Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

Sunday, March 09, 2014

யோகா கலையும் யோகக்காரர்களும்?


யோகா கலை - சில புரிதல்கள் 


ஆரோக்கியமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடம்பு என்பதைப் பற்றி முதலில் புரிந்து கொள்வோம். 

நாம் விரும்பும் அத்தனை வசதிகளும், விரும்பும் வாய்ப்புகளும் நம்மிடம் இருந்தால் இதனைத் தான் தற்பொழுது ஆரோக்கியமான சமூக வாழ்க்கை என்கிறார்கள். மற்றவர்களால் மதிக்கப்படும் வாழ்க்கையைத் தான் சிறப்பான "அங்கீகாரம்" என்றும் சொல்கின்றார்கள். இதைப் போலவே ஆரோக்கியமான உடம்பு என்பதனை வெளித் தோற்றத்தை வைத்து தான் மதிப்பிடுகின்றார்கள். 

ஒரு ஆண் அல்லது பெண் பார்க்க அழகாக, புஷ்டியாக, களையாகத் தோற்றப் பொலிவோடு இருந்தால் அவர்களை பார்த்தவுடன் விரும்புகின்றார்கள். கவர்ச்சியான மனிதர் என்றும் சொல்கின்றார்கள். இதற்கு மேலாகக் ஆண்களும், பெண்களும் கூடுதல் ஒப்பனைகளை சேர்த்துக் கொள்ளச் சமகாலத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது என்று முலாம் பூசி உடம்பை கெடுத்துக் கொள்கின்றார்கள். கடைசியில் அனைவரும் இழந்து போன இளமையை நினைத்து அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே தான் பிரச்சனையும் தொடங்குகின்றது. இறப்பு நமக்கில்லை என்ற நம்பாத மனமும், இளமை என்பது மறையக் கூடியது என்பதனை ஏற்காத மனதையும் கொண்டவர்கள் ஆயுள் முழுக்க அவஸ்த்தைப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தான் ஆரோக்கியம் என்பதன் உண்மையான அர்த்தமும் மாறிவிடுகின்றது. 

அன்றாடம் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கும், யோகா கலைக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உடற்பயிற்சி என்பது உடலை வலுவாக்குவது. யோகா என்பதை மனதை அமைதிப்படுத்தி ஆன்மாவை இனம் காண வைப்பது. உடல் முழுக்க பரவியுள்ள சக்தி ரூபங்களை அடையாளம் காண உதவுவது.

இன்று தினசரி நடைப்பயிற்சி, அதிகமான தண்ணீர் குடித்தல் என்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறி அறிவுரை வழங்கி பலரின் வயிற்றை கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவிர வந்து கொண்டிருக்கின்ற பத்திரிக்கைகளும் மருத்துவர் போலவே அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதால் எது உண்மை? எது தேவை என்பதே எவருக்கும் தேவையில்லாமல் போய்விட்டது. 

விளம்பர மோகம் ஒரு பக்கம். விபரிதமான பழக்கவழக்கங்கள் மறு பக்கம். 

மொத்தத்தில் இன்று ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையிலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத கரும்பக்கங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத மனம். ஆசையை குறைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை சூழ்நிலை. இதனால் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை அமைதியிழந்த மனதுடன் தான் வாழ வேண்டியதாக உள்ளது.

ஆனால் யோகா என்ற கலையின் தன்மையே வேறு. இது உடற்பயிற்சி அல்ல. உங்களின் சக்தியை, உங்களுக்கே தெரியாத சக்தியை உங்களுக்கே உணர்த்திக் காட்டும் வல்லமை உடையது. 

யோகா என்ற கலையானது இந்திய நாட்டின் சிறப்பு அடையாளங்களின் ஒன்று. இதனை வெளியே இருந்து எவரும் இங்கு வந்து கற்றுத் தரவில்லை. இங்கே வாழ்ந்த சித்தர்கள் உருவாக்கிய கலையிது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இங்கே ஒவ்வொன்றையும் அறிவுத்தராசில் நிறுத்தி, எதனையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நமக்கே உரித்தான பல பாரம்பரிய கலைகள் நம்மை விட்டுச் சென்று விட்டது. இதனை மேற்கித்திய சமூகம் "பிராண்ட்" பெயரோடு மறுபடியும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது அதற்குத் தனி மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்து நாமும் அதனைத்தான் உண்மை என்று நம்பத் தொடங்குகின்றோம்.



யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லாகும். தமிழில் யோகா என்பதன் அர்த்தம் "இணைதல்" என்பதாகும். ஒலி அலையின் வேகத்தை விட அதிகமானது மனித மனதின் வேகம். நம் மனதில் வேகத்தை ஒரே இடத்தில் நிறுத்துவது தான் இதன் முதல் கடமை. அதற்கான பயிற்சி தான் இந்த யோகா நமக்குக் கற்றுத் தருகின்றது. ஒவ்வொரு ஆசனமும் நமக்கு ஒவ்வொரு விதமாக உணர்த்துகின்றது. 

நம்முடைய மனம் அலைபாயுதலை நிறுத்தினால் தான் ஆரோக்கியம் என்ற வார்த்தையின் முதல் படியை நாம் தொட முடியும். அடுத்தடுத்த பயிற்சிகளின் மூலம் மேற்கொண்டு செல்ல முடியும். இதனைத் தான் சித்தர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், தாங்கள் படைத்த பாடல்களின் மூலம் நமக்குப் புரிய வைத்தனர். 

மனதை ஒரு நிலைப்படுத்த மூச்சுப் பயிற்சி அவசியம் தேவை. இதன் மூலம் மட்டுமே நம்மிடம் உள்ள அற்புத ஆற்றலை நாம் பெற முடியும். படபடப்பு, பரபரப்பு என்று வாழ்க்கை மாறிப்போன சூழ்நிலையில் நாம் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் யோகா மட்டுமல்ல எந்தக் கலையையும் முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது. 

இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். 

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது, அவர் படபடப்பாக வந்தாலும் சரி, பயத்தோடு வந்தாலும் சரி உடனே "வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று தான் தொடங்குகின்றோம். உட்கார்ந்தால் மட்டுமே படபடப்பு குறையும், மனம் நிலைப்படும். அதன் பிறகே நம் உரையாடல் உணர்த்தும் உண்மைகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முதலில் அமர வேண்டும். அதன் பிறகே மூளை அமைதியான நிலைக்கு வருகின்றது. யோகாவின் ஆரம்பமே அமர்தலில் இருந்தே தொடங்குகின்றது. 

இந்தக் கலையில் உள்ள ஒவ்வொரு ஆசனங்களின் மூலம் நமக்கு  பல்வேறு பரிணாமங்கள், பயிற்சிகள் மூலம் தொடர முடியும். தலை முதல் பாதம் வரைக்கும் உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நம்மால் புத்துணர்ச்சி அளிக்க முடியும். 

உடற்பயிற்சி என்பது உணவோடு சம்மந்தப்பட்டது. உங்கள் சக்தி குறைய மேலும் உணவு தேவைப்படும். உண்ட உணவு உடற்பயிற்சிகள் மூலம் எரிக்க மேலும் தேவைப்படுகின்றது. இது இடைவிடாத சுழல் போன்றது. 

ஆனால் யோகா உங்கள் மனதோடு சம்மந்தபட்டது. உங்கள் உறுப்புகளை வலுவாக்குவதை விட எல்லாவிதமான உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவல்லது. இழந்த சக்தியை, உள்ளே உள்ள தெரியாத சக்தியை அடையாளம் காண வைப்பது. ஆசனங்கள் மூலம் மட்டுமே உடலும் மனமும் ஒரே சமயத்தில் சீராகும். 

உடல் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நாள்தோறும் கவலைகளால் மனம் அரித்துக் கொண்டே இருக்கின்றது என்றால் ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?  "உள்ளே அழுகின்றேன். வெளியே சிரிக்கின்றேன்" என்ற கதையாகத் தான் வாழ்க்கை இருக்கும்.

அனைவருக்கும் தெரிந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்று வைத்திருந்த திருமூலர் என்ற சித்தர் 84 லட்சம் யோகக்கலைகளை அறிந்தவர் என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றது. ஆனால் இங்கே மதம், கலைகள் என்ற இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொண்டு பலரும் திக்குத் தெரியாத காட்டில் உலாவும் மிருகங்கள் போல மனித ரூபத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒரு பக்கம் எதைப் பார்த்தாலும் சந்தேகம். எப்போதும் அவநம்பிக்கை. 

மற்றொரு பக்கம் எதைப் பார்த்தாலும் புனிதம். தாங்கள் பின்பற்றும் மதக் கொள்கைகள் தான் பிரதானம் என்று மனிதர்கள் இரு கோடுகளாகப் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். 

ஆசான் திரு. கிருஷ்ணன் ஒரு சமயம் உரையாடலின் மூலம் தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அவருக்கு மொத்தம் 2800 ஆசனங்கள் தெரியும் என்றார். ஆனால் நடைமுறையில் கைவிரல்களுக்குள் அடங்கக்கூடிய ஆசனங்களை வைத்தே பலரும் காசு சம்பாரிக்கப் பிழைப்பு வாதிகளாக மாறிவிட்டனர் என்று வருத்தத்துடன் சொன்னார். 

நம் சிந்தனையில் தெளிவு இருந்தால் மட்டுமே அன்றாட வாழ்வில் அமைதி கிட்டும். 

நாம் உருவாக்கிக் கொள்ளும் அமைதியே நம்மை எல்லா நிலைகளிலும் வழி நடத்தும். 

உங்களுக்கு மதம், மார்க்கம், தத்துவஞானிகள் சொல்லிய கருத்துக்களை விட உங்களை உணர்ந்து கொள்வது மிக முக்கியம். நம்மை நாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெரிய சாதனையாளர்களாக வர முடியாவிட்டால் கூட அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ முடியும். 

அதற்கு உங்களுக்குப் படிப்படியான பயிற்சி முக்கியம். எந்தப் பயிற்சி தேவை? அதுவும் எப்போது தேவை என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்? 

முந்தைய பதிவு     ஆசான் திரு.கிருஷ்ணன்.

Saturday, December 14, 2013

அடக்கினாலும் அழித்தாலும் நம்பர் 1.


இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளை அதில் சிலவற்றை மட்டும் இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் பதிவு செய்து விடுகின்றேன். 

நான் சென்ற பயணத்தில், கலந்து கொண்ட விழாக்களில், தனிப்பட்ட உறவு சார்ந்த நிகழ்ச்சிகளில், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நான் தவறாமல் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வு அலைபேசி சேவைகளின் பயன்பாடு. 

ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசியைத் தேவை இருக்கின்றதோ இல்லையோ? அதனை நோண்டிக் கொண்டே இருப்பது என்பது ஒரு பழக்கமாகவே மாறியுள்ளது. மற்றொரு ஆச்சரியம் இந்தப் பழக்கம் இயல்பான பழக்கம் போலவே மாறியுள்ளது. 

காரணம் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆகா இது நல்லது தானே? நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் தானே? என்று உங்களுக்கு எண்ணம் வரக்கூடும்.  ஆனால் நான் பார்த்த வரைக்கும் 90 சதவிகிதம் பொழுது போக்கிற்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றார்கள். 

இந்த முதல் தலைமுறையின் இணைய செயல்பாடுகள் அடுத்து வரும் தலைமுறைக்கு மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புவோம். அப்போது தான் நான் படித்த பத்திரிக்கை செய்திகள் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி 

2013 - 14 ஆம் ஆண்டுக் காலாண்டு (ஏப்ரல் முதல் ஜுன் வரை) ஒட்டுமொத்தமாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 89 சதவிகிதம் அதிகம்.  தனியார் வழங்கும் அலைபேசி சேவை வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இது 

பாரதி ஏர்டெல் 26.16 சதவிகிதம் 
வோடபோன் 23.34 சதவிகிதம் 
ஐடியா செல்லுலார் 18.94 சதவிகிதம் 
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் 16.25 சதவிகிதம். 

போட்டியில் உள்ள மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்களிப்பும் ஒற்றை இலக்க எண்ணில் தான் உள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் கேபிள் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் இன்று வரையிலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் 60.13 சதவிகிதத்தை மற்ற எந்தத் தனியார் நிறுவனமும் தொட, தொடர முடியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் 11.86 சதவிகிதத்தோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏனைய மற்ற நிறுவனங்கள் இந்தச் சேவையில் ஒற்றை இலக்க எண்ணில் மட்டுமே உள்ளது. 

கடந்த ஏழு ஆண்டுகளாக வீட்டில் பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகின்றேன். தொடக்கத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக அற்புதமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கால கட்டத்தில் தனியார் சேவையை நான் பயன்படுத்தியிருந்தால் என் பாதிச் சொத்தை எழுதி வைத்திருக்க வேண்டியிருக்கும். 

இன்று வரையிலும் அலைபேசி சேவையின் மூலம் இணையத்தை அணுகியதில்லை. அதற்கான தேவையும் வந்ததும் இல்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் "பொருளாதார மேதைகள்" நிரம்பிய அரசு எப்படி நசுக்கியது? என்பதை இந்தக் காணொளி காட்சியைப் பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்.

ரௌத்திரம் பழகு காணொளி காட்சியின் மொத்த தொகுப்பு இது. சொடுக்க உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை,அவர்கள் படும் பாடுகளை உணர்த்தும்.


Friday, October 04, 2013

நம்ப முடியாத இந்தியாவின் வளர்ச்சி -- ஆனால் இன்று?

திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு சார்பாக , இந்திய பொருளாதாரம் - இன்றும் நாளையும் - கருத்தரங்கம் - திரு. எஸ். குருமூர்த்தி அவர்களின் சிறப்புரை (02.10.2013)நடந்தது-

இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள இந்த பேச்சு உங்களுக்கு உதவக்கூடும்.


Thursday, September 19, 2013

சீனா -- கண்ணீரில் தொடங்கும் வளர்ச்சி

"காம்ரேட்ஸ், இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடுங்கள்.  நாம் பேச வேண்டும்."

ஒலிபெருக்கியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகின்றது. அரசாங்கம் தீர்மானித்தபடி, கிராமத்திற்கு வந்துள்ள சார்பாளர் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த பகுதியின் தலைவர் வந்து கிராமத்து மக்களிடம் பேச்சு வார்த்தையை தொடங்குகின்றார்.

முட்டல் மோதல், பரஸ்பரம் வாக்குவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.

"நாங்கள் எங்கள் இடத்தை விட்டுத்தர மாட்டோம்."

"அரசாங்கம் உரிய இழப்பீடு தரவில்லை."

"எங்களுக்கு விருப்பமில்லை."

"காவல்துறை எங்கள் கிராமத்தை சுற்றி வளைத்து எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது."

ஆனால் காட்சிகள் மாறத் தொடங்குகின்றது.

"நான் இந்த ஊரில் வாழ விரும்பவில்லை."

"எனக்கு பணம் அதிகம் தேவைப்படுகின்றது."

"நிறைய பன்றிகள் வளர்த்தால் நிறைய பணம் கிடைக்கும்."

"என் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க விரும்புகின்றேன்.  இந்த ஊரில் இருந்தால் அந்த வாய்ப்பு எனக்கில்லை. நான் ஏதாவது ஒரு பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்து நிறைய சம்பாரிக்க விரும்புகின்றேன்."

"நான் என் ஆண் நண்பருடன் பெரு நகரங்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். இரவு டிஸ்கோத்தே வுக்கு அவனுடன் செல்ல முடியும்."

"நான் இந்த விவசாய வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன். அதிகாலையில் எழுந்து இரவு வரைக்கும் உழைக்க வேண்டிய இந்த வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன்."

மேலே உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் இந்த ஆவணப் படத்தில் ஒவ்வொரு இடத்திலும் வந்து போகின்றவர்கள் பேசிய வார்த்தைகள்.

இந்தியாவின் அருகே இருக்கும் சீனா டிராகுலா போல விஸ்வரூபம் எடுத்து விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதை படிக்கும் போது, மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்கும் போது நாம் நம் அரசியல் தலைகளின் கையாலாத்தனத்தை அங்கலாய்ப்புடன் பேசிக் கொள்கின்றோம்.  

ஆனால் சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்ணீரில் தான் தொடங்குகின்றது.  

ஒரு கிராமத்தை பலிகிடாவாக்கி, அந்த மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஆசை வார்த்தைகள் காட்டி, நுகர்வோர் சக்தியைச் சொல்லி, விவசாய பூமியாக இருக்கும் பொழுது உண்டான விலையை தொழிற்சாலையாக மாறிய பின்பும் உருவாகும் விலை என்று கிராமத்து வாழ்க்கையில் ஆசைகளை உருவாக்க அங்கே ஒவ்வொரு குடும்பத்திற்குள் அடிதடி உருவாகி விடுகின்றது.

ஒவ்வொன்றையும் சொல்லியே அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி குறுகிய காலத்திற்குள் புதிய நகராக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

"தானும் படுக்க மாட்டார்கள். தள்ளியும் படுக்க மாட்டார்கள்" என்று கம்யூனிஸ்ட் கொள்கைகளை இன்று வரைக்கும் கிண்டலடிக்கும் நபர்களை சீனாவின் பொருளாதார கொள்கைகளைப் பார்த்தால் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடும்.  

வேர் என்பது மட்டும் கம்யூனிஸ்ட் சிந்தாந்தம்.  ஆனால் தரைக்கும் மேல் தெரியும் மரத்தில் உள்ள அத்தனையும் அக்மார்க்க மேற்க்கித்திய கலாச்சார சாயல் கொண்ட பொருளாதாரம்.  

அனைத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அரசாங்கத்தின் கரங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் காங்கீரிட் காடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

ஏழைகளின் கண்ணீர் சாம்ராஜ்யத்தை கவிழ வைக்கும் என்பது பழைய பழமொழி.  ஆனால் இன்று எப்படி மாறியுள்ளது தெரியுமா?  

இழந்தவற்றை மறக்க பிறந்த நாள் கொண்டாட்டம், இரவு நேர ஆட்டம், தூரத்தில் மகன் மகள் கொண்டாடும் சந்தோஷங்களை ஸ்கைபே வழியாக பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர் மனதில் எந்த பழமொழியும் தோன்றுவதில்லை.  

பழசை மறந்து புதிய மனிதர்களாக மாறி விடுகின்றனர்.

சம்பாரிக்க என்ன வழி? என்ற மொழியை சீன அரசு தேசிய மொழியாக மாற்றியுள்ளதால் சீனர்களின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை அவர்களே உணர நேரமிருக்காமல் ஓடிக்கொண்டிருக்க பழகி விட்டார்கள்.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல. 

வளர்ச்சி என்ற வார்த்தைகள் எல்லா நாடுகளிலும் மந்திர வார்த்தை போல உலகமெங்கும் ஒவ்வொருவரையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

முந்தினால் முன்னேறிவிடுவாய்.

யோசித்தால் ஒதுக்கப்பட்டுவிடுவாய்.

இது நாட்டுக்கு மட்டுமல்ல.  

இன்று தனி மனிதர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் மாறியுள்ளது.




தொடர்புடைய பதிவுகள்

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்

Saturday, September 14, 2013

இந்தியா 2013 - தங்க மீன்கள்

தங்க மீனகள் 

இன்று ரசனை மாறிவிட்டது என்பவர்களுக்கும், ரசிப்பதற்கான எல்லை விரிவடைந்து விட்டது என்று சொல்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தங்கமீன்கள்.

எது ரசனை என்பதே தெரியாமல், ரசிப்பதன் ருசியும் புரியாமல் வாழும் கூட்டத்தில் இது போன்ற படத்தை எடுத்த இயக்குநர் ராம் தனித்துவம் பெறுகின்றார்.

ரசிக்கத் தெரியாமல் ஆர்வமாய் டூரிங் டாக்சியில் சுற்றிலும் கட்டப்பட்டு வைத்திருந்த கீற்றுக்களை பிய்த்துக் கொண்டு திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து பார்த்த படங்களும், நான் இவரின் ரசிக குஞ்சு என்று சொல்லிக் கொண்டு வளர்ந்த பருவத்தில் பார்த்த படங்களும் இப்போது எதுவுமே என் நினைவில் இல்லை.  

என் கற்பனைகளை வளர்த்தவர்களுக்கு வயதாகி விட்டது. நம் நிஜ வாழ்க்கை கற்றுத்தந்துள்ள ரசனைகளும் மாறிவிட்டது. ஆனாலும் ஆழத்தில் இருக்கும் மாறாத கிராமத்து வாழ்க்கையின் மிச்சம் மீதியை சுரண்டிப்பார்க்க வைத்த படம் தான் தங்க மீன்கள்.

தொலைக்காட்சி, இணையம் போன்ற அனைத்தும் பொழுது போக்க மட்டுமே என்று கங்கணம் கட்டி ஒரு சாரார் காசு பார்க்க மட்டுமே என்று மாற்றி விட நம் மொத்த சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு விட்டாலும் மிச்சம் மீதி இருக்கத் தான் செய்கின்றது என்பதை  தங்க மீன்கள் படம் பார்த்த போது உணர முடிந்தது.   


படம் பார்த்து விட்டு இரண்டு நாட்களுக்கு மேல் மனம் முழுக்க பாரமாய், வெளியே சொல்ல முடியா துயரத்துடன் திரும்பத் திரும்ப அந்த படத்தில் வந்த ஒவ்வொரு காட்சியும் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.  காரணம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை எவரோ ஒருவர் நமக்குத் தெரியாமல் படமாக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் உள்ளது.

காகிதம் தான் என்பதற்காக எவரும் பணத்தை மதிக்காமல் இருக்கின்றார்களா? என்று எவரோ எழுதிய வார்த்தைகளை படிக்கும் போது இயல்பாகத்தான் உள்ளது.  ஆனால் தற்போது காகிதம் தரும் வாய்ப்பு, அங்கீகாரம், வசதிகள் என அனைத்தும் தான் நம்மை வாழவைக்கின்றது.  தினந்தோறும் இடைவிடாது ஓடவைத்துக் கொண்டும் இருக்கின்றது.

பிரியங்கள் பின்னுக்குத் தள்ளி, பிடித்தமானவர்களின் எண்ணங்களும் மாறிப்போய்விட எப்படி வாழ்வது? எதை நோக்கி போவது? என்ற குழப்பங்கள் அலையடித்துக் கொண்டே எனக்காக கொஞ்சம், என் மனைவிக்காக, குழந்தைகளுக்காக, உறவினர்களுக்காக என்று மாறி மாறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு இந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு உணர்த்துகின்றது. 

நம் இயல்பான விருப்பங்களுக்கும் எதார்த்த உலகத்திற்கும் உண்டான வாழ்வியலை, நீண்ட நாளைக்குப் பிறகு அப்படமாக உணர்த்திய படம். ஒரு புத்தகம் படிக்கும் போது என்ன மாதிரியான உணர்வுகள், கற்பனைகள் நமக்குள் உருவாகுமோ அத்தனை உணர்ச்சிக்குவியலையும் தங்கமீன்கள் தந்தது.

கஷ்டமான விசயங்களை நான் விரும்பி பார்க்க மாட்டேன். மனப் பாரத்தை அதிகமாக்கி விடும் என்று சொல்பவர்கள் இந்த படத்தை அவசியம் பாருங்கள். உங்களின் உண்மையான முகத்தை திரையில் பார்க்க முடியும்.

இருட்டுக்குள் வாழ விரும்பும் பறவைகள் வெளிச்சத்தைக் கண்டதும் மிரண்டு சப்தமிடுமே அதைப் போல உங்கள் மனம் கூக்குரலிடும்.

மதிப்பெண்கள் தேவையில்லாத மகத்தான படம்.

இந்தியா 2013

இந்தியாவும் ஒரு தங்க மீன் தான்.  

மாய மான் வேட்டை போல இந்தியாவை சந்தையாக வைத்துக் கொண்டு உள்ளே வரும் கூட்டமும், உழைப்பவர்கள் ஒரு பக்கமும் அதை சுரண்ட கற்றுக் கொண்டவர்கள் வளர்ந்த வளர்ச்சியில் இன்று இந்தியா என்பது தங்கமீன் போல பளபளப்பாக ஒளிர்கின்றது.  

இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நம்பிக்கை இருக்க, அதுவே அவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. வேட்டைக்குச் செல்வதைப் போல இங்கு அனைவருக்கும் ஒரு லட்சியம் உண்டு. படித்தேன். இன்று வளர்ந்தேன் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் ஒரு பக்கம்.

அனுசரிக்க கற்றுக் கொண்டேன். அளவில்லாத செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றேன் என்பவர்களும் தரும் நம்பிக்கை வார்த்தைகள் எதுவும் சாதாரண மக்களுக்கு புரியப்போவதில்லை. 

புரியாமல் அவர்கள் எப்போதும் போல இயல்பான வாழ்க்கை வாழும் வரையிலும் இந்த இந்தியாவில் எந்த மாற்றமும் நிகழப்போவதும் இல்லை.

120 கோடி மக்களின் கனவு மீனைப் பற்றி பிபிசி ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார்கள்.

இந்தியா மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைகளுக்கும், உண்மையான இந்தியா எப்படி உள்ளது என்பதையும் உங்களுக்கு புரியவைக்கும்.  

பழைய வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் முக்கியம் தானே?

காரணம் எதார்த்த வாழ்க்கை வாழ்ந்து காலம் முழுக்க வாய்க்கும், வயிற்றுக்கும் என வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும், திடீர் வளர்ச்சியில் எட்டிப்பிடிக்க முடியாத பணக்காரர்களாக மாறிப்போனவர்களும் வாழும் இந்த பூமியில் சாலையோரத்தில் வசிக்கும் ஒரு பெண் அழகான ஆங்கிலத்தில் சொன்ன வாசகம்.

"என்ன செய்வது? பொருளாதார மாற்றங்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரனாக மாற்றுகின்றது. எங்கள் வாழ்க்கை இப்படித்தான்.  கழிப்பறை அதோ தெரிகின்றது பாருங்கள்.  இரண்டு ரூபாய் கொடுத்து காலையில் சீக்கிரம் போய்விட்டு வந்து விட்டால் அன்றைய முக்கிய பிரச்சனை தீர்ந்தது."

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வந்தால் நாட்டில் மதவாதம் தலைதூக்கும் என்று சொல்லும் நபர்கள் அனைவரும்  பார்க்க வேண்டிய படமிது. கையில் காசிருந்த போதும் ஆடம்பர குடியிருப்பில் முஸ்லீம் என்பதால் வீடு கிடையாது என்று மறுக்கப்பட்ட போது அவர் அடைந்த துயர வார்த்தைகளை இப்படிச் சொல்கின்றார்.

"நான் அடைந்த அவமானமும் மன உளைச்சலும் அதிகம்" என்று சொல்லும் அவரின் வார்த்தைகள் இன்றைய உண்மையான நிலவரத்தை நமக்குச் சொல்கின்றது. மதவாதிகள் மத துவேசங்களை வளர்க்கின்றார்கள் என்பது போல மதவாதமற்ற நாடு என்று சொல்லும் ஆட்சியில் அத்தனை மத சண்டைகளும் இங்கே உருவாகின்றது. இது மதவாத நாடல்ல என்று சொல்லும் அரசியல் தலைகளும், படித்த பொருளாதார மேதைகள் கூட கடைசியில் ஆண்டவனின் தங்கத்தை அடகு வைத்து நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தான் இன்றைய இந்தியாவின் பொருளாதாரம் நம்மைப் பார்த்து சிரிக்கின்றது. 

பஞ்சாப்பில் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர் தரும் வாக்குமூலம், சிறிய விவசாயிகள் இந்த நாட்டில் படும் அவலங்கள், விளம்பரங்கள் மூலம் இந்திய ஒளிர்கின்றது என்பதற்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் ஒரு கதை படிப்பது போல பார்க்க முடிகின்றது. 

கூடவே கோட் சூட் போட்டு கணவான்களாக பேட்டி தரும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்திய தொழில்துறை அமைச்சர் தரும் நம்பிக்கை வார்த்தைகளை கேட்கும் போது வாயில் வரும் எச்சிலை துப்பி விடாதீர்கள்.  

உமிழ்நீர் சத்தானது.  அது சாக்கடையில் துப்புவதற்கல்ல.


Sunday, April 14, 2013

வரலாறு கிலோ என்ன விலை?

இலங்கையின் தொடக்க கால சரித்திர நிகழ்வுகளை இதுவரையிலும் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அவர்களின் ஆட்சி தொடங்கிய காலம் வரைக்கும் உண்டான நிகழ்வுகளை 11 தொடர்கள்  மூலம் பார்த்து உள்ளோம்.  மீதி உள்ள தொடர்களை ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்வோம்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றவாரத்தில் என் மூத்த அக்கா அவர்கள் பள்ளியில் நடந்த ஒரு உரையாடரை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  

அவர்கள் பள்ளியில் அவர் தலைமையாசிரியாக இருப்பதால் அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கியமான தமிழ் ஆசிரியரை வரவழைத்து ஒரு நிகழ்ச்சிக்காக உரையாற்றி வரவழைத்து இருந்தார்.  

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பற்றி வந்த ஆசிரியர் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி முடித்து விட்டு மாண்வர்களைப் பார்த்து உங்களுக்கு கேள்விகள் ஏதும் கேட்கத் தோன்றினால் தாராளமாக எழுந்து நின்று என்னிடம் கேட்கலாம் என்றாராம்.  தயங்காமல் ஒரு மாணவன் எழுந்து நின்று கேட்ட கேள்வி இது.

நான் கப்பலோட்டிய தமிழன் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகின்றது? என்னுடைய நிகழ்கால வாழ்க்கையில் எந்த வகையில் இவர் உதவ முடியும்? பழைய வரலாற்றுகளை கேட்பதால் படிப்பதால் என்ன லாபம்? என்று கேட்க வந்த ஆசிரியர் சிரித்துக் கொண்டே மீண்டும் பத்து நிமிடம் அது குறித்து பேசினாராம்.  

அவர் சொன்ன இறுதியான உரையின் சுருக்கமான வரிகள் இது.

உன்னுடைய கடந்த காலம் பற்றி யோசித்தால் என் எதிர்காலத்தை திட்டமிட முடியும்.  உன் நிகழ்காலத்தைப் பற்றி புரிந்தால் தான் உன் கடந்த கால நிகழ்வுகளை எப்படி உள்வாங்கி இருக்கின்றாய் என்பது உனக்கு புரியும்.  

இது போலத்தான் நாட்டுக்கும், நாடு சார்ந்த செய்திகளுக்கும்.  

மாணவனுக்கு புரிந்ததோ இல்லையோ அக்கா ஆச்சரியமாக சொன்ன விசயம் அந்த ஆயிரம் பேர் கூட்டத்தில் அவன் எழுந்து நின்று தைரியாமாக பேசிய விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்றார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் வாசிக்க நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் லைட்ரீடிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு பலரும் அங்கீகாரம் கொடுத்து இது தான் இப்போதைக்கு சரி என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது.

1992 ஆம் ஆண்டு சமயத்தில் என்னால் புத்தகங்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏராளமான கேசட் வாங்கிக் கொண்டு வந்து நான் தனியாக இருந்த வீட்டில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் சார்ந்த பலரின் பேச்சுக்களை நள்ளிரவு வரைக்கும் கேட்டுக் கொண்டே தூங்குவதுண்டு.  ஒவ்வொருவரின் உண்மையான முகங்களும், நோக்கங்களும், கொள்கைகளும் தெரியத் தெரிய நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று அந்த பழக்கமும் போய்விட்டது.

கடந்த ஒரு மாதமாக எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்போது பல்வேறு கூட்டங்களில் உரையாற்றும் ஒலிக் கோப்புகளை கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். பல ஆச்சரியமான தகவல்கள்.  எளிமையான விசயங்கள் ஆனால் உண்மையான தகவல்கள்.  

நீங்கள் ஏதோவொரு வேலையில் இருக்கும் போது திரு. கிருஷ்ணமூர்த்தி உரையை கேட்டுக் கொண்டே பணியாற்ற முடியும்.

வலையேற்றிய சிவாவுக்கு என் நன்றிகள்.

ஆர்வம் இருப்பவர்களுக்கு டாக்டர் மு.வ  குறித்து பேசியதை கேட்டுப் பாருங்கள்.

 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிறுபத்திரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பெரும் சரித்திரம் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் பாரதி சங்கத்தில் தமிழறிஞர்களும் வாக்கும் என்ற பொருளில் சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆற்றிய  உரை....

  (இடம்:-சுப்பையா நாயுடு உயர்நிலைப்பள்ளி, தஞ்சை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டாலர் நகரம் நூல் வெளியீட்டுவிழாவில் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் பாடிய பாடல்களின் மொத்த தொகுப்பு இது. நெருங்கிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க.

மொழி, கல்வி, கலாச்சாரம், நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகளும் சவுக்கடிகளும்.

Monday, April 01, 2013

அடித்த அடியும் மருண்ட விழியும்

சென்ற மார்ச் மாதத்தில் திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் ஆண்டு விழாவை பார்த்த போது என் பள்ளிப் பருவத்து ஆண்டு விழா என் நினைவுக்கு வந்தது.  நான் தொடக்கப்பள்ளி படித்த சரஸ்வதி வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் நான் பங்கெடுத்த பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் வந்து போனது. பள்ளி வாழ்க்கையில் முதல் எட்டு வருடங்கள் எனக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் என்பது வேறெங்கும் கிடைத்தது இல்லை.  விளையாட்டு, விருப்பங்கள் இத்துடன் படிப்பு கலந்த வாழ்க்கை.

ஒன்பதாம் வகுப்புக்காக அருகே இருந்த பெரிய மேல்நிலைப்பள்ளிக்கு மாறினோம். கடலில் கரைத்த பெருங்காயம் போல வாழ்க்கை மாறிப் போனது. எந்த விழாவிலும் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறியிருந்தது.  மீண்டும் கல்லூரி சென்ற போது தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமைந்தது.  

தற்போது வருடந்தோறும் எங்கள் தேவியர்களின் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்று கொண்டு இருக்கின்றேன்.  வீட்டில் ஒருவர் நடனத்தில் ஆர்வத்தோடு பங்கெடுப்பதால் அவர் நிகழ்ச்சியை காண வருடந்தோறும் தகப்பன் என்ற கடமைக்காகவும், அவரின் மிரட்டலுக்கும் பயந்து கொண்டு அங்கே சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொள்வதுண்டு. ஏதோவொரு வருடம் சில ஆச்சரியங்கள் எனக்கு கிடைக்கும். ஆனால் தற்போது கார்ப்பரேட் தனமாக குழந்தைகள் படிக்கும் பள்ளி மாறிக் கொண்டு வருவதால் வெறும் வேடிக்கையாளனாக பார்த்து விட்டு வந்து விடுவதுண்டு.

முன்பு வருடந்தோறும் பெற்றோர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவார்கள். கடந்த மூன்று வருடங்களாக அதையும நிறுத்தி விட்டார்கள். 

என் சிந்தனைகள் நோக்கங்கள் எதையும் குழந்தைகளிடம் காட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக அவர்களின் சிந்தனைகளில் எதையும் வலிய திணிப்பதும் இல்லை. அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை.அவர்களின் புதிய சிந்தனைகள் அவர்களை வழிநடத்தட்டும்  என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.

அவர்களின் அன்றாட நிகழ்வில் உருவாகும் சிறிய தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு சரி.அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறுவதும் இல்லை.

மகள் ஆடும் நடனத்திற்கு அந்த ஒரு நாள் கூத்துக்காக உடைகள் மற்றும் அலங்காரத்திற்காக என்கிற வகையில் ரூபாய் 500 ல் தொடங்கியது. தற்போது ரூபாய் 1300 வரைக்கும் வந்து விட்டது.  காரணம் பேஷன் என்ற வார்த்தை ஒவ்வொரு பெற்றோர்களையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கால் நிர்வாணத்தை ரசிக்கும் மனோநிலையில் பெரும்பாலன பெற்றோர்கள் வந்து விட்டதால் கண் இருந்தும் குருடனாகத் தான் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாத  வாழ்க்கை வாழவே இங்கு பெரும்பாலான மக்கள் விரும்புகின்றார்கள். ஆண்டு விழாவில் குழந்தைகள் ஆடும் ஆடலுக்கு தேந்தெடுக்கப்படும் உடைகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றது. அந்த பெருங்கொடுமையை மகளின் அதீத ஆசைக்காகவே வருடந்தோறும் தியாகம் செய்து கொண்டு வருகின்றேன்.

இந்த வருடம் என் கோபம் அளவுக்கு அதிகமாக போக வகுப்பாசிரியரிடம் குமுறித் தீர்த்த போது அவர் சொன்ன வாசகம்.  

"ஒவ்வொரு முறையும் நீங்கள் மட்டும் தான் தைரியமாக பல விசயங்களை நிர்வாகத்திடம் சொல்லி சின்னச் சின்ன மாறுதல்களை உருவாக்க காரணமாக இருக்குறீங்க. வேறு எந்த பெற்றோரும் இதை கண்டு கொள்வதே இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னார்.

என்னுடைய கோபம் என்னவென்றால் அந்த ஒரு நாள் போடும் உடை என்பது வேறு எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில் உள்ளது. இதற்காக வெளி இடங்களில் (கோரியாகிராஃபர்) இருந்து நபர்களை அழைத்து வந்து கண்றாவி உடைகளை அணிவித்து ஆடச் செய்வது தான் உச்சபட்ச கோபத்தை உருவாக்கி விடுகின்றது. 

இந்த முறை பள்ளி முதல்வரிடம் முறையிட பல மாறுதல்கள் உருவானது.  

பள்ளிக்கருகே வீடு என்ற சூழ்நிலையில் பலவிதமான விருப்பமற்ற செயல்பாடுகளுக்கு நாமும் உடந்தையாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் மனதிற்கு ஒருவிதமான ஆற்றாமையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வி என்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு விதமான தண்டனை தான்.

காரணம் நான் சந்திக்கும் என்பது சதவிகித பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுக்க நேரம் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் படிக்கும் பாடங்கள் புரிந்து கொள்ளும் அறிவும் இருப்பதில்லை.  முடிந்தால் டியூஷன் என்ற பெயரில் வேறொரு இடத்திற்கு துரத்தும் நோக்கம் தான் பெரும்பாலான வீடுகளில் நடைமுறையாக இருக்கின்றது.

சோர்ந்து போய் வரும் குழந்தைகள் மறுபடியும் சோர்வோடு செல்கின்றார்கள்.

விளையாட முடியாத சோகம், விரும்பிய காரியங்களை செய்ய முடியாத தினசரி எந்திர வாழ்க்கை என்பது ஒட்டு மொத்தமாக மனதளவில் எப்போதும் ஒரு கோபத்தோடு வாழ வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்க பிடிவாத குணம் உள்ளவர்களாக மாறத் தொடங்குகின்றார்கள்.

பகிர்தல் இல்லாத போது பாவங்களை நோக்கியே நகர்கின்றார்கள்.

ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கிலக் கல்வியை பல்வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு விரும்புகின்றார்கள். குறிப்பாக ஆங்கிலம் தெரிந்து விட்டால் அகில உலகமும் நம் வசமாகிவிடும் என்ற எண்ணம் எப்படியோ இங்கே விதைக்கப்பட்டு விட்டது?

ஆனால் ஆங்கில கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு என்ன விதமான அறிவை புகட்டப்படும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

முதுகு வலிக்க சுமந்து செல்லும் புத்தக பைகள் தான் மிச்சம்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அதிமுக கட்சியைச் சேர்ந்த சிவசாமி கூட சர்வதேச தரம் என்ற பெயரில் சென்ற வருடம் ஒரு பள்ளியைத் தொடங்கினார்.  தரம் என்பது அதளபாதாளத்தில் இருப்பதாக பெற்றோர்கள் சொல்ல இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

இந்த வருடம் திருப்பூரின் சென்னை சில்க்ஸ் நிறுவனமும் தனது கல்வி நிறுவனத்தை தொடங்க இருக்கின்றார்கள். ஆலமரம் போல பல துறைகளில் விழுது பரப்பிய இந்த நிறுவனம் இப்போது கல்வித்துறையில் காலடி வைத்துள்ளார்கள். நிதானமாக வளரும் போக்கை கொண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இங்கு ஏற்றுமதி தொழிலில் வீழ்ந்த, வீழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை நிறுவனங்களும் உடனடியாக தேர்ந்தெடுக்கும் துறையென்பது இந்த கல்வித்துறையாக இருக்கின்றது.  குறுகிய காலத்தில் நல்ல அறுவடையை எடுத்து விடுகின்றார்கள். இங்குள்ள மற்றொரு பள்ளியில் ஆண்டு விழா என்ற பெயரில் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய வசூல் செய்து சாலமன் பாப்பையா வந்து அறிவுரை சொல்லப் போகின்றாராம்.  3000 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் பள்ளியில் ஒருவருக்கு 1000 ரூபாய் என்றால் கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளவும்.

ஆனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. மன ரீதியாக பெற்றோர்களுக்கும் ஆங்கிலக் கல்வி  என்பது ஒரு தண்டனை போலவே இருக்கின்றது.  எவரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. . 

இங்குள்ள அரசுப்பள்ளியின் கொடுமை வேறு விதமாக இருக்கின்றது.

ஒரு வகுப்பில் 50 முதல் 60 குழந்தைகள் வரைக்கும் அடைத்து வைத்து பாடம் போதிக்கும் அந்த ஆசிரியை நிலமையை நினைத்துப் பார்த்த போது அவருக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. 

சில வருடங்களாகத்தான் இங்குள்ள குறிப்பிட்ட அரசு பள்ளிக்கு வசதியான கட்டிடங்கள் உருவாகியுள்ளது. இங்குள்ள சில முதலாளிகளின் கருணைப் பார்வையினால் நல்ல வசதிகள்  உருவாகியுள்ளது. .

தற்போது திருப்பூர் மாவட்டம் என்ற பெரும் பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள மாவட்ட கல்வித்துறைக்கென இருக்கும் மாவட்ட கல்வி அதிகாரி வரைக்கும் பேசிப் பார்த்த போது அவர்களின் பிரச்சனைகளை அழ மாட்டாத குறையாக சொல்லி செல்பவரிடம் ஆறுதல் கேட்கும் நிலையில்  தான் அவர்கள் இருக்கின்றார்கள்.  

மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறை ஒதுக்கி அவருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து இருப்பதை எங்கேயாவது கேட்டு இருக்கின்றீர்களா?

குடியை வளர்க்க உதவும் அரசாங்கத்தில் குடிமக்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி  தெரியப் போகின்றதா என்ன? காமராஜர் என்றொரு மனிதர் இங்கே தோன்றியிருக்காத பட்சத்தில் இன்று முக்கால் வாசி தமிழர்கள் முழு முட்டாளாகத்தான் வாழந்திருக்க முடியும்.

குடும்பத்தோடு திரு தங்கராசு அவர்கள் நடத்தும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்ற போது தேவியர்களை அங்குள்ள குழந்தைகளுடன், அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கச் சொன்னேன்.

வீட்டுக்கு வந்த போது மூவரும் சொன்ன ஒரு வாசகம்.

"நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இந்த பள்ளிக்கூடம் இருந்தால் இங்கேயே படிக்கலாம்". என்றார்கள்  

காரணம் தற்போது குழந்தைகள் படிக்கும் பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்த காரணத்தால் முதல் மூன்று வருடங்கள் நான் பட்ட அவஸ்த்தைகள் எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டேன்.   

டாலர் நகரம் புத்தகத்தில் வரும் ஒரு வாக்கியம்.

நடுத்தர வர்க்கமாக வாழும் போது ஒவ்வொரு சுமையையும் சுகமாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிடித்த பறை இசை மற்றும் எங்கள் தேவியர்கள் ரசித்த நடனக்காட்சி இது.  







தொடர்புடைய பதிவுகள்

உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு

Sunday, February 24, 2013

பணம் துரத்திப் பறவைகள் - என் தூக்கத்தை தொலைத்தது



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் வெட்டிக்காடு ரவி ஆற்றிய உரையின் காணொளி தொகுப்பு (27.01.2013)

டாலர் நகரம் புத்தக விமர்சனம் - வெட்டிக்காடு ரவி

நண்பர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தகத்தை 27-1-2013 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து வார இறுதி பயணங்கள் மற்றும் வேலை காரணமாக புத்தகத்தை உடனே படிக்க இயலவில்லை. இந்த வாரத்தில்தான் படித்து முடித்தேன். 

இந்த புத்தகத்திலுள்ள ஒரு சில பகுதிகளை ஜோதிஜியின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். புத்தகமாக கையில் வைத்துக்கொண்டு படித்தபோது ஒரு நாவலைப் படிக்கும் ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து விட்டேன். 

காரணம்... அவ்வளவு அனுபவங்கள், தகவல்கள் அடங்கிய புத்தகம்.

உலகம் தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞனாக ஒரு மஞ்சள் பையுடன் 1992 ஆம் ஆண்டில் திருப்பூருக்கு வரும் ஜோதிஜியின் ஆரம்ப கால அனுபவங்களுடன் நம்மை திருப்பூர் நகரத்தின் பின்னலாடை நிறுவனங்களின் உள்ளே அழைத்து செல்கிறார். ஒரு சாதரன தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, சூபர்வைசர், மேலாளர், சொந்த தொழில், தற்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பொது மேலாளர் (General Manager) என்று உயர்ந்திருக்கும் ஜோதிஜி தனது கடந்த இருபது ஆண்டு கால வாழ்க்கை பயணத்தில் திருப்பூரின் வளர்ச்சி,வீக்கம், பிரச்சனைகள், பின்னடைவு ஆகியவற்றை பற்றி ஆழமாக, துல்லியமான தகவல்கள், புகைப்டங்கள் வாயிலாக தெரிவிக்கிறார்.
திருப்பூர் நகரத்தின் பல முகங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது டாலர் நகரம்.  

அப்பாவி இளைஞனாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் திருப்பூரை நோக்கி படையெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தன் அனுபங்கள மட்டும் அல்லாமல் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். 

குறிப்பாக கருணாகரன் என்ற கிராமத்து சிறுவன் காஜாபட்டன் அடிக்கும் குழந்தை தொழிலாளியாக திருப்பூருக்கு வந்து இன்று பல கோடி நிறுவனத்தின் அதிபராக வளர்ந்திருப்பது. கிராமத்திலிருந்து திருப்பூருக்கு தொழிலாளியாக வந்து 100 கோடி நிறுவனத்திற்கு முதலாளியாக உயர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களால் இன்று தெருவில் நிற்கும் வாழ்ந்து கெட்ட ஆறுமுகம் ஆகிய இருவர்களைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள்.

திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மேற்பார்வையில் தொழிலாளார்களை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 14 மணி நேரம் கசக்கி பிழிந்து வரைமுறை இல்லா வேலை வாங்குதல் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. 

மனித வளத்துறை (Human Resources) என்பது பெரும்பாலன நிறுவனங்களில் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன, 

சூபர்வைசர்கள், மேலாளர்கள் தொழிலாளர்களை நடத்தும் முறைகள், பெண்களுக்கு கொடுக்கும் பாலியியல் தொந்தரவுகள், அதை குடுபத்திற்காக ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்ட பெண்கள், “பணம் துரத்திப் பறவைகள்” என்ற அத்தியாத்தில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை படித்த போது மனம் மிகவும் கனத்து விட்டது.

நாம் தினசரி செய்திகளில் பார்த்து, படித்து கடந்து செல்லும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றிய பிரச்சினைகள், அரசாங்க பஞ்சு வணிக ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள், அன்னிய செலவாணி ஏற்ற இறக்கங்கள், அன்னிய முதலீடு ஆகியவகளைப் பற்றி மிக தெளிவாக பல பாகங்களில் விளக்கி சொல்லியிருப்பது மிகவும் பாரட்டக் தக்கது.

 ”டாலர் நகரம்” புத்தகத்தை படித்த பிறகு  திருப்பூர் பின்னலாடை தொழில் இயங்கும் முறை பற்றி முழுமையாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஜோதிஜி தன் சுயசரிதை கலந்த திருப்பூரின் ஆவணமாக இந்த புத்தகத்தை ஒரு கலவையாக எழுதிருக்கிறார். 

இதனால் படிக்கும்போது சில இடங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கின்றது. 

இந்த சிறு குறையைத் தவிர்த்து பார்த்தால் “டாலர் நகரம்” திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் பற்றிய மிகச் சிறந்த ஆவண புத்தகம் !!!

விமர்சனப் பார்வைகள்.


Thursday, July 21, 2011

உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா Arivai Petra Arputham

இது ஒரு இடைச்சொருகல்,  இன்று என் மின் அஞ்சலுக்கு வந்த இந்த காணொளி மனதை உலுக்கிவிட்டது.

ராஜிவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் தோழர் பேரறிவாளனின் தாய் பேட்டி.

21 வருட சிறைவாழ்க்கை.  ஒரு வாழ்க்கையின் பாதிப்பகுதி. பாதிப்புகளை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

சமயம் இருக்கும் போது முழுமையாக கேட்டுப் பாருங்கள்.



Sunday, January 23, 2011

இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை

"ஞாயிற்றுக்கிழமைன்னா கூட கொஞ்சம் நேரம் தூங்கவாங்கன்னு பேரு.  இன்றைக்கும் காலையில சீக்கிரம் எந்திரிக்கனுமா? ஏன் தான் இப்படி இருக்கீகளோ?"


இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டில் கேட்கும் சுப்ரபாதம்.  ஆனால் இன்றைய காலைப்பொழுதில் நம்ம காட்டுப்பயபுள்ள தெகா இந்த காணொளியை அனுப்பி உரையாட மற்ற வேலைகள் மறந்து ஒரு மணி நேரம் உள்ளத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் பதம் பார்க்க வைத்து விட்டது.  மகேந்திரன் எட்டப்பராசனுக்கு நன்றி..

"வைகோ ஈழம் குறித்து ஒரு ஆவணப் படம் இயக்கியுள்ளார்.  அது வருகின்ற தேர்தலுக்கு வெளியே வரும்.  ஆளுங்கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும்" போன்ற செய்திகளை நான் தினசரிகளில் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த விசயமாகும். மனதிற்குள் வியப்பாக் இருந்து. ஒருவேளை பிரபாகரனை சந்திக்க வைகோ சென்றாரே? என் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் என்று சந்தோஷப்பட்ட நிகழ்வாக இருக்குமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஓரளவுக்கு சொல்லக்கூடிய அளவில் ஒரு காரியத்தை வைகோ செய்துள்ளார். ஈழத்தின் தொடக்கம் முதல் சம காலம் வரைக்கும் உள்ள விசயங்களை இந்த ஐந்து காணொளி மூலமாக விளக்கியுள்ளார்.  ஒவ்வொன்றும் ஏறக்குறைய 14 நிமிடங்கள் ஓடுகின்றது.

இடையில் இயக்குநர் பாரதிராஜா கூட ஈழம் குறித்து ஒரு படம் எடுப்பேன் என்று சொல்லி செய்திகளில் இடம் பிடித்துவிட்டு மறந்து போனார். மணிரத்னம் எப்போதும் போல அவர் பாணியில் சொல்லி விட்டு ஈழத்தைப் பற்றி மனதில் இருந்த கொஞ்ச விசயங்களையும் மறந்தும் போகும் அளவிற்கு திரைப்பட புரிந்துணர்வை உருவாக்கி அவரும் நகர்ந்துவிட்டார்.  இடையில் ஈழம் சார்ந்து வந்த பல படங்கள் சென்சாரில் மூச்சு வாங்க ஒவ்வொருவரும் யோசிக்க இன்று தமிழ்நாட்டில் படித்த தமிழர்களின் இளைஞர்களின் எண்ணங்களில் கூட ஈழ அவலங்கள் ஒரு செய்தியாகவே உள்ளது.

சென்ற தேர்தலில் "மக்கள் தொலைக்காட்சி" ஈழத்தை ஒரு ஆயுதமாகவே எடுத்து விடாது போராடிப் பார்த்தார்கள்.  இப்போது சீமான.  

பினாயில் கூட இலவசமாக கிடைத்து விடாதா? என்று ஏக்கம் நிறைந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது போன்ற விசயங்கள் முக்கியமல்ல. இந்த காணொளியை நிச்சயம் தேர்தல் சமயத்தில் அனுமதிப்பது என்பது எதிர்பார்கக முடியாத ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பாருங்கள்.  

உண்மையிலேயே பிரபாகரனுக்கு ஒரு ஆன்டன் பாலசிங்கம் அமைந்தது போல வைகோவும் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமைதான்.  நெடுமாறன் அய்யா கூட தனது பணியை இந்தியாவிற்குள் நிறுத்திக் கொண்டார். சர்வதேச சமூகத்திடம் ஈழ மக்களுக்காக வைகோ முன்னெடுத்துச் சென்ற பல விசயங்களை இதன் மூலம் தான் என்னால் உணர முடிந்தது. 

ஆனால் தமிழ்நாட்டில் இவரைப் போன்றவர்கள் சென்று இருக்க வேண்டிய தூரம் இதுவல்ல. வருத்தமாக உள்ளது.  வாழ்ந்து கெட்டவனின் அவல வாழ்க்கையைப் போல இவரின் இன்றைய அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. .  

ஈழத்தைப் பற்றி முழுமையாக புரிய வேண்டுமென்றால் நிச்சயம் 100 மணி நேரம் ஓடக்கூடியதாய் இருந்தாலும் அது பாதி அளவுக்குக்கூட இருக்காது.  காரணம் ஒவ்வொரு விசயத்திற்குப் பின்னாலும் உள்ள ஓராயிரம் அரசியல் மர்மங்கள் நிறைந்த விசயங்களை ஒரு குறுந்தகடுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதா என்ன?

ஈழ வரலாறு குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், தலையணை அளவு உள்ள புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த காணொளி உதவியாய் இருக்கும். மூன்றாவது காணொளியில் சமகாலத்தில் நடந்த போர் அவலங்களை காணும் போது நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில் தானா? என்றொரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இதில் வைகோ ஒரு இடத்தில் சொல்லும் வாசகம் குறிப்பிட்டத்தக்கது. 

" நான் முறையாக வரலாறு படித்தவன்.  உலகில் எவராலும் மறுக்க முடியாத மாவீரன் பிரபாகரன். எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், ஆதரவும் இல்லாமல் சர்வதேச இக்கட்டுக்களைத்தாண்டியும் தன் போராட்டத்தை முறைப்படி கொண்டு வந்து பல போர்த்தந்திரங்களை உருவாக்கி சர்வதேச சமூகத்திற்கு ஆச்சரியமளித்தவர்"

" இந்தியா பாகிஸ்தான் பகைநாடு. இருவரின் பங்களிப்பும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இருந்தது. இஸ்ரேல் ஈரான் நட்பு நாடல்ல. ஆனால் ஒருவர் விமானங்கள் கொடுக்க மற்றொருவர் குண்டுகள் அழிக்க அழிந்தது தமிழ் சமூகம். ரஷ்யா சீனா எதிரெதிர் முனைகள்.  ஆனால் இந்த துருவங்கள் மறக்க முடியாத அவலத்தை செய்து முடிக்க ஒன்று சேர்ந்தார்கள்.." 

ஆனால் இந்த போர்க்குற்றவாளி ராஜபக்ஷேயை இன்று வெற்றித்திருமகன் என்ற உதாரண வரிசையில் இந்திய அரசாங்கம் உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  அப்ப தமிழ்நாட்டு அரசாங்கம்?  

இயல்பாகவே அதிக உணர்ச்சியில் குரல் உயரும் வைகோவுக்கு இந்த காணொளியில் பல இடங்களில் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுக்கின்றது.

இராமேஸ்வரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தொலைவில் இருக்கும் ஈழம் இன்று வரைக்கும் என்ன சாபத்தை பெற்று இருக்குதோ? கடற்கரையில் இருக்கும் "சாமி"க்கும் அருள் கொடுக்க நேரமில்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கும் "ஆமாம்சாமி"களுக்கும் இன்று வரைக்கும் மனமும் மாறுவதாகத் தெரியவில்லை..

இதில் வைகோ சொல்லாத விசயங்கள் பல உண்டு. மறைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்.

















Saturday, January 08, 2011

மாமன்னன் இராஜராஜனின் இன்றைய எதார்த்த நிலை?

ஒரு பக்கம் அரைப்பக்கம் தொடங்கி இன்று குறுந்செய்தி வரைக்கும் சகல துறைகளிலும் விளம்பரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக திரைப்பட, அரசியல், ஆன்மீக பிரபலங்களின் விளம்பர மோகம் நாம் அறிந்ததே. சமகாலத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை இஷ்டம் போல் உருவகப்படுத்திக் கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டுருக்கிறார்கள். 

ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கலாச்சாரத்தின் பொக்கிஷமாக விளங்கிக் கொண்டுருக்கும்.  தஞ்சை பெரியகோவிலைப் பற்றி ஏதேவொரு வகையில் நீங்கள் கொஞ்சமாவது கேட்டுருக்கக்கூடும்.  அல்லது தஞ்சாவூர் சென்று பார்த்துருக்கக்கூடும்.  ஈழம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட போது ஆங்கிலேயர்களுக்கு முன் இந்த தீவு எப்படி இருந்தது என்று பல புத்தகங்கள் வாயிலாக படித்துக் கொண்டு வந்த போது பிரமிப்புக்கு மேலே வேறொரு வார்த்தைகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது போல நம் தமிழ் மன்னர்களின் வீரம் எனக்கு வியப்பூட்டியது.  காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுக் காவியங்களைப் படைத்த மன்னனின் இன்றைய நிலை?

ஆனால் தமிழர்களின் சரித்திரத்தில் பெருமை மிக்க ஒரு மன்னனை நாம் எந்த அளவிற்கு பெருமைபடுத்தியிருக்கிறோம் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.  இதை பார்த்து முடித்து முடிக்கும் போது இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களின் இறவா புகழ் குறித்த அறியாமையை தயவு செய்து உங்கள் எண்ணத்தில் இருந்து சற்று ஒதுக்கி வைத்துவிடுங்கள். காரணம் தீர்மானிக்கப்பட்ட காலம் கொடுக்கும் தண்டனை மிகக் கோரமானது.  ஆனால் அதுவரைக்கும் நாம் இருப்போமா என்பது தெரியாது?



Tuesday, December 21, 2010

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?

2000 ஆண்டு தொடக்கத்தில் திருமணம் ஆவதற்கு முன்பு பெரிய வீட்டில் தனி ஆளாக புதிய வாழ்க்கையை தொடங்கினேன். மொத்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். தனி ஆளுக்கு ஏன் இத்தனை ரூபாய் வாடகை கொடுத்து ஏன் இவன் இங்கே இருக்கின்றான்? என்பதை மனதில் கொண்டு "கழுகுப் பார்வை"யால் மற்றவர்கள் என்னை பார்த்துக் கொண்டுருந்தனர். 

ஏறக்குறைய தினந்தோறும் கைபேசியில் 500க்கும் குறையாத அளவிற்கு வந்து கொண்டுருக்கும் அழைப்புகளுடன் நிறுவன பதவிகளில் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது.

என்னைத் தேடி வந்த எதிர்கால மாமனார் கூட நான் உள்ளே வைத்திருந்த குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பார்த்து அசந்து விட்டார். சமையல் கலை என்பது நான் ரசித்து செய்யும் ஒரு விசயம்.  அதுவும் அந்த சமயத்தில் நான் புகுந்து விளையாடிக் கொண்டுருந்த அசைவ உணவு வகைகளைப் பார்த்து அவருக்கும் மேலும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  பொதுவாக பேச்சுலர் வாழும் வாழ்க்கையில் மற்றவர்கள் "கண் கொத்தி பாம்பாக" பார்க்கும் பல விசயங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு என்னை வினோத ஜந்தாகவே பார்த்தார்.  

அலுவலக நேரம் தவிர மற்ற பொழுதுகள் அத்தனையும் வீட்டுக்குள் இருந்த ஒலி நாடாக்கள் என்னை அடைகாத்தது. பள்ளிப்பருவம் முதல் நான் மனதில் வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு உள்ளே நான்கு புறமும் விலை உயர்ந்த ஓலிவாங்கிகளை பொருத்தி மிகத் துல்லியம் என்பதற்காக அதன் தொடர்பான பல சமாச்சாரங்களை பொருத்தி கதவை சார்த்திக்கொண்டு கேட்டுக் கொண்டுருப்பேன்.  

பலரும் பேசிய இலக்கியப் பேச்சுகள் என்று தொடங்கி அதன் தொடராக ஆன்மிகத்தை விட்டால் அரசியல் பேச்சுகள் போன்ற பலதையும் கலவையாக கேட்டுக் கொண்டுருப்பேன். சராசரி நபர்களால் ஜீரணிக்க முடியாத  கேசட்டுகள் ரகம் வாரியாக உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருக்கும்.

குறிப்பாக அப்போது வைகோ மேல் அதீத காதல் கொண்டுருந்தேன். அவரின் ஒவ்வொரு ஒலிநாடாக்களையும் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டுக் கொண்டேயிருந்தாலும் சலிக்கவே சலிக்காது.  வார்த்தை பிரயோகங்கள், கம்பீர, உதாரணங்கள், தடுமாற்றம் இல்லாத பேச்சு என்று ஆச்சரியமனிதராக எல்லாவிதங்களிலும் தெரிந்தார்.  நடைபயணத்தில் இறுதியில் சென்னையில் பேசிய பேச்சை அடுத்த நாலைந்து வருடங்கள் வைத்திருந்தேன். 

ஆனால் இப்போது அவரைப் பார்க்கும் போது?

தமிழ்நாட்டு அரசியலில் உருப்படியாக அமைந்த ஒரு புத்திசாலி தன்னுடைய தவறான கொள்கைகளால், எதிர்காலம் குறித்து அக்கறைபட்டுக்கொள்ளாமல் இந்த நிமிடம் வரைக்கும் தான் கொண்ட ஈழம் குறித்த கொள்கைகளில் ஆச்சரியமனிதராக வாழ்ந்து கொண்டுருக்கிறார். அவரின் பல புத்தகங்களை படித்துள்ளேன்.  ராஜீவ் காந்தியுடன் நேருக்கு நேராக .நின்றவிதம், அசாத்தியமான துணிச்சல், நம்ம சூனாபானாவை (அதாங்க சுப்ரமணியசாமி) பாராளுமன்றலாபியில் மிரட்டிய கம்பீரம் என்று எல்லாவிதங்களிலும் சிங்கமாகத் தான் வாழ்ந்தார். 

ஆனால் இன்று?

தமிழ்நாட்டில் இரண்டு கழகங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் மேலே வந்த ராமதாஸ் மற்றும் திருமாவளவன் குறித்து இங்கு என்ன எழுத முடியும்?

என்னுடைய பார்வையில் மருத்துவர் ராமதாஸ் மேல் அவரின் அரசியல் கொள்கையின் மேல் ஏராளமான காழ்புணர்ச்சி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உருவாக்கிய "மக்கள் தொலைக்காட்சி" ஆச்சரியமானதே. 

ஈ மொய்க்கவில்லையே என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளாமல் அதே பிடிவாதத்தோடு தனித்தமிழிலில் கொண்டு போய்க் கொண்டுருப்பதற்கு தனியான பாராட்டுரையை வழங்க வேண்டும்.

திருமாவளவனும் வைகோவுடன் இருந்தார். வளர்ந்தார்.  ஆனால் இவர் பிடிக்க வேண்டிய இடத்தை இன்று பிடித்துருப்பவர் சீமான் அவர்கள். 

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கழகங்கள் சரியில்லை. ஊழல் குற்றச்சாட்டு, சுயநல ஆதிக்கம், குடும்ப அரசியல் என்று கருத்து சொல்பவர்கள் திருமாவளவன், ராமதாஸ் இருவரும் கடந்து வந்த பாதையில் தான் சார்ந்த இனத்திற்கு என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்ன சாதித்து இருக்கிறார்கள்? என்று தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கும் கொஞ்சம் இவர்களின் அரசியலை புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 

காரணம் இவர்கள் தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடுகின்றோம் என்கிறார்கள்.   ஈழத்தில் நடத்த கடைசி யுத்தப் போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கெட்டிக்காரத்னமாக கடைசி வாய்ப்புள்ள வரைக்கும் தன்னுடைய மந்திரிப்பதவியை விட்டு இறங்கத் தயாராக இல்லை என்பது போன்ற விசயங்கள் பெரும்பாலான மக்களால் மறக்கப்பட்ட ஒன்றாகும். திருமாவளவன் எந்த நோக்கத்தில் இலங்கைக்கு சென்ற குழுவுடன் சென்றார்? என்பதே இன்று வரையிலும் ஆச்சரியம் அளிக்கும் விசயமாகும்?  

கடைசியாக நான் உங்களை திட்டிப்பேசவில்லை என்று சோனியாவின் வாசலில் நுழைய தவமாய் தவமிருப்பது வரைக்கும் வைகோவுக்கு அடுத்தபடியாக அந்தர்பல்டி அகாய சூரனாக இருக்கிறார்.

மொத்தத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று இரு துருவங்களுக்குள் சிக்கியவர்களாக இவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்.  

ஆனால் எல்லாவிதங்களிலும் சீமான் சற்று வித்யாசமாக இருக்கிறார்.  

பேச்சு, செயல்பாடு, கொள்கை.  

ஆனால் இவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் இவரின் எதிர்கால பாதையை எந்த அளவிற்கு தீர்மானிக்கும் என்பது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.  ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும். 

எப்படி இருந்தவர் இப்படி ஆனார் என்று இவர் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியவர் வைகோ.  

தொழில் நிறுவனங்களைப் போலவே அரசியலுக்கும் முன் எச்சரிக்கை தேவை. 
காரணம் தன்னுடைய இருப்பு தெளிவான முறையில் இருந்தால் தான் தான் வைத்திருக்கும் கொள்கைகளை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்த முடியும்.  இல்லாவிட்டால் நானும் கத்திப்பார்த்தேன்.  தொண்டை வற்ண்டுபோனது தான் மிச்சம் என்று ஒதுங்க வேண்டியது தான். 

சீமானின் பல ஊடகப் பேட்டிகளை பார்த்து படித்து இருக்கின்றேன்.  அவரின் தீவிர ஆதவாளர்கள் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.  அவரின் எண்ணங்கள் சரியானதே என்றபோதிலும் அதை எடுத்து வைப்பதில் முரண்பட்டு நிற்கிறார்.  இந்திய இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் இது போன்று வளர்ந்து வருபவர்களை துடைத்தொழிக்கவென்றே ஓராயிரம் நபர்கள் கண்களுக்கு தெரிந்தும்,  தெரியாமல் இருப்பார்கள். 

இது தமிழினத்தில் மட்டுமே நடக்கும் சாபக்கேடு.

சமகாலத்தில் சீமான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பலவிதங்களிலும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுருப்பவர். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய்விடுமோ என்பது போல் இருக்கிறது.. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால் மரியாதையான பார்வையில் கவனிக்கப்படுபவர். வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் சார்பார்ளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கிறார். சிறையில் இரண்டு நாட்கள் சந்திக்க மட்டுமே அனுமதி என்ற போதிலும் கூட படித்த இளைஞர்கள் வரிசை கட்டி நின்றது ஆச்சரியமே.  சென்றவர்கள் எவரும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு போனவர்கள் அல்ல.

இவரைப் போன்றவர்கள் தெளிவான கொள்கைகளால் முன்னேறிச் செல்லவேண்டும். வெகு விரைவில் உருவாகப்போகும் இரண்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கண்ணுக்கு தெரிந்த வகையில் எவரும் தென்படவில்லை என்பதே தற்கால தமிழ்நாட்டு அரசியல் நிதர்சனம். சீமான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மாற்று அரசியல் பார்வையில் விஜயகாந்த ஒரு பக்கம்.  சீமான் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.  ஆனால்  சீமான் அரசியல் கட்சியாக மாற்ற இன்னமும் காலம் இருக்கிறது என்பதில் உறுதியாகவே இருக்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் எந்த பக்கம் இருப்பார்கள் என்பதை வரும் தேர்தல் ஓரளவுக்கேனும் சூசமாக காட்டிவிடும்.

இந்த காணொளியில் ஒரு கட்சியின் சார்பாக கேள்விகேட்கும் ரவிபெர்ணார்ட் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர் வருகின்ற தேர்தலிலாவது ஓட்டுப் போட செல்ல வேண்டும். 

குறிப்பாக கலைஞர் அரசியல் குறித்து சீமான் பேசும் இடங்களில் கடைபிடித்த நாகரிகம் என்னை வியக்க வைத்தது. ஆனால் பளிச்சென்று மிகத் தெளிவாக இருந்தது.

தன் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக எப்போதும் போல உணர்ச்சிபூர்வமாக பேசும் சீமான பிறந்த ஊருக்கு அருகே நானும் பிறந்தவன் என்கிற வகையில் என்னைப் போன்றவர்களுக்கு பெருமையாகத்தான் இருக்கு.