பிரதமர் அறிவித்துள்ள "முகமற்ற வருமானவரி மதிப்பீடு" (Faceless Assessment) என்றால் என்ன? வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன?
இந்தியாவில் அதிகபட்ச காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர் திரு. வி.ஜி.சித்தார்த்தா. பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். கஃபே காபி டே நிறுவனர். 13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள். நாடெங்கும் 1,600 காபி டே கடைகள். சித்தார்த்தா ஜூலை 2019ல் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் கடிதத்தில் "நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது. மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் கூறியிருந்தார்.
