Monday, November 30, 2020

வைரக்கல்

பிரபல்யங்களைப் பற்றி எழுதுவது ஒரு வினோதமான கலை. நாம் விரும்பியவர்களைப் பற்றி யாராவது ஒருவர் புகழ்ந்து எழுதினால் நமக்கு உவப்பாக இருக்கும். விமர்சித்து எழுதினால் அதில் உள்ள விசயங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து எழுதியவர் எத்தனை சதவிகிதம் உண்மை எழுதியுள்ளார்?. எப்படிப் பொய்யை உண்மையாக மாற்றி உள்ளார்? போன்ற எதனையும் ஆராய மாட்டோம். 

காரணம் நம் மனம்.



Sunday, November 29, 2020

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள்

 எவையெல்லாம் வரலாறு என்று நம்பவைக்கப்பட்டு நாம் பாடப் புத்தகங்களில் படித்து வந்த அனைத்தும் அது உண்மையல்ல என்பதனை அறியும் போது நமக்கு 50 வயது ஆகின்றது. இப்போது இணையத்தில் பொங்கிக் கொண்டிருப்பவர்கள் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள் என்ற புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரை செய்கின்றேன்.


Saturday, November 28, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன் 66

 26 நவம்பர் 2020 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள்.  

சென்ற ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தின் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைத்திருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் நீக்கி விட்டது.  இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று இலங்கை அரசு ஈழத்தில் பல இடங்களில் அவரின் நினைவு தினம், பிறந்த தினம் விழா கொண்டாட இன்னமும் அனுமதிப்பதில்லை.

Wednesday, November 25, 2020

சசிகலா மற்றும் சோனியா

 சசிகலாவும் சோனியாவும் பல விதங்களில் ஒன்று தான்.

ஒருவர் அதிகாரத்தின் பின்னால் இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். மௌனி ஒருவர் சிக்கிவிட பத்து வருடங்கள் காலம் இழுத்துக் கொண்டே சென்றது.

Tuesday, November 24, 2020

ஒரு மாவட்டம் ஒரு பொருள்

 'One District, One Product' (ODOP) scheme

நாம் நக்கலுக்கும் நையாண்டிக்கும் பெயர் போனவர்கள். கிசுகிசு பேசுவதில் ஆர்வம் மிக்கவர்கள். சினிமா தான் உலகம் என்று நம்பக்கூடியவர்கள். எவன் தலைவன் எவன் தறுதலை? என்பதனைக்கூட உணர மறுப்பவர்கள். வட மாநிலங்களைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு கற்பனை வாதங்களை எடுத்து வைப்பவர்கள். எதையும் கட்சி ரீதியாகவே பார்க்க கற்றுக் கொண்டவர்கள். அப்படிப் பார்க்காதவர்கள் முத்திரை குத்தி முட்டுச் சந்துக்குள் நிறுத்த ஆர்வத்துடன் செயல்படுபவர்கள். எதைப் பற்றிப் பேச வேண்டுமோ? அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் இந்தச் செய்தியை அவசியம் படிக்க வேண்டும்.

Monday, November 23, 2020

சூரரைப் போற்று

அசுரன் படமென்பது எழுத்தாளர் பூமணி எழுதிய கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சரடு. அதே போல கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அதனை உந்துதலாக வைத்துக் கொண்டு முயன்று பார்த்த ஒரு படம் தான் சூரரைப் போற்று.


Sunday, November 22, 2020

"பரமபதம் விளையாட்டு"

சில்லுண்டிகளுக்கு அரசியல் என்ற பாடத்தில் உள்ள "பரமபதம் விளையாட்டு" புரிய வாய்ப்பில்லை. வெட்டுப்படுவது, உடனே வெட்டுக்குத் தயாராக வைத்து இருப்பது, குறிப்பிட்ட காலம் கடந்து வெட்டத் தயாராக வைத்திருப்பது இந்த மூன்று மூன்றும் மிக முக்கியமானது. 



Saturday, November 21, 2020

ஈபிஎஸ் திருப்பூர் வருகையும் சிறுதொழில் வளர்ச்சியும்

இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாலை நடைபயிற்சியின் போது சாலையில் நடந்து சென்ற போது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.  ஒரு மினிவேன். அதில் ஒருவர் சுத்தமான வெள்ளுடை அணிந்தவருடன் ஓர் ஒட்டுநர் ஓர் உதவியாளர் இரண்டு கூலியாட்கள். சாலை முழுக்க கொடிகள் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். தார்ச் சாலையின் ஓரத்தில் பத்தடிக்கு ஒரு கொடி ஊன்றப்பட்டு அவர்கள் நகர்ந்து கொண்டேயிருந்தார்கள்.  

Friday, November 20, 2020

ஊர் காதல் | Native Love

SaturdaySeptember 09, 2017 அன்று ஊர் காதல் என்ற பதிவை எழுதினேன். நேற்று வரை இந்தப் பதிவை 80 000 பேர்களுக்கு மேலாகப் படித்து உள்ளனர். 

எப்படி இந்த அளவுக்கு இந்தப் பதிவு பலரின் பார்வைக்குச் சென்றது என்பது இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. நேற்று வாசித்துப் பார்த்த போது குறை ஒன்றும் தெரியவில்லை. ஊர் சார்ந்த புகைப்படங்களைக் கோர்த்து வேறொரு முறையில் யூ டியூப் ல் பதிவு செய்து உள்ளேன். 

நவீனத் தொழில் நுட்பத்தின் வாயிலாகத் திறக்குறளை ஆராய்ந்து வரும் திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானமும் மோடிஜியின் தென் மண்டல வெறுப்பாளர் சங்கத் தலைவருமான என் மனம் கவர்ந்த தனபாலன் மகான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தகவல் வந்து சேர்ந்தது.

புத்திசாலிகளின் திறமைகள் தோற்பது இயல்பு. நல்லதும்கூட. 

ஆணவம் அழியும். அகங்காரம் குறையும். மாற்றம் உருவாகும். மனதில் தன்னம்பிக்கை மலரும். 

ஆனால் மகான் அவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

திருப்பூர் முழுக்க பண வெறியில் அலையும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருப்பதால் சிறிய இடம் கிடைத்தால் கூட அதில் நான்கு குச்சு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு விடலாமே என்று எண்ணத்தில் உள்ளவர்களால் எந்தப் பக்கமும் போய் அமர்ந்து பேச முடிவதில்லை. 

என் ஜட்டியைத் தவிரப் பெண்கள் நலக்கூட்டணியினர் அனைத்தையும் கைப்பற்றி விட்டனர்.

"ஆளை விட்டால் போதும்" என்ற ஞான மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகள் படும் பாடு சொல்லி மாளாது. அதற்கே நான்கு யூ டியூப்களில் பேசி புலம்ப வேண்டியதாக உள்ளது என்பதனையும் தாங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

இப்போது எனக்கென்று எந்தச் சொந்தமும் இல்லை.

என் தனிமையைக்கூட என்னால் அனுபவிக்க முடியாத அளவிற்கு வளர்ந்தவர்கள் வாயடிக்கின்றார்கள்.

வெகுண்டு எழுந்து பழக்கப்பட்டவன் இப்போது மிரண்டு போய் பதுங்கு குழிக்குள் இருந்து பேசிய காரணத்தால் இந்தக் குரல் இப்படி வந்து விட்டது தம்பி.

"என்ன செய்வீர்களோ? எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்பது பேரன் பேத்திகள் வேண்டும்" என்று சொன்ன போது மூவரும் சொன்ன பதில்.......

"நீங்கள் மற்றொரு திருமணம் செய்து அதன் மூலம் உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்" என்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்?

Thursday, November 19, 2020

பண்டிகை கால கொள்ளையர்கள்

நான்கு வருடங்களுக்கு முன்பு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கடையில் நான் பார்த்த பெண்கள் சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆச்சரியத்தைத் தந்தது. வண்ணங்கள்,தரம், விலை என்று எல்லாவிதங்களிலும் மிகச் சரியாகவே இருந்தது. நான் எதையும் வாங்கவில்லை.  வீட்டில் வந்து சொன்ன போது நம்ப மறுத்தார்கள்.  வீட்டுக்கு அருகே ட்ரெண்ட்ஸ் திறந்த போது ஆர்வத்துடன் சென்று பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. நம் குலப் பெண்கள் அணியும் வகைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வீட்டில் கொந்தளிப்பு உருவாக அதன்பிறகு அந்தக் கடை குறித்து வாயைத் திறந்தாலே கசகசா வார்த்தைகள்.



Wednesday, November 18, 2020

காலம் கவனிக்கும்.

கொரானாவிற்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது.

ஈரோட்டில் உள்ள பெரிய நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து (தரைவழியே) குழாய் அமைத்து தங்கள் ஆலையின் கழிவு நீரை ஆற்றில் தொடர்ந்து இரவு நேரத்தில் கலக்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.  பெரிய பத்திரிக்கைள் அவர்களின் மற்ற துணை நிறுவனங்கள் மூலம் வரும் விளம்பரங்கள் வராமல் போய்விடக்கூடும் என்று கண்டும் காணாமல் இருந்தனர்.  அங்கே இருந்த சிறிய பத்திரிக்கை இதனை வெளிச்சத்திற்குக் கொண்ட வந்தது. 

Monday, November 16, 2020

இன்று சூரப்பா... நாளை காத்தப்பா...

தமிழகத்தில் முதல் முறையாக ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. பாரபட்சமில்லாமல் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். சுருதி சுத்தமாக ஒரே வாசகத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றார்கள். வெவ்வேறு விதமான பாணியில் பேசினாலும் கடைசியில் "சூரப்பா வெளியேறு" என்கிறார்கள். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையாக சூரப்பா தெரிகின்றார். 

Saturday, November 14, 2020

2020 நவம்பர் 14 தீபாவளி

சென்ற வருடம் தீபாவளி திருநாளில் என்ன செய்தோம் என்று நினைவில் இல்லை. மகள் தான் சொன்னார் கைதி படம் போய்ப் பார்த்தோம் என்றார்.  நேற்றும் இன்றும் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்கள் பார்த்தோம். இரண்டும் அருமை. ஒடிடி தளம் என்பது குடும்ப பட்ஜெட் க்கு வரம்.

2020 முழுக்க எழுத்துப்பணியில் முழுமையாக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட திருப்தி உள்ளது. குரல்வழிப் பதிவுகளாகவும் இந்த வருடம் பலவற்றைப் பதிவு செய்ய வாய்ப்பு அமைந்தது.



Wednesday, November 11, 2020

ஒரு நகரின் கதை - 35 000 கோடி

வந்தேறிகளால் வளர்ந்த நகரம். நாள் தோறும் தேடிவரும் வறியவர்களுக்கு அட்சயப் பாத்திரம். அமுதசுரபி. உழைத்தால் உயரலாம் என்பதற்கு ஆதாரம். ஆவணமாக எழுதப் படவேண்டிய பல பேர்களின் கதைகள் இந்நகருக்குள் உண்டு. வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. 

ஆனாலும் நம்பிக்கையளிக்கும் ஆலமரமிது. 

அது தான் திருப்பூர்.
 

Sunday, November 08, 2020

தரமான மூன்று விருந்துகள்.

செய்தி 1

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிர்ந்து பேசாத நாகரிகமான அரசியல் தளத்தில் செயல்படக்கூடியவரைப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டென்சன் ஆக்கி விடப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தென்னரசு அவர்கள் வெற்றி கொண்டான் பேசுவது போலப் பேசியதைப் பார்த்தேன். ஏற்கனவே பெருமாள் பிச்சையை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெசாயி தூக்க அது உள்நாட்டுக் குழப்பம் என்றும், மைனாரிட்டி சமூகத்தைக் கோபம் கொள்ளும் அளவிற்கு வாய்த் துடுக்காகப் பேசினார் என்று பத்திரிக்கைகளில் பொத்தாம்பொதுவாக செய்தி வந்தது. ஆனால் மேல்மட்ட நபர்களுக்குத் தான் உண்மை என்னவென்று தெரியும். அது (மணல் வியாபாரப் பங்கு பிரித்தலில் உண்டான குழப்பம்) பரம ரகசியம். 

இவரிடம் ஆவின் துறை சிக்கி சின்னாபின்னாபின்னாப்பட்டுக் கொண்டிருக்கிறது.  நான்கு சந்துக்கு ஒரு தனியார் பால் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவின் விற்பனை மையங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது.  கடைசியாக வேலம்பாளையத்தில் கண்டு பிடித்தே விட்டேன். பண்டிகை தினங்களில் ஒரு கிலோ நெய் அதிகமாக விற்பனை ஆகும். ஆனால் அதிகமாகக் கடைகளில் இல்லை. 

அரை லிட்டர். 100 மில்லி போன்ற உதிரிப் பாகங்களை வைத்துக் கொண்டு தான் ஒப்பேற்றுகின்றார்கள். ஆவின் ஒரு கிலோ நெய் விலை ரூபாய் 515. ஆனால் அரை கிலோ 265 (இரண்டு வாங்கினால் ரூபாய் 530) நமக்கு ரூபாய் 15 நட்டம். ஆனால் ரிலையன்ஸ் கடைகளில் ஆவின் எப்போதும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லாவிதமான அளவுகளிலும் கிடைக்கின்றது. ஒரு கிலோ என்பதே ரூபாய் 469. இரண்டு கிலோ வாங்குபவர்களுக்கு ஏறக்குறைய நூறு ரூபாய் மிச்சம். தேர்தல் வரப் போகுது. மிச்சம் சொச்சம்ன்னு நீங்க பேசிட்டு போயிடுவீங்க. பிச்சை பெருமாள் வெளியே போய் பிச்சை எடுக்க முடியுமா? என்று காற்றில் வந்த அசரீரி கேட்டது.

செய்தி 2

தனித் தமிழ் ஆர்வலர்களை இப்பொழுதெல்லாம்  எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. பாவம் அது அவர்களின் விருப்பம் என்றே எடுத்துக் கொள்வதுண்டு. காலநிதி மாறன் 1995க்கு பிறகு தமிழகத்திற்கு புதிய தமிழை அறிமுகப் படுத்தினார். அனிருத் என்பவன் இசையமைப்பாளர் என்ற போர்வையில் தமிழை ஆழக் குழி தோண்டி புதைத்தே விட்டான்.  

தினமும் தினசரிகளில் வரும் விளம்பர வார்த்தைகள் ஊன்றி கவனிப்பதுண்டு. அது மொழியல்ல. விபச்சாரம். நிஜ வாழ்க்கையில் தமிழ் மொழி எப்படியுள்ளது என்பதனை இன்று அசைவச் சந்தையை விரைவில் கைப்பற்றப் போகும் இணைய வர்த்தகம் உணர்த்தியது.

ஹாட்ரிக் விருந்து

ஒரே ஷாட்டில் மூன்று ப்ரெஷ்ஷான சுவையான பொருட்கள்.  ஆண்டிபயாடிக் ப்ரீ.  தரமான கோழிக்கறி, ப்ரெஷ்ஷான இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி காம்போ இந்த நம்பமுடியாத விலையில்.  இன்றைக்கு மட்டும் உடனே ஆர்டர் செய்யுங்கள்.

பரிமேலழகர் உரை.

தரமான மூன்று விருந்துகள்.

கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட தரமான கோழிக்கறியுடன் இறால்கள் மற்றும் வெள்ளாட்டுக்கறி. நம்ப முடியாத விலை. துள்ளத் துடிக்க உயிர்ப்புடன் உண்ணும் போது நீங்கள் உணரும் சுவையில் எங்கள் தரம் புரியும். இதனை அனுபவிக்க இன்றே எங்களை அழைக்கவும்.

--------------

ஏன் திட்டுகின்றாய்? புலம்புகின்றாய்? நிச்சயம் மாற்றம் வரும்? இவர்கள் கொட்டம் நீடிக்காது என்று நண்பர்கள் உரையாடலின் போது சொல்கின்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பியூர் நாயகன் கொடுத்த பேட்டியின் சுருக்கமிது.

"ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளி திறக்கப்பட்ட பின்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு பிரச்சனை உருவாகியிருக்கிறது என்றால் அது அந்த மாநிலப் பிரச்சனை. தாய்க்கிழவி அரசு அதனைக் கணக்கில் கொள்ளாது. இங்குள்ள சூழல் வைத்தே நாங்களே முடிவு செய்வோம்" என்றார்.

இவர்கள் பள்ளிகளைத் திறக்க துடியடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்? 

என்ன காரணம்?

வருகின்ற திங்கள்கிழமை பள்ளிக்குப் பெற்றோர்கள் வர வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க இருக்கின்றது என்று பள்ளிக்கூட நிர்வாகம் அழைப்பு அனுப்பி உள்ளனர். ஏற்கனவே 16ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த போது உருவான எதிர்ப்பின் காரணமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இப்போது ஓர் ட்விஸ்ட்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் என்ன சொல்வார்கள்? இறுதியாக அரசு என்ன முடிவெடுத்து 11ந் தேதி வெளியிடுவார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு இப்போதே பள்ளிக்கூடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுக்க சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக ஒவ்வொரு அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குழப்பம் வர வேண்டுமே?

முடிவே செய்யாமல் ஏன் சுத்தம் செய்வதில் இத்தனை அவசரம்?

"ஒரு மாதம் மட்டும் திறக்க அனுமதிங்க. மாணவர்களுக்கு கொரானா நிச்சயம் வந்து விடும். பாதிப்பு உருவாகும். கூச்சல் குழப்பம் வரும். ஒரு மாதத்திற்குள் தனியார்ப் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இதுவரையிலும் கட்டாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும் பணத்தை நாங்கள் வசூல் செய்து விடுவோம். தேர்தல் நிதி தருவதில் எங்களுக்குப் பிரச்சனையில்லை. அப்புறம் எப்போதும் போல கொரானா காரணத்தைக் காட்டி மீண்டும் மூடி விடலாம்". 

இரண்டாவது அலையில் மாணவர்களின் உயிர்........

மனிதர்களின் கதை 4 - அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்

மனிதர்களின் கதை -2 நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

மனிதர்களின் கதை - 1 உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

Friday, November 06, 2020

அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்


மனிதர்களுக்குப் பணம் தரும் நம்பிக்கை வேறு எவற்றுடனும் ஒப்பிடவே முடியாது. சேர்த்த சொத்துகள் புதிய அங்கீகாரத்தை அளிக்கிறது.  வாழ்க்கையை முழுமையாக மாற்றுகின்றது. அறிவில்லாதவர்கள், ஆரோக்கியமில்லாதவர்கள் எனப் பாரபட்சமின்றி இங்கே கவனம் பெறுகின்றார்கள். சமூகம் இவர்களை வெற்றி பெற்றவர்களாகக் கருதுகின்றார்கள். இவர்களின் ஒழுக்கம் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. பெருமைக்குரிய  போற்றக்கூடிய சரித்திர நிகழ்வாகக் கொண்டாடுகின்றார்கள். கொடூர மனம் கொண்டவர்கள் அடையும் அங்கீகாரம் என்பது நல்லவர்களின் வாழ்க்கையை வாழவே முடியாத அளவிற்கு மாற்றி விடுகின்றது.

 

Tuesday, November 03, 2020

தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்


திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை இவை மூன்றும் இருந்தால் உறுதியாகத் தொழில் உலகத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் நம்மால் வெல்ல முடியும் என்பது உண்மை. அதைப்போலவே ஒவ்வொரு சமயங்களிலும் மாறிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள், சூழல் இவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையோடு பொருத்திக் கொண்டு மாற முடியாதவர்கள் தேங்கி நின்று விடுகின்றார்கள்.  

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம் |023| Oct 3 2020



Sunday, November 01, 2020

கனடாவில் இருந்து விமர்சனம் (தமிழக அரசியல் வரலாறு)

 Yuhak KaviKindle Tamil Book Readers Club


ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை.

ஆசிரியர் ஜோதிஜி.

சிறு வயது முதல் செய்திகள் மூலம் கேள்விப்பட்ட வரலாற்றை முழுமையாக நூல் வடிவில் படிக்கக் கிடைத்தது. ராஜாஜி யை எனக்கு எழுத்தாளராக மட்டும் தான் தெரியும். முதலமைச்சராக இருந்தார் பெரியாரின் நண்பர் . இந்த இரண்டையும் தவிர அவரது அரசியல் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது. அதே போல பக்தவச்சலம் அவர்கள். ஆனால் பக்தவத்சலம் அவர்கள் சில விஷயங்களில் தோல்வி அடைந்து இருந்தாலும் நேர்மையான ஆட்சி தான் 

கொடுத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.