Showing posts with label ஈழவரலாறு தொடர் 2வது பகுதி. Show all posts
Showing posts with label ஈழவரலாறு தொடர் 2வது பகுதி. Show all posts

Thursday, February 25, 2010

இறந்து பிறந்த பிரபாகரன்

இலங்கையின் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் சிங்களர்களாக மட்டும் தான் இருக்க முடியும்.  அதுவும் மேலாதிக்க சக்தியாகத் தான் இருந்து தொலைக்க முடியும்.  வருகின்றவர்கள் அத்தனை பேர்களும் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது.  பின்னால் வரப்போகின்ற சந்திரிகா அவர்களின் கணவர் சிங்களராக இருந்தாலும் தமிழர்களின் நலனை மனதார விரும்பியவர்.  ஆனால் சிங்கள இடது சாரிகளால் அவரின் உயிரும் போக்கடிக்கப்பட்டது.  இலங்கை சுதந்திரம் பெற்ற போது மலையக தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களும் இந்த நாட்டில் வாழ வேண்டியவர்கள் என்பதாக ஒருமித்த குரல் எழுப்பியவர்கள் எவருமே தமிழர்கள் அல்ல.  அப்போது எதிர்கட்சியாக இருந்த இடது சாரி தலைவர்களே.

ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் உள்ளே இருக்கும் அமைச்சர்கள் தமிழர்களுக்கு எதிராக இருப்பார்கள்.  இருவரும் நல்லவராக இருந்தால் வெளியே மறைமுக ஆட்சி நடத்திக் கொண்டுருக்கும் புத்தபிக்குகள் பார்வையில் தப்பிவிட முடியாது.  இவர்கள் அத்தனை பேர்களையும் தாண்டி வெளியே வந்து விட்டால் இதற்கு மேல் உள்ளே செயல்பட்டுக் கொண்டுருக்கும் இனவாத சங்கங்கள் , கட்சிகள் முன்னால் வந்து நிற்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விட தயாராய் இருப்பார்கள்.  எவருக்கு தைரியம் வரும்?  

இந்த வலைபின்னலை தொடக்கம் முதல் தந்தை செல்வா உணராத காரணமே அவருடைய இறப்பு வரைக்கும் அவருக்கு தோல்வியை மட்டுமே தந்தது.  அவர் பொறுப்பில் அடுத்து வந்தமர்ந்த அமிர்தலிங்கம் ஒரு வகையில் பார்க்கப்போனால் இறுதியில் மக்கள் செல்வாக்கை முழுமையாக இழந்து தொகுதி மாறி போட்டியிட்டதும், தேர்தலில் தோல்வியைத் தழுவி நானும் அரசியலில் இருக்கின்றேன் என்பது போலத் தான் வாழ்ந்து கொண்டுருந்தார்.

இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு குணாதிசியம். அவரவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் கிடைத்த பாதிப்புகள் காரணமாக சிலர் தமிழர் சார்ந்த நல்ல விசயங்களை செயல்படுத்த தயாராய் இருந்தாலும் உள்ளே உள்ள இது போன்ற இடியாப்பச் சிக்கல்கள் அவர்களை பயமுறுத்தி வைத்து விடும். ஒரு அளவிற்கு மேல் வேண்டாம்டா சாமி என்பதாக மாற்றிவிடும்.  இது தான் இன்று வரைக்கும் இந்த இலங்கை பிரச்சனையை ஆண்டு கொண்டுருக்கிறது.  முடிவுக்கு வராமலே முடிந்தவரைக்கும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.  அதுவும் சமீப காலமாக சர்வதேச அரசியல் ஒரு பங்காக உள்ளே நுழைந்ததும் அதன் தாக்கம் மொத்தத்திலும் வேறு திசையில் பயணித்து இனி வாய்ப்பு இருக்குமா? என்கிற அளவிற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது?

இப்போது ஆட்சியில் இருக்கும் பிரேமதாசா பௌத்த இனத்தின் சிங்கள தலைவராக இருந்தாலும் ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்தில் தமிழர் பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதை நோக்கி தான் நகர்த்தினார்.  காலம் செய்த கோலம் உள்ளேயிருந்த சக அமைச்சராலே அவரும் மாற்றம் பெற்று விட்டார் என்பதே சரியாக இருக்க முடியும். சிங்களர்களின் தந்தையாக கருதப்படும் முதல் பிரதமர் சேனநாயகா உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சி என்பது பிறகு ஜெயவர்த்னே மூலம் வழி நடத்தப்பட்டு இப்போது பிரேமதாசாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக ஆட்சிக்கு வந்த இவர் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அடித்தட்டு மக்களின் சார்ப்பாளராகத் தான் உள்ளே வந்தார். ஆனால் ஆண்டு விட்டுப் போன ஜெயவர்த்னே மொத்தத்திலும் சிறப்பான அரசியல் ஞானி. அரசியலில் ஜெயிக்க முதல் தகுதியே எதை செய்யக்கூடாதோ அதன் பக்கம் திரும்பவே கூடாது.  அதுவே மக்கள் நலனாக இருந்தாலும் பரவாயில்லை. காலப்போக்கில் மக்களை வேறு பக்கம் மாற்றி விடலாம்.  ஆனால் பதவி போய்விட்டால் அந்த மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிச்சயமில்லை. அவருக்கு ஒரு படி மேல் அவரின் சிஷ்யகோடிகள் இரண்டு பேர்களும்.  நான்கு பேர்களை வெட்டி விட்டு வாங்கப்பா என்றால் அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலியும், காமினி திச நாயகாவும் ஒரு கிராமத்தையே வெட்டி வோரோடு கொண்டு வந்து காலடியில் சமர்பித்தவர்கள்.  இதனால் மட்டுமே அவரால் எந்த உள் நாட்டு எதிர்ப்பும் இல்லாமல் நிம்மதியாக தானுண்டு தான் செய்து கொண்டுருந்த தமிழர் அழிப்பு உண்டு என்று கனஜோராக பத்து வருடங்கள் குப்பை கொட்ட முடிந்தது.  ஆனால் பிரேமதாசாவின் கெட்ட நேரம் என்பது உள்ளேயிருந்த இந்திய அமைதிப்படை மூலம் பிரபாகரனுக்கு நல்ல நேரமாக அமைந்து இருந்தது.

இவரால் ஆட்சிக்கு வந்து முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சியில் அமர்ந்து நிம்மதியாக ஆள முடியவில்லை என்பதை விட இவருடைய ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் திடுக்கிட வைக்கக்கூடிய நிலமெல்லாம் ரத்த சம்பவங்கள். அத்தனையும் 1989 முதல் 1991 மே முடிவதற்குள் வரிசையாக நடந்த படுகொலைகள்.  அதிலும் 1989 ஜுலை என்பது 1983 கருப்பு ஜுலை போலவே இருந்தது.  அந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று துப்பறியும் நாவலில் வரும் திடுக்கிடக்கூடிய சம்பவங்களாகவே இருந்தது.  அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் படுகொலை ஒரு பக்கம்.  அதனைத் தொடர்ந்து மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற உச்சக்கட்ட நகைச்சுவை சமாச்சாரம் என்றும் நடந்தது. 

இவர் காலத்தில் நடந்த ஒன்று கூட இயற்கை மரணம் அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள்.  இது போக இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த முஸ்லீம் மக்களின் இடப்பெயர்வும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், பிரபாகரனுக்கும் கிடைத்த அவப்பெயரும் மறக்க முடியாத அளவிற்கு அதுவே கடைசியில் அவர் மனதார மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஈழ இரண்டாம் யுத்தமும் இதன் காரணமாகத் தான் தொடங்கியது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சிக்கு மறைமுக காரணமாக இலங்கை ஆட்சியளார்களே இருந்தனர். ஜெயவர்த்னேவைப்போலவே இப்போது ஆண்டு கொண்டுருக்கும் பிரேமதாசவோ நேரிடையான காரணமாக இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். 
Add caption
பிரேமதாசா மனிதவெடிகுண்டால் சாகடிக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்
எம்ஜிஆர் பிரபாகரனுக்கு பிரியத்துடன் கொடுத்த பணத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தன்னிடம் இருந்த விடமுடியாத பயத்தினால் மட்டுமே எல்லாவிதங்களிலும் அன்றைய சூழ்நிலையில் பிரேமதாசா விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினார். இந்திய அமைதிப்படையை எப்படியாவது வெளியே விரட்ட வேண்டும் என்று மில்லியன் கணக்காக பணமும் ஆயுதமும் பிரேமதாசாவால் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டது.  இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவென்றால் பதுங்கு தாக்கு என்ற தொடங்கிய விடுதலைப்புலிகளின் கொரில்லா தாக்குதல் என்பதில் இருந்து வலிமையான இராணுவ ரீதியான தாக்குதல்களும், அதன் மூலமாக கிடைத்த வெற்றிகளும் உருவாகி விடுதலைப்புலிகளின் இயக்க வளர்ச்சியை இப்போது நடந்த போராட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது.  மூன்று மாதங்கள் இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகு இலங்கை இராணுவத்தை வென்று யாழ் கோட்டையைப் பிடித்தது என்பது பிரபாகரன் ஆளுமைக்கு கிடைத்த ஒரு மைல் கல் சாதனை சாதனையே.

இதற்கு மேல் நடந்த சிறப்பு சமாச்சாரம் பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழக ஊடகங்கள் வெற்றிவிழா கொண்டாடியதும் நடந்தேறியது.  உருவாக்கியது இந்திய உளவுத்துறை.  அவமானப்பட்டது ஊடகங்கள்.  வந்த செய்தி தவறு என்றாலும் காத்துக் கொண்டுருந்தவர்கள் போல கட்டம் கட்டி வெளியிட்டனர். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற செய்தி வந்த போதும் அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு தாண்டி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் பட்டியலை பார்த்து விடலாம். அமிர்தலிங்கம் படுகொலை, உமா மகேஸ்வரன் படுகொலை, இவை இரண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடைவெளியில் நடந்தது.  அமிர்தலிங்கம் கொழும்புவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டது 1989 ஜுலை 13.  உமா மகேஸ்வரன் ஜுலை 16ந் தேதி.  இதன் தொடர்ச்சியாக ஜுலை 24 அன்று மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பரபரப்பு செய்திகள்.  ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லை என்றாலும் அமிர்தலிங்கம் இறப்பால் பலத்த கண்டனங்களை பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம்.  உமா மகேஸ்வரன் இறப்பு என்பது அவர்கள் இயக்கத்திற்கு உள்ளே இருந்தவரால் கொல்லப்பட்டாலும் இது இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்பதை பிரபாகரன் இறந்து விட்டார் என்று உருவாக்கிய செய்தி மூலம் தான் மாத்தையா இதற்கு பிறகு தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டதும், அவரின் திருவிளையாடல்களும், இதற்கு பின்னால் இருந்த உளவு வலைபின்னல்களும் கண்டு உணரப்பட்டது.  

பிரேமதாசா ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் தான் பதவிக்கு வர எல்லா விதங்களிலும் உதவியாய் இருந்த ரஞ்சன் விஜயரத்னேவுக்கு சிறப்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறையை அவருக்கு ஒதுக்கி சிறப்பாகத் தான் வைத்து இருந்தார்.  பிரேமதாசாவுக்கோ அமைதிப் பாதையை இனி உருவாக்கி விடலாம் என்ற லேசான எண்ணத்தை மனதில் வைத்திருந்தவர். முழுமையாக விரும்பினாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் விடுதலைப்புலிகளை அழைத்து சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட்டு அஸ்திவாரத்தை பலமாகத் தான் பிரேமதாசா தோண்டினார்.  ஆனால் இவர் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னெ உருவாக்கிய அலங்கோலமும், இவர்கள் இருவருக்கும் நடந்த பதவிப் போரில் இருவரும் இறந்து போகும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்த ரஞ்சன் விஜயரெத்னேவுக்கோ எப்போது தனக்குண்டான வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டுருந்தவர். இந்த இடத்தில் ரஞ்சன் என்ற மகா மனிதரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜெயவர்த்னே ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் கொடூரத்தை விட இவர் ரசித்து செய்தது ஒவ்வொன்றும் அதையும் தாண்டி புனிதமானது.  உள்ளே இடது சாரி சிந்தனைகள் உள்ள JVP இயக்கத்தினரையும், அவர்களை ஆதரித்த அத்தனை பேர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கூண்டோடு அழித்து ஒழித்தார். அப்போது மனித உரிமை கமிஷன் கணக்குப்படி இவரால் கொல்லப்பட்ட ஜேவிபி மற்றும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல்.  காயம் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் கணக்கு இதில் அடங்காது.பேச்சு என்பதே கூடாது.  உடனே முடித்து விடவேண்டும் என்று தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் முடித்துக்காட்டியவர்.

 இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் ஓய்வெடுத்துக்கொண்டுருந்த இலங்கை இராணுவத்தை சோம்பலில் இருந்து விழித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்பதை குறிப்பால் உணர்த்தி மறைமுக குதியாட்டம் போட வைக்க காத்துக்கொண்டுருந்தார்.   பிரேமதாசா உருவாக்கியிருந்த அமைதி ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர இவர் உருவாக்கிய அணர்த்தங்கள் மூலம் தான் ஈழ இரண்டாம் யுத்தமும் நடந்தேறத் தொடங்கியது. தொடங்குவதற்கு பல காரணங்கள்.  ஆனால் மொத்தத்தில் அதன் பெருமை அத்தனையும் இவருக்கே போய்ச் சேரும். 

விடுதலைப்புலிகளை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுருந்தவர் தான் கூட்டும் பாதுகாப்பு கூட்டங்களைக் கூட பிரேமதாசாவிடம் தெரிவிக்காத அளவிற்கு தன்னை தனி ஆளாக தனி ஆவர்த்தனம் நடத்தும் ஆளாகவும் மாற்றிக்கொண்டுருந்தார்.  வளர்ந்து கொண்டுருந்த அவரின் புகழ் என்பது பிரேமதாசாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிக்க வைத்தது. தன்னிடம் தெரிவிக்காமல் தனி ஆவர்த்தனம் நடத்த தொடங்கியபோது உணர்ந்த பிரேமதாசா அதன் மூலம் இருவருக்கும் இடையே உருவான அதிகாரப் போட்டி என்பது ரஞ்சன் விஜயரெத்னே உயிரை பறிக்கவும் காரணமாக அமைந்து விட்டது. கொழும்பு சாலையில் இவர் பயணித்த வாகனத்தில் வந்து மோதிய வெடி மருந்து நிரப்பட்ட வண்டி மூலம் கதை முடிவுக்கு  கொண்டு வரப்பட்டது. இவருடைய இறப்பு எந்த அளவிற்கு கோரமாக இருந்தது என்றால் நிகழ்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்ட பத்திரிக்கையாளர்கள் சொன்னபடி அந்த இடம் விமான தாக்குதல் நடத்தப்பட்டது போல் இருந்து.  இவரின் தனிப்பாணியான சுட்டு தொங்கவிடுதல் போல் இவருடைய உடம்பும் பிய்ந்து போய் தனியாக தொங்கிக்கொண்டுருந்தது. இவரின் வீர்யத்தைக்குறைக்க அதிகப்படியான வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தை உருவாக்கியது அரசா இல்லை வேறு எவரா? என்பதை இறுதி வரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை. பிரேமதாசா எப்போதும் போல் இவருக்கும் சிறப்பு பட்டம் கொடுத்து விட்டு கண்ணீர் செலுத்தி அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டார். அப்போதும் இவர் இறப்பு விடுதலைப்புலிகள் மேல் சுமத்தப்பட்டது. இவர்கள் தான் செய்தார்களா என்பதை விட செய்து இருந்தால் பரவாயில்லை என்று சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து சந்தோஷப்படும் சூழ்நிலையில் தான் ரஞ்சன் என்பவரை காலன் தன்னுடைய வரவு கணக்கில் வைத்தார்?

விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு பலத்த கண்டனங்களை உருவாக்கியது அமிர்தலிங்கம் படுகொலை.  சிறீ சபாரெத்தின படுகொலைக்குப் பிறகு இவரின் படுகொலையென்பது மெல்லிய அரசியல் வலை பின்னல் போன்றது.  கொன்றது விடுதலைப்புலிகள் தான்.  ஆனால் மாத்தையா மூலம் உருவாக்கப்பட்ட பல புதிரான நிகழ்வுக்கு பின்னால் உளவுத்துறையின் பங்கும் இதில் இருக்கிறது. காரணம் அமிர்தலிங்கம் இறந்த 1989 ஜுலை 13க்கு பிறகு அடுத்த மூன்று நாளில் பிரபாகரனுடன் தொடக்கம் முதல் ஒன்றாக இருந்த உமா மகேஸ்வரனும் சுட்டுக்கொல்ப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஊடகத்தால் ஊதிப் பெரிதாக பேசப்பட்ட மாத்தையாவால் பிரபாரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும்.  இதன் தொடர்ச்சியை அன்று ஊகித்தவர் விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மட்டுமே.  ஆயுதக் கொள்முதல் முடித்து திரும்பி வந்து கொண்டுருந்த கிட்டு கப்பல் காட்டிக்கொடுப்பு மூலம் தான் இதன் பின்னால் உள்ள மாத்தையா உளவுத்துறையிடம் விலை போயிருந்ததை கண்டு பிடிக்க முடிந்தது.  எப்போதும் போல அமிர்தலிங்கம் படுகொலைக்கு நாங்கள் சம்மந்தம் இல்லை என்ற விடுதலைப்புலிகள் இயக்கம் அறிக்கை விட்ட போதிலும் நம்ப எவரும் தயாராய் இல்லை.  புதைக்கப்பட்ட ரகஸ்யமாகவே போய்விட்டது.  இப்போதைய சூழ்நிலையில் பிரபாகரன் செய்யாமல் இருந்தாலும் கணக்கு என்பதோ அவர் பக்கத்தில் வரவு என்று வைக்கப்படும் சூழ்நிலை தான் இருந்தது.

இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அரசியல் பாதைக்கு இயக்கத்தை கொண்டு வந்து இருக்கலாம் என்பதே.  ஆனால் பிரேமதாசா காலத்தில் அதற்கும் முயன்று பார்த்தவர் பிரபாகரன்.  தொடங்க வேண்டும் என்று உறுதியாய் இருந்து பிரபாகரன் மனத்தை மாற்றியவர் ஆன்டன் பாலசிங்கம்.  விடுதலைப்புலிகள் மக்கள் முன்ணணி (PEOPLE'S FRONT OF LIBERATION TIGER'S (PFLT) )  தலைவராக மாத்தையாவும், பொதுச் செயலாளராக யோகியும் பதவியில் அமர்த்தப்பட்டு முறைப்படியான அரசாங்க பேச்சு வார்த்தைகள் கூட தொடங்கப்பட்டது.  காரணம் கிழக்கு மகாணங்களில் ஆட்சி அமைப்பு மூலம் இனியாவது மக்கள் செல்வாக்கை மீட்டு எடுக்கலாமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  அரசியல் கட்சியாக பதிவும் செய்து அதன் சின்னமாக பாயும் புலி என்பதும் தீர்மானிக்கப்பட்டது.  பிரேமதாசாவின் அழைப்பை ஏற்று  பேச்சு வார்த்தை கூட தொடங்கப்பட்டது. ஆனால் பிறகு பிரேமதாசாவின் மனம் மாறியதும் அதுவே மனித வெடிகுண்டு மூலம் அவர் உயிரைப் பறிக்கும் அளவிற்கும் கொண்டு போயும் நிறுத்தியது.

வட கிழக்கு மகாண தேர்தல் நடத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகள் ஜெயித்து வந்து விடுவார்கள்.  இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் காலப்போக்கில் தனியாட்சி வரைக்கும் வந்து விடுவார்கள்.  கணக்குப் போட்ட பிரேமதாசா காலம் கடத்தத் தொடங்கினார்.  சிங்களர்கள் என்றால் தந்திரம் என்று தானே அர்த்தம்.  முதன் முதலாக ஆயுதங்களை கை விடுவோம் என்று விடுதலைப்புலிகளை அறிக்கை விட வேண்டும் என்றார்.  விடுதலைப்புலிகள் புரிந்து ஒதுங்கி விட்டனர்.  அப்போது தான் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னே உள்ளே இருந்த மொத்த தீவிரவாத இயக்கங்களையும் பூண்டோடு அழித்து தும்சம் செய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டுருந்தார்.  இப்போது அவர் பார்வையில் விடுதலைப்புலிகள்.  விடுவாரா?  காத்துக்கொண்டுருக்கும் இலங்கை இராணுவம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
இந்திய அமைதிப்படை உள்ளே யிருந்தவரைக்கும் தினவெடுத்த தோளுடனும், அமைதி கால சூழ்நிலையை கருத்தில் வைத்து வெளிநாடுகள் கொடுத்த நல உதவித் திட்ட பணத்தை ஆயுதமாக மாற்றி வைத்திருந்தது எவருக்கு உதவியதோ இல்லையோ ரஞ்சன் விஜயரெத்னேவின் சிந்தனை களுக்கும் கைகளுக்கும்  அரிப்பெடுக்கத் தொடங்கியது.  ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்தில் பிரேமதாசா உருவாக்கி இருந்த அமைதிப்பாதை முழுக்க கெட்டுப்போனதற்கு முக்கிய காரணம் இவரே.

இவரால் உருவாக்கப்பட்ட  உருவாக்கிய அணர்த்தங்களால் முறைப்படியான இராணுவ பலம் என்பதையும் பெற்று, புதிய கொள்கைகள், நோக்கங்கள், பாதைகள் என்று பயணித்து வந்த விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியான தாக்குதல்களையும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக மூன்று மாதங்கள் இடைவிடாமல் நடத்தி யாழ் பகுதியை தங்களது கோட்டையாக்கினர்.  பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரேமதாசாவும், ரஞ்சன் விஜயரெத்னேவும் வடகிழக்கு மக்கள் மேல் வன்முறையை ஏவி விட இதன் தொடர்ச்சியாக உருவானது தான் முஸ்லிம் மக்களை அவர்கள் பகுதியில் இருந்து இடம் பெயர வைத்தது வேறு பகுதிக்கு அவர்களை அகதியாக சொத்துக்களை இழந்து நடக்க வைத்து அவல பாதைகளை உருவாக்கியதும் நடந்ததேறியது.

இடப்பெயர்ச்சியும் அவர்களின் அவல வாழ்க்கையும்.  இது ஒரு தனிப்பிரிவாக ஈழ இரண்டாம் யுத்தத்திற்கு கொண்டு செலுத்தினாலும் எந்த வகையில் பார்த்தாலும் இறுதியில் பிரபாகரன் மன்னிப்பு கேட்டது போல் கொடுமையான கொடூரமாக இந்த இடப்பெயர் நடந்தேறியது.  பிரபாகரன் ஆளுமையில் நடந்த இந்த கொடுமை கொடூரம் பலத்த கண்டனங்களை அவருக்கு ஏற்படுத்தியது.

மீதம் உள்ள ரத்த தடங்களை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம். முதலில் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத அதுலத் முதலி.  இவர் ஜெயவர்த்னே ஆட்சி காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.  பிரேமதாசாவை எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கி ஊரெல்லாம் மேடை போட்டு முழங்கிக்கொண்டுருந்தார். 

பதவியை எதிர்பார்த்து ஏமாந்து போன அதுலத் முதலி, காமினி திசநாயகா போன்றவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி( DUNF DEMOCRATIC UNITED NATIONAL PARTY) நடத்தி உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டுருந்தனர்.  அதிலும் அதுலத் முதலிக்கு சற்று வீராவேசம் அதிகமாக இருந்தது. பொதுக்கூட்ட மேடையில் முன்னால் இருந்து பார்த்துக்கொண்டுருந்தவர் கையில் இருந்த துப்பாக்கி குண்டின் மூலம் அதுலத் முதலியின் (1993 ஏப்ரல் 23) கதை முடிவுக்கு வந்தது. இது முதல் ரத்த ஆறு. விடுதலைப்புலிகள் நாங்கள் தான் இதற்கு காரணம் என்பதை தெளிவாக தைரியமாக முரசறிவித்தனர்.  இவரின் இறப்பு அந்த அளவிற்கு தமிழர்களிடம்  மகிழ்ச்சியை உருவாக்கியதை இங்கு குறிப்பிடலாம்.  தவறில்லை.

ரஞ்சன் அந்த அளவிற்கு ஜனரஞ்சகமான பல நல்ல காரியங்களை தமிழர்களுக்கு எதிராக பார்த்து பார்த்து செய்து கொண்டுருந்தவர்.

இத்தனை ஓய்வில்லா வேலைகளுக்கிடையே  கடின பணிகளுக்கிடையே, போராட்டங்கள், வெற்றிகளுக்கிடையே இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட பணியும் வெற்றிகரமாக இன்று முடிவுக்கு வந்தது.

மே மாதம் 1991 இரவு 10.20 ஸ்ரீ பெரும்புதூர்.  தமிழ்நாடு. இந்தியா.

ஆற அமர அதன் புலனாய்வு பக்கங்களை உணர்ந்து தான் ஆக வேண்டும்.

வீர்யமும் திட்டமிடுதலும் புரியும்.  உளுத்துப் போன நிர்வாகத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.  அதிலும் கூட, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் உருவான சாதனைகளையும் இந்த உலகத்திற்கு பறைசாற்ற முடியும் என்று உணர்த்தியவரையும் நமக்கு புரியவைக்கும். ......?

எதிர்மறை நியாயங்கள் ஒரு பக்கம்,  ஆனால் இரண்டு பக்கமும் தமிழர் என்பதே ஆதங்கம்.
இங்கு தலைமைப்பொறுப்பில் இருந்து டிஆர் கார்த்திகேயன் மற்றும் அவரின் குழுவினர்.  அங்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருக்கு பக்க பலமாக இருந்த குறைவான குழுவினர்.காரணம் அன்றைய தினத்தில் பின்னால் விலகிப்போன இரண்டாம் கட்டத்தில் இருந்த கருணாவிற்கே இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு தான் தெரிந்தது. கிடைத்த மொத்த ஆதாரங்களை வைத்து ஆச்சரியப்படலாம் இல்லையேல் ஆதங்கப்படலாம்.

ஆதாரங்கள், ஆச்சரியங்கள், அவமானங்கள், கோரங்கள், கொடுமைகள் என்று தொடர்ந்து எழுதினாலும் இதன் முழுமையான தீர்க்கப்படாத பல உண்மையான விசயங்கள் இன்னமும் இருக்கிறது என்பதோடு சம்மந்தப்பட்டவர்கள் இன்னமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுருப்பது ஒரு கொடுமை என்றால் சம்மந்தம் இல்லாமல் மாட்டிக்கொண்டவர் இன்னமும் தண்டனை காலம் முடிந்தும் அதற்கு மேலும் அனுபவித்தும் உள்ளே புழுங்கி வாழ்வது அதைவிடக் கொடுமையானது.  இபிகோ சொல்வதைப்போல குற்றவாளியைப் போல குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் சாத்யமில்லாத பாதையில் தான் பயணித்துக்கொண்டுருக்கிறது.  இது நடக்கப் போகிறது?  இவ்வாறு ஒன்று நிகழப் போகிறது என்று உணர்ந்தவர்கள் பல பேர்கள்.  ஆனால் இன்று வரையிலும் உண்மையைத் தவிர அத்தனையையும் பேசிக்கொண்டு இருப்பதும் வாழ்வதும் மொத்ததிலும் வியப்புக்குரியது.  இது தான் இந்தியா.  இது தான் இந்தியச் சட்டத்தின் சிறப்பம்சம்.

(இடைவேளை......தொடர்வோம்....)

Wednesday, February 24, 2010

ரத்த ஈழ பூமி

குடியாட்சி என்பதும் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சார்பாளர்களால் ஆளப்படுவது.  ஆனால் நவீன கால அரசியல் என்பது சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. முயற்சிப்பவர்களுக்கும், முன்னேறிக் கொண்டு இருப்பவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் அது.  உலகமெங்கும் இதே கதை தான்.  திரைக்கதை மட்டும் அங்கங்கே வேறுபடும்.  முடிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து திருவாளர் பொதுஜனத்திற்கு ஆதர்ஷணமாய் மாறி விடுகிறார்கள்.  முடியாதவர்கள் முட்டி பெயர்ந்தால் கூட மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம் என்று விடமுடியா சோகமாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பராவாயில்லை மெதுவாக பார்க்கலாம் என்றால் கூட அவர்களின் பாதையால் அவர்களின் மூச்சும் முடிக்கப்பட்டு முகவரி இல்லாமல் மண்ணுக்குள் புதைந்து விடுகிறார்கள். அடுத்தவர் தொடர்கிறார். இதுவே வாரிசு போர் என்று வந்து மீண்டும் தொடர்கிறது.  ராஜ போதை ஆட்டம் இது.

ஜெயவர்த்னே ஆட்சியில் இருந்தவரைக்கும் அவரது ஐக்கிய தேசிய கட்சியில் எடுப்பும் தொடுப்புமாக இருந்தவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அதுலத் முதலியும் மற்றொரு அமைச்சரான காமினி திச நாயகாவும்.  ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு அவர்களால் பதவிக்கு வர முடியவில்லை என்பதோடு அதுலத் முதலி பிரேமதாசா ஆட்சியின் போது விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்ப்பட்டார். காரணம் அவர் தமிழர்கள் வாழ்வில் கொடுத்த ஒவ்வொரு அடியும் அந்த அளவிற்கு ரசித்து ருசித்த இடியாகத் தான் பார்த்து பார்த்து செய்தார்.  

ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு இவர்களை மீறி பிரேமதாசாவை பதவிக்கு  கொண்டு வருவதற்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே.  1989 ஜனவரி 2 அன்று பிரேமதாசா ஆட்சியைத் தொடங்கினார்.  சரியாக முழுமையான 5 வருட பதவிக்காலத்தைக்கூட முழுமையாக அவரால் ஆண்டு அனுபவிக்க முடியவில்லை.  இலங்கை முழுவதும் ரத்தமும் சகதியுமாக மாற்றம் பெற்றது.  இவர் முடிந்து போகும் தருவாயில் இந்தியாவில் ராஜிவ் காந்தி மரணமும் நிகழ்த்தப்பட்டது.  ஏன்?

பிரேமதாசா பதவிக்கு வர காரணமாக இருந்து உழைத்த ரஞ்சன் விஜயரத்னே, அவரே பிறகு பிரேமதாசாவிற்கு எதிரியாக மாறிப் போனார்.  மாறிய அவரை பொறுத்துக்கொள்வது அரசியல் ஞானப்படி தவறு.   வெடிகுண்டு நிரம்பிய சிறிய ரக பேரூந்து மூலம் அவரின் வாழ்க்கை கதை முடித்தும் வைக்கப்பட்டது. ரஞ்சன் விஜய ரத்னேவை கொன்றது விடுதலைப்புலிகள் அல்ல.  பிரேமதாசா அரசாங்கமும் அதை பெரிது படுத்தவில்லை என்பதில் இருந்து எவர் கொன்று இருப்பார்கள் என்பதை நீங்கள் தான் யூகித்துக்கொள்ள வேண்டும். 

தன்னை, தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைவன் என்ற மனிதன் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்பதும், சிங்களர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்னவென்பதும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்- காரணம் இதே இந்த ரஞ்சன் விஜயரத்னே ஜேவிபி என்ற சிங்கள இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இடது சாரி எண்ணங்கள் கொண்டவர்களால் வழி நடத்தப்பட்ட புரட்சிகர இயக்கத்தை அழித்து ஒழித்து துடைத்தும் எறிந்தனர்.  அரசாங்க கணக்குப்படி குறிப்பிட்ட கால கட்டத்தில் அதில் உள்ள 15000க்கு மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றனர்.  சீனாவின் தியாமென் சதுக்கம் போல் தரைமட்டமாக்கி துடைத்து ஒழித்தனர்.  காரணம் இது அரசியல்.  விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியெல்லாம் வெளியே தான்.  ஆட்சிக்கு வந்தவுடன் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.  மொத்தத்தில் இது தான் அரசியல் தரும் வெறியும் வெற்றியும்.  இந்த ஆடு புலி ஆட்டத்தில் ஜெயிப்பார்கள் மட்டுமே தலைவர்கள்.   கருணை, காருண்யம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து கிளம்பும் போதே பத்திரமாக பரணில் ஏற்றி வைத்து விட வேண்டும்.  வேண்டுமென்றால் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்து பேசிக்கொள்ளலாம்?  நடைமுறையில் காத தூரம்.

சிங்களர்களின் தந்தையாக சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியில் வந்து அமர்ந்த சேனநாயகாவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பண்டாரா நாயகாவைப் போலவே இப்போது ஜெயவர்த்னே என்ற மகா ஆளுமையை முடிவுக்கு வந்து இருக்கிறார். இப்போது சில பழைய விசயங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தந்தை செல்வா என்ற செல்வநாயகம் 1949 தமிழரசு குடியரசு கட்சி உருவாக்கி இலங்கை தமிழர்களுக்கு அமைதி வழியில் போராடி உரிமைகளை மீட்டெடுப்போம் என்றவரை அத்தனை சிங்கள தலைவர்களும் ஏமாற்றி உண்டு இல்லை என்று ஆக்கினர்.  சுதந்திரம் பெற்றது முதல் அவர் 1977 இறப்பு வரைக்கும் கால் நூற்றாண்டு காலமாக அவர் பெற்ற அவமானங்கள் மன உளைச்சல்கள் வேறு எந்த தலைவர்களும் பெற்று இருப்பார்களா என்பது சந்தேகமே.  இலங்கை தமிழினமே அவரை போற்றிக் கொண்டாடியது.  பண்டார நாயகா ஆட்சிக்கு வர உள்ளே இருந்த இனவாத கட்சிகளும், இடது சாரி கட்சிகளுமே அப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.  ஆனால் அதே இடது சாரிகளுடன் முட்டல் மோதல் உருவான போது பண்டாரா நாயகாவின் பார்வைக்கு முதன் முதலாக தென்பட்டவர் தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி.  இருவரும் கை கோர்த்துக்கொண்டனர்.   உருவானது பண்டா செல்வா ஒப்பந்தம்.  தமிழர்கள் போற்றிக்கொண்டாடினார்கள் விடிவு வந்து விட்டது என்று.  ஆனால்?

பண்டார நாயகா மரபின் படி தமிழர்.  சிங்களராக மாற்றம் பெற்றவர்.   300 ஆண்டுகளில் அவரது முந்தைய தலைமுறையினர் கொண்டு வந்த கலப்பும், மாறிய மதமுமாய் இறுதியில் இவரை சிங்கள தலைவராக மாற்றம் பெற வைத்துள்ளது என்பதையும் சற்று கவனத்தில் வைத்துக்கொள்ளலாம்.
இருவரும் போட்டுக்கொண்ட பண்டா செல்வம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இருக்குமேயானால் அப்போதே மொத்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ஒரு பாதைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்?

ஏன் வெற்றியடையவில்லை. காரணம் புத்த பிக்குகளின் எதிர்ப்பும் அதுவே எல்லை மீறி பண்டார நாயகாவை சுட்டுக்கொன்று தமிழர்களுக்கென்று போடப்பட்ட அந்த ஒப்பந்தமும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  அப்போது தான் சிங்களர்களின் இன வாதம் என்பது எந்த அளவிற்கு உச்சமாய் வளர்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை அணைவரும் உணர்ந்து கொண்டனர்.  ஆனால் இந்த சிங்கள இனவாதத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர் பண்டார நாயகாவும்.  அவரே இறுதியில் அதற்கே பலியானர்.

ஆனால் தந்தை செல்வா அப்போதுகூட இதை உணரவில்லை.  அதற்குப் பிறகு வந்த டட்லி சேனநாயகா, சீறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம் வரைக்கும் கை கோர்ப்பதும், காரியம் ஆனதும் தமிழர்களின் ஒப்பந்தத்தை மறந்து விடுவதும், கிழித்து எறிந்து விடுவதும் கண ஜோராக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டுருந்தனர். 

தந்தை செல்வாவின் கீழ் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இனியாவது இவர்களை நம்பி ஏமாந்தது போதும் என்ற போதும் கூட எதிர்த்து பேசியவர்களை அமைதியாய் இருங்கள் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினாரே தவிர அவர் அப்போது உணர்ந்தாரா என்பது கேள்விக்குறி?  அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்பதை தீர்மானமாய் நம்பிய செல்வா கடைசியில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு, செவிப்புலன் கேட்கும் திறன் குறைந்து, கோமா என்ற நிலையிலேயே இறக்கும் தருவாய் வரைக்கும் அவரால் ஒரு அடி கூட முன்னேற்த்தை காட்ட முடியவில்லை.   காலம் அந்த அளவிற்கு அவரின் நம்பிக்கைகளை குலைத்து முழுக்க முழுக்க துரதிஷ்டத்தை மட்டுமே அவருக்கு வாரி வழங்கி இருந்து.  ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்களின் மைனாரிட்டி அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்ள தமிழரசு கட்சியை நாடுவதும், விரைவில் இருவருக்கும் ஒப்பந்தம் உருவாக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டுவதும், ஒப்பந்தம் உருவாக்குவதும் அதுவே காரியம் முடிந்ததும் கழட்டி விடுவதும் நடக்கும்.  அவ்வாறு நடக்கும் போதே அந்த உருவான ஒப்பந்த நகல் வெறும் காகிதமாக மாறி இருக்கும். இப்போது பிரேமதாசா ஆட்சியிலும் சில நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது.  ஆனால் இப்போது இருப்பவர் தந்தை செல்வாவின் வாரிசு அல்ல.  இவரின் அப்பா மட்டுமே தந்தை செல்வாவை தெய்வமாக பூஜித்தவர்.  இவரோ இலங்கைக்கு வெளியே இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்.

பிரபாகரனைப் பொறுத்தவரையிலும் செயலில் காட்டாதவர்கள் எவருமே தலைவர்கள் அல்ல.  தந்தை செல்வாவை கண்டும் காணவில்லை என்பதை விட இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று இவர்களுடன் சேராமலே தன்னை தனியாக பிரித்துக்கொண்டவர். இவர்கள் கூட்டும் கூட்டம் என்றால் தூரத்தில் இருந்து ஒரு பார்வையாளர் போல் பார்த்து விட்டு பாதியிலேயே பொறுக்க முடியாமல் நகர்ந்தவர். தந்தை செல்வாவிற்கு பிறகு அவரது இடத்துக்கு வந்த அமிர்தலிங்கம் பார்வையில் மட்டுமே பட்டு இருந்தவர். 

அதுவும் தொடக்க காலத்தில் மட்டுமே.  பின்னாளில் அவரும் எதிரியாக மாறிப் போனார். அந்த அளவிற்கு சிங்களர்களின் ஒப்பந்தம் என்றால் பிரபாகரனுக்கு பாகற்காய் கசப்பை விட அதிகமாக இருக்கும்.புரிந்து தொடங்கியவர் பிரபாகரன்.  புரியாமல் இறுதியில் ஏமாந்தவர் பிரேமதாசா. விடுதலைப்புலிகள் பிரேமதாசாவுடன் தொடக்கத்தில் உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதற்குள் மிகத் தெளிவாக தங்களை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலையை காரணம் காட்டியே ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்பி தங்கள் ஆளுமையை மேம்பட்டதாக மாற்றிக்கொண்டதும் நடந்தேறியது.   அமைதி வழி தான் நாம் இருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற போது அமைதியின் வடிவமாகவே காட்சியளித்தார்கள்.  மாறிய போது அதற்கான தண்டனையும்   கிடைக்கும்படி இருந்தது.

தந்தை செல்வா என்றால் நடந்த துரோகத்தைப் பார்த்துவிட்டு சரி நடப்பது நடக்கட்டும். அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்று பிரோமதாசாவின் நம்பிக்கைத் துரோகத்தை துடைத்து இருப்பார்.  ஆனால் இப்போது நடைமுறையில் இருப்பது அமைதி மொழியல்ல.  பதிலாக ஆயுத மொழி.  

உருவாக்கிக்கொண்டுருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு படி இறங்கினால் கூட இனி சிங்களர்களின் ஆதிக்கம் நம்மை இடியாகத் தாக்கும் என்பதை பிரபாகரன் மிக் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தார்.

பிரேமதாசாவிற்கு உள்ளே ஓடிக்கொண்டுருந்தது இரண்டு யோசனைகள் என்றால் பிரபாகரனுக்கோ நூறு சிந்தனைகள்.  பிரேமதாசா பிரபாகரன் இருவருமே சிந்தித்த காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருவரின் மையப்புள்ளி ஒரே இடத்தில் ஆதாரப்புள்ளியாய் வந்து இருவரையும் இணைத்து. அமைதிப்படை வெளியே செல்ல வேண்டும். மற்றவை பிறகு பேசிக்கொள்ளலாம் என்பதே.  கை கோர்த்துக்கொண்டனர்.  விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கொழும்புவில் உள்ள உயர்தர நட்சத்திர உணவு விடுதி அறிமுகமானதும், அதில் பிரேமதாசா அரசாங்கத்துடன் நடத்துப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என்று வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.  

ஒப்பந்தத்திற்கு தலைமைப் பொறுப்பு எப்போதும் போல ஆன்டன் பாலசிங்கம்.  இப்போது பிரபாகரன் புகழ் எட்டுத்திக்கும் புகழ் பெற்று பட்டொளி வீசிக்கொண்டுருக்கிறது.  இலங்கை ஆட்சியாளர்கள், இராணுவம் கூட பவ்யமாய் பயமாய் இவர்களை பார்த்த நாட்கள்.  காரணம் பெரிய வல்லரசை வகை தொகையில்லாமல் வாட்டி வதைத்த பொடியன்கள் இப்போதைக்கு மகா பராக்கிரமசாலிகள்.  ஏற்கனவே பல பய நிலையை உருவாக்கி வைத்திருந்த பிரபாகரன் இப்போதைய சூழ்நிலையையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டார். 

எந்த அளவிற்கு என்றால் அமைதிப்படை வெளியேற்றுவது எங்கள் பொறுப்பு. ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி மில்லியன் கணக்காக இலங்கை அரசாங்கத்திடம் இருந்தே பண உதவி பெற்றுக்கொண்டது, ஆயுத கொள்முதல்கள், வெளிநாட்டில் இருந்த பிரபாகரன் மனைவியை குழந்தைகளை இலங்கைக்கு உள்ளே வரவழைத்துக்கொண்டது. தலைமறைவாக இயங்கிக்கொண்டு ஆயுத கொள்முதல் விற்பனர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக தைரியமாக விமானநிலையத்தில் பிரபாகரன் குடும்பத்துடன் நடந்து வந்ததும் என்று ஏற்கனவே நடந்தேறிய பல பாதக அம்சங்களை இப்போது தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுருந்தனர்.

இப்போது கூட பிரேமதாசா பிரபாகரனை நாடுவதற்கும் காரணமாக இருந்தவர் ராஜிவ் காந்தியே.  நீங்களே வெளியே போய் விடுங்கள் என்றதற்கு முடியாது என்பதோடு உள்ளே என்ன பிரச்சனையை உருவாக்கலாம் என்றபடி அலைந்து திரிந்து கொண்டுருந்தனர்.  இது எந்த அளவிற்கு என்றால் பிரேமதாசா இனி நீங்கள் வெளியே வந்தால் எங்கள் இராணுவம் உங்களை சுடத் தொடங்கும் என்பதற்கு உள்ளேயிருந்த இந்திய இராணுவ தளபதி நீங்கள் ஆரம்பித்தால் நாங்கள் மொத்தத்தையும் முடித்து வைப்போம் என்கிற வீர வசனமாய் முற்றிப்போகும் அளவிற்கு வந்து நின்றது.  பிரேமதாசாவிற்கு வேறு வழியில்லை.  சண்டைக்காரன் காலில் வந்து விழ பிரபாகரன் காட்டில் அடை மழை. பிரேமதாசாவுக்கோ இந்தியா இங்கு இதைக் காரணம் காட்டியே டேரா போட்டுருந்தால் இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறி விடுமோ என்ற அச்சம்.  நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் தோல்வியுற்றுப்போக இப்போது நடந்த மற்றொரு இந்திய மாறுதல் டெல்லியில் விபிசிங் தமிழ்நாட்டில் கலைஞர் மு கருணாநிதி. பிரேமதாசா ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து மாயமாய் மந்திரமாய் வைகோ பிரபாகரனை சென்று சந்தித்ததும் அவருடன் 24 நாட்கள் இருந்து வந்ததும் நடந்தேறியது.

இந்திய அமைதிப்படை உள்ளே இருந்த போது எவ்வாறு பிரபாகரன் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டாரோ அதே போல் வெளியேறாமல் முரண்டு பிடிக்கும் போது மறைமுகமாக அவருக்கு பிரேமதாசா உதவும் அளவிற்கு காரணமாக இருந்ததும் இந்திய அமைதிப்படையே.  

பிரேமதாசாவின் முதல் பகுதி முழுவதும் இந்தியாவை விரட்ட விடுதலைப்புலிகளை சார்ந்து இருக்க காலம் உருவாக்கி வைத்தது.  இரண்டாவது பகுதி முழுவதும் உள்ளே இருந்த ரஞ்சன் விஜயரத்னேவால் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாகவும் மாறிவிட இவரும் தப்பிப் பிழைக்க முடியாத சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தியது.

Friday, January 22, 2010

கரும்புலி அதிர்ந்த ராணுவம்

ஈழத்தில் இப்போது ஆட்டத்தில் பிரபாகரன் மட்டுமே.  தமிழீழ (LTTE)  விடுதலைப்புலிகளின் ஆட்சி அதிகாரம் மட்டுமே.  இன்றைய சூழ்நிலையில் பிரபாகரன் மட்டுமே தமிழர்களுக்கு ஆதர்ஷணம் என்கிற நிலைமையில் இருக்கிறார்.     காரணம் இப்போது நாம் 1986/87 ஆம் ஆண்டில் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.
                                                            கரும்புலி தாக்குதல்
" நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம், செய்த கொலைகளின் பட்டியல் இது தான், இத்தனை கொலைகளுக்கும் நாங்கள் தான் காரணம்.  வேறு எவரும் பொறுப்பு ஏற்க முடியாது" என்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் சவால் விட்டு இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது.

மற்ற இயக்கங்களை ஒவ்வொரு காரணங்கள் சொல்லி ஆட்டத்தில் இருந்து நீக்கியாகி விட்டது.  தொத்தலும் வத்தலுமாய் இருப்பவர்களும் பிரபாகரன் கடைக்கண் பார்வை பட்டு அப்படியே ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்.  நமக்கு அவர்கள் இப்போது தேவையில்லை.  ஆதரவு கொடுக்காவிட்டாலும் அக்கறையுடன் பார்த்த இந்திரா காந்தி இப்போது இல்லை.  முழுமையான ஆதரவு கொடுக்க முடியாவிட்டாலும் தன்னால் என்ன உதவி அளிக்க முடியுமோ?  பணமாக, ஆதரவாக கொடுத்த எம்.ஜி.ஆர் கூட இப்போது இல்லை.  இவர்கள் இருவரின் இழப்பு என்பது ஈழ மக்களின் உண்மையான பிரச்சனைகளை அக்கறையுடன் பார்த்த இந்திய தலைவர்கள் என்ற கௌரவம் இனியேதும் வேறு எந்த தலைவர்களுக்கும் எந்த காலத்திலும் வரப்போவதும் இல்லை.

இப்போது பிரபாகரன் இயக்கத்திற்கென்று தனி வானொலி நிலையம், தமிழ், ஆங்கில செய்திதாள்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடும் அமைப்புகள், இலங்கை முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு ஆள், அம்பு, சேனை, அதிகார படைகள்.  இது போக தனி ஆட்சி நிர்வாக பரிபாலணம்.  வரி, வசூல், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள். இதற்கு மேலாக புலம் பெயர்ந்தவர்களின் மூலம் வந்து கொண்டுருக்கும் நிதி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்படும் நவீன ரக ஆயுதங்கள், அதற்கென்று ஒரு குழு, அவர்களுக்கென்று ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கி தொடர்ந்து கொண்டுருக்கும் சிறிய பெரிய கப்பல்களின் அணிவகுப்பு.  உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் வங்கிக்கணக்கு என்று ஆலமரம் போல் விழுது படர்ந்து நிற்கிறது.  உலக தலைவர்களுக்கு புரிய வைக்க ஆன்டன் பாலசிங்கம்.  உள்ளுர் தலைவர்களுடன் போரிட தேவையான ஆயுத கொள்முதலுக்கும் கேபி என்ற நிழல் மனிதர்.  நடுவில் பிரபாகரன்.  அவரைச்சுற்றிலும் கண் இமை போல பாதுகாப்பாளர்கள்.  கிட்டத்தட்ட ஈழத்து எம்.ஜி.ஆர் போல. ஈழம் என்றால் விடுதலைப்புலிகள்.  புலிகள் என்றால் பிரபாகரன்.  பிரபாகரன் மட்டும் தனி ஈழத்தை வாங்கித்தர முடியும் என்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது?

இப்போது இலங்கையின் உள்ளே நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்தியாவின் பார்வையில் நற நற.  ஜெயவர்த்னே பார்வையில் எப்போதும் பீதி.  எவரோ போகிற போக்கில் தனி ஈழம் என்றொரு பிரகடனத்தை பிரபாகரன் விரைவில் வெளியிடப் போகிறார் என்று காதில் ஓதி விட்டு போயிருக்கிறார்கள்.  யாழ்பாணத்தில் இருந்து அப்படியோ தாரை தப்பட்டையோடு கிளம்பி வந்து நம்முடைய இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ?  இராணுவத்தையும் நம்பித் தொலைக்கவும் முடியவில்லை.  கொடுக்கும் அடியை விட வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.  இவர்கள் எப்போது எழுந்து போய் தாக்குவார்கள்.  அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் என்று வரவழைப்பவர்கள் எல்லோருமே " நாங்கள் தெளிவான முறையில் உங்க வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் " என்கிறார்கள்.  ஆனால் பய புள்ளைக திருந்த மாட்டேன் என்கிறார்கள்.  நம்மால் இனி மாறவும் முடியாது.  வயசு வேறு ஆகிவிட்டது.  மாறப் போவது தெரிந்தாலே பிக்குகள் வந்து பிச்சு பிடுவானுங்க.  கூலிப்படைகளும் ஆகாவெளியாகி விட்டது.   " அண்ணன் எப்ப போய்ச் சேருவான்?  திண்ணை எப்ப காலியியாகும்"  என்று காத்துக்கொண்டுருக்கும் மற்ற அமைச்சர்கள் வேறு ஒரு பக்கம் பீதியை கிளப்பிக்கொண்டுருக்கிறார்கள்?  என்ன செய்வது?

ஏற்கனவே சிரிக்காத மூஞ்சியைப் பெற்ற ஜெயவர்த்னே நிறையவே யோசித்த ஆண்டு.  விழித்த மூஞ்சியும் சரியில்லை.  ராஜிவ் நோக்கமும் புரியவில்லை.

இந்திய ஆட்சியாளர்களுக்கு கடுக்கா கொடுப்பது போல் பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியவில்லை.  பிரபாகரனும் மிகத் தெளிவாக இருந்தார்.  ஒப்பந்தமா?  சரி சரி பேசி முடித்ததும் மொத்த விசயங்களையும் நான் செய்தித்தாளில் பார்த்துக்கொள்கின்றேன்.  நமக்கு இதெல்லாம் ஆகாது என்று எப்போதும் போல் துப்பாக்கியை துடைத்து காத்துக் கொண்டுருந்தார்.  இப்போது கரும்புலி அமைப்பு வேறு " எங்க போய் முட்ட வேண்டும்"  என்று அடம்பிடித்துக்கொண்டுருக்கிறது.  அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தாக வேண்டும்?

டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா, சீறீமாவோ என்று எத்தனையோ ஒப்பந்தங்கள்.  கழிப்பறையில் துடைக்கும் காகிதம் போல ஆனதை கவனமாக குறித்து வைத்திருந்த பிரபாகரன் இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவர்கள் பின்னால் போய் நின்றால் குனிய வைத்து சவாரி செய்கிறார்கள்.  வல்லரசு மக்களுக்கு முன் இந்த ஜெயவர்த்னே எத்தனை தெளிவாக தண்ணி காட்டிக்கொண்டுருக்கிறார்.  அந்த பய புள்ளைகளுக்கு ஒரு மண்ணும் புரியமாட்டேன் என்கிறது.  சந்தோஷமாக வானத்தில் சுற்றிக்கொண்டுருந்தவரை கொண்டுருந்தவரை பிரதமர் என்று உட்காரவைத்தவர்களை எப்படி திட்டித்தீர்ப்பது.

இத்தனை வெகுளியாக இருக்கிறாரா?  வாழ்த்துக்கடிதம் எழுதியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்.  பேச வருகிறாயா?  அப்படியென்றால் முதலில் காட்டும் தாளில் கையெழுத்தை போடு?  பிறகு பேசலாம் என்பவரை எப்படி எதிர்கொள்வது?

ஐயா இது மனிதர்கள் சம்மந்தப்பட்ட விசயங்கள்?  வெறும் காகிதம் அல்ல.  சிங்களர்களைப் பற்றி குறிப்பாக ஜெயவர்த்னே பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள்.  உலக அரசியலுக்கே அவர் ஞானி.  ஞானத்தை கொடுத்த புத்தர் வழியில் வந்தவர் என்று அவரை தவறாக புரிந்து கொண்டுருக்கிறீர்கள்?  அவர் உங்களுக்கும் அல்வா கொடுப்பார்? உங்கள் மகன் ராகுலுக்கும் ஜிலேபி சுற்றிக்கொடுப்பார் என்று நாயாக கத்தினாலும் இடையில் தீட்சித் இருந்து கொண்டு கபடி ஆட்டம் ஆடுகிறாரே?

தொடர்ச்சியாக ரொமேஷ் பண்டாரி, ப சிதம்பரம், நட்வர்சிங்.  எத்தனை எத்தனை பேர்கள்.  இவர்கள் இலங்கைக்கு செண்டிங் அடிப்பதை விட உள்ளே போய் தொகுதியில் நாலு நல்ல விசயங்களை பார்த்தாலாவது ஓட்டுப் போட்டவுங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.

புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  நீங்க ஒதுங்கி போய்விடுங்க?  நாங்க பார்த்துக்கிறோம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.  அதென்னவோ சமாதானப்புறா போல் வாங்க வேண்டி அவார்டு ரிவார்டு எல்லாம் காத்துக்கிட்டுருக்கிற மாதிரி ராஜிவ் காந்தி துடிதுடியா துடிச்சுக்கிட்டு இருக்கிறாரு?  இனி என்ன செய்யலாம்?

பிரபாகரன் கூட அதிகம் யோசித்த ஆண்டு.

பூடானில்(திம்பு) நடந்து பேச்சு வார்த்தை தோல்வி.  பெங்களுர் சார்க் மாநாடு தோல்வி.  பிரபாகரன் வடக்கு கிழக்கு மாகாண உரிமைகளும், தமிழர்களை பிரிக்கக்கூடாது என்ற நோக்கம்.  ஆனால் ஜெயவர்த்னேவோ வடக்கு கிழக்கு என்பதை விட சாத்யமில்லாத தமிழர், முஸ்லீம்,சிங்களர்கள் என்று பிரித்து நரித்தனமாக முன்வரைவு கொண்டு வரப்போகிறேன் என்று தீட்சித்திடம் படம் காட்டுகிறார்.  ராஜிவ்க்கு வேறு ஏதும் புரியாத நிலைமையில் அவசரமாய் ஏதோ ஒரு வழியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும்.  தடுப்பவர்கள் அழித்துவிடவேண்டும்.  உள்நாட்டு டேமேஜ் இமேஜ் சற்று தூக்கி நிறுத்தவேண்டும்? அவரவர்களுக்கு அவரவர் பாதையில் மொத்தமும் அவசரம்?

நம்மாளு ஜெயவர்த்னேக்கு இப்போது கொஞ்சம் கெட்ட நேரம்.  முற்றுகைப் போரை யாழ்பாணத்தை நோக்கி தொடங்கினார்.  இதற்கு வழியனுப்பு விழா போல் அவர் கூறிய வாசகம் இங்கு முக்கியமானது.

" மொத்தமாக யாழ்பாணத்தை அழித்து விடுங்கள்.  பிறகு நிர்மாணம் செய்து கொள்ளலாம்.  இந்த போர் மொத்த இறுதிப் போராக இருக்க வேண்டும் ".
ஏற்கனவே அத்யாவசியமான பொருட்களுக்கான தடைகளையும் உருவாக்கி விட்டது.  பச்சத்தண்ணி கூட இல்லாமல் நா வரண்டு சாகட்டும்.  சாப்பிட்டால் தானே துப்பாக்கி தூக்க முடிகின்றது.  உரிமை என்று போர் செய்ய முடிகின்றது.  வயிற்றில் அடித்தால்?.  ஆக்ரோஷமாய் கிழட்டுச் சிங்கமாக உருமினார்.

ஜெயவர்த்னே செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த இந்தியாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலைமை?  கொஞ்சம் பொறுய்யான்னா இந்தாளு கேட்கமாட்டேன் என்கிறாரே?  ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டாம இதென்ன இத்தனை அடம்?

நாட்டாமை இந்தியாவிற்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே?  எங்கள் பேச்சை மீறி போர் தொடக்கிறாயா?  என்ன செய்கின்றேன் பார் என்று கப்பலில் தமிழர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்ப இலங்கை கடற்படை தடுத்து (1987 ஜுலை 3) திருப்பி அனுப்பியது.  வல்லரசு சும்மா இருக்குமா?  கௌரத என்ன ஆகும்?  வானூர்தி மூலமாக பொட்டலங்களை சும்மா சர் சர் என்று தமிழர்கள் பகுதியில் (1987 ஜுலை 4  மிராஜ் வகை விமானம்) வீசத் தொடங்கியது.

இதற்கிடையில் 1987 மே மாதம் Operation Liberation என்ற பெயரில் விமான, கடற்படை, கனரக, பீரங்கி அணிவகுப்பு என்ற படைபட்டாளத்துடன் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதயப்பகுதியான யாழ்பாண வடமராட்சி பகுதியை நோக்கி பீடுநடை போட்டு தனது ஆட்டத்தை இராணுவம் தொடங்கியது.  எடுப்பார் கைப்புள்ள என்ன செய்யும்?  அத்தனை அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும், எறியூட்டல்களும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் என்று முன்னேறிக்கொண்டு வர புலிப்பட்டாளம் பின்வாங்கிக் கொண்டே போனது.   இந்தப் பகுதியில் தமிழர்களின் புராதன அத்தனை நினைவுச் சின்னங்களும் குறித்து வைத்து அழிக்கப்பட்டன.  

இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் பிரபாகரனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.  வா ராஜா வா ராஜா என்று பின்வாங்கிக்கொண்டே போனவர்கள், 1987 ஜுலை 7ந் தேதி அன்று முதல் தடவையாக கேப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரன் தான் வெடிபொருட்கள் நிரம்பி ஓட்டிச்சென்ற கவச வாகனத்தின் மூலம் இராணுவத்தினர் மையம் கொண்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக்கொண்டுருந்த நெல்லியடி மகாவித்யாலயத்திற்குள் உட்புகுந்து வெடிக்க வைக்க தமிழ் திரைப்படத்தில் சாகச சண்டைக்காட்சி போல மொத்தமாக அந்த பகுதியே கிடுகிடுத்தது.

உயிர் இழப்பு, பொருட்சேதம் என்று கணக்குப் பார்த்த ஜெயவர்த்னே அன்று நிச்சயம் கூட ரெண்டு மாத்திரை போட்டுத் தான் தூங்கியிருக்க வேண்டும்.  பய புள்ளைகளுக்கு படிச்சு படிச்சு சொன்னாலும் இத்தனை அசால்டா இருந்து தொலைச்சுட்டானுங்களே என்று தலையில் அடித்துக்கொண்டுருப்பார்.  அப்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கூட சற்று யோசித்துருப்பார். பிரபாகரன் என்பவர் யார்?  அவர் பின்னால் இருக்கும் படையணி என்பதன் உண்மையான வீரம் என்ன? என்பதை புரிந்து இருக்கக்கூடும்?
காரணம் விரைவில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் கையெழுத்தாக போகின்றது?  இப்போது ஓப்பந்த முன் வரைவுகள் நிச்சயார்த்தம் நிலைமையில் இருக்கிறது.  தாலி கட்ட நாள் குறிக்க அவர் பின்னால் ஒரு படைபட்டாளம் ஓத காத்துக்கொண்டுருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு படுகொலைக்காக காலன் உருவாக்கிய COUNT DOWN அன்றில் இருந்து தான் தொடங்குகிறது.  அதுவே அமைதிப்படை உருவாக்கிய அக்கிரம செயல்பாடுகள் மொத்தத்தையும் உறுதிப்படுத்தியது.

மற்றொரு ஆச்சரியம் அரசியல் முதிர்ச்சி, ஆழ்ந்த ஞானம் இல்லாமல் உள்ளே வந்த ராஜீவ் காந்தி செய்த தவறுகளும், அவரின் அவசரத்தை மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவருக்கும் முறைப்படி புரிய வைக்க முயற்சிக்காத அதிகாரவர்க்கத்தினர் என்று மொத்தமாக இந்தியா பக்கம் எத்தனை கைகள் சுட்டிக்காட்டினாலும், உலக தமிழர்களின் வீரத்தின் விளைநிலமாக இருக்கும் இருந்த இருக்கப்போகும் பிரபாகரன் எந்த தைரியத்தை வைத்துக்கொண்டு இந்த படுகொலையை நிகழ்த்தினார் என்று இந்த நிமிடம் வரைக்கும் ஆச்சரியம்.  அதே சமயம் இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?

Thursday, January 21, 2010

விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (2)

உலக நாடுகளில் இன்று வரை பலவீனமான , அரச கட்டுப்பாடு இல்லாத, அராஜகமான, தார்மீக பொறுப்பு என்றால் என்னவென்றே அறியாத, அர்பணிப்பு உணர்வு இல்லாத ஒரே இராணுவம் என்றால் இலங்கைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.  இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி கூட அவர்களை எந்த விதத்திலும் மாற்றம் அடையச் செய்யவில்லை.  முடவன் போல் எவரையோ ஒருவரைச் சார்ந்து சவாரி ஏறி நாங்களும் இராணுவம் வைத்திருக்கிறோம்? என்ற மாயையை காட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஒரே காரணம் ஆட்சியாளர்கள்.  ஒரு வகையில் இராணுவம் என்பது அடியாள் பட்டாளம் அல்லது கூலிப்படை.  குத்து என்றால் கொன்று விட வேண்டும்.  போர் என்றால் கீழ்த்தரமான செயல்களை செய்து நாங்களும் எங்கள் பங்களிப்பை வாங்குகின்ற சம்பளத்திற்கு செய்து விட்டோம் என்ற மூன்றாந்தர இராணுவ சேவையாளர்கள் கொண்ட நாடு இலங்கை.  இது கற்பனை அல்ல.  மொத்த அவர்களின் இராணுவ தாக்குதல்களையும் பார்த்து வந்து இருந்தால், படித்துப் பார்த்தால் புரியும்?

பின்னால் வரப்போகின்ற பல உக்கிரமான பிரபாகரன் கொடுத்த தாக்குதல்களை கண்டு அஞ்சி பல இராணுவ வீரர்கள் பணிக்காலம் முடிவதற்குள் ஓட்டம் பிடித்ததும், அவர்களைத் தேடிக்கண்டு பிடித்து கொண்டு வந்ததும், கட்டாய ராணுவ சேவை என்று இளைஞர்களை அழிச்சாட்டியம் செய்ததும் என்றும் இன்று வரையிலும் இந்த நிலைமை மாறவில்லை.  இதுவே எந்த அளவிற்கு சென்றது என்றால் ஏழு மாதங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் கோரத்தில் பங்கெடுத்த இராணுவ வீரர்களுக்கு வெறியூட்டும் பொருட்டு பல போதைப் பொருட்களை உண்ணவைத்து களத்தில் இறக்கியதும் நடந்த கொடுமை நடந்தது.  அதனால் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கோரங்களை நிகழ்த்த முடிந்தது.

இன்றைய பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா கூட புலிகளின் கோட்டையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தவர் தான்.  நாலு பேர்கள் ஒன்றாக சேர்ந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஆய் ஊய் என்று ரவுசு விடும் போக்கிரிகள் போல் தான் உயர்பதவி அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரங்களும்.  அதுவே தொடக்கத்தில் பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டுருந்த மொத்த போராளிக்குழுக்களும் இராணுவ எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும் பதிவின் தொடக்கத்தில் பார்த்த தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக தங்களையும் உணரவில்லை.  தாங்கள் செல்ல வேண்டிய பாதையின் அருமையையும் உணரத் தயாராய் இல்லை என்பதே உண்மை.
ஏன் பிரபாகரன் மற்றவர்களை அழித்தார்?
ஆள் கடத்தி பணம் பறிப்பது, மக்களை பயமுறுத்தி வைப்பது, தங்களுடைய இடங்களில் மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கத்தை வளர விடாமல் தடுப்பது,தமிழ்நாட்டில் வைத்து செயல்பட்டுக்கொண்டுருந்த Corporate அலுவலகமும், புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு தாங்கள் வாழ்ந்த ராஜவாழ்க்கை, என்று இன்னும் பல கீழ்த்தரமான வேலைகள் என்று போராடும் பாதைக்கும், பயணிக்கும் பாதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்க இதற்கிடையில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமும், தன்னுடைய தனி ஈழம் என்ற கனவு இவர்களால் சிதைந்து வெறும் கற்பனையாக போய்விடுமோ என்ற அச்சமும் முதலும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

டெலோ என்ற இயக்கத்தை தூர்வாறி முடித்ததும் அடுத்த எச்சரிக்கை EPRLF, PLOTE..EROS .   டெலோ இயக்கத்தை அழித்துக்கொண்டுருந்த போதே பிரபாகரன் விடுத்த எச்சரிக்கை "  வேறு எவரும் இந்த விசயத்தில் தலையிடக்கூடாது".  காரணம் EPRLF  பத்பநாபா தமிழ்நாட்டில் Corporate  அலுவலகம் போல் அமைத்து பக்காவாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  சிறீ சபாரெத்தினம் பத்பநாபாவை மனதரா நம்பிக்கொண்டுருந்தார்? எப்படியும் தன்னைக் காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார் என்று கொண்டுருந்த இறுதி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. மற்ற இயக்கங்கள் வேறு வழி இல்லாமல் எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டது. மொத்த பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை மீறி டெலோ இயக்கதினர் எவருக்கும் புகலிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.  தேடித் தேடி ஒவ்வொருவரையும் அழித்த விடுதலைப்புலிகள் இறுதியில் புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை கண்டனர்.  புகையிலை கட்டுடன் ஒன்றாக மறைந்து தமிழ்நாட்டுக்கு தப்பிப் போய்விடும் எண்ணத்தில் இருந்தவர் யாழ் தளபதியாக இருந்த கிட்டு என்ற சதாசிவ பிள்ளையின் துப்பாக்கி 28 குண்டுகளை தொடர்ச்சியாக துப்பி வெறி தீர்ந்த போது தான் கிட்டு வுக்கு சுய நினைவு வந்துருக்க முடியும்?  அந்த அளவிற்கு சிறி சபாரெத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உறுத்தலாக இருந்தார்?

டெலோவின் தொடக்கம் போல் EPRLF உடன் பிரச்சனை வேறுவிதமாக தொடக்கம் பெற்றது.   EPRLF இயக்கத்தினர் தாங்களே உருவாக்கிய அஞ்சல் அட்டையை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து இனி அணைவரும் இதையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல கிட்டு இனி EPRLF தன்னுடைய இயக்க நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையை பிறப்பித்தார்.  அப்போதே தொடங்கி விட்டது.  துப்பாக்கி ரவைகள் தங்களுடைய பசியின் வேகத்தைத் தேடி அலைய ஆரம்பித்தது.

PLOTE  இயக்க செயல்பாடுகள் ஏற்கனவே வலுவிழந்து முடங்கியிருந்த வேலையில் காலப்போக்கில் அதுவும் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் அச்சத்தின் காரணமாக பாலகுமார், பிரபாகரன் கூட சமாதானமாகி ஒன்று சேர்ந்து பின்னாளில் ஒதுங்கிவிட்டார்.
EPRLF   பத்பநாபா
ஆனால் பிரபாகரன் பார்வையில் எதிரியாக ஒருவர் மாற்றம் பெற்றுவிட்டால், அவர்களின் துரோகம் அளவு கடந்து போயிருந்தால் அவர்களின் கதை முடிவு பெற்றதாக இருக்க வேண்டும். சமமாக அல்லது இணையாக களத்தில் இருந்தவர்களின் வலுவை குறைத்து வைத்திருந்த பிரபாகரனால் அவர்களை முழுமையாக துடைத்தாரா? என்பது இங்கு ஒரு பெரிய கேள்விக்குறி?  ஆனால் பத்பநாபாவை தமிழ்நாட்டில் வைத்து கொன்றது பின்னாளில் இராஜிவ் காந்தி மரண புலனாய்வின் போது தான் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது ராஜபக்ஷே விசுவாசியாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா (EPRLF) தங்களுடைய அலுவலகமான சூளை மேட்டுக்கு ஆட்டோ மூலம் வந்து கொண்டுருந்த போது, ஆட்டோ ஓட்டுநரிடம் உருவான சண்டையில் தானியங்கி துப்பாக்கி மூலம் சுட,அப்பாவிகள் கொல்லப்பட ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆருக்கு மொத்தத்திலும் தர்மசங்கடம்.

எம்.ஜி.ஆர் போட்ட ஒரே உத்தரவு. காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் மொத்த போராளிகளின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தடுப்புக்காவலில் வைத்தார். காரணம் பெங்களூர் சார்க் மாநாடு.  ஜெயவர்த்னே வருகை.  ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட இலங்கை குறித்த அக்கறை.  மொத்த இந்திய அதிகார வர்க்கமும் இந்த துப்பாக்கி சூட்டின் மேல் கவனம் செலுத்த தமிழ்நாட்டில் இருந்த மொத்த போராளி குழுக்களையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அப்போது தமிழ்நாட்டில் இருந்த பிரபாரனுக்கு இது போன்ற சூழ்நிலை இலங்கையில் நடந்து இருந்தால் துப்பாக்கி ரவை பேசி இருக்கும். மேலும் இது எம்.ஜி.ஆரின் உத்தரவு. இது தமிழ்நாடு.  தம்மை வளர்ப்பவர், தம் மீது அளவில்லா அக்கறை செலுத்துவர்.  எதிர்க்க முடியாது.  காரணம் எவரோ செய்த தவற்றின் விளைவாக தன்னுடைய வயர்லெஸ் முதல் அத்தனையும் காவல் துறை வசம் போய்விட்டது.  எம்.ஜி.ஆரை நேரிடைடையாக எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் நிலைமை மாறி பிரபாகரன் சந்திக்கு வந்த பரிதாப நிலைமை.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை தங்கியிருந்த இடத்தில் பிரபாகரன் தொடங்கினார். தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்கும் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம்.  மொத்த ஊடகமும் ஊதிப் பெரிதாக்க மொத்த கவனமும் பிரபாகரன் மேல்.  இதற்கிடையே டெல்லியில் இருந்த ப.சிதம்பரம் இதற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கொளுத்திப்போட இறுதியில் ஆயுதங்களை பிரபாகரனிடம் ஒப்படைத்த  எம்.ஜி.ஆர் பிறகு தனியே அழைத்து ஆசுவாசப்படுத்தியது தனிக்கதை. இந்த இடத்தில் மற்றொரு உண்மையும் உண்டு.  ஆயுதங்கள் திரும்ப ஒப்படைத்த போது மற்ற போராளிகுழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த அத்தனை ஆயுதங்களும் பிரபாகரன் வசமே ஒப்படைக்கப்பட்டது, அது தான் எம்.ஜி.ஆர்.  இவர் தான் பிரபாகரன்?

இந்திய இறையாண்மை என்ற பெயரில் ராஜிவ் அழுத்தம் ஒரு பக்கம்.  பிரபாகரன் கொண்டுள்ள தனி ஈழத்தின் உண்மை நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் தன்னால் ஒரு அளவிற்கு மேல் இதில் தலையை நீட்ட முடியாது என்பதாக ஒதுங்க ஆரம்பித்தார்.  பெங்களுரில் வைத்து பிரபாகரனை மொத்த அதிகார வர்க்கத்தினரும் சமாதனப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்ட போதிலும், இறுதியாக ராஜிவ் உத்தரவின் பேரில் பெங்களூருக்கு எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு பிரபாகரன் கூட பேசவைத்தனர்.  அன்று ஜெயவர்த்னே உருவாக்கி இருக்கும் இலங்கை என்பது தமிழர், சிங்களர், மற்றும் முஸ்லீம் என்று மூன்று பகுதிகளாக பிரித்த நரித்தந்திரத்தை எம்.ஜி.ஆர் உணர்ந்து கொண்டாலும் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்துப் பேசினாலும் கேட்பவர்கள் எவரும் இல்லை.  பிரபாகரன் பக்கம் உண்மைகள் அதிகம் இருந்தாலும், ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் அவரும் இல்லை.  எம்.ஜி.ஆர் செல்லும் அறிவுரைகளைக் கேட்கும் மனோநிலையிலும் எந்த டெல்லி அதிகாரிகளும் இல்லை.  மொத்தமாக சார்க் மாநாடு மூலம் ஜெயவர்த்னே உருவாக்கிய முன் வரைவு ஒப்பந்தத்தை முன் மொழிய வேண்டும்.  கையெழுத்துப் போட வேண்டும்.  மற்றவை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒதுங்கியவர், ஓரமாக தள்ளப்பட்டதும் பின்னாளில் ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் வரைக்கும் வெறும் பொம்மையாகத் தான் நடத்தப்பட்டார். மொத்தமும் கை மீறி விட்டது என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.   மொத்தமாக தங்களின் உரிமைகளை கை கழுவி விட்டது இந்தியா என்பதை உணர்ந்தவர் பிரபாகரன்.  அன்றைய சூழ்நிலையில் ஆதாயம் ஒருவருக்கும் மட்டுமே.  அது தான் அரசியல் ஞானி ஜெயவர்த்னே.  அவருடைய பிரித்தாளும் சூழ்ச்சியும், விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே உருவாக்க வேண்டிய தீராத பகைமை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டுருந்தது.  கற்றுக்கொள்ள வேண்டிய இந்திய தலைவர்கள் இன்று வரைக்கும் கற்றுக் கொள்ளவும் இல்லை.  இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கிய நரித்தந்திரங்களை உணர்ந்து கொள்ளவும் தயாராய் இல்லை.
இலங்கையை பொறுத்தவரையில் தமிழர் எதிர்ப்பு என்பது ஓட்டுக்கான அரசியல்.  தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சனை என்பது அனுதாப அரசியல்.  போராளிகளைப் பொறுத்தவரையிலும் யார் பெரியவன்?  ஆனால் மொத்த இலங்கை வாழ் அப்பாவி பொதுமக்களுக்கும் தினந்தோறும் சுடுகாடு?

ராஜிவ் காந்தி சார்க் மாநாடு மூலம் பெற வேண்டிய புகழ் தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சம்.  எம்.ஜி.ஆருக்கு வளர்த்த கிடா மார்பில் குத்துகிறதே? என்ற ஆயாசம்.  பிரபாகரனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்ற இந்திய அதிகாரிகளின் ஆத்திரம். பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.

வல்லரசு ரா உளவுத்துறை பேயரசு ஆனது தான் மிச்சம்.  பிரபாகரன் தன்னை வளர்த்துக் கொண்ட ஆதிக்கம் என்பது அவர்களின் மொத்த திட்டங்களையும் தவிடு பொடியாக்கி தனியான LTTE யின் ராஜ்யமும் ராஜபாட்டையும் தொடக்கம் பெற்றது.  மிச்சம் இருந்த போராளிக்குழுக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒட்டமும் நடையுமாக பாதிப்பேர்கள் தமிழ்நாட்டில், மீதிப்பேர்கள் வெளிநாட்டில்.  அது போகவும், மிஞ்சி இருந்தவர்கள் பிரபாகரனிடம் கெஞ்சல் பார்வை பட்டு தன்னைக் காத்துக்கொள்ளும் சூழ்நிலை.

இலங்கை பிரச்சனை என்ற பூட்டப்பட்ட இரண்டு(இந்தியா இலங்கை) மாடுகளும் வெவ்வேறு திசையில் பயணித்தாலே பிரச்சனை.  இங்கே நான்கு மாடுகள்.  நான்கு திசைகள்?  ஜெயவர்த்னே, ராஜிவ் காந்தி, பிரபாகரன், இந்திய அதிகாரிகள்.  இன்றுவரையிலும் தீர்வும் கண்டபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உணர்த்துபவர்கள் யாருமில்லை?

Wednesday, January 20, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (1)

1986 ஆம் ஆண்டு.  பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தனிப் பெரும் இயக்கமாக உருவான ஆண்டு.

பத்பநாபா, சீறீ சபாரெத்தினம், பாலகுமார், உமா மகேஸ்வரன் எங்கே போனார்கள்?   மற்ற இயக்கங்கள் என்னவாயிற்று?

இன்று வரையிலும் முழுமையான புரிதல்கள் இல்லாமல் பிரபாகரன் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளை சற்று உள்வாங்கிவிடலாம்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பிரபாகரன் மேல் கொலை வெறி பார்வை பார்த்துக்கொண்டுருக்கிறது.  திம்பு, பெங்களூர் பேச்சுவார்த்தை என்று எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டுருப்பதால் ஜெயவர்த்னே நமுட்டுச் சிரிப்பும், ராஜீவ் காந்தி தடுமாற்ற சிந்தனைகளும், மொத்த இந்திய அதிகார வர்க்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் உள்ளுற புகைச்சலுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலை இது.

பிரபாகரன் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய இளவயது முதல், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை மூலம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டு,     " மொத்த கொலைகளுக்கும் நாங்கள் தான் பொறுப்பு " என்று உமா மகேஸ்வரன் கையெழுத்து போட்டு பத்திரிக்கையின் வாயிலாக அரசாங்கத்திற்கு தெரிவித்தது வரையிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட எந்த கொள்கையிலும் சந்தர்ப்பவாதம் என்பது இல்லாமல் மொத்த லட்சிய முன்வரைவாகவே நகர்த்திக்கொண்டு வந்தார்.

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை விட மற்ற இயக்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும், நிதி ஆதாரங்கள் தங்களை விட மேம்பட்டு இருந்த போதிலும் கூட தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளவில்லை.  இனி சேர்ந்து செயல்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ஆன்டன் பாலசிங்கம் கொடுத்த அழுத்தம் கூட பல முறை யோசித்து, பல நாட்கள் கழித்து வேறு வழியில்லை என்பதாகத்தான் மொத்த மற்ற இயக்கங்களுடன் கை கோர்த்தார்.  எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை.  அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் ரா உள்ளே நுழைந்து சந்திரஹாசன் மூலம் டெலோ இயக்கத்தினர், அதனைத் தொடர்ந்து மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த இந்திய மரியாதை யோசிக்க வைத்ததே தவிர கலக்கத்தை உருவாக்கவில்லை.  பயிற்சி முக்கியம் என்பதாக தானாகவே ரா விரித்து வைத்திருந்த வலையில் போய் மாட்டிக்கொண்டார்.  ஜெயவர்த்னே ஒரு பக்கம், இந்தியா மறு பக்கம்.  இது போக வேறு வழியே இல்லாமல் இந்தியாவின் அதிகாரவர்க்கத்தினர் முன் கைகட்டி மண்டியிட வேண்டிய அவஸ்யம்.  அவர்களின் ஏச்சும், பேச்சும், அவமரியாதையும், மிரட்டலும் என்று எல்லாவகையிலும் மனோரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்ததும் உண்மை.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்?  ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டத்தான் தயாராய் இருக்கிறார்கள்.  காரணம் ரா வலைக்குள் உள்ளே நுழைய முயற்சித்த போது (தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பொறுப்பாளராக இருந்து மற்ற இயக்கங்களுக்கு செயல்பட்டுக் கொண்டுருந்தவர்)  கிடைத்த பாடம் மொத்தத்திலும் கொடுமையானது.  ரா அதிகாரி கேட்ட முதல் கேள்வியே பிரபாகரனின் மொத்த கோபத்தையும் வெளியே காட்டும் அளவிற்கு இருந்தது.   " LTTE க்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல நீங்களும் சந்திரஹாசனை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்".  பிரபாகரன் கோபத்தை விட ஆன்டன் பாலசிங்கம் மனைவி அடேல் பாலசிங்கம் கூட பொங்கும் அளவிற்கு உருவாக்கியது.

ஆனால் ரா உள்ளே நுழைந்து முதல் டெலோவிற்கு சிறப்பான பாதை உருவாகிக் கொண்டுருந்தது.  அவர்களின் தைரியமும் அளவுக்கு மீறி வளர்ந்து கொண்டுருந்தது.  மொத்தமாக நிதி உதவி என்று வேறு ஒரு தளத்திற்கு அவர்களை மாற்றி தங்களுடைய ஏவலாளிகள் போல் மாற்றிக்கொண்டுருக்க ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாடுகளும் இயல்பான போராளிக்குழுக்களின் வாழ்க்கையில் இருந்து மாற்றம் பெறத் தொடங்கியது.  ஆடம்பரம், தான்தோன்றித்தனம், இந்தியா தங்களுடன் இருக்கும் வரை வேறு யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது, இந்தியா உதவியுடன் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடைந்து விடமுடியும், என்று ஒவ்வொருவரும் தனக்குண்டான எதிர்கால அபிலாஷைகளுடன் முன்னேறிக்கொண்டுருந்தனர்.

இது போக மனதிற்குள் இருக்கும் " நான்" " தான் மட்டும்"   என்ற இந்த இரண்டு மன அழுக்கு பல அசிங்கமான பாதையில் பயணிக்க வைத்தது.  பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல், மிரட்டுதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இது போக மற்ற இயக்கங்களை வம்புக்கு இழுத்து அழித்தல், குறிப்பிட்ட பகுதியில் தங்களுடைய ஆளுமைய நிலைநாட்டியவர்கள் அதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளுக்கும் நகர்த்தும் போது, உருவான பல பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் முன்னேறிய போது தான் மொத்தமாக பிரபாகரன் பார்வை அவர்கள் மேல் பட்டது.  காரணம் இதைத்தான் ரா வெகுநாளாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. போராளிகள் இருக்க வேண்டும்.  ஆனால் வளரக்கூடாது.  ஒருவருடன் ஒருவர் ஒற்றமையாக இருக்கக்கூடாது.  இப்போது நாம் இந்த ஒவ்வொரு ரத்தச் சகதியிலும் கால்வைத்து மேல் நோக்கி நகரலாம்.

முதலில் உமா மகேஸ்வரன்.   (PLOTE)

 பிரபாகரன் வளர்ச்சிக்கு எத்தனையோ அடி உரமாய் இருந்து இருக்கின்றனர்.   தொடக்கத்தில் ராகவன் போல,

இந்த உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு தெளிவான பாதைக்கு, மக்கள் இயக்கமாக, உலகளாவிய மற்ற நாடுகள் அங்கிகரிக்கும் அளவிற்கு இறுதி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பியவர்.  நல்ல புத்திசாலி, படிப்பாளி, தீர்க்கமான சிந்தனை உள்ளம் படைத்தவர்.  ஆனால் பிரபாகரன் கொண்டு வாழ்ந்த தனி மனித ஒழுக்கம் என்பதில் அடிபட்டு  ஒதுங்கிப் போனவர்.  பெண்ணாசை காரணமாக இருவரும் பிரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை.  பிரபாகரன் கொள்கையின் படி இயக்கத்தில் இருந்து பிரிந்து வேறு இயக்கம் தொடங்கக்கூடாது என்பதையும் மீறி PLOTE இயக்கம் தொடங்கி, வெவ்வேறு பாதையில் இருவரும் பயணித்தனர்.  ஆனால் உமா மகேஸ்வரன் விரும்பிய ஜனநாயக பாதையே அவரின் ஓட்டுநர் மூலம் அவர் உயிரை பறித்தது. இந்த இடத்திலும் ரா திருவிளையாடல் இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம். ஏற்கனவே தொத்தலாக போய்க்கொண்டுருந்த இயக்கம் மெதுமெதுவாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.  சென்னையில் ஆன்டன் பாலசிங்கம் முன், பிரபாகரன் கொடுத்த சத்தியத்தை கடைசி வரையிலும் உமா மகேஸ்வரன் விசயத்தில் காப்பாற்றியது முதல் ஆச்சரியம்.

உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான " இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்".   இதைப் போலவே பிரபாகரன் " நான் உமா மகஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன்.  என்னால் எந்த பிரச்சனையும் வராது".

இயக்கத்திற்கான ஒழுக்கக் கோட்பாடுகள் என்று ஏழு கட்டளைகள் போல் வகுத்து இருந்தாலும் பிரபாகரனை பொறுத்தவரையில் தானும் மீறுவதில்லை மீறுபவர்களையும் பொறுத்துக் கொள்வதில்லை.  ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது.  காரணம் பிரபாகரனை எதிர்ப்பவர் எவரும் உயிருடன் வாழ முடியாது என்ற குற்றச்சாட்டுக்கும் சில விளக்கங்கள்.

தொடக்கத்தில் இயக்கத்தை புணர் நிர்மாணம் செய்தவர்களில் முக்கியப் பங்காற்றியாற்றியவர் ராகவன்.  இவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  பிரபாகரனுக்கு சிகரெட்டின் வாடை கூட பிடிக்காது.  மரியாதையின் காரணமாக அனுமதித்த முதல் நபர் ராகவன்.  இவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து பின்னாளில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்.  பின்னால் வந்த ஆன்டன் பாலசிங்கம் கூட இந்த சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தவர். இறுதிவரையிலும் இவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை பிரபாகரன் பொறுத்துக்கொண்டார் என்பது அடுத்த ஆச்சரியம். இதன் தொடர்ச்சியாக பின்னால் வரப்போகும் மாத்தையா முதல் கருணா வரைக்கும்.  பிரபாகரன் நினைத்து இருந்தால் கருணா ஒரு பொருட்டே அல்ல.  பொட்டு அம்மன் சொல்லியும் கேட்காத பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியது ஏறக்குறைய உயிர்ப்பிச்சை. காரணம் கருணாவின் வீரம் அந்த அளவிற்கு பிரபாகரனை ஆளுமை செய்து இருந்தது.  எப்போதே தோன்றும் இந்த இரக்க உணர்வு தான் மொத்த வாழ்க்கையையும், தமிழர்களின் வாழ்வுரிமையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது?

மாத்தையா மீது பொட்டு அம்மன் உளவு அறிந்து கொண்டுவரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்த போதிலும் அவர் தரப்பு அத்தனை வாத பிரதிவாதங்களையும் அனுமதித்து பிறகு தான் தண்டணை நிறைவேற்றப்பட்டது.  முதன் முறையாக மொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை வாசிக்கப்பட்டது.

ஒரே காரணம் திறமையாளர்களின் பங்களிப்பு என்பது சில சமயம் பாறை மனதில் விதை முளைக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரம்.

மாத்தையாவின் விசுவாசம் என்பதும், அவருடைய திறமை என்பது அளவிடற்கரியது.  ஆயுதப்பயிற்சிக்காக பிரபாகரனை தமிழ்நாட்டில் வைத்து ரா உளவுத்துறையுடன் நேரிடையாக சந்திக்க வைக்க ஆன்டன் பாலசிங்கம் முயற்சித்த போது, அப்போது தி நகரில் காவல்துறை பிரச்சனைகளும், பின்னாளில் இலங்கைக்குச் சென்றதும், இதன் தொடர்ச்சியாக காவல்துறை மீண்டும் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்த பிரபாகரன்,  ஆன்டன் பாலசிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.  மீண்டும் அழுத்தம் கொடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க பிரபாகரன் சார்பாக தமிழ்நாட்டுக்கு வந்தவர் மாத்தையா.  வேலை முடிந்தது மாத்தையா அன்று பாலசிங்கத்திடம் சொன்ன வாசகம் இது.

" தலைவருக்கும் ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்"

இதே இந்த மாத்தையா கூட உளவுத்துறையின் திருவிளையாடல் காரணமாக மரணிக்க நேர்ந்தது. பின்னால் வரும் சம்பவங்கள் மூலம் அதை கண்டு உணரலாம்.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே?  Why Should I Compromise?

இரண்டாவது சிறீ சபாரெத்தினம்.

பிரபாகரனின் தொடக்க போராட்ட காலத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த போது குட்டிமணி தங்கதுரை உருவாக்கி இருந்த டெலோ இயக்கத்தில் தான் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தார் என்று சொல்வதை விட பிரபாகரன் திறமைக்காக அவர்களே இவரை அழைத்தனர் என்பது தான் உண்மை.  வயதில் சிறியவர் என்பதால் செல்லமாக அழைக்கப்ட்ட தம்பி என்ற பெயரே காலம் முழுக்க நிலைபெற்றது. சொல்லப்போனால் அவர்களுடன் போய் பணியாற்றிய போது, துப்பாக்கிகள் பற்றிய முழுமையான அறிவு, இயக்கத்திற்கான மொத்த எதிர்கால நோக்கங்கள் என்று எல்லாமே கற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்தது.  ஆனால் தன்னுடைய மனதில் அடைகாத்து வைத்திருந்து, தனக்கு பிடித்தமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட மனதில்லாமல் பின்னாளில் உமா மகேஸ்வரனை இணைத்துக்கொண்டு தனக்குச் சமமான பதவியையும், மரியாதையும் அளித்து மொத்தமாக தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதில் உறுதியாய் இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் "பிரபாகரன் சர்வாதிகாரி" என்று ஒவ்வொருவரும் ஒதுங்குவதும், தூற்றுவதும் நடந்து கொண்டுருந்த போதிலும் தன்னுடைய பாதையில் மட்டும் கவனமாக முன்னேறிக்கொண்டுருந்தார்.  அடுத்த வேளை சோற்றுக்குக்கூட கடினமாக வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம் அது.  ஆனால் வெளியேறிவர்கள் தூற்றுதலை அதிகப்படுத்தியதும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் மொத்தமாக பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பிய போது, எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருந்த போது தான் எதிரிகளை நோக்கி பிரபாகரனின் துப்பாக்கி ரவை பேசியது.

ஆனால் டெலோ இயக்கத்தில் சிறீ சபாரெத்தினம் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு சில காரணங்கள்.  தொடக்கம் இப்படித் தான் தொடங்கியது.
TELO FLAG
" 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலைப்புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் சிறைபிடித்தது.  அதில் இருந்தவர் சிறீ சபாரெத்தினத்தின் உறவினரும், பிரபாகரனின் வலது கரமான மட்டக்களப்பு மேஜர் அருணா கொல்லப்பட்டார்.  அதன் துக்க சுவரெட்டிகளை டெலோ இயக்கத்தினர் கிழித்து எறிந்ததும், கடையடைப்பு நடத்திய மக்களை மிரட்டியதும், இதைக் கேட்கப் போனவர்களை உதைத்து அனுப்பியதும், சிலரை (லிங்கம் )சுட்டுக்கொன்றதும் நடந்தது".

ஆனால் விடுதலைப்புலிகளின் கோட்பாட்டின்படி பிடிபடும் போது சயனைடு சுவைத்து உயிர் இழப்பது தான் கொள்கை.  அதையும் மீறி அருணாவை இராணுவத்தினர் உயிருடன் தான் பிடித்து வைத்து இருந்தனர்.  ஆனால் அதுவரைக்கும் டெலோ மேல் கொண்டுருந்த கசப்பான நிகழ்வுகள் இதை தொடக்கமாக வைத்தும், ரா உளவுத்துறையுடன் கொண்டுருந்த நெருக்கமான புரிந்துணர்வுகளுக்காக காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார் என்பது தான் முற்றிலும் உண்மையாக இருக்க முடியும். மேலும் அவர்களின் தினசரி மோசமான நடவடிக்கைகள் அத்தனையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுருந்தது.

கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது.  இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.
எண்ணம் உள்ளே இருந்ததை வெளிக்கொண்டு வர உதவியதும், அதுவே இறுதியில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட உதவியதும் என்று நடந்தேறியது.  இரண்டும் முக்கியக் காரணம். பிரபாகரனின் சுயநலமும் மக்களின் பொதுநலமுமாக, டெலோ இயக்கம் முடிவுக்கு வந்தது.

டெலோ அழிக்கப்படாமல் இருந்தால் என்ன நடந்து இருக்கும்?                                                                

ரா உளவுத்துறையின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக தொடக்கம் முதலே வலுப்பட்டு இருக்கும்.

                                                                                                சிறீ சபாரெத்தினம்                                                                                      
இலங்கைக்கும், பிரபாகரன் இயக்கத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து இருக்கும்.

இயக்கத்தின் கொள்கைகள் என்று மொத்த நாலாந்தரமான அத்தனை கீழ்த்தரமாக செயல்பாடுகளும் நடந்தேறி மொத்த மற்ற போராளிகுழுக்களுக்கும் உலக மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கும்.

பிரபாகரன் இலங்கையுடன் போராடி ஜெயிப்பதை விட இவர்களைப் போன்றவர்களிடம் போராடுவதும், பின்னடைவுகளை சந்திப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுருந்துருக்கும்.  பின்னாளில் பெற்ற பிரபாகரனின் மகத்தான வளர்ச்சி என்பது வெறும் கற்பனையாக இருந்துருக்கலாம்.
காரணம் தொடக்கம் முதல் கடற்கரையோரமாய் வாழும் மக்கள், மொத்த முஸ்லிம் மக்கள் என்று இலங்கையின் குறிப்பிட்ட சாரரிடம் பிரபாகரன் செல்வாக்கு வளரவில்லை என்பது முக்கியம் போல அந்த மொத்த மக்களும் பிரபாகரனை அந்த அளவிற்கு வெறுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து மிஞ்சியுள்ள இயக்கங்கள்?.

Tuesday, January 19, 2010

இந்திரா காந்தி ஈழம் பின்னால்

1984 ஆம் ஆண்டு. இந்திரா காந்தி இறப்புக்குபிறகு ராஜீவ் காந்தி பதவிக்கு வந்த நேரம்.  இந்திரா காந்தியின் உள்வட்டாரத்தில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பார்த்தசாரதி என்ற தமிழர் புறந்தள்ளப்பட்டு மொத்த பொறுப்பும் ரொமேஷ் பண்டாரியிடம் மாற்றப்பட்டது.  ரா தலைமைப் பொறுப்பு சக்சேனா வசம்.  இந்திரா காந்தி இறுதிசடங்கில் ஜெயவர்த்னே கலந்து கொண்டு ராஜீவ் காந்தியை சந்தித்ததும், அதன் பிறகு மொத்த இலங்கை குறித்த வெளியுறவு கொள்கை மாற்றம் பெற்று வேறு ஒரு பாதையில் நகர்ந்தது. வெள்ளந்தியான ராஜீவ் காந்தியிடம் விபரமான ஜெயவர்த்னே என்ன மந்திரம் ஓதினார் என்பதை அந்த புத்தர் மட்டுமே அறிந்து இருக்க வாய்ப்புண்டு?

இந்திரா காந்தி எந்த அளவிற்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டாரோ அதன் மாற்று என்று சொல்லும் அளவிற்கு ராஜீவ் அணுகுமுறை இருந்தது.  " இலங்கை என்ற நாடு துண்டாட அனுமதியோம்.  ஆனால் தமிழர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா பொறுப்பு"  இதன் மற்றொரு அர்த்தம் தமிழர்களின் நலன் அதே சமயம் இலங்கை எப்போது இந்தியாவை சார்ந்து இருக்க வேண்டும். மற்ற அந்நிய நாடுகள் இலங்கையில் தளம் அமைக்கும் பட்சத்தில் நிரந்தர தலைவலியாய் அமைந்து விடும் என்பதால் இந்திரா காந்தியின் அணுகுமுறை மறைபொருள் போல் விவேகமாய் இருந்தது.  முதிர்ந்த அனுபவம் மிக்க நரசிம்மராவ், ஜி.பார்த்தசாரதி போல் ஆட்கள் அமைந்து விட எல்லாமே நல்லபடியாக போய்க்கொண்டுருந்தது.  ஜெயவர்த்னே பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு.  காரணம் அமிர்தலிங்கத்தை சிறப்பு விருந்தினர் என்ற அளவிற்கு அனுமதித்த இந்திரா காந்தியின் தீர்ககதரிசனம் ஜெயவர்த்னேவுக்கு தீராத தலைவலியாக இருந்தது.
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.  மறுபக்கம் ரா மூலம் கொடுக்கப்பட்ட ஆயுதப்பயிற்சி மூலம் இலங்கைக்குள் நடத்தப்பட்டுக்கொண்டுருந்த கிளர்ச்சியின் வித்துக்கள்.  ஆனால் ராஜீவ் காந்தியிடம் ஜெயவர்த்னே எவ்வாறு அறிமுகம் செய்து கொண்டார்?  என்ன பேசினார்கள்? என்பதை விட அதற்குப்பிறகு ராஜீவ் காந்தியின் ஒவ்வொரு இலங்கை குறித்தான அணுகுமுறையும் மாற்றம் பெற்றதென்பது ஒரு வகையில் அரசியல் ஞானி ஜெயவர்த்னேயின் வெற்றிகரமான சாதுர்யத்தின் ஒரு மைல்கல்.

கல்வியறிவும், நேர்மையும், தெளிந்த உள்ளமும், அரசியல் சூழ்ச்சிகள் எதையும் அறியாத ராஜீவ் காந்திக்கு பின்புலமாக இருந்த அத்தனை அதிகாரிகளும் உருவாக்கிய கோடுகள் அத்தனையும் கோப்புகளாக மாற்றம் பெற ஒரு வகையில் இலங்கையில் போராடிக்கொண்டு மொத்த போராளிகளுக்கும் மிகுந்த நெருக்கடியும், ஜெயவர்த்னே மனதிற்குள் சிரித்துக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. தந்திர அரசியல் ஞானி ஜெயவர்த்னே ஒரு பக்கம்.  விவேகமில்லாத வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு போராடிக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் மறுபக்கம்.  இதற்கிடையே உண்மையான அடிப்படையான பிரச்சனைகள் என்னவென்று தெரியாத இந்திய அதிகாரவர்க்கத்தினர் நடுவில்.  இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜீவ் விரும்பும் ஒப்பந்தம் வேண்டும்.  பின்னால் வரும் பிரச்சனைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

இதே வருடத்தில் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் மிஞ்சிப்போனால் 1500க்குள் தான் மொத்த போராளிகளே இருந்தார்கள்.  ஆனால் மற்ற இயக்கங்களான TELO. EROS. EPRLF. PLOT இதைத் தவிர சிறிதும் பெரிதுமாக இருந்த ஏறக்குறைய நாற்பதுக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதைகள்.  விடுதலைப்புலிகளைத் தவிர மற்ற பெரிய இயக்கங்களில் சுமாராக 6000 முதல் 7000 வரைக்கும் போராளிகள் இருந்தனர்.  எல்லாவகையில் அன்றைய சூழ்நிலையில் பிரபாகரனை விட மற்ற போராளிக்குழுக்கள் நல்ல கட்டமைப்பு. சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் மொத்த போராளிக்குழுக்களை ஒன்று சேர்த்தால் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை என்பது குறைவு தான்.

ஒன்றைத்தவிர, அது பிரபாகரன் தலைமையில் இருந்த அத்தனை பேர்களுக்குள் இருந்த ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை போன்ற பல விசயங்கள் வேறு எந்த இயக்கத்திலும் பெரிதாக காணப்படவில்லை.  தனி ஈழம் என்பதை தீர்வாக வைத்து இருந்தார்களே தவிர பிரபாகரன் போல் அதே உறுதியோ, அதைத் தவிர வேறு ஒன்று இருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் தான் இருந்தார்கள்.  இந்த குணாதிசியங்கள் தான் இவர்கள் ரா வலையில் சிக்க உதவியதும், விலை போக காரணமாக இருந்ததும், இறுதியில் சகோதர யுத்தங்கள் மூலமாக ரத்த ஆறு ஓடியதும் என்று தனியான பாதை பயணிக்கின்றது. ரா இந்தப் போராட்டத்தில் உள்ளே நுழைந்த போது, சந்திரஹாசன் மூலம் டெலோ அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து நடத்திக்கொண்டுருந்த ஆட்டங்கள் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.  கிட்டத்தட்ட டெலோ அமைப்பு ரா அமைப்பின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு.  ஆனால் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு பகுதியிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டக்கூடிய மக்கள் ஆதரவு இருந்து என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்ட ஆகவேண்டும்.

ஜெயவர்த்னேக்குப் பிறகு அதிகார ஆசையின் பொருட்டு அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலி ஒரு பக்கமும், காமினி திச நாயகா மறுபக்கமும் தமிழர் அழிப்பு நடவடிக்கையில் இறங்கி பட்டாசு வெடித்துக்கொண்டாடும் தீபாவளி பண்டிக்கை போல் கொண்டாடிக்கொண்டுருந்தார்கள்.  இதே வருடத்தில் பிரபாகரனுக்கு மொத்த போராளிக்குழுக்களும் ஒன்றினைந்து செயல்படவேண்டிய அவஸ்யத்தை ஆன்டன் பாலசிங்கம் பலவிதமாக உணர்த்தி இறுதியாக (1984 ஏப்ரல்)  Eelam National Liberation Front (ENLF) என்ற பெயரின் கீழ் EROS. PLOT. EPRLF. LTTE  என்று தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டுருந்தவர்கள் ஒரே குடையின் கீழ் வந்தனர்.  பிரபாகரன் EPRLF தலைவர் பத்மநாபா வை முதல் முதலாக சந்தித்ததும் இப்போது தான்.

இதன் பிறகு ஒவ்வொருவரும் ரவுண்டி கட்டி அடிக்கத் தொடங்கினர்.  ஆனால் இவர்களின் கொரில்லா தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கிய இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை கொல்லுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.  அதுவரையில் பொறுமையாக இலங்கை இராணுவத்துடன் போரிட்டுக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் முதன் முறையாக (1985 மே 14) அனுராதபுரத்தில் சிங்கள அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் (இது பெரிய கரும்புள்ளி) நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை சாகடித்தனர்.

இலங்கையில் நிற்காத தாக்குதல்களும், அகதிகளின் வருகையும், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலும் என தொடர்ந்து கொண்டே போக ராஜீவ் காந்தி உத்தரவின் பேரில் இருதரப்பினரை எதிரெதிரே அமர வைத்து பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பத்மநாபா, சீறீசபாரெத்தினம்,பாலகுமார்,பிரபாகரன் நான்கு பேர்களும் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர்.  அமிர்தலிங்கம் நேரிடையாக கலந்து கொண்டார்.  இவர்களின் செயல்பாடுகளைப் போலவே மற்றொரு ஆச்சரியம்?
ஜெயவர்த்னே தன்னுடைய தம்பி ஹெக்டர் ஜெயவர்த்னேவை அனுப்பி வைத்தார்.   ஜுலை முதல் சுற்றும் ஆகஸ்ட் இரண்டாம் சுற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.    இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டுருந் போதே திருகோணமலையில் பேரூந்தில் சென்று கொண்டுருந்த அப்பாவி தமிழ்மக்களை இராணுவம் இறக்கி சுட்டுக்கொன்றது.  இதற்கு பதிலடியாக மன்னார் மாவட்டத்தில் இருந்த இராணுவ முகாம் புலிகள் தாக்கி அழித்தனர்.  இது சங்கிலி போல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இரு தரப்பிலும் அதிக சேதம் உருவாக்க, திம்பு பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த திம்பு பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திக்கொண்டுருந்தவர் ரொமேஷ் பண்டாரி.  இந்திரா காந்தி காலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த ஜீ.பார்த்தசாரதிக்கும் இவருக்கும் அணுகுமுறையில் தலைகீழ் மாற்றம்.  காரணம் அது வரைக்கும் ரா மூலம் மொத்த போராளிகுழுக்களுக்கும் ஆயுதப்பயிற்சி இது போக நிதி உதவி என்று  செய்து கொண்டுருந்த காரணத்தால் தாங்கள் சொல்வதை மொத்த போராளிகளும் எளிதில் கேட்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.

ஒவ்வொருவரும் பிரிந்து செயல்பட்டுக்கொண்டுருந்தார்களே தவிர தமிழர்களுக்கான மொத்த உரிமைகளை எவரும் விட்டுத் தயாராய் இல்லை.  இந்திய அதிகார வர்க்கத்தினருக்கு அவசர உணவு விடுதி சாப்பாடு போல் எல்லாமே கையெழுத்து போட்டு விட்டால் முடிந்து விடும் என்ற நம்பிக்கை.  ஆனால் அதுவரைக்கும் வலியுடன் வாழ்ந்தவர்களுக்கு இவர்கள் காட்டும் வழி மேல் நம்பிக்கை இல்லை.  இந்தியாவிற்கும், ஜெயவர்த்னேவுக்கும் சாதமாகவே இருக்க, மொழிபெயர்ப்பாளாராக செயல்பட்டுக்கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கம், ரொமேஷ் பண்டாரியின் கடுமையான மிரட்டலுக்கும், அசிங்க வார்த்தைகளுக்கும் ஆளாகி நாடு கடத்தப்பட்டார்.  இவருடன் மற்ற போராளிக்குழுக்களுக்கு ஒருங்கிருணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டுருந்த சந்திர ஹாசன்,மற்றொரு போராளித் தலைவர் சத்யேந்திராவும் நாடு கடத்தப்பட்டனர்.  ஒவ்வொன்றும் ரொமேஷ் பண்டாரியின் கண் அசைவில் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது.

ரொமேஷ் பண்டாரியின் ஓய்வுக்குப் பிறகு ராஜீவ் காந்தியால் இலங்கைக்கென்று உருவாக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், நட்வட்சிங்.  அப்போது வெளியுறவுச் செயலாளர் ஏபி வெங்கடேஸ்வரன்.  காரணம் தொடங்கப்போகும் (1986 ஏப்ரல் பெங்களூர்) சார்க் மாநாட்டில் ஜெயவர்த்னேவை அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்கான தீர்வுக்கான முன் வரைவு ஒப்பந்தத்தை மாநாட்டில் சமர்பிக்க ஏற்பாடு நடந்து கொண்டுருந்தது.

இந்திரா காந்திக்கே போக்கு காட்டிய ஜெயவர்த்னேவுக்கு ராஜீவ் காந்தி எம்மாத்திரம்? இந்த குழு பேச்சுவார்த்தைக்கு போக அவரோ இனரீதியான அரசியல் மாநாட்டை கூட்டுவதும், வடக்கு கிழக்கு தமிழர் இணைப்பு என்பதை விட முன்று கூறுகளாக தமிழர் சிங்களர் முஸ்லீம் என்று பிரித்து, திரிகோணமலை பகுதியை சிங்களப்பகுதியில் வரும் அளவிற்கு, இடப்பெயர்ச்சி, சிங்களர்களின் முக்கியத்துவம் என்றொரு தந்திர ஒப்பந்தத்தை சார்க் மாநாட்டில் சமர்பிக்க காத்து இருந்தார்.

காரணம் இது போன்ற ஒரு திட்டத்தை அது வரைக்கும் இந்தியாவிடம் சொல்லவும் இல்லை.  விவாதிக்கவும் இல்லை.  போராளிகள் சொன்ன ஜெயவர்த்னே குணாதிசியங்களை இந்திய அதிகார வர்க்கத்தினர்களுக்கும் புரிந்து கொள்ள உதவிய தருணமிது.

இந்திய அமைச்சர்களுக்கு அதிர்ச்சி.  அவர்களைப் பார்த்து ஜெயவர்த்னே என்ன செய்துருப்பார்?  நம் தலைவர்களைப் பார்த்து மனதிற்குள் மௌனவாக சிரித்துருப்பார்.  காரணம் அரசியல் என்பதே கொள்கை என்பது இரண்டாம் பட்சம்.  தந்திரம், சமயோஜிதம், சாமர்த்தியம் தானே இன்றுவரைக்கும் முக்கியமாய் இருக்கிறது?

தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை என்று ஒவ்வொரு முறையும் வல்லரசு இந்தியா முகத்தில் பேயரசு இலங்கை கரியை பூசினாலும் முழுமையாக புரிந்து செயல்படும் அதிகாரம் பெற்றவர்கள் இந்தியாவில் இன்று வரையிலும் யாருமில்லை? இதனால் தான் தூதுக்குழுவாக சென்ற திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே எகத்தாளமாக கட்டிப்பிடித்து " நீங்கள் தப்பி விட்டீர்கள்.  இல்லாவிட்டால் பிரபாகரன் கூட போய் சேர்ந்து இருப்பீர்கள்"  என்ற கெக்கேபிக்கே தத்துவத்தை உரத்துச் சொல்ல முடிகின்றது.  பாவம் அவருடைய வழித்தோன்றல்கள்.  கணக்கை தொடங்கி விட்டார்.  முடிவு எப்படி இருக்கும் என்பதை காலம் அவருக்கு விரைவில் உணர்த்தும். அதுவரைக்கும் அவர் இருப்பாரா, இல்லை பாக்கியை வழித்தோன்றல்கள் வாங்கிக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை?

Sunday, January 17, 2010

ரா (RAW) வலையில் சிக்கிய பிரபாகரன்

இந்தியா ஏன் இலங்கை பிரச்சனையில் தலையிட்டது? என்பதற்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான்.  ஆமாம் அப்போது ஆண்டு கொண்டுருந்த ஜே.ஆர். ஜெயவர்த்னே வின் பிடிவாதப் போக்கும், அளவுகடந்த தமிழர்களின் மீதான வெறுப்பும் தான் முக்கியமாக தெரிகிறது.  பிரபாகரன் என்ற சக்தியை வளர்த்தும் இவரே?

கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பின்பு புலம்பெயர்ந்தோர்களின் மொத்த ஆதரவும் மெதுவாக பிரபாகரன் பக்கம் திரும்பியது.  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மக்களும் மற்ற போராளி குழுக்களின் ஆதிக்கத்தை விட  விடுதலைப்புலிகள் வரி வசூல் செய்து தனது உள்கட்டமைப்பை உருவாக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற காரணமாக இருக்க விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்ற இயக்கங்களை விட மேம்பட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளர்ந்து கொண்டே இருந்தது.  இலங்கை இராணுவமும், காவல்துறையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிக்கு செல்ல பயப்படும் அளவிற்கு மாற்றம் பெற்றது.
இந்திரா காந்தி இரும்பு மனிதராக செயல்பட்டு,  பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்ததற்கு பிறகு, இந்தியா கொண்டுருந்த ரஷ்யா ஆதரவு நிலைக்கு எதிராக, அருகே இருக்கும் இலங்கை ஜெயவர்த்னேயின் அமெரிக்கா ஆதரவு இந்தியாவிற்கு காலில் குத்திய முள் வலி போல் உறுத்திக்கொண்டுருந்தது.

அதுவரைக்கும் கண்டும் காணாமல் இருந்த இந்தியா அதற்குப்பிறகு தான் முழுமையாக இலங்கையின் மேல் கவனம் செலுத்த தொடங்கியது. தமிழ்நாட்டுக்குள் வந்து கொண்டுருந்த தொடர்ச்சியான அகதிகளின் வருகையும், இலங்கையின் தறிகெட்ட வெளியுறவு கொள்கைகளும் நாளுக்குள் நாள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுக்கொண்டு வந்தன.

அப்போது இந்திரா காந்தியின் ஆளுமை என்பது உலகமெங்கும் பிரசித்தம்.

பின்னாளில் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பிறகு, ஜெயவர்த்னேவுடன் ஜே என் தீட்சித் பேசிய போது இந்திரா காந்தியின் மரணம் தனிப்பட்ட முறையில் ஜெயவர்த்னேவுக்கு சந்தோஷமாய் இருந்தது போல் அவருடைய வார்த்தைகள் உணர்த்தியது.

  " இந்திரா காந்தி உயிரோடு இருந்து இருந்தால் இலங்கை என்பது இரண்டு நாடாக துண்டாக்கி இருக்கும்"

அந்த அளவிற்கு ஜெயவர்த்னே சொப்பன ஸ்கலிதமாகியிருந்தார்.

அமெரிக்க ஆதரவு ஜெயவர்த்னே மூலம் வளர்க்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தென் இந்தியாவிற்கு மட்டுமல்ல மொத்தமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அவசர அவஸ்ய காரணங்கள் ஏராளமாய் இருந்தது.

தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க மொத்தமாக சட்டம் ஓழுங்கு வரைக்கும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை.  இதற்கிடையே தான் தோன்றித்தனமாக போராளிக்குழுக்களின் செயல்பாடுகள்.

இரண்டு பக்கத்தையும் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டிய அவஸ்யம்.  கலவரத்திற்குப்பிறகு இந்திரா காந்தி நேரிடையாக தொலைபேசியில் ஜெயவர்த்னே கூட பேசியதும், நரசிம்மராவ், பார்த்தசாரதி,ரொமேஷ் பண்டாரி போன்ற இயல்பான அதிகார வர்க்கத்தினரின் முன்னேற்பாடுகளைக்கூட ஜெயவர்த்னே கேட்கக்கூட தயராய் இல்லை.  மொத்தமாக ராஜதந்திர முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிந்த போது தான் ஒரு பக்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் அதேசமயம் மறுபக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி என்று முடிவு எடுத்து மொத்த பொறுப்பும் ரா உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேர்மையான வழியில் சென்றால் ஜெயவர்த்னே வழிக்கு வரமாட்டார்.  உள்நாட்டு கலவரங்களை உருவாக்கும் பட்சத்தில் தான் இந்தியா எதிர்பார்க்கும் வழிக்கு வருவார் என்று போட்ட கணக்கு சரியாகவே வேலை செய்யத்தொடங்கியது.

ரா வின் பார்வையில் முதலில் பட்டதும், அதுவே பரஸ்பர நல்ல புரிந்துணர்வை உருவாக்கியதும் சந்திரஹாசன் மட்டுமே. இவர் தந்தை செல்வாவின் மகனாவார். சந்திரஹாசன் மூலமாக அப்போது இலங்கையில் TELO இயக்கத்தினர் சாரை சாரையாக தமிழ்நாட்டில் வந்து இறங்குவதும், அது போக ரா வால் தேர்ந்தெடுத்த மற்ற போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதும் நடந்து கொண்டுருந்தது.   தமிழ்நாட்டு க்யூ உளவுத்துறைக்குக் கூட தெரியாத அளவிற்கு ரா வின் நேரிடையான பார்வையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.

மொத்த நிகழ்வுகளையும் உள்வாங்கிய பிரபாகரன் லண்டனில் (1983) கல்லூரிப் பேராசியராக பணிபுரிந்து கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கத்தை சென்னைக்கு வரவழைத்தார். அந்த நாள் வரைக்கும் பிரபாகரனை தங்கள் ஆட்டத்தில் ரா சேர்க்கவில்லை.  பிரபாகரனும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் இல்லை.  ஆனால் தங்களைப் போலவே வளர்ந்து கொண்டுருந்த மற்ற போராளிக்குழுக்களுக்கு கிடைத்துக்கொண்டுருந்த முக்கியத்துவம் மனதில் என்ன மாறுதல் உருவாக்கியதோ ஆன்டன் பாலசிங்கம் மூலமாக விடுதலைப்புலிகளுக்கும் தேவையான ஆயுதப்பயிற்சிக்கு ரா மூலமாக ஏற்பாடு செய்யும் பொருட்டு ஆன்டன் பாலசிங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1978 முதல் 1983 வரை சென்னைக்கு ஆன்டன் பாலசிங்கம் வருவதும், இயக்கப் போராளிகளுடன் பழகி, அரசியல் பாடம் நடத்துவதும் போன்ற தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் இடையே நடந்து கொண்டுயிருந்தது.

அப்போது ரா நிகழ்வுகளை, அவர்களின் தொடர்புகளை உருவாக்க முடியாமல் தவித்த பாலசிங்கத்திற்கு அப்போது உதவியர் தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.  அலெக்ஸாண்டர் வகுத்து கொடுத்த பாதையின்படி நீண்ட கடிதம் ஒன்றை இந்திரா காந்திக்கு பாலசிங்கம் எழுத, ரா அதிகாரிகள் அதன் தொடர்ச்சியாக வந்து சென்னையில் சந்திக்க பட்டும் படாமல் புரிந்துணர்வு உருவாக்கப்பட்டது.  ஒரு வகையில் பார்க்கப்போனால் பிரபாகரன் கூட மற்றவர்களின் வளர்ச்சியினால் வேறுவழியே இல்லாமல் சிக்கிக்கொண்ட மீன் போல் ரா விரித்த வலையில் தானாகவே வந்து மாட்டிக் கொண்டவர் தான்.

எம்.ஜி.ஆர் பார்வையில் பிரபாகரன் என்பது போல் மொத்த ரா உளவுத்துறையின் பார்வையில் மொத்த போராளிக்குழுக்களையும் பிரித்து தனித்தனியாக வளர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.  அன்றும் இன்றும் போராளிக்குழுக்கள் வளர்வதை விட தங்களுடைய பேச்சை கேட்கும் அளவிற்கு உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.

இந்திரா காந்தியின் நேரிடையான பார்வையில் இலங்கைக்கென உருவாக்கப்பட்ட குழுவில் மூவர் இடம் பெற்று இருந்தனர்.  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்.என்.ராவ்.  மொத்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கிரீஷ் சக்சேனா. இவர் ரா உளவுத்துறையின் வெளியுறவு புலனாய்வுத் துறையின் தலைவர்.  மூன்றாவது நபர் சங்கரன் நாயர்.  இவர் வகித்த பதவி பிரதம மந்திரியின் செயலக ஆணையாளராக பணியாற்றிக்கொண்டுருந்தவர்.

" பாதுகாப்பு ஏஜென்சி"  என்றழைக்கப்பட்ட இவர்களின் அதிகாரம் வானளாவிய அதிகாரங்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு துணை குழுக்கள். நேரிடையாக, மறைமுகமாக.  இவர்களின் மொத்த செயல்பாடுகளும் தமிழ்நாட்டு அரசுக்குக் கூட தெரியாத அளவிற்கு அத்தனை ரகஸ்யமானது.

இவர்களின் முன்னேற்பாடுகள் ஒரு பக்கம்.  ஜி. பார்த்தசாரதியின் சமாதான ராஜதந்திர பேச்சுவார்த்தை மறுபக்கம். ரா வின் ஆயுதப் பயிற்சி ஒத்துழைப்பு அப்போது மூன்று இயக்கங்களுக்கு கிடைத்து பயிற்சிகள் தொடங்கப்பட்டு இருந்தது.  ERRLF. TELO. EROS. இந்த மூன்று இயக்கங்களுக்கும் பொறுப்பாளாராக இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தவர் மேலே பார்த்த தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன்.  பிரபாகரனை தனக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சித்து தோல்வி கண்டவர். டெல்லியின் பார்வையில் விடுதலைப்புலிகளை மறைத்தவர்.

1983 ஆம் ஆண்டு ரா உயரதிகாரி தமிழர் சந்திரசேகரன் (மதுரையைச் சேர்ந்தவர்) மூலம், பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, பாண்டிச்சேரியில் வைத்து பேசி முடித்த போது 100 பேர்கள் என இரண்டு குழுக்கள் என மொத்தம் 200 இளைஞர்கள் பயிற்சிக்கென்று ரயில் மார்க்கமாக டெல்லி அடைந்து அங்கிருந்து டேராடூன் சென்றடைவது என்று திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதில் மற்றொரு ஆச்சரியம் ரா உருவாக்கி இருந்த மற்றொரு பிரித்தாளும் சூழ்ச்சி.  விடுதலைப்புலிகளுக்கு உண்டான ஆயுதப்பயிற்சி என்பது, ஏற்கனவே பயிற்சி எடுத்துக்கொண்டுருந்த போராளிக்குழுக்களுக்கு தெரியாது.  ஏன் அந்த மூன்று இயக்க பொறுப்பாளரான சந்திரஹாசனுக்கே தெரியுமா? என்பதே சந்தேகம்.
பிரபாகரன் அனுப்பிய 200 பேர்கள் பெற்ற முறைப்படியான ஆயுதப்பயிற்சி இயக்க வளர்ச்சிக்கு உதவியதே தவிர முழுமையடையவில்லை.  அதிலும் நவீன ரக ஆயுதங்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.  கொடுத்த ஒன்றிரண்டு ஆயுதங்களும் அத்தனை தூரம் சிறப்பாக இல்லை.  மிகப் பெரிய செலவீனங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் பிரபாகரன் தடுமாறி விழி பிதுங்கிக்கொண்டுருந்த காலம் இது.  சந்திரஹாசன் ரா மூலம் பெறப்படும் நிதி என்பது மற்ற மூன்று இயக்கங்களுக்கு மட்டும் சென்று கொண்டுருந்தது.  இது போக வெளிநாட்டு வாழ் மக்களிடம் மற்ற இயக்கங்கள் பிரபாகரன் குறித்து அவதூறு பரப்பிக்கொண்டுருந்த காரணத்தால் முழுமையான நிதி ஆதாரங்களையும் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.  கனவுகளை சுமந்து கொண்டுருந்த பிரபாகரனின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்து கொண்டுருந்தது.

அந்த சூழ்நிலையில் தான் (1984) எம்.ஜி.ஆரின் நிதி உதவி என்பது பிரபாகரன் உருவாக்கி இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் மொத்த பின்னடைவுகளை மாற்றி முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்க உதவியது.

அதற்குப் பிறகு வந்த 25 ஆண்டுகளும் பிரபாகரன் வாழ்க்கையில் எந்தப் பெரிதான வீழ்ச்சிகளும் வரவில்லை. தொட்டுக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல்.  வாங்கியவர் செம்மையாக பயன்படுத்தியதும் முக்கிய காரணம்.