Wednesday, January 20, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (1)

1986 ஆம் ஆண்டு.  பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தனிப் பெரும் இயக்கமாக உருவான ஆண்டு.

பத்பநாபா, சீறீ சபாரெத்தினம், பாலகுமார், உமா மகேஸ்வரன் எங்கே போனார்கள்?   மற்ற இயக்கங்கள் என்னவாயிற்று?

இன்று வரையிலும் முழுமையான புரிதல்கள் இல்லாமல் பிரபாகரன் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளை சற்று உள்வாங்கிவிடலாம்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பிரபாகரன் மேல் கொலை வெறி பார்வை பார்த்துக்கொண்டுருக்கிறது.  திம்பு, பெங்களூர் பேச்சுவார்த்தை என்று எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டுருப்பதால் ஜெயவர்த்னே நமுட்டுச் சிரிப்பும், ராஜீவ் காந்தி தடுமாற்ற சிந்தனைகளும், மொத்த இந்திய அதிகார வர்க்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் உள்ளுற புகைச்சலுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலை இது.

பிரபாகரன் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய இளவயது முதல், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை மூலம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டு,     " மொத்த கொலைகளுக்கும் நாங்கள் தான் பொறுப்பு " என்று உமா மகேஸ்வரன் கையெழுத்து போட்டு பத்திரிக்கையின் வாயிலாக அரசாங்கத்திற்கு தெரிவித்தது வரையிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட எந்த கொள்கையிலும் சந்தர்ப்பவாதம் என்பது இல்லாமல் மொத்த லட்சிய முன்வரைவாகவே நகர்த்திக்கொண்டு வந்தார்.

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை விட மற்ற இயக்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும், நிதி ஆதாரங்கள் தங்களை விட மேம்பட்டு இருந்த போதிலும் கூட தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளவில்லை.  இனி சேர்ந்து செயல்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ஆன்டன் பாலசிங்கம் கொடுத்த அழுத்தம் கூட பல முறை யோசித்து, பல நாட்கள் கழித்து வேறு வழியில்லை என்பதாகத்தான் மொத்த மற்ற இயக்கங்களுடன் கை கோர்த்தார்.  எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை.  அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் ரா உள்ளே நுழைந்து சந்திரஹாசன் மூலம் டெலோ இயக்கத்தினர், அதனைத் தொடர்ந்து மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த இந்திய மரியாதை யோசிக்க வைத்ததே தவிர கலக்கத்தை உருவாக்கவில்லை.  பயிற்சி முக்கியம் என்பதாக தானாகவே ரா விரித்து வைத்திருந்த வலையில் போய் மாட்டிக்கொண்டார்.  ஜெயவர்த்னே ஒரு பக்கம், இந்தியா மறு பக்கம்.  இது போக வேறு வழியே இல்லாமல் இந்தியாவின் அதிகாரவர்க்கத்தினர் முன் கைகட்டி மண்டியிட வேண்டிய அவஸ்யம்.  அவர்களின் ஏச்சும், பேச்சும், அவமரியாதையும், மிரட்டலும் என்று எல்லாவகையிலும் மனோரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்ததும் உண்மை.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்?  ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டத்தான் தயாராய் இருக்கிறார்கள்.  காரணம் ரா வலைக்குள் உள்ளே நுழைய முயற்சித்த போது (தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பொறுப்பாளராக இருந்து மற்ற இயக்கங்களுக்கு செயல்பட்டுக் கொண்டுருந்தவர்)  கிடைத்த பாடம் மொத்தத்திலும் கொடுமையானது.  ரா அதிகாரி கேட்ட முதல் கேள்வியே பிரபாகரனின் மொத்த கோபத்தையும் வெளியே காட்டும் அளவிற்கு இருந்தது.   " LTTE க்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல நீங்களும் சந்திரஹாசனை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்".  பிரபாகரன் கோபத்தை விட ஆன்டன் பாலசிங்கம் மனைவி அடேல் பாலசிங்கம் கூட பொங்கும் அளவிற்கு உருவாக்கியது.

ஆனால் ரா உள்ளே நுழைந்து முதல் டெலோவிற்கு சிறப்பான பாதை உருவாகிக் கொண்டுருந்தது.  அவர்களின் தைரியமும் அளவுக்கு மீறி வளர்ந்து கொண்டுருந்தது.  மொத்தமாக நிதி உதவி என்று வேறு ஒரு தளத்திற்கு அவர்களை மாற்றி தங்களுடைய ஏவலாளிகள் போல் மாற்றிக்கொண்டுருக்க ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாடுகளும் இயல்பான போராளிக்குழுக்களின் வாழ்க்கையில் இருந்து மாற்றம் பெறத் தொடங்கியது.  ஆடம்பரம், தான்தோன்றித்தனம், இந்தியா தங்களுடன் இருக்கும் வரை வேறு யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது, இந்தியா உதவியுடன் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடைந்து விடமுடியும், என்று ஒவ்வொருவரும் தனக்குண்டான எதிர்கால அபிலாஷைகளுடன் முன்னேறிக்கொண்டுருந்தனர்.

இது போக மனதிற்குள் இருக்கும் " நான்" " தான் மட்டும்"   என்ற இந்த இரண்டு மன அழுக்கு பல அசிங்கமான பாதையில் பயணிக்க வைத்தது.  பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல், மிரட்டுதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இது போக மற்ற இயக்கங்களை வம்புக்கு இழுத்து அழித்தல், குறிப்பிட்ட பகுதியில் தங்களுடைய ஆளுமைய நிலைநாட்டியவர்கள் அதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளுக்கும் நகர்த்தும் போது, உருவான பல பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் முன்னேறிய போது தான் மொத்தமாக பிரபாகரன் பார்வை அவர்கள் மேல் பட்டது.  காரணம் இதைத்தான் ரா வெகுநாளாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. போராளிகள் இருக்க வேண்டும்.  ஆனால் வளரக்கூடாது.  ஒருவருடன் ஒருவர் ஒற்றமையாக இருக்கக்கூடாது.  இப்போது நாம் இந்த ஒவ்வொரு ரத்தச் சகதியிலும் கால்வைத்து மேல் நோக்கி நகரலாம்.

முதலில் உமா மகேஸ்வரன்.   (PLOTE)

 பிரபாகரன் வளர்ச்சிக்கு எத்தனையோ அடி உரமாய் இருந்து இருக்கின்றனர்.   தொடக்கத்தில் ராகவன் போல,

இந்த உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு தெளிவான பாதைக்கு, மக்கள் இயக்கமாக, உலகளாவிய மற்ற நாடுகள் அங்கிகரிக்கும் அளவிற்கு இறுதி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பியவர்.  நல்ல புத்திசாலி, படிப்பாளி, தீர்க்கமான சிந்தனை உள்ளம் படைத்தவர்.  ஆனால் பிரபாகரன் கொண்டு வாழ்ந்த தனி மனித ஒழுக்கம் என்பதில் அடிபட்டு  ஒதுங்கிப் போனவர்.  பெண்ணாசை காரணமாக இருவரும் பிரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை.  பிரபாகரன் கொள்கையின் படி இயக்கத்தில் இருந்து பிரிந்து வேறு இயக்கம் தொடங்கக்கூடாது என்பதையும் மீறி PLOTE இயக்கம் தொடங்கி, வெவ்வேறு பாதையில் இருவரும் பயணித்தனர்.  ஆனால் உமா மகேஸ்வரன் விரும்பிய ஜனநாயக பாதையே அவரின் ஓட்டுநர் மூலம் அவர் உயிரை பறித்தது. இந்த இடத்திலும் ரா திருவிளையாடல் இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம். ஏற்கனவே தொத்தலாக போய்க்கொண்டுருந்த இயக்கம் மெதுமெதுவாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.  சென்னையில் ஆன்டன் பாலசிங்கம் முன், பிரபாகரன் கொடுத்த சத்தியத்தை கடைசி வரையிலும் உமா மகேஸ்வரன் விசயத்தில் காப்பாற்றியது முதல் ஆச்சரியம்.

உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான " இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்".   இதைப் போலவே பிரபாகரன் " நான் உமா மகஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன்.  என்னால் எந்த பிரச்சனையும் வராது".

இயக்கத்திற்கான ஒழுக்கக் கோட்பாடுகள் என்று ஏழு கட்டளைகள் போல் வகுத்து இருந்தாலும் பிரபாகரனை பொறுத்தவரையில் தானும் மீறுவதில்லை மீறுபவர்களையும் பொறுத்துக் கொள்வதில்லை.  ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது.  காரணம் பிரபாகரனை எதிர்ப்பவர் எவரும் உயிருடன் வாழ முடியாது என்ற குற்றச்சாட்டுக்கும் சில விளக்கங்கள்.

தொடக்கத்தில் இயக்கத்தை புணர் நிர்மாணம் செய்தவர்களில் முக்கியப் பங்காற்றியாற்றியவர் ராகவன்.  இவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  பிரபாகரனுக்கு சிகரெட்டின் வாடை கூட பிடிக்காது.  மரியாதையின் காரணமாக அனுமதித்த முதல் நபர் ராகவன்.  இவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து பின்னாளில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்.  பின்னால் வந்த ஆன்டன் பாலசிங்கம் கூட இந்த சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தவர். இறுதிவரையிலும் இவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை பிரபாகரன் பொறுத்துக்கொண்டார் என்பது அடுத்த ஆச்சரியம். இதன் தொடர்ச்சியாக பின்னால் வரப்போகும் மாத்தையா முதல் கருணா வரைக்கும்.  பிரபாகரன் நினைத்து இருந்தால் கருணா ஒரு பொருட்டே அல்ல.  பொட்டு அம்மன் சொல்லியும் கேட்காத பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியது ஏறக்குறைய உயிர்ப்பிச்சை. காரணம் கருணாவின் வீரம் அந்த அளவிற்கு பிரபாகரனை ஆளுமை செய்து இருந்தது.  எப்போதே தோன்றும் இந்த இரக்க உணர்வு தான் மொத்த வாழ்க்கையையும், தமிழர்களின் வாழ்வுரிமையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது?

மாத்தையா மீது பொட்டு அம்மன் உளவு அறிந்து கொண்டுவரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்த போதிலும் அவர் தரப்பு அத்தனை வாத பிரதிவாதங்களையும் அனுமதித்து பிறகு தான் தண்டணை நிறைவேற்றப்பட்டது.  முதன் முறையாக மொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை வாசிக்கப்பட்டது.

ஒரே காரணம் திறமையாளர்களின் பங்களிப்பு என்பது சில சமயம் பாறை மனதில் விதை முளைக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரம்.

மாத்தையாவின் விசுவாசம் என்பதும், அவருடைய திறமை என்பது அளவிடற்கரியது.  ஆயுதப்பயிற்சிக்காக பிரபாகரனை தமிழ்நாட்டில் வைத்து ரா உளவுத்துறையுடன் நேரிடையாக சந்திக்க வைக்க ஆன்டன் பாலசிங்கம் முயற்சித்த போது, அப்போது தி நகரில் காவல்துறை பிரச்சனைகளும், பின்னாளில் இலங்கைக்குச் சென்றதும், இதன் தொடர்ச்சியாக காவல்துறை மீண்டும் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்த பிரபாகரன்,  ஆன்டன் பாலசிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.  மீண்டும் அழுத்தம் கொடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க பிரபாகரன் சார்பாக தமிழ்நாட்டுக்கு வந்தவர் மாத்தையா.  வேலை முடிந்தது மாத்தையா அன்று பாலசிங்கத்திடம் சொன்ன வாசகம் இது.

" தலைவருக்கும் ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்"

இதே இந்த மாத்தையா கூட உளவுத்துறையின் திருவிளையாடல் காரணமாக மரணிக்க நேர்ந்தது. பின்னால் வரும் சம்பவங்கள் மூலம் அதை கண்டு உணரலாம்.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே?  Why Should I Compromise?

இரண்டாவது சிறீ சபாரெத்தினம்.

பிரபாகரனின் தொடக்க போராட்ட காலத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த போது குட்டிமணி தங்கதுரை உருவாக்கி இருந்த டெலோ இயக்கத்தில் தான் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தார் என்று சொல்வதை விட பிரபாகரன் திறமைக்காக அவர்களே இவரை அழைத்தனர் என்பது தான் உண்மை.  வயதில் சிறியவர் என்பதால் செல்லமாக அழைக்கப்ட்ட தம்பி என்ற பெயரே காலம் முழுக்க நிலைபெற்றது. சொல்லப்போனால் அவர்களுடன் போய் பணியாற்றிய போது, துப்பாக்கிகள் பற்றிய முழுமையான அறிவு, இயக்கத்திற்கான மொத்த எதிர்கால நோக்கங்கள் என்று எல்லாமே கற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்தது.  ஆனால் தன்னுடைய மனதில் அடைகாத்து வைத்திருந்து, தனக்கு பிடித்தமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட மனதில்லாமல் பின்னாளில் உமா மகேஸ்வரனை இணைத்துக்கொண்டு தனக்குச் சமமான பதவியையும், மரியாதையும் அளித்து மொத்தமாக தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதில் உறுதியாய் இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் "பிரபாகரன் சர்வாதிகாரி" என்று ஒவ்வொருவரும் ஒதுங்குவதும், தூற்றுவதும் நடந்து கொண்டுருந்த போதிலும் தன்னுடைய பாதையில் மட்டும் கவனமாக முன்னேறிக்கொண்டுருந்தார்.  அடுத்த வேளை சோற்றுக்குக்கூட கடினமாக வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம் அது.  ஆனால் வெளியேறிவர்கள் தூற்றுதலை அதிகப்படுத்தியதும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் மொத்தமாக பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பிய போது, எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருந்த போது தான் எதிரிகளை நோக்கி பிரபாகரனின் துப்பாக்கி ரவை பேசியது.

ஆனால் டெலோ இயக்கத்தில் சிறீ சபாரெத்தினம் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு சில காரணங்கள்.  தொடக்கம் இப்படித் தான் தொடங்கியது.
TELO FLAG
" 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலைப்புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் சிறைபிடித்தது.  அதில் இருந்தவர் சிறீ சபாரெத்தினத்தின் உறவினரும், பிரபாகரனின் வலது கரமான மட்டக்களப்பு மேஜர் அருணா கொல்லப்பட்டார்.  அதன் துக்க சுவரெட்டிகளை டெலோ இயக்கத்தினர் கிழித்து எறிந்ததும், கடையடைப்பு நடத்திய மக்களை மிரட்டியதும், இதைக் கேட்கப் போனவர்களை உதைத்து அனுப்பியதும், சிலரை (லிங்கம் )சுட்டுக்கொன்றதும் நடந்தது".

ஆனால் விடுதலைப்புலிகளின் கோட்பாட்டின்படி பிடிபடும் போது சயனைடு சுவைத்து உயிர் இழப்பது தான் கொள்கை.  அதையும் மீறி அருணாவை இராணுவத்தினர் உயிருடன் தான் பிடித்து வைத்து இருந்தனர்.  ஆனால் அதுவரைக்கும் டெலோ மேல் கொண்டுருந்த கசப்பான நிகழ்வுகள் இதை தொடக்கமாக வைத்தும், ரா உளவுத்துறையுடன் கொண்டுருந்த நெருக்கமான புரிந்துணர்வுகளுக்காக காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார் என்பது தான் முற்றிலும் உண்மையாக இருக்க முடியும். மேலும் அவர்களின் தினசரி மோசமான நடவடிக்கைகள் அத்தனையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுருந்தது.

கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது.  இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.
எண்ணம் உள்ளே இருந்ததை வெளிக்கொண்டு வர உதவியதும், அதுவே இறுதியில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட உதவியதும் என்று நடந்தேறியது.  இரண்டும் முக்கியக் காரணம். பிரபாகரனின் சுயநலமும் மக்களின் பொதுநலமுமாக, டெலோ இயக்கம் முடிவுக்கு வந்தது.

டெலோ அழிக்கப்படாமல் இருந்தால் என்ன நடந்து இருக்கும்?                                                                

ரா உளவுத்துறையின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக தொடக்கம் முதலே வலுப்பட்டு இருக்கும்.

                                                                                                சிறீ சபாரெத்தினம்                                                                                      
இலங்கைக்கும், பிரபாகரன் இயக்கத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து இருக்கும்.

இயக்கத்தின் கொள்கைகள் என்று மொத்த நாலாந்தரமான அத்தனை கீழ்த்தரமாக செயல்பாடுகளும் நடந்தேறி மொத்த மற்ற போராளிகுழுக்களுக்கும் உலக மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கும்.

பிரபாகரன் இலங்கையுடன் போராடி ஜெயிப்பதை விட இவர்களைப் போன்றவர்களிடம் போராடுவதும், பின்னடைவுகளை சந்திப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுருந்துருக்கும்.  பின்னாளில் பெற்ற பிரபாகரனின் மகத்தான வளர்ச்சி என்பது வெறும் கற்பனையாக இருந்துருக்கலாம்.
காரணம் தொடக்கம் முதல் கடற்கரையோரமாய் வாழும் மக்கள், மொத்த முஸ்லிம் மக்கள் என்று இலங்கையின் குறிப்பிட்ட சாரரிடம் பிரபாகரன் செல்வாக்கு வளரவில்லை என்பது முக்கியம் போல அந்த மொத்த மக்களும் பிரபாகரனை அந்த அளவிற்கு வெறுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து மிஞ்சியுள்ள இயக்கங்கள்?.

7 comments:

சுடுதண்ணி said...

அருமையானப் பகிர்வு.. வாழ்த்த வயதில்லைன்ற மாதிரி.. சொல்றதுக்கு வார்த்தையில்லை. சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் :).

ஜோதிஜி said...

நன்றி நவிழ்தல்.

வெத்து வேட்டு said...

didn't ltte ever kidnap anyone and receive ransoms?
you are just white washing ltte and Praba
Praba was as much as a scoundral like anyothers you mentioned above..
you know the truth :)

பின்னோக்கி said...

எவ்வளவு காரணங்கள் இருப்பினும் பல உயிர்கள் பரிதாபமாக பறிக்கப்பட்டது :(

satheshpandian said...

யாருங்க இந்த வெத்துவேட்டு...
லூசு மாதிரி கேட்குறான்...
உண்மையில ஒன்னும் தெரியாம கேட்குறானா.. இல்லை அவனா இவன்...

துப்பாக்கி தூக்கியவர்கள் எல்லாம் புலிகள் இல்லை.

ஜோதிஜி said...

அவனா இவன்?

வடிவேல் எந்த அளவிற்கு தாக்கம் பெற வைத்துள்ளார்?

விடுதலைப்புலிகள் குறித்து மொத்தப் புரிதல் இந்திய அமைதிப்படை உள்ளே இருந்த போது தொடக்கம் முதல் பிரபாகரனை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்ட ஜேஎன் தீட்சித் இறுதியில் எவ்வாறு தன் புத்தகத்தின் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளோர் என்பதை உள்வாங்கும் போது அவருக்கு சில விளக்கங்கள் கிடைக்கும்.

Barari said...

vinai vithaiththavan vinai aruppaan.enbathu pirabakaran vdayaththil unmaiyaaka pattu vittathu.