Showing posts with label பத்திரிகையுலகம். Show all posts
Showing posts with label பத்திரிகையுலகம். Show all posts

Saturday, January 14, 2023

இன்றைய ஊடகங்கள் யாருக்காக?

 புரோட்டோகால் என்பது அரசு நிர்வாகத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு வார்த்தையாகும். 1967 வரைக்கும் இந்த வார்த்தையின் அடிப்படையில் தான் ஆட்சி அதிகாரம் இங்கே நடந்து கொண்டு இருந்தது. அதிகாரிகள் சொல்வதைத்தான் அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும் கேட்க வேண்டும். கேட்க முடியும். கேட்டுத்தான் ஆக வேண்டும். சட்டத்தை நாம் மீறக்கூடாது என்பார்கள். அதற்குள் நுழைந்து தான் காமராஜர் பலவற்றைச் சாதித்தார்.