Showing posts with label சிறப்பு மலர் வெளியீடு. Show all posts
Showing posts with label சிறப்பு மலர் வெளியீடு. Show all posts

Monday, February 18, 2013

டாலர் நகரம் - மூன்று மலர்கள்

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் மூன்று விதமான சிறப்பு மலர்
வெளியிடப்பட்டது.  


இந்த முயற்சி சார்ந்த அனுபவங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்..



முதல் சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்

(இந்த மலரின் இருவரின் அணிந்துரை, தமிழ்ச்செடி, புதுக்கோட்டை ஞானாலயா குறித்த விபரங்கள், திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளியின் அர்பணிப்பு குறித்த விபரங்கள்,

விழாவிற்கு உதவியவ்ர்கள், திருப்பூர் கோவையில் இருந்து செயல்படும் வலைபதிவு குழுமங்கள், திரட்டிகள் குறித்த விபரங்கள் அடங்கிய பிடிஎஃப் கோப்பாக உள்ளது.)


இரண்டாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்

தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் கட்டுரை. ( தமிழில் எழுதலாம் வாருங்கள். வலையில் பரப்பலாம் பாருங்கள். இவர் இந்த கட்டுரைகளை அவரது தளத்தில் 2004 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.  சிற்சில மாறுதல்கள் இருந்தாலும் இன்று வரையிலும் இதில் உள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் பொருத்தமாகவே உள்ளது என்பது தான் இந்த கட்டுரைத் தொகுப்பின் சிறப்பம்சம். 

அனுமதி அளித்த திரு. காசி ஆறுமுகம் அவர்களுக்கு எனது நன்றி.


மூன்றாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்.

இந்த மலரில் எனது அறிமுக கட்டுரையுடன் ( டாலர் நகரம் (இனி) கண்ணீர் தேசமா? கனவு தேசமா? ) தொடங்குகின்றது. இந்த மலரில் தற்போது ஒரிஸ்ஸாவில் வசித்துக் கொண்டிருக்கும் திரு. சங்கர நாரயணன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையான தற்போது இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை உள்ளது.  

இத்துடன் 4 தமிழ்மீடியா தளத்தில் நான் எழுதிய காக்க... காக்க...நோக்க..நோக்க என்ற தொடர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.
ஈரோடு தாமோதர் சந்துரு மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்க தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.

தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். உங்கள் புரிதலை தெரிய்பபடுத்துங்க.