சற்று நேரத்திற்கு முன்பு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் சாலை ஓரத்தில் ஒருவர் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். காரணம் கேட்ட போது ஜியோ பைபர் (அவர் கிராமத்து மொழியில் பேசினார். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழர் சாலையில் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்) இந்தப் பக்கம் வரப் போகின்றது என்றார். ஒரு மணிநேரத்தில் சடசடவென்று வேலையை முடித்து கம்பம் நிறுத்தும் அளவுக்குத் தயார் செய்து விட்டார். ஜனவரி மாதம் முழுக்க திருப்பூரில் பல பகுதிகளில் ஜியோ 5ஜி தெறிக்க விடும் என்றே நம்புகின்றேன்.