Wednesday, February 02, 2022

'கரீபி ஹட்டாவ்'

 "சுதந்திரம் கிடைச்ச 1947 ல் இருந்து, முதல் பொதுத் தேர்தல் 1952 வரைக்கும் யார் ஆண்டது?"

காங்கிரஸ்:- "நாங்கதான் ஆண்டோம்!
"அப்ப என்ன பண்ணீங்க?"
காங்கிரஸ்:- "வறுமையை ஒழிச்சிகிட்டு இருந்தோம்!"
"சரி, 1952 ல இருந்து 1957 தேர்தல் வரைக்கும் 5 வருசம் ஆண்டது யாரு?"
காங்கிரஸ்:- "அப்பவும் நாங்கதான் ஆண்டோம்"
"அப்ப என்ன பண்ணீங்க?"
காங்கிரஸ்:- "அதுவா அப்பவும் வறுமையைத்தான் ஒழிச்சிகிட்டு இருந்தோம்"
"அப்பறம் 1957 - 1962 யார் ஆண்டாங்க 5 வருசம்?"
காங்கிரஸ்:- "அடுத்த கேள்வி என்ன கேட்பீங்கன்னு புரியுது! அப்பவும் நாங்கதான் வறுமையை ஒழிச்சிகிட்டே ஆண்டுகிட்டு இருந்தோம்"
"1962 - 1967?"
காங்கிரஸ்:- "என்னங்க திருப்பித் திருப்பி கேட்கறீங்க? நாங்கதான் ஆண்டோம் - வறுமையை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்டோம்"
"1967 லருந்து 1971 வரை?"
"அப்பவும் எங்க ஆட்சிதான் - அப்ப ஒரு சபதம் எடுத்தோம்ல - வறுமையை ஒழிக்கணும்னு"
"1971 - 1977 வரைக்கும்?"
காங்கிரஸ்:- "பச்சப் புள்ளைக்குக் கூடத் தெரியுமே - 'கரீபி ஹட்டாவ்' தானே எங்க கோஷமே? ராஜ மான்யத்தை ஒழிச்சா வறுமை ஒழிஞ்சிடும்னு நம்பினோம்! அந்த நம்பிக்கையை இப்பவும் காப்பாத்திட்டு வரோம்"
"சரி, 1977 தேர்தல்ல ஜனங்க கிட்ட செமத்தியா அடி வாங்கினீங்க? பிறகு 1980 ல மறுபடி வந்த பிறகு?"
"நாங்க நிலையா இருக்கும் வரை - வறுமையும் நிலையா இருக்கும்னுதான் 1980 ல் ' நிலையான ஆட்சி' கோஷத்தையே வச்சோம்! அதற்கு அடுத்த தேர்தல்ல அமோகமா இந்திரா மரண அனுதாப அலையில ஆட்சிக்கு வந்தப்பவும் எங்க கோஷம் மட்டும் மாறலை!
"பிறகு 1991ல ராஜீவ் மரண அனுதாப அலையில ஜெயிச்சப்ப?"
"அதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டோம்!"
"எதை? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையா?"
"இல்லீங்க வறுமையை ஒழிக்கறதை - கொஞ்சநாள் அதற்கு லீவு கொடுத்து ஒத்தி வச்சிட்டோம்"
"பிறகு ரொம்ப நாள் கழித்து 2004, பிறகு தொடர்ந்து 2009 அப்பல்லாம் ஜெயிச்சு வறுமையை ஒழிச்சிங்களா?"
"விடுவமா? வறுமையை ஒழிப்போம் கோஷத்தை மட்டும் விடலை நாங்க - அப்படி ஒரு மகத்தான கோஷம் அது!"
"சரி, வறுமையை ஒழிக்க எப்படிப் பாடு பட்டீங்க? கொஞ்சம் விளக்குங்களேன்"
"சும்மா இல்லை... திமுகவையும் கூட்டாளியா சேர்த்துகிட்டு அப்படி ஒரு உழைப்பு - வறுமையை ஒழிக்க! "
"யாருடைய வறுமையை ஒழிச்சீங்க?"
"நீங்க யாருடைய வறுமையைக் கேக்கறீங்க?"
"சரி போகட்டும் இப்ப 2024 ல ஆட்சியைப் பிடிக்க ஏன் இவ்வளவு முனைப்பா இருக்கீங்க?"
"எதுக்கு? வறுமையை ஒழிக்கத்தான்!"
"சரிங்க, அப்பேர்ப்பட்ட வறுமைக்கு யாருங்க காரணம்?"
"மோடிதான்"
"அடிங்கொய்யால!"

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வெங்கோலன் மட்டும் இருந்திருந்தால்...?

என்றோ விற்பனை முடிந்திருக்கும்... வடை போச்சே... சே... தவறு...

வடைகள் மிச்சம்...!