Thursday, February 08, 2018

உணவு அரசியல்


புத்திசாலிகள் ஒரு விசயத்தில் கவனமாக இருப்பார்கள். உனக்குச் சோறு முக்கியமா? இல்லை உன் கொள்கை முக்கியமா? என்று கேள்வியை நம் முன் வீசுவார்கள். நமக்கு வேறு வழி என்ன? எனக்குச் சோறு தான் முக்கியம் என்போம். நம்மிடம் உள்ள கொள்கைகள் காலப் போக்கில் நீர்த்துப் போய்விடும். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பின்பு கொள்கையா? அது எங்கே தூத்துக்குடி, காரைக்குடி பக்கம் உள்ளதா? என்று கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தும்? 

இவர் எழுதும் விசயங்களைப் படிக்கும் போது அப்படித்தான் எனக்குத் தோன்றியது. காரணம் மரபணு மாற்றப் பயிர்கள் குறித்துப் பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களை நாலைந்து தொடர் பதிவுகளாகப் பின்னால் உதவும் என்பதற்காக அதை எழுதி வைத்தேன். பல அரசியல்வாதிகளின் உண்மையான சொரூபம் அதில் தெரிந்தது. பல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாப கொள்கைள் புரிந்தது. 

ஆனால் இவர் எழுதுவதை வாசித்த பின்பு எனக்கே சற்றுக் குழப்பம் வந்தது. உணர்ச்சி வேகத்தில் நாம் யோசிக்கின்றோமோ? என்று பல முறை இவரின் நீண்ட பதிவுகளை ஷேர் செய்து வைத்துக் கொண்டு இரவு வந்து பொறுமையாகப் படித்து உள்வாங்குவதுண்டு. 

பல சமயம் நம் மனதைக் குலைத்து விடுவார். நம் எண்ணங்கள் தவறு என்றே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். இவரும் தனி மனிதர்கள் தங்களின் அடையாளம் எனக் கருதும் சாதி சார்ந்த விசயங்களை நக்கலாக நையாண்டியாகக் கிண்டி கிளங்கெடுப்பதில் சூராதி சூரர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வார்த்தைகள் கதம்பமாக மாட்டி வைத்து விடுவார். 

என் இது அடையாளம் என்று கருதிக் கொண்டவர்கள் விமர்சனம் வழியாக இவரை வந்து தொடர்ந்து விளாசி தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அதற்கு இவர் அளிக்கும் பதில் இன்னும் சுவராசியமாகவே இருக்கும். எழுத்துச் சித்தர் என்று பட்டம் சூட்டலாம். 

ஆனால் சொல்ல வந்த விசயத்திற்குப் பின்னால் உள்ள சாதகப் பாதக விசயங்களை அலசி விட மனமில்லாது பொத்தாம் பொதுவாக அடித்து விட்டு நகர்ந்து விடுவார். எது சரி? எது தவறு? என்பதனை வாசகர்கள் தான் சுய சிந்தனை மூலம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

இந்த வருடத்தில் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்கள் இவரும் ஒருவர். வாழ்த்துகளும், நன்றியும், அன்பும். @Rs Prabu 

(This account has been deactivated. Only you can see RS on your friends list. ) 

மக்களின் பசி குறித்து அதிகம் யோசித்த காரணத்தால் தற்போது வனவாசம் போயிருக்கின்றார் என்றே நினைக்கின்றேன். 


4 comments:

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அறிமுகப்படுத்தலோடு, அவருடைய வனவாசம் என்ற தங்களின் குறிப்பினை அதிகம் ரசித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...