Thursday, November 09, 2023

துப்பினால் துடைத்துக் கொள்வார்கள்

 எ வ வேலு குறித்து என்ன எழுதினாலும் அவருக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியவர்கள் இரண்டு பேர்கள்.   ஒன்று உடன் பணியாற்றிய அதிகாரிகள். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். எப்படி அணுக வேண்டும். எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.  அதற்கான கூலியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணி ஓய்வு வரைக்கும் சென்று இறுதிக் காலம் வரைக்கும் வாழ்ந்து மறைந்து விடுகின்றனர்.

அடுத்து பத்திரிக்கைகள். ஊடகங்கள். தற்போது யூ டியூப் மற்ற சமூக வலைதளங்கள்.



அநியாயங்கள் தெரிந்தாலும் காரண காரியத்தோடு மக்களிடம் சென்று சேராமல் தங்கள் பணியைச் சிறப்பாகவே செய்து விடுகின்றார்கள். கடைசியில் திருடியவன் துப்பாக்கிக் குண்டு முழங்க மெரினாவில் அடக்கம் ஆகின்றான்.


ஸ்ரீராமர் ஆலயம் உருவாக்கப் போகும் மாற்றங்கள்: ஜோ கட்டுரைகள் (நவம்பர் 2023) (Tamil Nadu Political History) (Tamil Edition) Kindle Edition

பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கை நிறுவனம், பத்திரிக்கை மற்றும் ஊடக உரிமையாளர்கள். இதற்குள் எந்த காலத்திலும் பல பிரிவுகள் உண்டு. பல சித்தாந்தங்கள் கொள்கைகள் கொண்டவர்கள் ஒன்றாகவே பணிபுரிந்தனர். அனைவரின் கருத்துக்களையும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் உங்களால் படித்து இருக்க முடியும். இப்போது ஒரே கூட்டம். ஒரே கொள்கை. பாஜக தமிழகத்திற்குள் மட்டும் வந்து விடக்கூடாது. நம் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரே மாதிரியாகவே கூச்சமின்றிச் செயல்படுகின்றார்கள். 

கடந்த மூன்று தலைமுறை தமிழர்களின் மூளையை மழுங்கடித்தவர்களின் முக்கியமானவர் தினத்தந்தி. இன்று வரையிலும் தினத்தந்தியில் வரும் ஒரு தகவல் கூட உங்களைக் கோபப்படுத்தாது.  நாசூக்காக உங்களை மொக்கராசுவாக மாற்றுவதில் கில்லாடி.  முடிதிருத்தகம் கடைகளில் தினத்தந்தி காகிதத்தில் சவரம் செய்த பின்பு வழித்து எடுக்கும் அந்தச் சவர அழுக்கைத் தடவப் பயன்படுத்துகின்றார்கள்.  இது நிஜம்.  கட்சிக்காக நடத்தும் பத்திரிக்கை முதல் கழிசடைத்தனத்தை கூச்சமின்றித் தரும் பத்திரிக்கை வரைக்கும் எதையும் காசாக்கலாம் என்று தைரியத்தில் தான் இன்று வரைக்கும் இங்கே கோலோச்சுகின்றார்கள்.

ஆனந்த விகடன் சீனிவாசன் முன்பு ஒரு முறை தங்கள் நிறுவனத்தில் மொத்தமாகப் பணியாற்றியவர்களைத் திடீரென்று வெளியே அனுப்பினார். அப்போது பெரிய சலசலப்பு உருவாகவில்லை. அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்.  ஆனால் இந்த முறையும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே கொத்தாகப் பலரையும் வெளியே அனுப்பினார்.  இப்போது சலசலப்பு இலேசாக உருவானது.  அவர் கில்லாடி.  இப்படி உருவானால் அரசின் ஆதரவு வேண்டும் என்று கலைஞர் என்று பெயர் சூட்டி அவர் நல்லவர் வல்லவர் என்று எதையோ எழுதி புத்தகமாக்கி எப்போதும் போல விலை ரூபாய் ஆயிரம் என்று கொண்டு வந்து அதையும் முதல்வர் கையால் வெளியிட வைத்து.........  முடிந்தது ஜோலி.  

அரசாங்கத்தைத் திருப்தி செய்தாகிவிட்டது. முதல்வரின் குட்புக்கில் இடம் பெற்றாகிவிட்டது. புத்தக லாபம் பணி. பணியிலிருந்து தூக்கியவர்கள் மூலம் நிறுவன லாபம் தனி.

இனி யாரும் இவரைப் பார்த்து எதுவும் கேட்டு விட முடியுமா?

சோழர்கள் என்றொரு புத்தகம் வந்தது. ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அது தொகுப்பு. பலரும் எழுதியுள்ளனர்.  ஆனால் நான் எழுதினாலும் நீங்கள் நம்ப முடியாத தொகையை வாங்கி வென்றவர் சமஸ்.  அவருக்கும் முதல்வர் அலுவலக முதல் வட்டத்தில் இருப்பதால் பத்திரிக்கை நிறுவன முதலாளிகளுக்குத் தேவைப்படும் நபராகவே உள்ளார்.  

ஏற்கனவே பிடிஆர் பேட்டியை அருஞ்சொல் தளத்தில் அதிகமாகப் போட்டுக் கொண்டு இருந்தார்.  இப்போது தேடிப் பாருங்களேன்.

திரைப்பட உலகத்தைப் பாழுங்கிணறு என்று நண்பர்கள் என்னிடம் பலமுறை எச்சரித்துள்ளனர்.  அதே போல இன்றைய பத்திரிக்கையுலகம் என்பது 2000 க்கு முன் பின் என்பதாக மாறிவிட்டது என்பேன்.

ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெவ்வேறு நண்பர்கள் உறுதிப்படுத்த முடியாத தகவல்களைத் தனிப்பட்ட முறையில் பேசும் போது சொல்கின்றார்கள்.

ஒன் டைம் பேமெண்ட் 

தேர்தல் வரைக்கும் பகுதி பகுதியாகப் பிரித்து வழங்குதல்

2024 தேர்தல் முடிந்த பின்பும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு செலுத்தும் நாள் வரைக்கும் மாதம் ஒரு தொகை.  

இப்படித்தான் நீங்கள் நம்பும் விரும்பும் ஆதரிக்கும் நேசிக்கும் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுக்கு அங்காளியும் பங்காளியும் பாய் போட்டுப் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றார்களாம்.

காரணம் 2024 பாராளுமன்றத் தேர்தல் எந்த எல்லைக்குச் செல்லும் என்பதனை யூகிக்க முடியாததாகவே உள்ளது.  வெறித்தனமாக ஒவ்வொரு பக்கமும் செயல்படுகின்றார்கள்.  என்ன காரணம் என்பதே தெரியவில்லை. நம்பவே முடியாத காரியங்கள் எல்லாம் வெளியே தெரியாமல் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து, ஒரு இயக்குநர் இயக்கி அதிரிபுதிரி ஹிட் அடித்தவுடன் அவர்கள் வழங்கும் பேட்டி முழுக்க தில்லையாடி வள்ளியம்மையுடன் பாடுபட்டு சுதந்திரம் வாங்கித் தந்த கதைகள் போலவே இருக்கும்.

நான் சாலையோர ப்ளாட்பார்ம் ல் படுத்து உறங்கினேன்.

கோயம்பேடு சந்தையில் காய்கறி தூக்கிக் கொடுத்து வயிறு கழுவினேன்.

உணவகத்தில் தட்டு கழுவினேன்.

ஆனாலும் கலைத்தாகம் என்னுள் கொழுந்து விட்டு எறிந்து கொண்டேயிருந்தது என்று தமிழகம் எங்கும் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தெருவில் வந்து நிற்கும் வேலையைத் தன் வாயால் செய்து முடிப்பார்கள்.  

அப்படித்தான் தற்போதைய யூ டியூப் சேனல்கள் அனைத்தும் செய்து கொண்டு இருக்கின்றது.

அதே போல 

இன்றைய நட்சத்திர ஊடகவியலாளர்களாக உள்ளவர்களான

நக்கீரனில் தன் பணியைத் தொடங்கினார் கார்த்திகைச் செல்வன்.

குணசேகரனும்   அடியாழத்திலிருந்து தான் வந்தார்.

புதிய தலைமுறை கார்த்திகேயன் தொடங்கி தினமலரில் பணியாற்றிய பாண்டே வரைக்கும் தங்கள் கால் நூற்றாண்டுக் காலத்தைக் காசு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் . கனவுகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்கள். அதிகாரத் தாழ்வாரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு இன்று எடிட்டர் கேட்டால் எந்தச் செய்தியைக் கொடுத்துச் சமாளிப்பது என்று ஏக்கத்துடன் காத்திருந்தவர்கள் தான்.

இவர்களும் இன்று நம்பிக்கையூட்டும் பேச்சாளர்களாகவும் மாறியுள்ளனர். இளைய தலைமுறையினருக்கும் லட்சியங்களைப் பற்றி அடுக்கு மொழியில் பேசி அசத்த அதற்கும் சில லட்சங்களை நிகழ்ச்சி நடத்துகின்றவர்களிடம் பெற்று விடுகின்றார்கள். 

கட்சி சார்ந்த பேட்டிக்கு ஒரு ரேட்.  

கட்சி நிகழ்ச்சிகளைத் தங்கள் சேனலில் கொண்டு வர ஒரு ரேட் என்று உணவகப் பட்டியல் போலவே இன்று பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் ரொம்பவும் பிசியாகவே உள்ளனர்.  நிறுவன முதலாளிக்கு அறுத்த கறியின் மொத்தக் கிலோ கணக்கு தொகை வந்து விட வேண்டும்.  அறுத்த போது அருகில் இருப்பவர்களுக்குச் சிதறும் துணுக்குகள் முக்கியம்.

ஆனால் இன்று

நடிகர் ரஜினி விஜய் ஆறு மாதம் நடித்து வாங்கும் சம்பளத்தை அசால்ட்டாக அள்ளுகின்றார்கள்.

எங்கே எப்படி வருகின்றது தான் யோசிக்க வேண்டிய ஒன்று.

ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். அவர் பிராமணர் என்பதற்காகவோ, அவர் இவரை ஆதரிக்கக்கூடியவர் என்பதனை மனதில் கொண்டே எவரையும் உங்கள் இதயகமலத்தில் ஏற்றி அமர்த்தி வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் ஸ்ட்ரக் ஆகி நிற்கும் போது உங்களுக்கு அதிகபட்சம் பேஸ்புக் நண்பர்கள் வழங்குவது ஓம் ஷாந்தி என்ற வார்த்தையை மட்டுமே.

அதிகார கோபுரத்தின் மேலே செல்லச் செல்ல ஏறிச்சென்ற அரசியல்வாதி கடைசியில் பார்ப்பது வெறுமையை மட்டுமே. அவரால் அதனை வாய் விட்டு வெளியே பகிர்ந்து கொள்ளவும் முடியாது.

யாரோ எதற்காகவோ கொடுத்த ஒன்டைம் பேமெண்ட் மூலம்  அல்லது மாதம் மாதம் கையேந்தி பெறும் பணத்தின் மூலம் வாழும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். வெறும் யூ டியூப் சேனல் நடத்திக் கொண்டே தங்கள் அலுவலகத்தை ஆயிரம் கோடி வரவு செலவு கணக்கு காட்டும் இந்திய அளவில் பிரபல்யமான கார்ப்பரேட் தலைமை அலுவலகம் அமைப்பு பாணியில்  அமைத்துக் கொள்ளலாம். தவறில்லை.

வாழ் நாள் முழுக்க கூனிக்குறுகி வெளியே சொல்லிக் கொள்ள முடியாத தனக்குள்ளே மறுகிக் கண்ணி வெடியில் சிக்கியவன் போலவே வாழ்ந்தாக வேண்டும்.   எவன் எதிரி? எவன் நண்பர்? எதன் மூலம் பேசினால் ஒட்டுக் கேட்காமல் இருக்க முடியும் என்று ஆராய்ந்து யோசித்து யோசித்துப் பேச வேண்டிய கொடுமைகளைச் சந்திக்க வேண்டும்.

மக்கள் மாமன்றம் முதல் மக்களின் நாடித்துடிப்பு அறியும் நிகழ்ச்சி வரைக்கும் கூட்டம் இருக்கும்.

அந்தக் கூட்டத்திற்கு நிச்சயம் தெரியும் நீங்கள் யார் என்று? 

அது உங்களுக்கும் எனக்கும் கண்களுக்குத் தெரியாது.

வெளியே துப்பினால் நாஞ்சில் சம்பத் போலத் துடைத்துக் கொள்வார்கள். ஆனால் பல லட்சம் மக்கள் மனதிற்குள்ளே துப்பும் போது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

No comments: