நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.
நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.
மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.
பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது?
அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.
விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.
வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.

வளர்க இந்திய பணநாயகம்.
ReplyDeleteஇந்தியா ஏழை நாடு அதுதான் கம்மியா கொள்ளை அடித்து உள்ளார்கள்.
ReplyDeleteநல்ல வேலை தாத்தா ஆட்சியில் இல்லை இருந்திருந்தால், உடன்பிறப்புகள் இதற்கும் பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள்.
பகிர்வுக்கு நன்றி சார்.
நல்லவேளை INR Cr என்று பூஜ்ஜியங்களை குறைத்துக்காட்டியதால் அதை எண்ணிக்கொண்டிருக்க தேவையில்லை. இந்திய அரசு கறுப்புப் பணம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூலியன் அசான்ஞ்சே தன் வேலையை செய்வாராம்.
ReplyDeleteஅதிலயும் பாத்தீங்களா பெண்களை அடிக்க ஆளே இல்லை. நீரா ராடியா தான் மிகப்பெரிய இலக்கங்களை கொண்டிருக்கிறார். தமிழர்களின் பெருமையையும் சிலர் பட்டியலில் காப்பாற்றிவிட்டார்கள் :))))
இன்னும் நிறையப் பேர்களை எதிர்பார்த்தேன் காணவில்லை. அந்தப் பட்டியலை நிறையவே படிக்கவேண்டியுள்ளது அப்புறமா வாறன்.
ஹார்வார்டில் படித்து ஒரு கோடி இந்தியர்களின் மூளைக்கு சமமான மூளையை பெற்றவராக நினைத்து கொண்ட புண்சிரிப்பு எலக்சன் திருட்டு சிடம்பரம் இன்னும் கூடுதலாக முயற்சி பண்ணியிருக்கலாம்... போங்கடாங்க்... இதெல்லாம் ஒரு பொழப்பு, பொறப்பு..
ReplyDeleteஎன்னோட கணிப்பு இந்த பட்டியல் ஒரு பத்து வருஷத்திற்கு முந்தியதா இருக்கணும். புதிசு வரும் போது இதை விட ரெண்டு மடங்கு கூடத்தான் வரும். இருந்தாலும் இவ்வளவு கேவலமா தன் நாட்டு மக்களையே வேற எவனும் கீழே போட்டு மிதிச்சு ஏறி நிற்க யோசிப்பான். பஞ்சத்திற்கு பொறந்தவிங்க படிச்சுட்டு வேலயில்லாம திரிஞ்ச ஒவ்வொரு இளைஞனோட வாழ்க்கையும் திருடி கொண்டு போயி எவன் நாட்டிலயோ போட்டு அவன வாழ வைச்சு இவன் நம்மள ஒரு பன்றிக் கூட்டத்திற்கும் கீழா பார்க்க வைச்சிருக்காய்ங்க உலக அரங்கில.
ReplyDeleteநான் இந்த திருட்டுப் பணத்தை ரொம்ப பர்சனலாக்கி பார்க்கிறேன். ஏன்னா, முதுகலை அளவிற்கு படிச்சிட்டு ஒரு மெடிக்கல் ரெப்ரெசெண்டடேடிவ் வேலைக்கு தெருத் தெருவா 90ஸ்ல அலைஞ்சது என்னாலே மறக்கவே முடியல.
இவிங்கள எந்த நரி எப்படி கடிச்சி திண்ண என்னய மாதிரி குடும்பங்களின் அவலம் ஒழியும்!!
இந்த பணத்தில இருக்கிற ஒரு கோடியை வைச்சு என்ன செய்ய முடியும்னு சொல்லுறேன் கேட்டுக்கங்கய்யா. இது ஒரு சிறு துளிதான். இதுமாதிரி எத்தனையோ துறைகள்ல மாற்றங்களை உருவாக்கி நாட்டின் தரித்திரத்தை மாத்தலாம்.
ReplyDeleteஉதாரணத்திற்கு மயிலை ஏ.வி.சி_ல மட்டுமே வருஷத்திற்கு 20 பேருக்குள்ளர முதுகலை வனவியல் பட்டப்படிப்பு படிச்சி வெளியே விடுற ஒரு கோர்ஸ் இருக்கு. அது தமிழ்நாட்டில வேறு எந்த கல்லூரி, பல்கலையிலுமில்ல. இந்த நிலையில இருக்கிற கோர்ஸ் படிச்சிட்டு வெளி வருகிற அத்தனை பேருக்கும் வேல வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம். சுற்றுப்புற சூழல் சிறப்பு வகுப்புகள் எடுக்கிற ஆசிரியர்களா; வனத் துறை சரகரா; அல்லது தாலூகா வாரியா சுற்றுப்புற சூழல் சிறப்பு வல்லுநரா நியமிச்சு அனைத்து லோகல் பள்ளிகளுக்கும் விசிட் அடிச்சு லோகல் தாவர/விலங்குகள் பொருத்தும் சுற்றுபுறத்தை தூய்மையா வைச்சிக்கிறதின் அவசியத்தை வலியுறுத்தியும் ‘நடை’ பயணம் (field work) செஞ்சு அவங்களுக்கு விழிப்புணர்வு உருவாக்க அடித்தளம் கோணலாம்.
அந்த ஒரு கோடி ரூபாய் நாட்டுக்குள்ளரயே போட்டு பணத்தை பெருக்கி அதன் மூலமாககிட்டும் வருமான பணத்தையே என்னய மாதிரி ஆளுங்க மூணு பேருக்கு வாழ்க்கை முழுதுக்குமே வேல கொடுத்து பார்க்கலாமே புண்ணாக்குகளா? ஏன் இப்படி ஒரு குடும்பத்துக்குள்ளர போயிச் சேருகிற மாதிரி சீழ் பிடிச்ச மனசை வைச்சிட்டு ஊரான் வயிற்றில அடிச்சு நீங்க உங்க சைக்கோ தனத்தை ஊட்டி வளர்க்கணும்...
தெகா இன்று கூகுள் பஸ்ஸில் கலைஞர் அருமை பெருமைகளை நண்பர் எழுத வாசித்த போது இது என் கைக்கு வந்து சேரவில்லை. ஆனால் ஜெயலலிதா இதிலும் கலைஞரோடு போட்டி போட முடியவில்லை பார்த்தீயளா? இந்தம்மா பப்பு உள்ளூருக்குள் மட்டும் தான் போல. பாருங்க தலைவரை. ஸ்விஸ் வரைக்கும் கொடியை நாட்டியிருக்கிறார். மகனும் தெளிவானவர் தான் போல. அப்துல்லா வந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇந்த பொது வாழ்வு தலைவன்களின் ப்ற்றிய மாயைகள் இப்படி உடையும்போது மாரடைப்பே வந்து விடும் அப்பாவி மக்களுக்கு.பார்ப்போம் அடுத்த பட்டியலை.
ReplyDeleteஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteஜோதிஜி, இது மின்னஞ்சலில் வரும் போலிகளில் ஒன்று. இன்னும் அதிகாரப்பூர்வமாக விக்கிலீக்ஸ் இது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
ReplyDeleteசுடுதண்ணி said...
ReplyDeleteஜோதிஜி, இது மின்னஞ்சலில் வரும் போலிகளில் ஒன்று. //
சுடுதண்ணி... அது புரிந்து கொள்ளக் கூடியது. அப்படியே அதிகாரப்பூர்வ பட்டியல் வந்தா நிச்சயமாக இதனை விட இரண்டு மடங்கு கூடுதலாகவே இருக்கும்... எப்படியா இருந்தாலும் இதே சூடு இருக்கத்தான் செய்யும். நல்லா இருப்பிய வந்தவுடன் நீங்க விவரமா பதிவ எழுதுங்கோ சாமீய்யோஒவ்வ்... :)
அபி அப்பாவும் நானும் பஸ்ஸில் உரையாடிக் கொண்டது வரும் எனது துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவட்டுமேன்னு இங்கே பகிர்ந்துக்கிறேன்.
ReplyDelete*******************************
அபி அப்பா - தெக்கிகாட்டான்!:-)))))))))))) நல்ல இருக்கு உங்க கோவம்! நாம படிச்ச கல்லூரி அப்போ wild life biology கொண்டு வரனும்னு அப்ப நீங்க படிச்ச காலத்திலே சேர்மேனா இருந்த ஈ. எஸ். கணபதி நினைக்கவில்லை. ஈ. எஸ். சொக்கலிங்கம் பிள்ளை நினைக்கவில்லை... ஆனா நினைச்ச ஒரு ஆள் அப்போ "புனாவிலே மட்டும் இருக்கு நம்ம தமிழ் நாட்டிலே அந்த படிப்பை கொண்டு வரலாம்.. ஸ்கோப் இருக்கு.. இல்லாட்டியும் பரவாயில்லை... கொண்டு வரலாம்.. என சொன்னது ஒரு சிறுவன்... அவன் தான் இப்போ செக்ரட்டரி... செந்தில்வேல்... என் நண்பன்... இதுவரை அதாவது செந்தில்வேல் செக்ரட்ரியா ஆகும் வரை அந்த படிப்பு படிச்சவங்க பெரிய பெரிய வனத்துறை அதிகாரியாகவும் ஆப்ரிக்க காடுகளிளும் இருக்காங்க. மைண்ட் இட்.. இதன் காரணமாகவே கூட செந்திலுக்கு அந்த பதவி வந்ததா நாங்க பேசிப்போம் கிளப்பிலே!
அபி அப்பா said - ஜோதிஜி! ஒரு ஃபேக் நியுஸ் கூட உங்க பதிவுக்கு பஸ்க்கு பயன்படுதா? உணமை என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாமே? ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை அந்த லிச்டில் இப்போ சமீபமா மாட்டின மெடிக்கல் அதிகாரி.... அதாவது 6 டன் தங்கத்தை அடகு வைத்தோமே இந்தியா... ஆனா ஒரே ஆள் கிட்டே 2 டன் பிடிச்சோமோ.... அந்த ஆள் பெயர் இல்லை? அந்த துறை அமைச்சர் அன்புமணி பெயர் இல்லை... அம்பானி பெயர் இல்லை, டாட்டா பெயர் இல்லை.. ஆனா கருணாநிதி குடும்ப பெயர் இருக்கு? சசிகலா பெயர் ஏன் இல்லை? சசிகலா, ஜெயா தானே இப்போ 1000 கோடி சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிகிடு 140 தடவை வாய்தா வாங்கியது? அவங்க பெயர் ஏன் இல்லை? விக்கிலீக்ஸ் என்பதே பொய். அதிலே ஃபேக் வச்சுகிட்டு ஆளாளுக்கு ஆடிகிட்டு இருக்கீங்க? உங்க மதிப்பு இவ்வளவு தான்! ( விக்கிலீக்ஸ் பொய் என்றால் பொய் இல்லை... அது பத்தி தனியா விவாதிக்கலாம்)
ReplyDeleteஅபி அப்பா - அது என்னப்பா தெகா! ஆர் பாலசுப்ரமணியன் (நம்ம முதல்வர்) கையெழுத்து போட்டு தானே பழகுவோம் அட்சரமே காலேஜிலே! அவர் சொல்லும் வார்தையே இதானே... அசல் எது நகல் எதுன்னு முதல்ல தெரியனும்... என முதல் பாடம் நடத்திட்டு திருமதி . தேவி சுவேதாரண்யம் கிட்டே கிளாஸ் ஒப்படைச்சுட்டு போவாரே.......இந்த விக்கிலீக்ஸ் ஃபேக் என இன்னும் தெரியலையா? என்ன?
ReplyDeleteதெக்கி said...அபி அப்பாஆஆஆஆஆஅ.... இந்த பட்டியல் உண்மையோ பொய்யோ (பொய்யா இருக்க வாய்ப்பிருக்கின்னு தெரியும்)... அட உண்மையாவே ஒரு நாள் வரும் போது இன்னும் பெரிசாத்தான் பார்ப்போம். அது நம்ம கலைஞர் அய்யா வீட்டை வைச்சு மட்டுமே நான் பேசினதா நினைக்காதீங்க. மொத்த இந்தியாவின் அனைத்து அரசியல் திருட்டு ஆசாமிகளுக்குமானது.
ReplyDeleteஅதிலும் குறிப்பா பா. சி மாதிரியான ஹார்வேர்டுகளை நோக்கி நீளுவது என்னுடைய கேள்விகள், ஆதங்கங்கள்... ஏனெனில் பணம் சேர்ப்பதென்பது ஒரு மாதிரியான டிஸ் ஆர்டராகக் கூட மாற அனேக வாய்ப்புகளுண்டு so long one is how ignorant with it அப்படிங்கிறதை பொருத்து. ஆனா, இந்த மாதிரி சோ கால்ட் வெளிநாட்டு படிப்பு படிச்சவிங்களே இப்படி தேசிய போர்வையில வந்து என்னோட பணத்தை சுரண்டினா எப்படி? கோபம் ரொம்ப பர்சனலானது.
எந்த வித வண்ணமும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நோக்கி பூசப்பட்டதல்ல. நாடு தழுவிய முறையில் ‘தேர்ட் க்ரேடட் க்ரானிக் கரப்டிவ் மெண்டல் சிக்னெஸ்” ஆட்களை உள்ளடக்கியதே!
This comment has been removed by the author.
ReplyDeleteதெக்கி said... // "புனாவிலே மட்டும் இருக்கு நம்ம தமிழ் நாட்டிலே அந்த படிப்பை கொண்டு வரலாம்.. ஸ்கோப் இருக்கு.. இல்லாட்டியும் பரவாயில்லை...//
ReplyDeleteநான் படிக்கும் பொழுது கேள்விபட்டது. சில சமயங்களில் யுனிவெரிசிடிகளுக்கு ஒதுக்கப்படும் கோர்ஸ்கள் பண பலத்தில் உள்ள கல்லூரிகள் பெற்றுக் கொண்டது போக எளியவனுக்கு ஒதுக்கப்பட்டது கிடைக்கும் என்ற ரீதியில் ஏதோ முதுகலை பட்டப் படிப்பு இருந்தால் போதுமென்று வாங்கிக் கொள்ளும் நிலையிலும் சில கல்லூரிகள் அமைந்துவிடுமாம். அந்த ரீதியில் அங்கே சில கோர்ஸ்கள் வந்து சேர்ந்ததாக கேள்விபட்டதுண்டு.
அடுத்து, அதெப்படி ஸ்கோப் இல்லாட்டியும் ஒரு கோர்ஸை வைத்து நடத்து ஒன்னுக்கும் உதாவதா வெட்டி ஆபீசர்களை வெளியே விடுவீர்கள்? நீங்க குறிப்பிட்ட ஆஃப்ரிக்க வனங்களில் பெரிய ஆபீசர்களா வேலை பார்ப்பவர்கள் எத்தனை பேர். பெரிய வனத் துறை அலுவலர்களா எத்தனை பேர் இந்த டிகிரியை நேரடியாக பயன்படுத்தி உள்ளே சென்றார்கள்? விதிவிலக்குகளைக் கொண்டு மொத்தமாக அளவிடாதீர்கள்...ப்ளீஸ்...
எம். எஸ்சி , ஜியோலஜிக்கு (ஜியோலாஜிஸ்ட் போஸ்ட்) இருப்பதனை போன்று வைல்ட் லைஃப் பயோலஜிஸ்ட் போஸ்டிங்கிற்கு தேசிய அளவில் தேர்வு வைக்கிறார்களா?
ஏன் நாங்க எம். எஸ்சி சுவாலஜி படிப்பவர்களுடன் ஐடெண்டிஃபை பண்ணிக்கணும்... வெறும் 18 பேருதான் அபிஅப்பா...? we can be an expert in wildlife biology field right out of campus... 18 பேர்ல 16 பேரு சம்பந்தமே இல்லாம வாழ்க்கையை ஓட்டிட்டு இருப்பாய்ங்க. நிறைய பேரு விவசாயம், பிசினெஸ்...??
ஜோதிஜி!சீக்கிரம் சுடுதண்ணிய துரத்திப்புடிங்க!செய்யறதையும் செஞ்சுட்டு இப்ப களவாணிகளுக்கு சாதகமா அப்ரூவரா மாறுகிறாரே!
ReplyDeleteபிரணாப் வெளிநாட்டில் இருக்கும் கள்ளப்பணக்காரன்களை காட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லும் போதே ஸ்விஸ் லிஸ்ட்டு காங்கிரஸ் தலைகள் முதற்கொண்டு இன்னும் பெரிதாக இருக்குமென தெரியும்.
அதிகார பூர்வமா செய்தியை எதிர்பார்க்கிறேன்.
//எந்த வித வண்ணமும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நோக்கி பூசப்பட்டதல்ல. நாடு தழுவிய முறையில் ‘தேர்ட் க்ரேடட் க்ரானிக் கரப்டிவ் மெண்டல் சிக்னெஸ்” ஆட்களை உள்ளடக்கியதே!//
ReplyDeleteதெகா!அடைப்பானை மூன்றாம் தர நீண்ட ஊழல் மனநோயென்றோ(Third graded Chronic corruptive mental sickness)அல்லது ஊழல் மனநோய் என்றே சொல்லியிருந்தால் மன அகராதியில் நிரந்தரமா பதிவாகியிருக்கும்:)
Stage actorsன்னு முகமூடி போட்டுகிட்டு தேச சேவையாளன் போர்வையில் நிறைய பேர் உலா வருகிறார்கள்.இதற்கு முட்டுக்கட்டையாகப் போய் விடுமென்றே கபில் சிபல் போன்ற கபோதிகள் மக்கள் சார்பாக எழும் அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
ஸ்விஸ்ல பதுக்கி வைக்கும் பணத்துல தனி விமானம்,Porsche,”குட்டி” தீவுல உலகின் the best wines என்ற கேளிக்கை அல்லது தான் சார்ந்த மண்ணை வளப்படுத்தும் நோக்கில் மனித மேம்பாடுகள் என்ற மனதிருப்தியோ இல்லாமல் வங்கியில் எதுக்குப் பணத்தை பூத காப்பகம் நடத்துகிறார்களோ?
அபி அப்பா said...
ReplyDeleteஅபி அப்பா - ஆமாம் தெகா! கெமிஸ்ட்ரி முதுகலை வைத்தால் கெமிக்கல் செலவு, பாட்டனி வைத்தால் செலவு, இன்ன பிற வைத்தால் செலவு என்றிருந்த போது "அண்ணாமலையே "பயந்த போது wLB கொண்டு வந்தது செலவில்லையா? சொல்லுங்க? அப்படி இல்லை. ஆசைப்பட்டாங்க. இப்பவும் யாரும் கடலை மடிக்கவில்லை. ஜஸ்ட் நவ் செந்திலிடம் பேசிவிட்டு தான் இங்கே பதிகிறேன். எல்லாரும் நல்ல நிலையில் தான் இருப்பதாக சொன்னாரு. மேலும் எல்லோரும் 12 சீட்டில் 11 பேர் வெளிமாநிலம் என்றும் அவங்களுக்கு புரிஞ்ச அளவு நம்மவர்களுக்கு புரியவில்லை என்றும், மலை மலை சார்ந்த இடம் நம்ம அருகே இல்லை என்பதும் ஒரு பெரிய காரணம் என்றும் சொன்னாரு
தெக்கி said...
ReplyDelete"அண்ணாமலையே "பயந்த போது wLB கொண்டு வந்தது செலவில்லையா? //
ஏன் பயந்திருக்கணும் சொல்லுங்க. வேலை வாய்ப்பு சரியான படி அதற்குண்டான மண் மனத்துடன் பயில வரும் மாணவர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த மொழியோட ஊடாடி லோகல் மாணவர்களுக்கும், மக்களும் பயன்படும் படியாக வெளிப்படுத்தி வாழ்ந்தால் எத்தனை திறன் வெளி வந்திருக்கக் கூடும். நாங்க படிக்கும் பொழுது நல்ல ஆங்கிலப் புலமையுடன் தங்களை வெளிப்படுத்தி படிக்கும் மாணவர்கள் ரொம்பக் குறைவு.
அதிலும் நாங்க எல்லோருமே கிராமப்புற மாணவர்கள். இந்த ஃபீல்ட் கொஞ்சம் ஃபிலிம் காட்டுபவர்களுக்கு உள்ள இடம்! ஆராய்ச்சி ஸ்காலர்களா ஏதாவது ஒரு புரஜெக்டில் சேர்ந்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் எப்படி, ஒரு புரஜெக்டிலிருந்து இன்னொரு புரஜெக்டென தாவி இருக்கும் கொஞ்சம் ஆங்கில புலமையுடன் காலத்தை ஓட்ட முடியும்?
நான் சொல்ல வருவது முறையாக படித்து வெளி வரும் மாணவர்களை அவரவர்களின் இடங்களில் அதுவும் இது போன்ற ஃபீல்ட்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு வேலையில் அமர்த்த முடியும். மாணவர்களை குறை கூறாதீர்கள்!
அபி அப்பா said...
ReplyDeleteதெகா! தெகா! மரைன் பயாலஜில கொஞ்சம் டீப் கொண்டு வரலாம் என இப்போது ஒரு சமீபமா 8 வருஷம் முன்னே செந்தில் யோசிச்சாரு. ஆனா யாரும் ஒத்துக்கலை. கடல் கிட்டக்க இல்லை ( 23 கிமீ) உடனே அண்ணாமலையிலே பேசினாரு. அங்க ஒத்துகிட்டாங்க. அங்க வந்துச்சு. ஆனா ஒரு அக்ரிமெண்ட். நாங்க 8 ஸ்டூடண்ட் அனுப்புவோம்னு. ஆக அங்க கூட மெரைன் பயாலஜி ஆகியாச்சு. அங்க படிக்கும் 32 பேரும் உலகலவிலே போஸ்டிங்ல இருக்கான். அதிலே குறிப்பா ஏ வி சி ஐடண்டி 12 பேர் இருக்கான். அதே போல WLB உங்களுக்கு மதிப்பு கொடுக்கலைன்னு மனசை தொட்டு சொல்லுங்க. நான் நீங்க சொல்வதை கேட்கிறேன்.2
தெக்கி said...
ReplyDeleteஅபி அப்பாஆஆஆஆஆவூ,
//அதே போல WLB உங்களுக்கு மதிப்பு கொடுக்கலைன்னு மனசை தொட்டு சொல்லுங்க. நான் நீங்க சொல்வதை கேட்கிறேன்.//
I don't want to answer sentence by sentence. நான் நேரடியாக தளத்தில் இருந்தவன் சொல்கிறேன். மதிப்பு கொடுங்க. நானெல்லாம் ரொம்ப போராடி ஒரு இடத்தை தக்க வைச்சிக்க முயன்றேன். என்னளவில எல்லாரும் அந்த ஸ்பிரிட்டோட இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாதில்லையா? அப்படியே நான் ஜெயித்தேன்னு வைச்சிக்கிட்டாலும் (என்னாத்தை செயிக்கிறதோ...), என் பாடு என்னத் தெரியுமா ஏதாவது ஒரு மூன்று வருட புரெஜெக்ட்ல என்னய சொருகிக்கிறது அங்க இருந்த வரைக்கும்.
அதுக்கு முக்கியமான திறமையா இருந்தது அந்த கால கட்டத்தில ஆங்கிலத்தில் புலமை. நம்மூர் கல்லூரியில் உண்மையாவே இன்னமும் ஏர் ஓட்டின, கரும்பு சாகுபடி வீக்கெண்ட்ல செய்றவிங்க எல்லாம் அந்த கோர்ல்ஸ் படிச்சோம். ஆனா, they are very good at what they were studying... ஆனா, கதை என்னாச்சு தெரியுமா...? அந்த ஹிந்தி, ஆங்கில வாலாக்கள்கிட்ட நம்ம பப்பு வேகல! என்னோட சிம்பில் சொலுசன்; நம்ம மாநிலத்துக்குள்ளரயே வேலை வாய்ப்பை எக்ஸ்குலுசிவ்வா இதற்கென எம். எஸ்சி வைல்ட் லைஃப் பயோலஜின்னு கேட்டு எடுத்து அவுங்கள பயன்படுத்திக்கிறதுதான்.
//அபி அப்பா said - ஜோதிஜி! ஒரு ஃபேக் நியுஸ் கூட உங்க பதிவுக்கு பஸ்க்கு பயன்படுதா? உணமை என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாமே? ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை அந்த லிச்டில் இப்போ சமீபமா மாட்டின மெடிக்கல் அதிகாரி.... அதாவது 6 டன் தங்கத்தை அடகு வைத்தோமே இந்தியா... ஆனா ஒரே ஆள் கிட்டே 2 டன் பிடிச்சோமோ.... அந்த ஆள் பெயர் இல்லை? அந்த துறை அமைச்சர் அன்புமணி பெயர் இல்லை... அம்பானி பெயர் இல்லை, டாட்டா பெயர் இல்லை.. ஆனா கருணாநிதி குடும்ப பெயர் இருக்கு? சசிகலா பெயர் ஏன் இல்லை? சசிகலா, ஜெயா தானே இப்போ 1000 கோடி சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிகிடு 140 தடவை வாய்தா வாங்கியது? அவங்க பெயர் ஏன் இல்லை? விக்கிலீக்ஸ் என்பதே பொய். அதிலே ஃபேக் வச்சுகிட்டு ஆளாளுக்கு ஆடிகிட்டு இருக்கீங்க? உங்க மதிப்பு இவ்வளவு தான்! ( விக்கிலீக்ஸ் பொய் என்றால் பொய் இல்லை... அது பத்தி தனியா விவாதிக்கலாம்)//
ReplyDeleteபோய்ட்டு திரும்ப வாரேன்!கருணாநிதி மட்டுமா திருடன்,சசிகலா,ஜெயா,அம்பானி,அன்புமணி,டாட்டாதிருடவில்லையா என்று எதிர்க் கேள்வி நல்லாவேயிருக்கு:) திருடர்களை அடையாளப்படுத்துவதே பதிவின் நோக்கம்.எவ்வளவு விவாதங்களைப் பொதுவில் வைத்தாலும் தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.
எவ்வளவு விவாதங்களைப் பொதுவில் வைத்தாலும் தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.
ReplyDeleteஇது தான்? இதுவே தான்? நான் ஆச்சரியப்பபடுவது,
//தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.//
ReplyDeleteகேள்வியில் இருக்கும் அடிப்படை நியாயத்தை தொண்டன் கேட்பதால் புறந்தள்ள வேண்டியதில்லை.
வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம். good punch.
ReplyDeleteஇது முற்றிலும் போலி செய்தி, can you give a valid link as profe for the so called wikileaks black money list..
ReplyDeleteஅடப் பாவிகளா? இப்படியுமா பொய்யையும், புரட்டையும் போடுவீங்க? ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் மொத்த கருப்புப் பணமே 11,000 கோடி என்று தினமணியில் போட்டிருந்தார்கள். தமிழ்நாட்டுக் குழந்தைகள் எல்லாம் இரண்டு மாதங்களாக புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.இந்த பற்றி எரியும் அவலத்தை மூடி மறைக்க இப்படி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுக்றீர்களா? தமிழ்நாடு இனி உருப்பட்ட மாதிரி தான்.
ReplyDeleteவாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்
ReplyDeleteGood.
ஜோதிஜி!விஜயகாந்தையெல்லாம் இனி கணக்குப் போட விடக்கூடாதுன்னு தோராயமா எவ்வளவு டாலர் தேறும்ன்னு கணக்கு போட்டுப்பார்த்தா இந்திய ரூபாய் 15,67,265 கோடி.யாராவது இந்திய கணக்குல ஸ்விஸ் கணக்கு வைப்பாங்களான்னு டாலர்ல கூட்டிப்பார்த்தா 35352.186 கோடி டாலர்.ரொம்ப கம்மியா இல்ல:) உண்மையான கணக்கு வெளியாகட்டும் பார்க்கலாம்.
ReplyDeleteammavukku oru kanakkum illayo.pavam pulaikka theriyathava pola.................
ReplyDeleteஅடேயப்பா.....
ReplyDeleteஅது பொய் செய்தி..Pls check...
ReplyDeletehttp://www.facebook.com/wikileaks
setha paamba ethanavaati sir adipeenga. ithu polinu kooda theriaatha ungalakku..sari vidunga..neenga enna pannuveenga unga pathivuku votu vilanum itha vitta vera enna panna mudiyumm...naan dmk support panala anaa athukaaka admk support panrathu romba chinna pulla thanamaa irukku sir.
ReplyDeleteis true ? oh my god
ReplyDeleteஇதையெல்லாம் நாங்க நம்பனுமா? கொஞ்சம் ஓவரா தெரியுது.
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
ReplyDelete:)
ReplyDelete