Friday, May 01, 2020

கோவிட் 19 முக்கிய செய்திகள் - (ஏப்ரல்- இரண்டாவது வாரம்- 2020)

அந்த 42 நாட்கள் -  26
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


டாஸ்மாக் கடைகள் மூடியிருப்பதால் தினமும் 80 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு.

அமைச்சர் தங்கமணி.

))((

ஒரு நாள் ஊரடங்கின் போது மொத்த இந்தியாவிற்கு 35 000 கோடி நட்டமாகிக் கொண்டு இருக்கின்றது.

மத்திய அரசு.






The Invisible Enemy will soon be in full retreat!

Donald J. Trump

என்னை எதிர்த்தால் நீ கெட்டவன்.
என்னைப் பகைத்துக் கொண்டால் நீ எதிரி.
எனக்கு உதவாவிட்டால் நீ துரோகி.
நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நீ தனிமைப்படுத்தப்படுவாய்.
என்று அமெரிக்காவின் சரித்திரத்தில் எத்தனை எத்தனை தில்லாலங்கடி நிகழ்வுகள். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் முதல் எதிரியாக மாற்றிக் கொண்டது வரைக்கும் அமெரிக்கா செய்த புண்ணிய காரியங்களுக்கு
இன்று ட்ரம்ப் இப்படி அறைகூவல் விட காலம் மாற்றி வைத்துள்ளது.
------------------

கார்ப்பரேட் இன்றைய இணைய உலகின் அநேகரின் பேச்சு பொருள் கார்ப்பரேட் என்றதும் அவர்கள் நினைவில் வருவது அதானி, அம்பானி தான்

ஆனால் அவர்களின் வசதிக்கு கலாநிதி மாறன் சன் குழுமத்தை மறந்துவிடுவார்கள்

சன் டிவி நெட்ஒர்க்
DTH சர்வீஸ்
சன் பிக்சர்
ரேடியோ FM
IPL Team
SCV etc ..


சன் டிவி தமிழகத்தின் முன்னணி நிறுவணமாகவும், இந்திய அளவில் இரண்டாமிடம் இருக்கும் ஒரு நிறுவனம். குறிப்பா கடனே இல்லாத நிறுவனம்

இன்றைய அதன் சந்தை மதிப்பு 13,000 கோடி கோரோனாவால் பாதியாயிடுச்சு

39,40,84,620 கோடி மொத்த பங்குகள்.  இதில் 75 % அதாவது 29,55,63,457 கோடி பங்குகள் சன் குழுமத்திற்கு சொந்தமானது.  2019 to 2020 நிதியாண்டில் சன் டிவி ஒரு பங்குக்கு 4 முறையாக மொத்தமாக கொடுத்த டிவிடன்ட் எவ்வளவு தெரியுமா 25 ரூபாய் (12.50+7.50+2.50+2.50).

அப்படி என்றால் சன் குழுமத்திற்கு மட்டும் டிவிடன்ட்டாக சென்ற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா 738,90,86,425 கோடி. கிட்டத்தட்ட 740 கோடி

தன் 6000 ஊழியர் ஒருநாள் சம்பளம் 10 கோடியை கொரோன நிவரணத்திற்கு வழங்கி உள்ளது சன் குழுமம்

--------------------

தமிழர்களின் மனதை முழுமையாக புரிந்தவர் கலாநிதி மாறன் ஒருவர் மட்டுமே. எதனை? எப்போது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொடுக்க வேண்டும்? என்பதனையும் மிகத் தெளிவாக உணர்ந்தவர்.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது சன் டிவி.

என்னவென்றால், தொடர்ச்சியாக 5 படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு 'கத்திசண்டை', 12 மணிக்கு 'ரமணா', 3 மணிக்கு 'மீசைய முறுக்கு', 6,30 மணிக்கு 'சீமராஜா' மற்றும் 9.30 மணிக்கு 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு 'கலகலப்பு 2', 12.30 மணிக்கு 'காப்பான்', 3.30 மணிக்கு 'டகால்டி', 6.30 மணிக்கு 'தர்பார்' மற்றும் இரவு 9.30 மணிக்கு 'நண்பேன்டா' ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான விளம்பர முன்னோட்டங்கள் தொடர்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், படங்கள் ஒளிபரப்புக்கென்று தொடங்கப்பட்ட சேனல்களைத் தாண்டி இதர சேனல்களில் இப்படியான ஒளிபரப்பு இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
---------------

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. விஜயகார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வாகனங்களில் 14 காய்கறிகள் ரூபாய் 100 என்கிற அளவுக்கு திருப்பூரில் ஒவ்வொரு இடத்திலும் வந்து காய்கறிகள் இப்போது விற்பனைக்கு எளிமையான முறையில் வந்துள்ளது.


இன்று அரசு அறிவித்துள்ள அடுத்த முன்னேற்றப்படி. ரூபாய் 500 க்கு மளிகைச் சாமான்கள். சிறப்பான திட்டம். வெற்றி அடைந்தால் நடுத்தரவர்க்கத்திற்கும் கூட உதவக்கூடியதாக இருக்கும்.

ஆடம்பர திருமணங்களை அடக்கிய கொரோனா

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்...!

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி...!

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி...!

ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி...!


எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி...!

ஜோதிஜி said...

அருமை.

வெங்கட் நாகராஜ் said...

100 ரூபாய் காய்கறி திருச்சியிலும் இருக்கிறது. நல்ல விஷயம்.