Wednesday, October 07, 2020

திருப்பூர் மொழி பேச்சு வடிவில்

ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகள் புத்தக வடிவில் வந்துள்ளது. இப்போது பதினோராம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடமாக வந்துள்ளது. நேற்று மகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பல ஆச்சரியங்களை உள்வாங்க முடிந்தது. ஏறக்குறைய தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 25 வருடங்கள் அவர் எழுதியது தான் தென்னிந்திய வரலாற்றின் பதினெட்டாம் நூற்றாண்டின் முழுமையான சித்திரத்தை ஓரளவுக்கு உள்வாங்க முடிகின்றது. ஆனால் இன்று நாம் பெற்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் என்பதனை பதிவு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. 

ஆனந்தரங்கம் பிள்ளை அடுத்த 300 வருடத்திற்குப் பின்பு பேசப்படுவோம் என்று நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் தன் சுயத் திருப்திக்காகவே, மன உளைச்சலை போக்குவதற்காகவே எழுதியிருப்பார் என்றே நினைக்கிறேன். 

பேச்சுக்கலையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இதன் பலனளிக்கும். ஆப்பிள் ஐ போன் வரைக்கும் இந்தப் பேச்சு சென்று சேர்கின்றது இதன் தனித்தன்மை.😇

திருப்பூர் மொழி

https://anchor.fm/jothig



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அண்ணே...

கரந்தை ஜெயக்குமார் said...

anchor வாழ்த்துகள் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.