Monday, June 19, 2023

ஜெயலலிதா - ஒரு நாசக்காரச் சக்தி

ஒரு பெண் மணி ஜெயலலிதா மேல் எனக்கு சாப்ட் கார்னர் உள்ளது. எல்லாவற்றுக்கும் சசிகலா அவர்கள் தான் காரணம் என்று எழுதியதைப் படித்தேன்.




ஏற்கனவே வெளிநாட்டில் வாழ்ந்து வரும் பெண்மணி ஒருவரும் இதே போல என்னுடன் பேசி நான் ஆதாரங்களை எடுத்துக் கொடுத்ததும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அவர் ஜெ நல்லவர் சசி கெட்டவர் என்ற தன் நம்பிக்கை சிதைவதை விரும்பவே இல்லை என்பதனை புரிந்து கொண்டேன்.

இணையத்தில் பல பெண்மணிகள் இப்படித்தான் உள்ளனர். இவர்கள் அத்தனை பேர்களும் நடுத்தரவர்க்க வாழ்க்கைக்கு மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். வெளியுலகம் எப்படியுள்ளது என்பது தெரியுமா? என்பதே புரியவில்லை.

ஆனால் இன்றும் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் உச்சநீதிமன்றம் ஜெ குறித்து அவர் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக வரிக்கு வரி தங்கள் ஆதங்கம் கோபம் வருத்தம் என அனைத்து உணர்ச்சிகளைக் கலந்து தீர்ப்பில் கொடுத்து உள்ளனர்.

இடஒதுக்கீட்டில் 69 சதவிகிதம், பெண்களுக்கு ஆடு வழங்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது, பெண்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் போன்ற ஒரு கை விரலுக்கும் அடக்கி விடக்கூடிய ஆனால் தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளை ஜெயலலிதா தூக்கிச் சாப்பிட்டுத் தான் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இவர் ஒரு நாசக்காரச் சக்தி.



ஒபிஎஸ், எடப்பாடி, செந்தில் பாலாஜி கூச்சமில்லாமல் பயமில்லாமல் குறுகிய காலத்தில் பல ஆயிரம் கோடிகளை ஸ்வாகா செய்வதற்கு அடிகோலிட்டவர் ஜெ. அந்தத் தைரியத்தை உருவாக்கியவரும் சட்டம், நீதிமன்றம், நீதிபதி, அரசு அதிகாரிகள் எவரையும் பொருட்படுத்தவே தேவையில்லை. விலையைப் பேசு. வீசியெறி என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கற்றுத் தந்து கருமாதி கூடச் செய்ய வாய்ப்பில்லாமல் சென்று சேர்ந்தவர்.

ஜெ அப்பாவி என்று கூச்சமில்லாமல் எழுதக்கூடிய கோஷ்டிகள் அனைத்தும் கருணாநிதி என்று எழுதினால் குதியாட்டம் போட்டு எழுதுவதைப் பார்த்துள்ளேன்.

நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் தமிழக அரசியலை இன்று வரையிலும் கருணாநிதி அவர்கள் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்.



கருணாநிதி சரியில்லை என்று வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, ஒபிஎஸ், எடப்பாடி இவர்கள் நான்கு பேர்களும் கருணாநிதி எத்தனை தவறுகள் செய்தாரோ அதைப் போலப் பல ஆயிரம் மடங்கு தவறு செய்தவர்கள். ஆனால் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் மேல் கொண்ட ஒவ்வொருவரின் பொறாமை கலந்த எரிச்சல் தான் இன்று கருணாநிதி என்றால் ஊழல் என்ற பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்

எனக்கு அரசியல் என்பது ஓரளவுக்குப் புரிந்த காலம் முதல் திமுக என்றால் அது ஜெயகாந்தன் சொன்னது போல என்பதனை என் சிறு வயதில் உணர்ந்து இருந்த காரணத்தால் இன்று வரையிலும் மாற்றம் இல்லை. முக்கியமாக உள்ளூரில் சிறிய பதவி முதல் பெரிய பதவியில் இருந்தவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளக் குடும்பத்தில் உள்ள எதையெல்லாம் விட்டுக் கொடுக்கக்கூடாதோ அத்தனையும் சர்வ சாதாரணமாக விட்டுக் கொடுத்து தங்களை அரசியலில் தக்க வைத்துக் கொண்டதை யெல்லாம் பார்த்து மிரண்டு போயுள்ளேன்

மேலேயிருந்து கீழ்வரை பெண்கள் என்பதனை சதைப் பிண்டம் என்பது போல இன்று வரையிலும் சூறையாடுகின்றார்கள். இது என்ன மன வியாதி என்பதே புரியவில்லை. தாத்தா முதல் இன்றைய பேரன் வரைக்கும் இப்படித்தான் நாய் போல 365 நாட்களும் அலைகின்றார்கள்

இவர்களின் அதிகாரம் எப்படியிருக்கும்? எதை நோக்கிச் செல்லும்?

ஆனால் .....

இன்று வெளியே நீங்கள் பார்க்கக்கூடிய அரசியல்வாதிகள் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றார்கள்



அத்தனை பேர்களும் திமுகவை எதிர்த்து கருணாநிதியை எதிர்த்து எத்தனையோ விதமாகப் பேசுகின்றார்கள். அத்தனை பேர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையை கருணாநிதி போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர் மேல் எத்தனை குற்றச்சாட்டுக்கள் எப்படியெல்லாம் வைத்தார்களோ அத்தனை குற்றச்சாட்டுகளும் இவர்கள் அத்தனை பேர்கள் மேலும் வைக்க முடியும்.

தான் தோன்றித்தனம்

ஆணவம்

பணவெறி

குடும்ப அரசியல்

அந்நியன் போலப் பலவிதமான தோற்றத்தில் இருப்பது

கட்சி வளர்வதை விடத் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது

பொய், பிராடு, பித்தலாட்டம் 

போன்ற பஞ்சமா பாதகங்களையும் செய்வது தான் அரசியல் என்று உணர்த்திக் கொண்டே  இருக்கின்றார்கள்.         

குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு எவரும் உள்ளே வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள். டம்மி களை வைத்துக் கும்மி தட்டுகின்றார்கள். அதுவே தங்கள் அரசியல் பாதுகாப்பு என்று கருதுகின்றார்கள். நம்புகின்றார்கள். கட்சிக் கட்டமைப்பு குலைந்து அடிமைகள் மட்டும் சகித்துக் கொண்டு இருக்கும்படி சூழலை மறைமுகமாக உருவாக்கி விடுகின்றார்கள். அப்படித்தான் தமிழக அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு இப்போது உள்ளது

எதுவும் விதிவிலக்கல்ல.

எனக்குத் தெரிந்து இந்தக் கலாச்சாரம் அதி தீவிரமாக உருவானதும், பரவத் தொடங்கியதும், இதுவே சரியென்று நம்ப வைத்ததும், பதவி பணம் கொடுத்தால் தெருவில் கூட இவர்களை உருள வைக்கலாம், தெய்வங்களை வணங்குதல் போலக் குனிந்து கூச்சமில்லாமல் வணங்க வைக்கமுடியும் என்று சாதித்துக் காட்டிய ஜெயலலிதாவின் எலும்பு கூட இப்போது அந்தக் குழியில் இருக்காது


கருணாநிதி பணம் என்பதில் குறியாக இருந்தார்


ஜெயலலிதா முக்கால் சைக்கோவாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்து காட்டினார். அதனை நம்மவர்கள் இரும்பு எறும்பு உறும்பு என்று போற்றிப் புகழ்ந்தனர்

இன்று வரையிலும்.

ஒரு கோடி பேர்கள் வாழ வேண்டிய ஒரு ஜென்ம சுகத்தைத் தன் ஒருத்திக்காகப் பலரின் கண்ணீர் மூலம் பெற்ற சொத்துக்களை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இவரின் கேவலத்தை உலகம் முழுக்க பறை சாற்றிக் கொண்டேயிருக்கும்.

கருணாநிதி கழுதையிலிருந்து வந்துவிழும் முதல் கழிவு.

ஜெயா கழுதையின் தொடர்ந்து வந்த கழிவு.

இந்தக் கழிவுகளை முகத்தில் அப்பிக் கொண்டு அறிக்கை விடும் இந்தக் கழுதைப் புலிகளை மத்திய பாஜக நினைத்தால் நிச்சயம் நடுநடுங்க வைக்க முடியும்? ஆனால் அது நடக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தயவு செய்து பொதுவெளியில் எழுதும் போது கஷ்டப்பட்டு சில புத்தகங்களாவது படித்துப் பார்த்து எழுதி விட்டு ஜெ கருணா வை புகழ்வது இகழ்வது என்று பார்த்துச் செய்யுங்கள் அம்மணிகளே.

கழிவு என்பதன் வாடை ஒன்றே தான்.

No comments: