Sunday, March 05, 2023

வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்துக் கொல்லப்படுகின்றார்கள்?

 வாசிக்கத் துவங்கும் முன்

1300 வார்த்தைகள். முக்கியமான வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து உண்மை நிலவரங்கள்.
வேறு வேலை இருந்தால் பொறுமையாக நேரம் இருக்கும் போது வந்து வாசிக்கவும். நன்றி.


()()()

Friday, March 03, 2023

பிஎஸ்என்எல் என்பது அம்பானிக்கு உரியதா?

கடந்த மூன்று நாட்களாக பிஎஸ்என்எல் சேவை அதளபாதாளத்தில் உள்ளது. இணைப்பு உள்ளது ஆனால் வேகம் இல்லை. பைபர் கணக்கு அனைத்தும் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆமை போல நகர்கின்றது. காரைக்குடிக்குப் பேச முடியவில்லை. இராஜபாளையத்திலிருந்து அழைத்தவர் குரல் எக்கோ போல அங்கங்கே கேட்கிறது. பிரிபெய்டு ல் பிம் செயலி செயல்படவில்லை. எப்போதும் எனக்கு கோபம் வரும். அதிகாரியை உடனே அழைப்பேன். ஆனால் தற்போது ஓரளவுக்குப் புரியத் தொடங்கிய காரணத்தால் பின்னால் உள்ள காரணங்கள் ஒவ்வொன்றையும் வரிசையாகத் தேடித் தேடி படித்து வருகின்றேன்..



Wednesday, March 01, 2023

ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.

5 ஜி ஏலம் முடிந்து அந்த நாளே நான் யாரையும் நேரிடையாகச் சென்று சந்திக்க தேவையில்லாமல் எங்களுக்கான சான்றிதழ் மின்னஞ்சல் வாயிலாக எங்களிடம் வந்து சேர்ந்தது. இது நம்ப முடியாத அதிசயம். என் வாழ்நாளில் இது ஆச்சரியம் என்பது போன்ற அர்த்தத்தில் ஏர்டெல் முதலாளி 2022 மத்திமம் பகுதியில் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்ட பின்பு ஊடகத்தில் சொன்ன வார்த்தைகளை படித்த பின்பு எனக்கு ஆச்சரியமில்லை. காரணம் நான் மோடி அரசாங்கத்தை விரும்புவதற்குக் காரணம் இந்த வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்று பலவற்றை என்னால் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அந்த ஏலத்தில் முதல் நபராக அதிகத் தொகை கட்டி அதிக அளவு அலைக்கற்றை அளவு பெற்ற மகா ஆத்மா அம்பானி குழுமம். ஏறக்குறைய 88000 கோடி. நான் சென்ற வருடத்தின் இறுதியில் எழுதினேன். திருப்பூரில் 2023 முதல் 90 நாட்களுக்குள் 5 ஜி சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியதன் தொடர்பான மேலும் சில தகவல்கள்.