Sunday, December 23, 2012

காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


சாலம்ன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?

வேற என்ன செய்வது?  

உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.

பழைய சாதம். தொட்டுக்க கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும்.

சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும்.  அதை சாப்பிட்டால் எனக்கு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?

அய்யோ? இந்த சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?

விதவிதமான புதிய வகைகளை சுவைத்துப் பார்ப்பது எனக்கு பிடிக்கும்? வர வர பீட்ஸா,பர்கர் கூட பிடிக்கமாட்டுது. 

அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்கு சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூட சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?

இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.

இந்த பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு. 

ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?

அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?

புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால்  உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள்.  செய்தவர் அடிவாங்கி விடுவார். .

சொல்லிக் கொண்டே போகலாம்.  காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது.   குழப்பமாக இருக்கின்றதா? 

இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு? 

ருசி நம்மை தூண்டுவது என்பது வேறு.  

திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க.  இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க.  வேறு எந்த கடைகளும் அந்த சமயத்தில் கண்களுக்கு தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய்  என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே? அது தான் ருசியின் மகிமை.

கூழாக மாற்றுங்க.

இன்று ஒவ்வொருவரும் ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளை தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படி சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?

சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.

ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை.  வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது.  வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.  ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.

சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாக பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதி கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.

செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது...............

இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் அதற்கு என்ன தான் தீர்வு? 

நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றை சரியாக கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.

மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்கு கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே? 

காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும்.  அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும். அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும்.  

அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது.  காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை. 

சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.  

ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையை தராது. 

சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதை கூழாக்கி உள்ளே அனுப்புங்க.  ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்.

19 comments:

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு.

Unknown said...

கையில்எடுக்கும்அளவுசரியாகஇருக்க----அதற்க்கும்அளவு,நன்றி!!!

Unknown said...

பயனுள்ள கருத்துக்கள் வாழ்த்துக்கள்

saidaiazeez.blogspot.in said...

சாப்பிட்டபின் விரல்களை நன்றாக சூப்பவேண்டும். அப்போது அதிலிருந்து சுரக்கும் ஒரு திரவம் மேலும் நம் உணவை செரிப்பதற்கு உதவுகிறது.

Ranjani Narayanan said...

மைதா மாவு போன்றவற்றை நொதிக்க வைத்துத்தான் சாப்பிட வேண்டும். இல்லைஎன்றால் நம் வயிறை நோக வைக்கும்.

இந்த நாக்கு வரை நடக்கும் பயணத்துக்குத் தான் நாயாய் பேயாய் அலைந்து... உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டீர்கள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சாப்பிடவேண்டும். ஆசைக்கு அல்ல.

நல்ல கருத்துக்கள். தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

semmalai akash said...

ஆஹா! சூப்பர் அருமை அருமை நிறைய தகவல்கள், ரசித்து படித்தேன். எனக்கு ரொம்ப பிடித்ததும் இதுதான்.

srinivasan said...

நமக்கு இரண்டு கோடு அளவுக்கு வந்து விடுகிறது.எங்க சோற்றை மென்றால் பல்லு இல்லையா, எவ்வளவு நேரம் சாப்பிடுகிறாய் என்று சொல்லி தானே குழந்தைகளை வளர்கிறார்கள் .நாவை கட்டுப்படுத்தினால் தான் பல பிரச்னைகளில் இருந்து விடுதலை !

ஜோதிஜி said...

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்த திருப்தி

ஜோதிஜி said...

யாருமே இதைப் பற்றி யோசிப்பதில்லை.

ஜோதிஜி said...

வருக ஸ்வேதா.

ஜோதிஜி said...

இரண்டு சமூக மக்கள் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் சொல்வது போல சாப்பிடுவார்கள். ஆனால் இது குறித்து முழுமையான தகவல்கள் எனக்குத் தெரியல. விசாரிக்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்கள் வயதுக்கு நிச்சயம் இதை விட அதிகமான அனுபவங்களை பெற்று இருக்கக்கூடும். நன்றிங்க.

ஜோதிஜி said...

அப்ப நீங்களும் நம்ம கோஷ்டி தானா?

ஜோதிஜி said...

உண்மை தான். வீட்டில் ஒருவர் அளவாக தெளிவாக சாப்பிடுவார். ஒவ்வொரு வாரமும் இது குறித்து தெரிந்து கொள்ள ஒரு நண்பருடன் உரையாடிய பிறகே இந்த காரைக்குடி உணவகத்தை எழுதுகின்றேன். அவர் சொன்ன தகவல்களைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொன்றாக நாம் ஒவ்வொரு சமயத்திலும் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும் என்று புரிந்தது.

thillanathillana said...

யாருமே இதைப் பற்றி யோசிப்பதில்லை.

VENKATESH TIRUPPUR 9994899221

Anonymous said...

நல்ல பதிவு. ஒரே வார்த்தையில் கூறினால் ,பசித்த பின் புசி,பின்னர்தான் ருசி,என்பதை கூறியுள்ளீர்கள்---செழியன்.

ஜோதிஜி said...

நன்றி வெங்கடேஷ். ஜனவரி 24 அன்று சந்திப்போம். தயாராக இருங்க.

ஜோதிஜி said...

முதலில் பசித்த பின் புசி என்று தான் வைக்கலாம் என்று நினைத்தேன் செழியன். அது ஆய்வுக் கட்டுரை மாதிரி இருந்த காரணத்தால் பசியா ருசியா என்று மாற்றிவிட்டேன். நன்றி செழியன்.

Anonymous said...

good review !