Sunday, May 21, 2023

தாய் மண் நினைவோடு வாழும்

 அன்புள்ள ஜோதிஜி.

இது புத்தக விமர்சனம் கிடையாது. புத்தகம் பற்றியும் அதில் கூறப்பட்ட சம்பவங்கள் பற்றியும் ஒரு மனம் திறந்த மடல்.

இந்த புத்தகம் கொஞ்ச நாளைக்கு முன்னால் என் கண்ணில் பட்டது. இதைப் புரட்டி சாம்பிள் கூடப் பார்க்கவில்லை அப்போது.



Friday, May 19, 2023

ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும் நூல் அறிமுகம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும், ‘இன்னும் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்’ என்று யாராவது எங்கேயாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நம்மை உண்மையின் கரம் பற்றவைத்து, ஈராயிரமாண்டு கால ஈழச் சரித்திரத்திற்குள் நம்மை அழைத்துச்செல்கிறார், இந்நூலின் ஆசிரியர் ஜோதி கணேசன்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கையில் பரவி இருந்த இனக்குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையின் மீதான தமிழக மன்னர்களின் படையெடுப்பு, இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களின் குறிப்புகள், சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய இலங்கையின் அரசியல் எனத் தகவல்கள் இப்புத்தகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழர்-சிங்களர் என்ற இனப்பாகுபாட்டின் துவக்கம், தமிழர்கள் மீதான இனவெறுப்புச் செயல்கள், தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பலன்களும், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாடுகள், ராஜிவின் அமைதிப்படையை புலிகள் எதிர்கொண்ட விதம் என இப்புத்தகம் ஈழப் போராட்டத்தின் சகல அம்சங்களையும் இந்நூல் அலசி ஆராய்கிறது.

ஈழ இறுதிக்கட்டப் போரின்போது பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நடந்தது என்ன, முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டம் தோல்வியைத் தழுவியது ஏன், உட்கட்சி அரசியலையும் வெளிநாட்டு அரசியலையும் ஒருசேர பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார் என பிரபாகரனின் வாழ்வையும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் புத்தகம் இது.

ஜோதி கணேசன் - அரசியல் விமர்சகர். ஈழம் தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தும், ஆயிரக்கணக்கான வலைத்தளங்களைப் படித்தும், நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களுடன் பேசியும் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

* முன்பதிவு செய்ய கடைசி நாள்: மே 27, 2022

* போன் மூலம் முன்பதிவு செய்ய: 8148080118

* வெளிநாட்டவர்கள் வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 8148080118

புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் அனுப்பி வைக்கப்படும்.

* முன்பதிவு செய்ய கடைசி நாள்: மே 27, 2022

 

* போன் மூலம் முன்பதிவு செய்ய: 8148080118

 

* வெளிநாட்டவர்கள் வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 8148080118

 

புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் அனுப்பி வைக்கப்படும்.

https://www.swasambookart.com/books/9789395272650

புத்தக விலை 400, முன்பதிவு விலை ரூ 300.



Tuesday, May 16, 2023

சொந்த ஊர் பயணம் (தமிழக போக்குவரத்துத் துறை)

கடந்த 24 மாதங்களாக மகிழ்ச்சியாகத் தொழில் செய்து வருபவர்களின் முக்கியமானவர்களில் இரண்டு குரூப் என் கண்களுக்குத் தெரிகின்றது. ஒன்று தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு அள்ளிக் குவிக்கின்றார்கள். மற்றொருவர் தனியார் பேருந்து உரிமையாளர்களாக இருப்பார்கள் என்றே யூகித்துள்ளேன். வைத்தது தான் சட்டம் என்கிற அளவுக்கு வாழ்வாங்கு வாழ்கின்றார்கள். அரசுப் பேருந்து கட்டண விகிதங்களை விட அவர்கள் கட்டணம் குறைவாக இருக்கின்றது என்பது இந்த முறை பயணத்தின் போது பார்த்தேன். கொஞ்சூண்டு பர்மிட் உடன். பெரும்பாலும் இருக்குமா? இருக்காது என்பது மாப்பிளை வசூல் கணக்கில் உள்ள பட்டியலில் பார்த்தால் நமக்குத் தெரிய வரும்.



Sunday, May 14, 2023

பிறந்த ஊருக்குச் சென்று வந்தேன் 12.05.2023

 

கடந்த வாரம் பிறந்த ஊருக்குச் சென்று வந்தேன். என் பார்வையின் வழியாக 2023 தமிழ்ச் சமூகம் எப்படியுள்ளது? என்பதனை ஒவ்வொரு பகுதியாக அறியத் தருகிறேன்.

முதலில் ரயில்வே துறையைப் பற்றி….



Wednesday, May 10, 2023

திண்டுக்கல் மாணவி பெற்ற 600/600

 

600 க்கு 600 மதிப்பெண்கள் வாங்கிய திண்டுக்கல் மாணவி குறித்து அதற்குப் பின்னால் உள்ள பல விசயங்களைப் பற்றி எழுதி இன்று இரவு வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். மீ டூ புகழ் வைரமுத்து வாழ்த்த திண்டுக்கல் போகின்றேன் என்று உள்ளே வந்ததைப் பார்த்து மேலும் பயம் வந்து விட்டது. எனவே இனி இதனை இப்பொழுதே நீங்கள் படித்தே ஆக வேண்டும்.


Tuesday, May 09, 2023

ஏண்டா முப்பதாயிரம் கோடியை உங்கள் பிணத்தோடு வைத்துக் கூடப் புதைக்க மாட்டார்களே?

சென்ற வருடமும் இந்த வருடமும் அரசு பள்ளிக்கூடம் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளை அதன் நிர்வாக அமைப்பு, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இயங்கும் விதம் மிக நுணுக்கமாகக் கவனித்து வருகிறேன். காரணம் ஒரு தலைமுறை (30 வருடங்கள்) இடைவெளியில் நடந்த மாற்றங்கள் என்னைத் திகைக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.