Sunday, July 31, 2022

31 July 2022 பின்னோக்கி பார்க்கின்றேன்

நான் எழுதுவேன் என்று நினைத்ததே இல்லை.  13 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவேன் என்று கனவிலும் நினைத்ததுமில்லை. புத்தகம் வெளியிடுவேன். பிரபல்யங்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று நினைத்தது கூட இல்லை.  



Tuesday, July 26, 2022

ஊடக அசிங்கங்கள்.

பத்திரிக்கையுலகம் 1990 வரை அச்சு ஊடகம் என்ற ஒரே ஒரு வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. நிருபர் என்ற பெயரில் தான் அழைத்தார்கள். மற்றபடி பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் குறித்து மக்கள் யாருக்கும் தெரியாது. நிருபருக்கும் பெரிய அளவு மரியாதை இருக்காது. அவர்களும் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பதும் இல்லை. நான் பள்ளி கல்லூரி படித்த போது பலரைப் பார்த்துள்ளேன். 

Thursday, July 21, 2022

தாமரை மாநாடு - Thamarai Maanadu (Tiruppur) - BJP

2024ல்  வரப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக எத்தனை உறுப்பினர்களைப் பெறும்? என்பதனை பாஜக ஆதரவாளர்கள் நம்புவதைவிட எத்தனை சதவிகிதம் ஓட்டுக்களைப் பெறுவார்கள்? அதிலும் தங்களது ஓட்டுக்களை பாஜக பிரிக்குமா? என்பது தான் திமுக, அதிமுக முன்னால் இருக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.  



Tuesday, July 12, 2022

ஒரே கல்லில் நூறு மாங்காய்

நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களிடம் உள்ள அசாத்தியமான சக்தி என்னவெனில் அவர் முதல் 50 வருடங்களில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பயணம் செய்து கற்று வைத்துள்ள அனுபவ பாடங்களை முழுமையாக தற்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு உரமாக மாற்றி வருகின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?



Thursday, July 07, 2022

என்னைச் சுற்றிலும் பெண்கள்

வீட்டில் என்னைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள். அக்கா, தங்கை, அத்தை, பெரியம்மா, சின்னம்மா என்று வகைதொகையில்லாமல் கூட்டுக்குடும்ப கூட்டத்திற்குப் பஞ்சமே இல்லை. வளரும் போதே பெண்கள் குறித்த எவ்வித கிலேசமும் உருவாகவில்லை.

Saturday, July 02, 2022

அண்ணாமலை - தென் இந்தியாவின் அடையாளம்

காமராஜர் அவர்களை அரசியல் தலைவராக உருவாக்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. (ராஜாஜிக்கு போட்டியாக)

பக்தவச்சலம் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்டார் (கே பிளான் காரணமாக)

ராஜாஜி அவர்களை ஒரு பக்கம் காந்தி மறுபக்கம் நேரு இருவரும் கொண்டு வந்தனர்.  (காந்திக்கு சம்மந்தியும் கூட)

மூவரும் உருவாக்கப்பட்ட தலைவர்கள்.

இறந்தாலும் இன்னமும் புகழோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர் காமராஜர் மட்டுமே.  மற்றவர்கள் அரசியல் களத்தில் யாராலும் பேசப்படவில்லை.  

இது காங்கிரஸ் கட்சியின் முதல் 50 ஆண்டு கால சுருக்கமான பார்வை.