் வாயிலாக பல தொடர்ச்சியான உரையாடல்கள் நடத்தி நீங்க முன் வைக்கும் கேள்விகள்,கருத்துகள் ,விமர்சனங்களுக்கு மிகப்பெருமான்மையான அளவில் பதில் அளித்திருக்கிறேன், உங்கள் பதிவைப்படிக்கும் எவருக்கும் அது புரியும், நீங்கள் குறிப்பிட்டது போல ஏதேனும் ஒரு சில கேள்விகளுக்கு நேரமின்மை,மேலும் பின்னூட்டங்களை தொடர முடியாமல் போனதால் பதில் அளிக்காமல் போய் இருக்கலாம்,ஆனால் நீங்கள் சொல்லும் கேள்வியோ என்னிடம் கேட்கப்படவேயில்லை, பொத்தாம் பொதுவாக பதிவில் எழுப்பியதற்கு நான் பதிலே சொல்லவில்லை என்றால் என்ன செய்வது? அதனை பொதுமை படுத்தி எப்பொழுதும் போல பதிலே சொல்லாமல் போனதாக சொல்வதில் இருந்தே உங்களின் "மனக்கூறு" தெளிவாகிறது.

உங்கள் பதிவில் ஒரு ஆயிரம் கேள்விகள் கூட எழுப்பி இருக்கலாம், எல்லாத்துக்கும் ஏன்டா பதில் சொல்லவில்லை எனக்கேட்டாலும் கேட்பீர்களா :-))

தெரியாமத்தான் கேட்கிறேன் உங்களிடம் குறிப்பிட்டு நேரடியாகவே கேட்கப்பட்டவற்றுக்கு நீங்க எத்தனை முறை பதிலளித்திருப்பீர்கள், பெரும்பாலான சமயம் எல்லாம் உங்களப்போல இருக்க மாட்டாங்க, முட்டாளா வாழ்ந்து பாரு புரியும்னு போல எதாவது சொல்லிட்டு போயிடுவிங்க.

இது நாள் வரையில் பின்னூட்டங்கள் இடுவதெல்லாம் நேர விரயம் என்று நினைத்ததேயில்லை,ஆனால் இப்பொழுது உங்களுக்கு இட்ட பின்னூட்டமெல்லாம் நேர விரயமோ என்று நினைக்க வைக்கிறது.


இனிமே நாமளும் சூதனமா நேரத்த மிச்சப்படுத்துவோம் :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

//உங்களை கலாய்ப்பதில் உரிமை உள்ளவன் என்ற நிலையில் இருப்பதால் என் கருத்துக்கள் மூலம் உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் ரியலி சாரி.//

நாம ஒருத்தரை கலாய்ச்சோம்னா ,திருப்பி கலாய்க்கப்படும் போதும் தாங்கிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன், மேலும் நீங்க கலாய்ச்சிலாம் நமக்கு வருத்தம் வரும் அளவுக்கு "பலஹீனமான மனநிலை" ந்மக்கு கிடையாது, நீங்க அப்படி நினைச்சீங்கனு குறிப்பிடவே சொன்னேன்,இல்லையெனில் அதையெல்லாம் சொல்லிக்கிட்டும் இருக்க மாட்டேன்.

மத்தவங்க சொல்வதை எல்லாம் தூசா நினைச்சு போயிடுறது வழக்கம்,ஆனால் நாம ஒன்னு சொல்லிட்டாலும் என்னமோ உலக்கையால அடிச்சாப்போல "அய்யோ ,அம்மானு" மக்கள் அலறுவதால் நாமும் சொல்லி வைப்போம்னு சொல்லிக்கிட்டேன் :-))

என்னைக்கலாய்க்க உரிமை எல்லாருக்குமே உண்டு,ஹி...ஹி ஆனால் பதிலுக்கு நான் கலாய்க்கும் போது கண்ணைக்கசக்கிட்டு நிக்கப்படாது ,அதான் நம்ம டீல்!

ஜோதிஜி said...

உங்கள் தப்பித்தலுக்கு நன்றி. இனி நானும் என் நேரத்தை மிச்சப்படுத்த பழக்கப்படுத்திக் கொள்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்களின் இந்த முற்றுப்புள்ளி எனக்கு பலவித தாக்கத்தை உருவாக்கியது.

Rathnavel Natarajan said...

வேதனை.

லெமூரியன்... said...

பையன கொலை பண்ணிட்டோம் அப்டிங்கற ஆணவமா..! :-) நாடக காதல்னு சொன்னியே?

இப்போ நீங்கதான் உங்க ஜாதி மானம் போகாம இருக்கறதுக்காக எங்க பையன பொட்ட தனமா கொன்னுடீங்க போல?
உண்மையான வீரம்ன என்ன தெரியுமா?

நேருக்கு நேரா நிக்கிறது..!

அதை விட்டுட்டு கூட்டம் சேர்த்துகிட்டு சத்தம் போடறது இல்ல..!

எங்க பையன் நின்னான். எவனோட சப்போர்ட்டும் இல்லாம.

அதான் அவன கொன்னுடீங்க.

இனி வன்னியன்னா பொட்டைங்க நினைசிக்குவோம் .

அப்பறம் முக்கியமான விஷயம். உங்க பொண்ணுங்களுக்கு பர்தா போட்டு கூடவே ஒரு அழகான வன்னிய வாலிபனையும் துணைக்கி அனுப்புங்க இனிமே..!

ஜோதிஜி said...

ஆச்சரியம் தான் லெமூரியன். நேற்று

ஆனா இந்த விஷயத்தில் கொஞ்சம் நிதானமா நடந்திருக்கலாம் அந்த பெண்ணும் பையனும்.

உங்களின் இந்த வரிகளை படித்துக் கொண்டே இளவரசன் குறித்த ஒவ்வொரு செய்திகளையும் மனதில் யோசித்துக் கொண்டே இருந்தேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் வந்து மீண்டும் உள்ளே வந்து எழுதியிருப்பதைப் பார்க்கும் போது...........

நேரில் சந்திக்கும் போது நிறைய பேசலாம்.

Unknown said...

நானும் இதே மன நிலையில்