Thursday, March 18, 2010

நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி

ஊடகத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தேகப்படுவர்களின் அணி வகுப்பு, தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த ஈழத்தமிழர்கள் என்று எத்தனையோ வழிகளில் தங்களுடைய பார்வையை புலனாய்வு குழுவினர் செலுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.  மொத்த வலைபின்னலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் இறங்கிய இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கரை இறங்கிய நாகபட்டிணம் வந்து சண்முகத்தை தேடத் தொடங்கிய போது அவரும் தலைமறவானார்.  ஆனால் அவரிடம் நீண்ட நாட்களாக படகோட்டியாக பணிபுரிந்து கொண்டுருந்த (இவரும் யாழ்பாணத்தை சேர்ந்த ஈழத்தவரே) மகாலிங்கம் என்ற மீனவரை பிடித்தனர்.  இவர் தான் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்ட அத்தனை வேலைகளுக்கும் 1984 முதல் சண்முகத்திடம் பணிபுரிந்த தனிப்பட்ட முக்கிய படகோட்டி.  புலனாய்வு குழுவினர் தேடிப்போன சண்முகத்தை விட இவருக்கும் மொத்தமும் தெரிந்து இருந்தது.  புலனாய்வு குழுவினருக்கு அப்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலி இயக்கம் தான் இதை நிகழ்த்தியது என்று தெரிந்து இருந்தாலும் விடுபட்ட இடங்கள் நிறைய இருந்தது. வலைபின்னலை நெருங்கி சூழ்ந்து இருந்தாலும் அது அத்தனை தூரம் முழுமையடைந்த பாடில்லை.  

கைது செய்யப்பட்ட சாட்சிகள் உண்டு.  ஆனால் சட்டம் எதிர்பார்க்கும் அழுத்தமான ஆதாரங்கள் இல்லை என்பதை விட சிக்கியவர்கள் எவருமே அவரவர் பங்குகளை சொன்னார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை.  ஒவ்வொரு சாட்சியும் அவர் தொடர்பில் இருந்த மற்றவர்கள் சிக்கியவுடன் தான் ஓரளவிற்கு கக்கினார்கள்.  அப்பவும் சிவராசன் எங்கு இருக்கிறார் என்பதோ? எப்படி தப்பினார் என்பதோ எவரும் சொல்லவில்லை.  காரணம் உள்ளே இருந்தவர்களுக்கு சிவராசன் இருக்கும் இடம் முதல் தப்பியது வரைக்கும் தெரிந்து இருந்த போதிலும் மூச்சு விடவில்லை.  ஆனால் படகோட்டி மகாலிங்கம் சிக்கியபிறகு தான் திட்டத்தின் முழு பரிணாமும் புரிய ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இந்த படுகொலைக்கு காரணம் என்பதும் அவர்களின் மொத்த தொடக்க வலைபின்னலும் புலனாய்வு குழுவினருக்கு முழுமையாக புரிந்தது. இவர்கள் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில் இருந்த போது உள்ளே இருந்த இயக்கத்தவர்கள் மூலம் இதற்கு முன்னால் வேறொரு விடுபட்டுருந்த பணிக்கான ஆய்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டுருந்ததும் அப்போது தான் புரிந்தது. ஏற்கனவே செய்து முடித்து இருந்த பத்பநாபா படுகொலையைப் போலவே, அவர்கள் துரத்திக்கொண்டுருந்தது இலங்கை வடகிழக்கில் முதலமைச்சராகயிருந்து அப்போது இந்தியாவில் உளவுத்துறை மேற்பார்வையில் தஞ்சம் புகுந்து இருக்கும் வரதாஜப் பெருமாள். அவர் இருந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் குவாலியர் பகுதியில்.  மோப்பம் பிடித்தவர்கள் இந்த படகோட்டி சண்முகத்தை அழைத்துக்கொண்டு செல்வதாக திட்டம்.  வரதராஜப்பெருமாளின் ஆயுள் கெட்டியாக இருந்துருக்கும் போல.  பல விதங்களிலும் இவர்களின் பயணம் தள்ளிப் போனது.  அப்போது படகோட்டி மகாலிங்கம் மூலம் பெறறப்பட்ட வாக்குமூலம்,

" 1990 ஜுனில் சிவராசன் மற்றும் கடற்புலித் தலைவர் டேவிட் போன்றவர்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்து பத்பநாபாவை கொன்று முடித்ததும் அவர்களை கொண்டு போய் விட்டதும் இந்த மகாலிங்கமே.  இரண்டாவது திட்டம் வரதாஜப்பெருமாள்.  வடஇந்தியாவில் இதற்கென்றும் மொத்த இந்தியாவிற்கும் தளம் அமைக்க டெல்லியை மையப்பபுள்ளியாக இருக்கும் அளவிற்கு டெல்லியை தலைமையிடமாக வைத்துக்கொண்டு செயல்பட சிவராசன் வருவதற்கு முன்பு ஆதிரை என்ற பெண்புலி உள்ளே வந்து இருந்தார். அதற்குள் இந்த அவசர அவஸ்யமான ராஜீவ் காந்தி படுகொலைக்காக சிவராசனுடன் வந்த சுபா தணுவுடன் இன்னும் ஐந்து பேர்கள் ஆக மொத்தம் எட்டு பேர்கள் உள்ளே வந்தனர்.  மற்ற ஐந்து பேர்கள் ரூசோ, கீர்த்தி, நேரு, சுதந்திர ராஜா, சுரேஷ் குமார் என்ற சிவரூபன் (இவர் ஒற்றைக்காலுடன் வாழ்ந்தவர்).

ஏற்கனவே பிடிபட்ட முருகன் காட்டிய மடிப்பாக்கம் இல்லத்தில் கைப்பற்ற ஆவணத்தில் ஒன்று சுரேஷ் குமார் கோல்டன் ஹோட்டல் ஜெய்பூர் என்று ஒன்று இருந்தது.  ராஜஸ்தானில் இருந்த சுரேஷ் குமார் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வேறு இடத்திற்கு மாற முயற்சித்த போது கைது செய்யப்பட்டார்.  இந்த ஒற்றைக்கால் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் இருந்த இரண்டு தொலைபேசி எண்கள் மூலம் சென்னையில் ராபர்ட் பயஸ் கைது செய்யப்பட்டார். இவர் மூலம் தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்து திருதிருவென்று முழித்துக் கொண்டுருந்த ரூசோ தஞ்சாவூரில் ரயில் பயண தொடக்கத்தின் போதும் வளைக்கப்பட்டார்.. எப்போதும் போல புலனாய்வுக்குழுவினர் தொடர்ச்சியாக அங்கங்கே உருவாக்கியிருந்த தொடர் சோதனையின் போது போது விஜயானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த விஜயானந்தன் மூலம் அவர் தங்கியிருந்த மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரை புலனாய்வு குழுவினர் விசாரித்த போது சிவராசனின் அடுத்த கட்ட நடவடிக்கை முழுக்க புரிந்து போனது.  காரணம் டெல்லியில் ஒரு வீடு பிடித்த தங்கவேண்டும் என்பதும், அங்கிருந்தபடி செய்ய வேண்டிய மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு நேபாளம் வழியாக தப்பும் எண்ணம் என்பதையும் புரிந்து கொண்டனர். ஆனால் முடிந்தவரைக்கும் மற்றவர்கள் நேபாளம் வழியாக தப்ப வைக்கும் எண்ணம் இருந்தாலும் சுபா,நளினி,சிவராசன் போன்றோர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட சிவராசன் புகைப்படத்தை மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரும், டெல்லியில் வீடு பிடிக்க ஏற்பாடு செய்து கொண்டுருந்த சபாபதி பிள்ளை என்பவரும் செய்திதாள்களில் பார்த்ததும் திடுக்கிட்டு போயினர். தங்கள் வீட்டிலிருந்த சிவராசனை வேறு எங்கேயவாது போய்விடுங்கள் என்று எச்சரிக்க சூளைமேட்டில் இருந்த ஈழத்தமிழர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.  இந்த இருவரையும் புலனாய்வு குழுவினர்  துரத்தி பிடிப்பதற்குள் இவருமே தப்பிவிட்டனர். தேடிக்கொண்டுருந்த இருவரின் உறவினர்களையும் துரத்திய புலனாய்வு குழுவினருக்கு வேறொரு தகவல் கிடைத்தது.

தமிழ்நாட்டுக்கு சிவராசன் குழுவினருக்கு முன்னால் வந்து உள்ள இருந்த ஆதிரை என்ற பெண் விடுதலைப்புலி டெல்லியை நோக்கி கிராண்ட் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்துக் கொண்டுருந்தது தெரியவந்தது.  பயணித்துக் கொண்டுருந்தவர் பெண் என்றதும் நிச்சயம் தணுவுடன் இருந்த சுபாவாகத் தான் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஐ அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தனர். வழியில் அவர்கள் பயணித்த இருக்கையை கண்டு உணர்ந்தவர்கள்  அவர்களுடன் பயணித்து டெல்லியில் இறங்கிய போது கைது செய்தனர். பயணம் செய்து கொண்டுருப்பது சுபா என்று தேடிப்போனவர்களுக்கு வியப்பு.  ஆதிரை பெண்ணாக இருந்தாலும் எந்த வாகனத்தையும் எந்த இடத்திலும் சிறப்பாக ஓட்டும் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்.  இதற்கு மேலாக ஓயர்லெஸ் சங்கேத பாஷையான கிரிட்ப்லாஜியில் கைதேர்ந்தவர். ஆனால் தொடக்கத்தில் இந்த ஆதிரை மூலம் டெல்லியில் வைத்தே ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்ததும் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தப்பவைக்க என்ற நோக்கத்தில் சிவராசன் உருவாக்கி வைத்திருந்த சபாபதி பிள்ளை மற்றும் வீட்டின் உரிமையாளர் இருவரும் டெல்லிக்கு பயணம் செய்து அங்கு போலியான கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி வைத்திருந்தனர். துரத்தல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஜுன் மாத இறுதியில் பிடிபட்ட பாஸ்கரன் மூலம் கடைசியாக சிவராசன் தங்கியிருந்த வீடும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவராசன் குழுவினர் வெளியேறியதும் அந்த வீட்டில் விஜயன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.  புலனாய்வு குழுவினர் துருவி விசாரித்த விசாரணையில் மனைவி சமையல் அறையில் புதைத்து வைத்திருந்த வயர்லெஸ் செட்டை காட்டிக் கொடுத்தார்.  புலனாய்வு குழுவினர் இவர்கள் எந்த திசையில் இருந்து செய்தி கடத்திக் கொண்டு ருக்கிறார்கள்கள்? என்று மண்டையை உடைத்துக் கொண்டுருந்தார்களோ அந்த செய்தி மல்லிகை இல்லத்திற்கு மிக அருகிலேயே கொடுங்கையூரில் எவரெடி காலணியில் இருந்து கடத்தப்பட்டுக் கொண்டுருந்ததை அப்போது தான் கண்டுபிடித்தார்கள். தேசப்படுத்தப்பட்ட அந்த உபகரணங்களை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் வைத்து பிடிபட்ட ஆதிரை மூலம் முக்கியமான தகவல் ஒன்று பெறப்பட்டது.  சிவராசனுக்கு உதவியாக தொடக்கம் முதல் செயல்பட்டுக்கொண்டுருந்த சுதந்திர ராஜாவை உயிருடன் பிடித்தனர்.  அதுவும் எப்படி?  ஆதிரை சொன்ன தகவலின்படி பல்லாவரம் அருகில் உள்ள பம்மல் என்ற பகுதிக்கு சுதந்திர ராஜா அழைத்துச் சென்றார் என்பதைத்தவிர வேறு ஏதும் அவரால் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் அந்த வீட்டிற்கு அருகில் படிக்கும் குழந்தைகளைப் பற்றி சொல்லவும், அந்த குழந்தைகள் போட்டுருந்த பள்ளிச்சீருடை மூலம் பள்ளியை கண்டுபிடித்து, குழந்தைகள் மூலம் சுதந்திராஜா தங்கியிருந்த வீட்டை அடைந்தனர். தூங்கிக்கொண்டுருந்தவர் இவர்களைப் பார்த்ததும் சயனைடு குப்பியை கடிக்க முயற்சிக்க, தடுத்து கைது செய்தனர்.  இவர் கைதானபிறகு தான் சிவராசன் பற்றிய முழுமையான அத்தனை விசயங்களும் புலனாய்வுக் குழுவினருக்கு தெரியவந்தது.  காரணம் இவர் தான் தொடக்கம் முதல் சிவராசனுக்கு உதவியாளராய் செயல்பட்டவர்.

2 comments:

சசிகுமார் said...

துயராமான செய்தி நண்பா, இது இன்னும் மனதில் இருக்கிறது.

Anonymous said...

'//வரதராஜப்பெருமாளின் ஆயுள் கெட்டியாக இருந்துருக்கும் போல. //
ரொம்பவே கெட்டி. தமிழனில் இந்த இழி நிலைக்கு பெரிய காரணகர்த்தா இந்த ****.

ஹொலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. இருங்க மிச்சத்தையும் படிச்சுட்டு வருகிறேன்.