Showing posts with label 2013. Show all posts
Showing posts with label 2013. Show all posts

Monday, December 23, 2013

கணக்குபுள்ள மமோ காரியவாதி நமோ

நினைவுகள் 

சிறு வயதில் விரும்பிய இனிப்பு, உடைகள், மிதிவண்டி, சாகசங்கள் பதின்மவயதில் விரும்பிய ஆசைகள், அலங்காரங்கள் எல்லாமே திருமணம் என்ற முற்றுப்புள்ளியோடு நின்றுவிடுகின்றது. திருமணத்திற்குப் பிறகு தேடியலையும் ஒவ்வொரு விசயங்களும், விரும்பியவைகள் அனைத்தும் குறிப்பிட்ட நிலையில் நமக்கு அலுப்பைத் தந்து விடுகின்றது. ஒவ்வொன்றும் மாறி மாறி நம்மை விட்டு விலகிச் சென்று எது ஆசை? எது வாழ்க்கை? என்று தேடல்களாக மாற்றம் பெறுகின்றது.

நாம் தேடிய அனைத்தும் நினைவுகளாகவே நின்று விடுகின்றது. கொண்டாட்ட மனோநிலை மாறி கொண்டாடப்படுவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக மாறிவிடுகின்றோம். 

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால் மனதின் வலிமை என்ன? என்பதை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. சுக துக்கங்களை மனதின் உள்ளே அனுமதிக்காமல் வெளியே வைத்து வேடிக்கை பார்க்க முடிந்துள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நம்மை நாமே உணர்வது எப்படி? என்பதை இந்த வருட அனுபவங்கள் உணர்த்தியுள்ளது.

உணவின் ருசியைத் தவிர மற்ற அனைத்தும் நகர்ந்து போய்விட்டது. அடுத்த வருடம் இந்த ருசியின் தன்மை மாறிவிடக்கூடும். 

பரிசோதனை எலிகள் 

ஒரு வகையில் பார்க்கப் போனால் நாம் அனைவரும் யாரோ ஒருவரின் பரிசோதனைக்குரிய எலிகள் தான். ஒவ்வொரு சமயமும் நம்மை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பரிசோதனைகள் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். பல சமயம் பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாற முடிவதில்லை. நாம் எதிர்பார்க்கும் நபர்களும் நாம் விரும்பும் அளவிற்கு மாறிவிடுவதில்லை. வருடந்தோறும் வாழும் சூழ்நிலையின் காரணமாக நம்முடைய சிந்தனைகளும் மாறும் என்பது தற்போது மாறி விட்டது. மாதம் தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். 

முக்கியக் காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம். இல்லாத ஆசைகளை உருவாக்குகின்றது. இருக்கின்ற ஆசைகளை மேலும் வளர்க்கின்றது. சென்ற மாதம் நன்றாகத்தானே நம்மிடம் பேசினாரே? அதற்குள் ஏன் ஒதுங்கிச் செல்கின்றார் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். பணம் மற்றும் பணம் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே இங்கே உறவை வளர்க்கின்றது பலசமயம் முறிய காரணமாக இருக்கின்றது.

மன்மோகன் சிங் 

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு முக்கியக் காரணம் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவான ஆட்சி மாற்றமும் பிரதமராக இருந்த நரசிம்மராவின் தீர்க்கதசரினமுமே ஆகும். இதனால் நல்லதும் கெட்டதும் அதிக அளவு நடந்துள்ளது. மொத்தத்தில் நாம் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டமாக மாற்றியுள்ளோம். ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வந்த பிறகே நடுத்தரவர்க்கத்தின் முகச்சாயல் மாறத் தொடங்கியது.

படித்தவர்களுக்குப் பலதரப்பட்ட வாய்ப்புகள் உருவாகத்தொடங்கியது. நரசிம்மராவின் மொழிப்புலமை, அறிவுக்கூர்வை, பழுத்த அரசியல் அனுபவம் பற்றி இந்திய அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆட்சிக்கு வந்த நரசிம்மராவுக்கு அப்போது அவர் சொல்வதைச் செய்ய ஒரு கணக்குப்பிள்ளை தேவைப்பட்டது. அப்போது கிடைத்தவர் தான் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். நிதி அமைச்சராக மாறினார்.

இந்திய அரசியலில் ஒரு வினோதம் உண்டு. அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களாக இருக்க வேண்டும்.அதிகாரிகளை வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறிக் கொண்டேயிருக்கும் அரசியல் சூழலையும் சமாளித்து பதவியையும் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். 

கம்பி மேல் நடக்கும் கதை தான். 

பம்பாயில் நடந்த பயங்கரக் கலவரத்தையும், பாபர் மசூதி இடிந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டவர் நரசிம்மராவ். ஊர்கூடி உதிரிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தேர் இழுத்து இவரை பிரதமராக உட்கார வைத்தது அதிர்ஷடம் என்றால் இவரோ கடைசி வரைக்கும் சமாளித்து முழுமையாக ஆட்சி காலத்தையும் ருசித்தவர் என்கிற வகையில் ஆச்சரியப்படுத்திய அரசியல்வாதி.

ஆனால் இவரின் கடைசிக் காலம் கொடுமையானது. மகன்கள் உருவாக்கிய கேவலங்கள் ஒரு பக்கம். ஆந்திரப் பிரதேச பாடப்புத்தகங்களில் நரசிம்மராவ் குறித்து வந்த பாடங்களை நீக்கும் அளவிற்கு அவமானப்பட்டு இறந்தார். இப்போதுள்ள காங்கிரஸ் சூழ்நிலையில் "கணக்குபுள்ள" மன்மோகன் சிங்கின் கடைசிக் கால வாழ்க்கையும் இதே போலத்தான் மாறப்போகின்றது. 

நரேந்திரமோடி

பிரதமராக நரேந்திரமோடி வரக்கூடாது என்பவர்கள் அவர் மதவாதி என்றும், கோத்ரா கலவரத்தையும் உதாரணம் காட்டுகின்றார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சி செய்த மாநிலங்களில் நடந்த மதவாத கலவரங்களின் பட்டியல் மிக நீளமானது.

இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் நரேந்திர மோடி. காரணம் அலட்டிக் கொள்ளாமல் தான் நினைத்தவற்றைப் படிப்படியாக அடைந்தவர். அவர் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை அடைவதற்கு அவரின் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குள்ளே இருந்த குழிபறித்தல்களை உடைத்து வந்தவர். 

பா.ஜ.க. கட்சியைத் தொடக்கம் முதல் தங்கள் கைக்குள் வைத்திருந்த லாபி மக்களைப் படிப்படியாக ஆட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்து மேலே வந்தவர். நிதின் கட்காரியை ஓரே அடியாக அடித்துச் செல்லாக்காசாக மாற்றிய தந்திரசாலி.

அதன் பிறகே ஒவ்வொரு மாறுதல்களும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. 

சமூக வலைதளங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்திரங்கள், மீடியாக்களின் பார்வையைத் தன் மேல் எப்போதும் இருக்கும்படி உருவாக்கிக் கொண்டது என்று ஒவ்வொரு படியாக ஏறிவந்துள்ளார். இவர் பிரதமராக வந்தால் ஆர்.எஸ்.எஸ் ன் கட்டுப்பாட்டில் தான் செயல்பட முடியும் என்கிறார்கள். 

நிச்சயம் அப்படியே இருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அத்தனை லாபிகளையும் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சோனியாவின் 'அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு'ச் சரியான போட்டி இவரின் அதிர்ஷ்டமும். 

எப்படி என்று கேட்காதீர்கள்? 

சில வருடங்களில் இது நடந்தால் அப்போது இந்தப் பதிவில் வந்து மீண்டும் மறுமொழி வாயிலாக வந்து சொல்லுங்களேன்.  அதுவரையிலும் என்னையும் "அடிப்படை ஹிந்துவ மதவாதி" என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டு செல்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

விஜயகாந்த்.

தமிழக அரசியல் சரியான இடத்திற்கு வந்து விடுவார், வளர்ந்து விடுவார் என்று சொல்லப்பட்ட வைகோ உணர்ச்சி பூர்வமான அணுகுமுறைகள் மற்றும் தெளிவற்ற கொள்கையினால் காணாமல் போனார். தொடக்கம் முதலே மருத்துவர் ராமதாஸ் என்றால் சாதீ என்ற கோரப்பல் துருத்திக் கொண்டு தெரிய குறுகிய வட்டத்திற்குள்ளே நிற்க வேண்டியதாக இருந்தது.  வன்னியர் சாதியில் இருப்பவர்களின் மொத்த ஆதரவும் அவருக்கு கிடைத்து இருந்தாலே அவர் பெரிய சக்தியாக வளர்ந்திருக்க முடியும்.

ஆனால் வன்னியர்கள் கூட தேர்தல் சமயத்தில் திமுக, அதிமுக என்ற ஏதோ ஒரு வட்டத்திற்குள் அடைக்கலமாகி விடுவதால் மருத்துவர் ராமதாஸ் இன்னமும் ஏதோவொரு கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றும் என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றார். வைகோ வும் பா.ஜ.க ஜீப்பில் நம்மை ஏற்றிக் கொள்வார்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றார்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான சக்தியாக ஒற்றுமையாக இருந்து தங்கள் இனத்திற்காக ஒன்று சேர்ந்து, கூட்டணி சக்தியாக மாறியிருந்தால் தமிழ்நாட்டில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்க முடியும்.  3013 ஆனாலும் இதற்கு வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஏற்கனவே விரிவாக சொன்னபடி இவர்களை விட விஜயகாந்திற்கு தமிழக அரசியலில் நிறைய வாய்ப்புகள் இருந்தது.  திமுக, அதிமுக விற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் உருவாகி விடும் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால் இன்று கதாநாயகன் வில்லன் வரிசையில் தேவைப்படும் கோமாளி போலவே இவரை இன்று ஊடகங்கள் சித்தரிப்பதும், இவரும் தன்னுடைய வெளிப்படையான பேச்சால் செயல்பாடுகளால் அதையே உண்மையாக்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

"மாற்று அரசியல் பார்வை" என்பதற்கும் "மாற்றுக்கட்சி" என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை அர்விந்த் கெஜரிவால் பெற்ற வெற்றிக்குப் பின்னால் அவர் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளைப் பார்த்து இவர் இனியாவது கற்றுக் கொள்வாரேயானால் பிழைத்துக் கொள்வார் என்றே நினைக்கின்றேன். விகா வின் குடும்ப அரசியல் முக குடும்பம் கொடுத்த பரிசுகளைத் தான் கொடுக்கப் போகின்றது என்றே நினைக்கின்றேன்.

பழைய குப்பைகள் கழிந்து புதிய கொள்கைகள் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி அத்தியாயத்தை தொடங்கி விடாதா? என்ற எண்ணத்தில் இருக்கும் எனக்கு இந்த வருடம் திமுக, அதிமுக கட்சியில் உள்ள இணைய நண்பர்கள் என்னை "கொலவெறி பட்டியலில்" சேர்த்து இருக்கின்றார்கள் என்பதே யான் பெற்ற பலன். நான் எழுதிய, பகிர்ந்த செய்திகளுக்கு, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு என் தைரியத்தை ஆச்சரியத்துடன் கவனித்து வந்து அழைத்து பாராட்டிய கடிதம் வாயிலாக தெரிவித்த நட்புகளுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

படங்கள்

கூகுள் கூட்டலில் தொகுத்து வெளியிடப்பட்ட 2013 கதைகள் சொல்லும் படங்களை சொடுக்க ரசிக்க  ரசிக்க 2

(அடுத்த வாரம் வெளியிடப்படும் இந்த மின் நூலை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து எல்லாவித நவீன தொழில் நுட்ப வசதிகளின் மூலமும் நீங்கள் வாசிக்க வாய்ப்புள்ளது.) http://freetamilebooks.com/

படித்ததும் யோசித்ததும்

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள்.   

வளர வளர அதை மறந்தும் போனாள்.  வெற்றிமிக்க இளம் பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது.   எழுத்துக்கள் மங்கியிருந்தன. காகிதம் இற்றுப்போயிருந்தது.  

ஆனால்,  அவளுக்கு இப்போது தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் மங்கியிருந்தன.  

நம்மை உணர்வதே நல்லது.


தொடர்புடைய பதிவுகள்




Saturday, December 21, 2013

ஊரெல்லாம் மினுமினுப்பு 2013 .

கடந்த சில மாதங்களில் பல முறை ஊர்ப்பக்கம் சென்று வந்த போது இந்த வருட மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதில் சிலவற்றை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன். 
மிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. பேரூந்து நிலையத்திலிருந்து வண்டி கிளம்பும் வரைக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் கூவிக்கூவி அலைத்தாலும் மக்கள் கட்டணம் அதிகமென்றாலும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தான் விரும்புகின்றார்கள்.  

திருப்பூர் முதல் திருச்சி வரைக்கும் செல்லும் வண்டிகளில் பாதித் தூரம் கடந்த பின்பு தனியார் பேரூந்துகள் நிறுத்தாத இடங்களில் நிற்கும் மக்கள் மூலம் அரசு வண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அமைச்சர்களும் தற்போது தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். 

ற்போது பயன்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறை பேரூந்துகளை காயலான் கடையில் விற்றால் கூட ஐம்பதாயிரம் கூடத் தரமாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் டயர் பழுதுபட்டு நின்று விடுகின்றது. வாகனங்களில் இருக்க வேண்டிய ஸ்டெப்னி, புது டயர்கள் இது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பயணித்தவர்களை அடுத்து வரும் வண்டிகளில் ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள். மழை பெய்யும் போது பேரூந்தின் உள் பகுதி முழுக்க ஓழுக ஒட்டுநர் பகுதி மட்டும் கொஞ்சம் நனையாமல் இருக்கின்றது. 

திருச்சி முதல் காரைக்குடி வரை செல்லும் சாலைகள் அனைத்தும் புதுப்பெண் போல மினுமினுப்பாய் அழகாய் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது. நாம் பார்க்கும் மற்ற வாகனங்கள் குறைந்தபட்சம் மணிக்கு என்பது கிலோமீட்டர்க்குக் குறைவில்லாமல் வேகத்தில் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

ரு நகர்புறத்தில் தொடகும் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் சாலை வசதிகள் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது. கையில் காசிருந்தால் மட்டுமே இனி தனி நபர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் பயணிப்பது சாத்தியமாக இருக்கும். 
ரங்களே தேவையில்லாத தமிழ்நாடாக மாறியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் உபயத்தால் பயன்படாமல் கிடந்த நிலங்களின் விலைகளும் தாறுமாறாக ஏறியுள்ளது. விற்பவர்களைவிட இடைத்தரகர்கள் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். 

ர்நாடகாவில் மழை பெய்து உபரி நீராக அவர்களுக்குத் தேவையற்றதாக மாறும் போது மட்டும் திருச்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீரைப் பார்க்க முடிகின்றது. குளித்தலை பகுதிகளில் வாங்கும் வாழைப்பழத்தின் அளவு மிக மிகச் சிறியதாக மாறியுள்ளது. 

யணித்த பாதையில் சாலையின் இருபுறத்திலும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை "ஆள்பிடிக்கும்" வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். 
"நூறு நாள் வேலைத்திட்டம்" சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.கிராமத்தில் வசதியுள்ளவர்களை தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். 

ற்பொழுது உணவு, உடை இரண்டுக்கும் எவரும் கஷ்டப்படவில்லை. உறைவிடம் என்பதற்கு மட்டுமே "தங்களுக்கென்று ஒரு வீடு" என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். பஞ்சம் என்ற வார்த்தையின் தன்மை அறியாத புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெகு விரைவில் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமே பல புதிய திருப்பங்களை இங்கே உருவாக்கக்கூடும். 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழி பழங்கதையாகி விட்டது. தனித்த சிந்தனைகளில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்றார். தொழில் நுட்ப வசதிகளும், அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியுள்ளது. 
றவுகளில் சிதைவு என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. மன அழுத்தமும், கவலைகளும் அதிகமானாலும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தினராகவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்."தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற எண்ணம் மெதுமெதுவாக ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

ணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை. அதற்கான நேரமும் இல்லை. 
சிறிய நகர்ப்புற பகுதிகள், கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் "எம்.ஜி.ஆர் மேலிருக்கும் பாசத்தைத் தங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை" என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் என்பது அவர்களின் ஆழ்மனதில் நீக்கமுடியாத இடத்தில் உள்ளது. ஆனால் "ஜெயலலிதா தகுதியானவர் இல்லை" என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை. 
டித்தட்டு,கிராமப்புற மக்களிடம் இன்று வரையிலும் கலைஞரால் எந்த நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்க முடியவில்லை. 
ள்ளடங்கிய கிராமங்களில் இன்னமும் அரசியலை வெட்டி அரட்டைக்காக விவாதிக்கின்றார்கள். இன்றைய உண்மையான நிலவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. தொலைக்காட்சி என்றால் சினிமாவுக்கு மட்டும் தான். 
ற்று விபரம் தெரிந்தவர்களும் அரசியல் குறித்துத் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்ராயங்கள் வைத்துள்ளார்களே தவிர அரசின் ஊழல் குறித்தோ, அதிகப்படியான விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை. 
விலைவாசி உயர்வை கவலைப்பட்டு ஒவ்வொருவரும் பேசுகின்றார்கள். அதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்துக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை. 
மேலே என்றால் காங்கிரஸ் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால்  பீ சிதம்பரத்தைப் பற்றிப் பேசினால் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார்கள். 
ரேந்திர மோடி குறித்து முழுமையாக கிராமம் அளவுக்கு வந்து சேரவில்லை. அரசியல்வாதிகளை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடவே விரும்புகின்றார்கள். 

விதி என்பதை ஆழமாய் நம்புகின்றார்கள். அது தான் இன்றைய வாழ்க்கை என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் மனதில் இறைபக்தி மாற்ற முடியாத இடத்தில் உள்ளது. அதை விட தான் சார்ந்துள்ள சாதிப்பற்று அதிகமாகவே உள்ளது. 
தாங்கள் எதிரே பார்க்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் எவர் மனதில் எந்த மாறுதல்களையும் உருவாக்குவதில்லை. "தன் விதி தன்னை இப்படி வாழ வைக்கின்றது" என்ற கொள்கையே பணக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்வம் சேர்க்கத் தூண்டுகின்றது. ஏழைகளை மேலும் மேலும் ஏழையாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது. 
புதுக்கோட்டை ராஜவீதியில் காலையில் ஐந்து மணிக்கு ஒரு பெரிய டீக்கடையில் டீ குடித்து விட்டு அடுத்த ஒரு மணிநேரமும் அங்கு வருபவர்களை (ஏறக்குறைய 100 பேர்கள்) கவனித்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தினந்தந்தியை பார்க்கின்றார்கள். கவனிக்கவும் படிக்கின்றார்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிக்கும் முக்கியமான விசயமாகத் துணுக்குச் செய்திகளும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. அதையும் முழுமையாகப் படிப்பதில்லை. அப்படியே மடித்துக் கூட வைக்காமல் குப்பை போல அருகே போட்டு விட்டு சென்று கொண்டேயிருக்கின்றார்கள். இன்று வரையிலும் தெளிவான உண்மையான வாசிப்பு அனுபவம் இல்லாத தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைகள் வெறும் கானல் நீரே.
ன் பார்வையில் சிவகங்ககை, புதுக்கோட்டை என்ற இரண்டு மாவட்டங்களில் நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது மக்கள் எப்படி இருந்தார்களோ இன்றும் சிந்தனையளவில் இருக்கின்றார்கள். கட்டிடங்கள், ஆட்கள், வண்டிகள், வாகனங்கள் என்று பல வகையில் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆசைகளும் விருப்பங்களும் மாறியுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் என்ற பெயரில் அவரவர் கட்டியுள்ள வீடுகளும், தாங்கள் வைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அளவுகோலாகக் கொண்டு தங்களை வெற்றி பெற்ற மனிதராக முன்னிறுத்துகின்றார்கள். 
பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன். 
"வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்" என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்றப் புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. 
வ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதைப் போலப் பல மடங்கு அரசு மருத்துவமனைகளில் கூட்டம் உள்ளது. ஆனாலும் பலரும் சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தன்னைப் பற்றி உணராமலும், தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்தைப் பற்றி உணர வாய்ப்பில்லாமல் இருப்பதால் எந்தக் கவலைகளும் பெரிதாக அவர்களைத் தாக்குவதில்லை. கவலைகள் இல்லாத மனம் இயல்பான ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 
மாறிக் கொண்டே வரும் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அது சினிமா என்ற வடிவமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். சிந்திக்கவே பயப்படும் சமூகத்திலிருந்து நாம் உடனடி மாறுதல்களை எதிர்பார்ப்பது தவறு. 
வ்வொரு குடும்பத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர்கள் உண்மையான சேவையை புரிந்து கொண்டிருக்கின்றது.  அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.  பேரன், பேத்திகளுடன் சண்டை போட்டுக் கொண்டே தாங்கள் விரும்பும் சேனல்களை மகன், மருமகள் உதவியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போல சிந்தனை ரீதியான மாற்றம் நிச்சயம் வரும். தங்களால் இனி இங்கு வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வரும் போது மட்டுமே. அப்போது முதலில் பாதிக்கப்படப் போகும் சமூகம் நடுத்தரவர்க்கமே.

உங்கள் கவனத்திற்கு




வரும் வாரத்தில் நான் வலைபதிவில் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் மின் நூலாக வெளிவரப்போகின்றது.  ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்.

இது குறித்து விபரங்கள் வரும் பதிவில் வெளியிடுகின்றேன்.

உங்களுக்கும் அது போன்ற எண்ணம் இருந்தால் இந்த இரண்டு தளங்களையும் பார்வையிடுங்கள். வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?






Wednesday, December 18, 2013

சந்துக்குள் சிந்து பாடலாம்.

நாம் வலைபதிவுகளில் என்ன எழுதுகின்றோம்? எதைப்பற்றி எழுதுகின்றோம்? என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். 

நீங்கள் வாழும் சமூகத்திற்கும், நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் இருக்கின்றதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு பிரச்சனையின் ரூபம் உச்சகட்டத்தை அடையும் போது நம் பார்வை என்ன? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும். நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

வலைபதிவுகளில் எழுதி பெரிதான எந்த மாறுதல்களையும் உருவாக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பத்திரிக்கைகளைப் படிப்பவர்களே குறைவு. இதில் வெகுஜன மக்களுக்குத் தெரியாத வலைபதிவில் எழுதுகின்ற சமாச்சாரங்கள் பொது மக்களுக்கு எங்கே தெரியப்போகின்றது?என்று மனதில் சோர்வு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்தப் பதிவு

பத்திரிக்கைகளில் உள்ள தகவல்களை வைத்து வலைபதிவுகள் எழுதிய காலம் மாறி தற்பொழுது வலைபதிவுகளில் வரும் விசயங்களை வைத்துப் பத்திரிக்கைகள் ஒப்பேற்றுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 

இந்த வருடம் எழுதியுள்ள சில பதிவுகள் மூலம் கற்றதும் பெற்றதும்

திருப்பூரில் உள்ள நண்பர் வினோத் இது குறித்து அவசியம் எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். சென்றவருடம் அக்டோபர் 30ந் தேதி எழுதிய பதிவு இது. 

சில மாதங்கள் கழித்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. 

கடைசியில் என்ன நடந்தது? 

சில வாரங்களுக்கு முன் இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்த போது அப்போது நண்பர் பந்து எழுதிய தீர்க்க தரிசன விமர்சனம் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. 

"இதை எதிர்த்து நீதி மன்றம் செல்ல முடியாதா? கொடுமை என்னவென்றால், கோர்ட் அரசு எடுக்கும் கொள்கை (கொள்ளை?) முடிவுகளில் தலையிடமுடியாது என்று பல சமயம் சொல்லிவிடுகிறது! 

(கேஸ் இருந்தால்) வெந்ததைத் தின்போம். விதி வந்தால் சாவோம் என்று முடிந்துவிடுமா நம் எல்லோரின் நிலைமை?"


"நான் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றி விடுவேன்" என்றார் ஜெயலலிதா. ஆனால் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரப் பற்றாக்குறை என்பதை யாவரும் அறிந்ததே. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தனது தகுதியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாநில முதல்வருக்கு இங்கே இருக்கும் வாய்ப்புகள் குறித்தோ? அதற்காக உழைக்க வேண்டிய தேவை குறித்தோ தெரியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மக்களின் சிரமங்களைப் பற்றித் தெரியாதவர்களைப் பற்றி, தெரிந்து கொள்ள விரும்பாதவர்களைப் பற்றி எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. சென்ற ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் "தனியார் மூலம் மின்சாரம் வாங்கினால் மட்டுமே தங்களுக்குச் சேர வேண்டியது கைக்குக் கிடைக்கும்" என்பதே இதன் அடிப்படைக் கொள்கை. மற்றபடி இது சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கொள்கையளவில் ஆமை வேகத்தில் நடக்கும்... நடந்து கொண்டேயிருக்கும். 

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும். தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தைப் பார்க்க முடியும். 


லரும் பல சமயத்தில் என்னை நோக்கி சுட்டிக் காட்டிய முக்கியக் குற்றச்சாட்டு, "ஈழ விவகாரங்களைப் பற்றி உணர்ச்சி அடிப்படையில் தான் எழுதுகின்றீர்கள். இது தவறு" என்றார்கள். 

குறிப்பாக நண்பர்களுடன் உரையாடியபோது, ராஜீவ் காந்தி படுகொலையில் தூக்குத் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பேரறிவாளன் குறித்துத் தகவல்களைத் தெரிந்து கொண்ட போது அப்போது அவர் அம்மாவின் நேர்காணலை பதிவு செய்து இருந்தேன். 

ராஜீவ் காந்தி படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் இந்த வழக்கில் உள்ள ஓட்டைகளைப் பற்றி வாய்த் திறந்தார். தற்பொழுது ராஜீவ் கொலை வழக்கில் "பேரறிவானனின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்து விட்டேன். பாவ மன்னிப்புத் தாருங்கள்" என்றார் சிபிஜ முன்னாள் அதிகாரி தியாகராஜன். 

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? 

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்னத் தவறுகூடச் செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான். 



டிசம்பர் 3 2013 அன்று இந்தோனேசியாவில் உலக வர்த்தக அமைப்பு மாநாடு தொடங்கியது. இந்தியாவின் சார்பாகத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்திய குழுவினருடன் கலந்து கொண்டார். 159 நாடுகள் கலந்து கொண்டனர். இந்தச் செய்தியை பத்திரிக்கையில் இந்த மாதம் படித்திருக்க வாய்ப்பிருக்கலாம். 

வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் உள்ள விவசாயப் பொருட்களை இரும்பு, எண்ணெய் போல வர்த்தகப் பொருளாக மாற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகளைத் தங்களது நிறுவனங்களுக்குச் சந்தையாக மாற்றவும் விரும்புகின்றது. இதற்காகத்தான் உலக வர்த்த அமைபு மூலமாக வேளாண் ஒப்பந்தம் போடப்படுகின்றது.இதன் மூலம் உள்நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்கள்,ஆதரவு என அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 

ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மானிய உணவுகளும் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை இந்தியாவில் கொண்டு விற்க தடையில்லா ஒப்பந்தம் உருவாக்கப்படும். 

தொடக்கத்தில் ஒப்புக்கொள்ள முடியாது என்ற முழங்கிய நம் வீராதி வீரர்கள் பாலித்தீவு தந்த "சுகத்தில்" நான்கு ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு நிறைவேற்றுவோம் என்று மறைமுக ஒப்புதல் கொடுத்து விட்டு வந்துள்ளார்கள். காரணம் காங்கிரஸ் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாராளுமன்றத் தேர்தலே. ஒரு வேளை வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாம் திருவோடு ஏந்த தயாராக இருக்க வேண்டும். 

எப்போதும் போல ஊடகங்கள் மூலம் இந்தியாவிற்கு வெற்றி என்ற கோஷத்தை முன்னிறுத்தியது. ஆனால் உண்மை நிலவரங்களைப் பற்றி விரிவாக எந்த மாநில கட்சிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.


உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள். 

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்களே? 

ஏன்? 

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தைத் தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்.