எனக்கும் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி குறித்து ஏராளமான வருத்தங்கள் இருந்தது. காரணம் நாம் கட்டிய தொகை நம் உடனே வருவதில்லை. அதற்கான வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தணிக்கையாளர்கள் புலம்பல்கள் மற்றொரு புறம். இதுவரையிலும் நேரிடையாக எதையும் பார்க்காமல் கேட்காமல் உறுதிப் படுத்திக் கொள்ளாமல் இவையெல்லாம் அரசின் தவறு என்றே நேற்று வரையிலும் நினைத்திருந்தேன். இன்று எங்கள் பகுதி உயரதிகாரியைச் சந்தித்து இருக்காவிட்டால் இதை எழுத வாய்ப்பு அமைந்திருக்காது.
