Wednesday, October 23, 2013

சுப. உதயகுமார் - அறியாத தகவல்கள்


அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், அவை அத்தனையும் உண்மை என்றே தெரிய வருகிறது.

நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான். அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல.

அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில். அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். 

நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது. அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது. அவன் குடும்பம் இந்துக் குடும்பம். ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார்.

அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை.

நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான். அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான். அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். 

கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது. மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. 

ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி. யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான். 

அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை. எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்குள்ளாக்கியது. 

யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது. நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல். அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான்.

எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு.

அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது. அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான்.

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான். அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது. அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான்.

இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால், இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது.

பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில் இந்து ராம், கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது. அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான்.

2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம். அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்விலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கயிருந்தானென்றால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான். 

வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு, விவசாயம், இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான். அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர். (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை. வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ?

அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும். ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது ...!!! 

கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன.

இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது. அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது. அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர். அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாட்டி என்றால் உயிர். அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார். அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது.

அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது. அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது. எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான். அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன.

அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான். தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான். அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான்.

2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான்.

20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. 

1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி. இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது. முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது.

கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர். இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன.

1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன. அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.

1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது.

இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன. 2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன்.

2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான்.

ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர்.

2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள். அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை.

அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள். 2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர்.

அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான்.

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ? கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது. விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள். அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள்.

ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும். வேகமாக மூச்சு விடக் கூடாது. இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும். 30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது. அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயக்குமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது.

அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று. இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்… இப்படித்தான்.. புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். 

ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள். ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ? இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள்.

2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..? ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான். வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான். ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ? அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ?

இறங்கினான் களத்தில். அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது. மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது.

அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது.

நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு. அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள். அது பலிக்கவில்லை.

அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது. அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன். கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான். அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை. அவன்தான் பேரத்திற்கு படியவில்லை. அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது. அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர்.

அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது. அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை.

அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான். கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன.

அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி. உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர். ஆர்ப்பரித்தனர்.

அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார். அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார். காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது. அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார். அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார்.

அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது. தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். .

அது மட்டுமா… ? 

அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர். சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர். மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ? சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது. அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார். 

அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர். அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர். அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன. ஆனால் அவன் கலங்கவில்லை.

தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது. பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர். அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள்.

அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான்.

அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ். அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ். காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது. அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். 

அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார். ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும். அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான்.

தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின. ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ? எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர். சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்… போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார். காத்திருந்த காவல்துறையை ஏவினார்.

மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். தடியால் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர்.

ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை. அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான். போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர். 

அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது. தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான். ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை. நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான்.

போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள். அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள்.

அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. நான் 

அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன். நீங்கள்... .. ?

நன்றி  சவுக்கு

தொடர்புடைய பதிவுகள்


48 comments:

Raja said...

அண்ணா,
சவுக்கு அவர்கள் எழுதிய கட்டுரை இது. சமூக வலை தளங்களில் எழுதியவரின் பெயரை குறிப்பிடாமல் பகிரப்படுவதால் பகிர்பவரின் கட்டுரையாக மாறிவிடுவது பெரும் சோகம்

தாங்கள் shabbir பெயரை மாற்றி சவுக்கின் இணைப்பு கொடுத்தால் கட்டுரை முழுமை பெரும்.

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1643:2012-09-16-13-43-27&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

நன்றி
ராஜா

வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

//திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதலாவது அணு உலையில், மின் உற்பத்தி வெற்றிகரமாக துவங்கி உள்ளது. நேற்று காலை, 160 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி மத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டது. அந்த மின்சாரம், தென் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.//

http://www.dinamalar.com/news_detail.asp?id=833181

தினமலரில் வந்த செய்தி நம்ப முடியாது, எனவே நீங்களே நேரா போராளிக்கு போன் போட்டு விசாரிங்க!

வெற்றிகரமாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய அயராது பாடுப்பட்ட போராளிக்கு பாராட்டு விழா நடத்திடலாம் அவ்வ்!

Raja said...

வவ்வாலு,
இணையத்தில் (மட்டும்) கத்தி சுத்தும் போராளிகள் உதயகுமார் போன்றோரை கிண்டலடிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஜோதிஜி said...

மன்னிக்கவும் ராஜா. இது குறித்து எனக்குத் தெரியவில்லை. விட்டுப்போன பழைய கூகுள் ப்ளஸ் தகவல்களை சில நாட்களுக்கு முன் படித்துக் கொண்டிருந்த போது இந்த தகவல் கண்ணில்பட்டது. சரி இவர் தான் எழுதியிருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே இதை பதிவில்வெளியிடுகின்றேன் என்று எழுதிவிட்டு வந்தேன். அதைப் பார்த்தும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன பிறகே புரிந்தது. நிச்சயம் மாற்றி விடுகின்றேன். நன்றி ராஜா.

”தளிர் சுரேஷ்” said...

யாரை நம்புவது என்றே புரியவில்லை! ஒரே குழப்பமாக இருக்கிறது!

ஜோதிஜி said...

ராஜா டென்சன் ஆக வேண்டாம். வவ்வாலும் அந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்தே நக்கல் செய்கின்றார் என்றே நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

அடுத்த வருடத்தின் இறுதியில் கூடங்குளம் என்பதன் முழு உற்பத்தி என்ன? அதன் தகுதி என்ன? என்பது போன்ற பல விபரங்கள் வெளிப்படையாக தெரியவரும் போது குழப்பம் தீரும்.

Raja said...

எதுக்குண்ணா மன்னிப்பெல்லாம் :) . நீங்கள் சரியாக பகிர்ந்தவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தீர்கள். பகிர்ந்தவர்தான் எழுதியவர் பெயரை மறந்து விட்டார் :)

கேரளாக்காரன் said...

ஒரே வீட்டில ஏசப்பாவையும் சுடலைமாடனையும் வச்சி கும்பிடும்போதே தெரியல அவன் ஒன்னாம் நம்பர் பிராடுன்னு

vijay tiruppur said...

கூடங்குளம் ஊழல்களின் கூடாரம்

P.S.Narayanan said...

அமெரிக்க அரசும் அங்குள்ள பகாசூரக் கம்பெனிகளும் அவற்றின் லாபத்துக்கு அயராது உழைக்கும் ராக்கிபெள்ளர், போர்ட், பில் கேட்ஸ் நிறுவனங்களும் எனக்குத் தெரிந்து இதுவரை கீழை நாடுகளுக்குத் துனபத்தைத் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை.

எனவே கூடங்குளம் போராட்டுத்துக்கு அவர்கள் அப்படி ஏதேனும் உதவி செய்திருந்தால் அது மிகப் பாராட்டப்பட வேண்டிய செயல். இதுவரை பண்ணிய இமாலயப் பாவங்களுக்கு ஒரு கடுகளவு பரிகாரம் என்றே கூறுவேன்.

உதயகுமாரை அந்நிய நாட்டின் கைக்கூலி என்று திட்டும் தேசபக்தர்கள் யார் யார்:

இங்குள்ள பரம ஏழைகள் பணத்தில் படித்து அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும் எஞ்சினியர்கள், டாக்டர்கள்.

இங்குள்ள நீர்நிலைகளை விவசாயத்தை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி வெளிநாட்டுக்கு தோல், துணி, கார் ஏற்றுமதி செய்யும் முதலாளிகள்.

இந்திய மக்களை அவர்களின் விவசாயத்தைப் பணயமாக்கி அந்நிய முதலீட்டுக்கு பேயாக அலையும் அரசுகள்.

மக்களைச்சுரண்டி, வரிகளை ஏமாற்றி, லஞ்ச லாவண்யகளைச் செய்து சேர்த்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் தலைவர்கள், அதிகாரிகள், முதலாளிகள்.

ஹெச் 1 பி விசாவுக்காக மேல் படிப்புக்காக அமெரிக்க தூதரகத்தை வளம் வரும் மாணவர்கள் - பெற்றோர்கள்.

அகலிக‌ன் said...

எது எப்படியோ நிஜமான கைகூலிகள் தாங்கள் வாங்கிய கூலிக்கு சரியாக மரடித்து காரியம் சாதித்துக்கொண்டார்கள். இனி போலி கைகூலியான உதயகுமாரும் அவருடன் கைகோர்த்த அப்பாவிமக்களும்தான் அனு உலை பாதிப்பை அனுபவித்து மாரடிக்கவேண்டும் என்பதுதான் வேதனை.

வவ்வால் said...

//இங்குள்ள நீர்நிலைகளை விவசாயத்தை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி வெளிநாட்டுக்கு தோல், துணி, கார் ஏற்றுமதி செய்யும் முதலாளிகள்.
//

நாரயணா ...நாராயணா ...!

எங்க வந்து என்னப்பேச்சு பேசிட்டு இருக்கிங்க, துணி ஏற்றுமதி செய்வதால் நீர் நிலை எல்லாம் பாழாகுமா? அப்படிலாம் ஆகாதுங்க, அப்படி ஆனால் நம்ம "சே" சோதிஜி சும்மா விட மாட்டார், புரட்சி வெடிக்கும் தெரியுமுல்ல!

ஹி...ஹி தொழிலதிபதிவரே எப்படி சரியா சொல்லிட்டனா, எதாவது பார்த்து போட்டுக்கொடுங்கய்யா!

வவ்வால் said...

அய்யய்யோ ராசா டெங்சன் ஆகிட்டாரா...கையில கத்தி கித்தி வச்சிருப்பாரோ, செவ்வாய்கிரகத்தில் கத்தி சுத்திட்டு இப்பு பூமில கத்தி சுத்த வந்திருப்பாராயிருக்கும் அவ்வ்!
--------------

தொழிலதிபதிவரே ,

போராளிகள் முதலில் பிடி பருத்தியை யை வேண்டாம்னு புரட்சி செய்தார்கள் ,இப்போ நாடுமுழுக்க 94.75% பிடி தான் இருக்கு, அப்புறம் அணு உலையை மூடுவோம்னு புரட்சி செய்தார்கள், ஆனால் அத தொறந்துட்டாங்களாம், வாரே வாஹ் வாட் எ புரட்சி போராளிகள், கண்டிப்பாக விழா எடுத்து மருவாதி செய்யணும்!

வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,


சொல்ல மறந்துப்போச்சு, விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அறியாத அரிய தகவல்களை திரட்டிப்பதிவாக்கி அறிய தந்து உதவியமைக்கு மிக்க நன்றி!

புரட்சி ஓங்குக!

Paramasivam said...

ஒருவர் ரஷ்சிய கைக்கூலி. மற்றவர் அமரிக்கா கைக்கூலி. இதில் தொழிலதிபதிவர் வேறு. தமிழ் மக்கள் பாவம்.
பரமசிவம்

? said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

தெள்ளத் தெளிவாக திரு.உதயகுமார் அவர்களைப் பற்றிச் சொல்லும் பகிர்வு.

மிக நீண்ட கட்டுரையை தாங்கள்தான் எழுதினீர்கள் என்று நினைத்துப் படித்தால் கீழே எழுதியவர் பெயர் இருக்கிறது...

எழுதியவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...

வவ்வால் said...

நந்தவனம்,

உம்மை சுருங்க சொல்லி விரிவா விளக்குவீர்னு ,சோதிஜி சொன்னது இதுக்கு தானா? நம்ம பதிவில எல்லாம் அரைப்பக்கம் ,ஒரு பக்கம்னு பின்னூட்டம் போடுறத வச்சு என்னை போல "வள வள" பின்னூட்டக்கார்னு நினைச்சுட்டேன் அவ்வ்!

அது சரி எல்லாருமா என்னப்போல பின்னூட்டத்தை முழுசா படிச்சு பார்த்து பதில் எல்லாம் சொல்ல போறாங்க ,ஒரு வரி ரெண்டு வரிக்கு மேல எழுதினா ,படிக்காமலே "வருகைக்கு நன்றி"னு சொல்லிட்டு ஓடிருவானுங்க :-))

நந்தவனம், மிக அருமையாக சுருங்க சொல்லி விரிவாக புரிய வைத்தீர்கள், நன்றி ஓ - நன்றி! நானும் இதே டெக்கினிக்க பயன்ப்படுத்தி கொசுத்தொல்லைய கொறைச்சுக்கிறேன் :-))

kamalakkannan said...

ஜோதி ஜி 80 களில் பட்ட படிப்பு என்பது இப்போது போல் எளிமையானதா? 80 களின் தொடக்கத்தில் இந்தியாவில் பட்டபடிப்பு முடித்து ஒரு நல்ல ஆசிரியராக இந்தியாவில் தனது பணியினை தொடங்காமல் எத்தியோப்பிய செல்ல வேண்டிய அவசியம் என்ன ?படிக்க ஒரு நாடு ? பணம் சம்பாரிக்க ஒரு நாடா ? 80 களில் இந்த போராளி இந்தியாவில் உண்மையாக தனது சேவையினை தொடங்கியிருந்தால் எத்துனை தலைமுறை இந்த 30 வருடத்தில் பயன் அடைந்திருக்கும் ,

//எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். //

அணு கப்பல எதித்து 80 களில் குழு ஏற்படுத்தியவர் ஏன் கல்பாக்கம் அணு மின் நிலையம் 80 களில் தொடங்கும் போது எதிக்கவில்லை ?

இந்த கட்டுரையின் நோக்கம் என்ன ? உதயகுமார் ஒரு உன்னதமான மக்கள் போராளி ? எல்லாரும் சொல்லணும் சரியா ?

இப்படித்தான் எல்லாரும் எழுதி காந்திய தேச தலைவராக ஆக்குநீங்க இப்ப உதயகுமாரையும் ஆக்குங்கள் .

போலி சாமியார்கள் (நித்தி ,ஜாக்கி ,ஆசாரம் )எப்படி இந்த அறிவில்லாத முட்டாள் சமுகத்திற்கு தேவை படுகிறார்களோ அதுபோல இந்த போலி போராளிகளும் (உதயகுமார்,அண்ணாகாசரே ) அறிவார்ந்த முட்டாள் சமுகத்திற்கு தேவை படுகிறார்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

? said...
This comment has been removed by the author.
Raja said...

வவ்வாலு,
போரடனதுக்கு அப்பறமும் ஒரு விஷயம் அமுல் படுத்தபட்டா, அதுக்கும் போராளி தான் காரணம் அப்படிங்கற உம்ம அறிவு திறன பாத்து நான் வியக்கேன்.

Raja said...

அருமை அருமை. அப்படியே ஏன் இந்தி எதிர்ப்புக்கு போராடல,பெரியார் செத்தப்போ மாலை போடல,பெட்ரோல் வெலை எத்துனப்போ போரடுல, ன்னு நல்ல கேளுங்க சார். விடாதீங்க. நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான். நாம இதுவரைக்கும் செஞ்ச செயற்கரிய செயல்கல்ல அந்தாளு ஒரு சதவீதம் கூட பண்ணல.
என்ன செஞ்சான்னு பாக்குறத விட ஏன் செய்யல அப்படிங்கறது தான் நமக்கு ரொம்ப தேவையான விஷயம்.

Thennavan said...

//Raja

என்ன செஞ்சான்னு பாக்குறத விட ஏன் செய்யல அப்படிங்கறது தான் நமக்கு ரொம்ப தேவையான விஷயம்.//

நாட்டுல கொள்ள பயக இப்படித்தான் அலையுதனுவ நண்பா

நம்பள்கி said...

[[[போலி சாமியார்கள் (நித்தி ,ஜாக்கி ,ஆசாரம் )எப்படி இந்த அறிவில்லாத முட்டாள் சமுகத்திற்கு தேவை படுகிறார்களோ அதுபோல இந்த போலி போராளிகளும் (உதயகுமார்,அண்ணாகாசரே ) அறிவார்ந்த முட்டாள் சமுகத்திற்கு தேவை படுகிறார்கள்.]]

அண்ணே ஒரு சந்தேகம்! நம்ம ஸ்ரீ ஸ்ரீ ...பூஜ்யம் பூஜ்யம் எப்படி? கட்டிப்டி கேரளா அம்மா எப்படி? செத்துப்போன சாய்பாபா எப்படி? இந்து மத காஞ்சி சாமியார்கள் எப்படி? தருமபுரி ஆதீனம் எப்படி? மதுரை ஆதீனம் எப்படி?

இவர்கள் எப்படி என்று சொல்லுங்களேன்!

நம்பள்கி said...

அவர் பிராடு அல்ல!
அவர் சாதா பிராடு அல்ல! அவர் டபுள் பிராடு!
ஒரு கடவுளை கும்பஈட்டாலே ஒரு பிராடு; இவர் இரண்டு கடவுளை கும்பிட்டால் இவர் டபுள் பிராடு!
சரியா?

ஜோதிஜி said...

தானைத் தலைவர், தமிழ் வலையுலகத்தின் தீவிரவாளர், அழகான கருத்துக்களை அற்புதமாக தரக்கூடியவர், அஞ்சா சிங்கம், மனித நேய பேராளி, எழுத்தை வரமாக நினைப்பவர், நினைத்து நினைத்து பேரூவுகை கொள்ளக்கூடிய மாமனிதர், பலருக்கும் பலவற்றை கற்றுக் கொடுக்கும் சுடரொளி, நீங்கா பேரொளி, கலங்கரை விளக்கமாய் காட்சி தருபவர், கண்ணீல் நீர் (ஆனந்த கண்ணீர்) வர எங்கள் இனமான தோழர் வவ்வால் அவர்களை வாழ்த்துவோடு வாஞ்சையோடு கட்டியணைத்து என் பாசமலையைக்கு இந்த அன்பு மலரை சூட்டி பாராட்டுகின்றேன்.

வவ்வால் said...

நந்தவனம்,

"காம்ரேட்"தொழிலதிபதிவர் ஏற்கனவே நம்ம கடையில வந்து ,அவரது எழுத்து சேவை, எப்படி மற்றவர்களின் எழுத்தை எடுத்து எழுதி பாராட்டுகிறார், எனவே பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் ,உணர்ந்தால் உத்தமம் என திருவாய்மொழியருளினார் ,அதைக்கேட்டு எனது மடமை நீங்கி ,அஞ்ஞானம் போய் மெய்ஞானம் கொண்டேன், அதனால் இப்பொழுதெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறேன், இப்போ அந்த பிளேட்டை எனக்கே திரும்ப போடுறீரே அவ்வ்!

ஓ அவர பாராட்டினா போதுமா என்னையும் பாராட்டேன்னு குறியீடாக சுருங்க சொல்லி விளங்க வைக்குறிங்களோ, சரி சரி காசா பணமா உமக்கும் பாராட்டுப்பத்திரம் வாசிச்சிடுவோம்,

# இணைய எக்ஸ்பெர்ட்,

# மரபணு மாற்ற தந்தை!

# உயிர்த்தொழில்நுட்ப உத்தமர்.

# சுருங்க சொல்லி விளங்க வைக்கும் சுனாமி!

நந்தவனம் அவர்களேனு இனிமே உங்களை அழைச்சிடுறேன்!

எப்பூடி :-))
----------------------
"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

என்னாதிது, அதான் நம்ம கடையில உங்க சாதனைகளை சொல்லி இதெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியவை ,உணர மாட்டாயானு கேட்டப்போதே ,உச்சந்தலையில ஒன்றரை டன் வெயிட்டுல ஓங்கி அடிச்சா போல பொறிக்கலங்கி ஓடோடி வந்து பாராட்டிக்கிட்டு இருக்கேன், அப்புறம் எதுக்கு இதெல்லாம், நான் என்ன மொய் வைத்தால் பதில் மொய் என எதிர்ப்பார்ப்பவனா?

"இணையத்தின் எழுச்சி நாயகர், பதிவுலக புரட்சி சேகுவேரா, எழுத்து சித்தர், திருப்பூரின் தியாகச்செம்மல்,காம்ரேட் தொழிலதிபதிவரே" ஆனாலும் உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை , இனி என் கடன் உமது புகழ் பாடி அகமகிழ்வதே!

புரட்சி ஓங்குக!

ஜோதிஜி said...

இங்கே பல தொழில் நிறுவனங்களின் முகப்பில் மூன்று மத கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார்கள். கேரளாகாரன் உங்கள் தகவலுக்காக.

ஜோதிஜி said...

சொல்லிவிடாதீர்கள். தேச துரோக வழக்கு பாய காத்திருக்கும்.

ஜோதிஜி said...

அவர் சொல்ல வந்தது வேற. நீங்க எடுத்துக் கொண்டது வேற. சரி ஒரு முட்டை போண்டா ஒரு டீ போதுமா?

ஜோதிஜி said...

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் நிறுவனம் அடுத்து உள்ளே வரப்போகின்றது. பத்தாயிரம் மெகாவாட். அப்போது இருக்கு வேடிக்கை. ஆந்திரா குஜராத் மக்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். அப்போது மன் மோகன் சிங் இருப்பாரா என்று தெரியாது. திட்ட மதிப்பீடு அடுத்த பத்து வருடத்திற்குள் என்று சொல்கின்றார்கள். பார்க்கலாம்.

ஜோதிஜி said...

நன்றி தலைவரே. ஓங்கியடிச்சா ஒன்னரை டன் புரட்சி ஓங்கட்டும்.

ஜோதிஜி said...

உண்மைதான் தமிழ் மக்கள் பாவம் தான் பரமசிவம். ரசிக்க ருசிக்க வாழும் ஆத்மாக்கள்.

ஜோதிஜி said...

நந்தவனம் போதுமா? பாருங்க என்னை விட உங்களைத்தான் பெரிசா பாராட்டுறாரு. அப்பக்கூட ஓரவஞ்சனை தான்.

ஜோதிஜி said...

பலருக்கும் தெரிய வேண்டிய கட்டுரை என்கிற நோக்கில் தான் இதை வெளியீட்டு வைத்தேன். அதற்கும் ஒருத்தரு மகாத்மா ரீதியா என்ன பொங்க வைக்கீறீங்கன்னு பொங்கிட்டு போயிட்டார்.

ஜோதிஜி said...

மூணு பேரும் பதிலே எழுத முடியாத அளவுக்கு பந்தை பஞ்சர் ஆக்கீட்டீங்களே.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

இது தமிழர்களின் தனித்துவம் தென்னவன்.

Unknown said...

//விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அறியாத அரிய தகவல்களை திரட்டிப்பதிவாக்கி அறிய தந்து உதவியமைக்கு மிக்க நன்றி!//

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

யூடியுபை யூடர்ன் அடித்து ஓடவிட்ட அறிஞரே போற்றி

சிரிக்க சிரிக்க வயிறு வலிக்குது. தூங்கப் போகின்றேன்.

வவ்வால் said...

காம்ரேட் தொழிலதிபதிவரே,

//சிரிக்க சிரிக்க வயிறு வலிக்குது. தூங்கப் போகின்றேன்.//

அப்பாடா இப்பவாச்சும் லைஃப்பில சிரிச்சிங்களே, இனிமே போட்டாக்கு போஸ் குடுக்கும் போது சிரிச்சா மாரி போஸ் கொடுப்பீங்கனு நினைக்கிறேன் அவ்வ்!

பிறரை சிரிக்க வைத்து மகிழ்வது நமக்கு மிகவும் பிடிக்கும்,ஆனால் உங்களை சிரிக்க வைக்க இப்படித்தான் முடியும் எனில் அதுவும் மகிழ்ச்சியே...

என்னைப்பொறுத்த வரையில்....

சிரிக்க தெரிந்த விலங்குக்கு மனிதன் என்று பெயர் ..சிரி ..சிரி ... :-))

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமே அது ஆணவ சிரிப்பு இங்கே நான் சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு :-))

தலிவரு என்னமா பாட்டு வச்சிருக்காரு!
-------------------

நந்தவனம்,

வாரும், பிரஸ்ஸர் குறைஞ்சு போயிடுச்சு போல தெரிதே!

நீரும் ரொம்ப குட்டிக்கரணம் எல்லாம் போட்டு பார்க்கீர் ஆனால் ஒன்னும் செல்ஃப் எடுக்க மாட்டேங்குதே...பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

ஐ'ம் வெயிட்டிங்!

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

2003 லவே வாழ்ந்துக்கிட்டு இருக்க ஒருத்தர் மூஞ்சி பூரா சேத்த பூசிக்கிட்டு போனாரே அவர எங்கியாவது பார்த்தீரா ,பார்த்தால் நான் கேட்டேனு சொல்லும் :-))

டாலர் நகரமும், டாலர் தேசமும் கூட்டணிப்போடுதே ,நல்ல சோடிப்பொருத்தம் தான் ஆனால் என்ன ஒன்னு 'பருப்பு தான் சரியா வேகவே "மாட்டேங்குது, நான் சொன்னது நாயர் கடையில விக்குற "பருப்பு வடைய", சொன்னேன் ,ரெண்டு பருப்பு வடை சாப்பிட்டேன் "ரென்டுலவும் சரியா பருப்பு வேகவே இல்லை , ஊசிப்போன வடை வேற அவ்வ்!

சேக்காளி said...

பதிவை உட்டுட்டு பின்னூட்டத்துல சட்டி தண்ணிய வச்சு அரிசிய போட்டா சோறாயிரும் போல. அம்புட்டு அனல் பறந்துருக்கே.