Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Sunday, October 18, 2009

பிரபலங்களும் பதிவர்களும் கலந்து கொண்ட கண்ணீர் அஞ்சலிக்கூட்டம்

இறுதி கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்ள வந்த உங்களுக்கு இந்த நீள் பதிவு, சாப்பிட்ட தீபாவளி பலகாரத்தை,சிறப்பு திரைப்படத்தை,சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் பேட்டியை, செரிக்க வைத்துவிடும். கொண்டுள்ள கண் வழியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வேறு வழி இல்லை

ஹே ராம்.


மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் முடிவு பதிவு (51)

டெல்லியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவிக்கு பம்பாயில் இருந்து ஜிம்மி நகர்வாலா என்கிற துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தொலைபேசியில் தெரிவித்த கருத்து இது.

" ஏன்? எப்படி? என்று கேட்காதீர்கள்?  என்னுடைய உள் உணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.  காந்திஜியை கொலை செய்ய மற்றொரு முயற்சி நடக்கப்போகிறது.  இப்போது இங்கு நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது."

தொடக்கம் முதல் அக்கறையில்லாமலே காலத்தை கடத்திக் கொண்டுருந்த சஞ்சீவி என்ற உயர் அதிகாரி "என்னை என்ன செய்ய சொல்கீறீர்கள்? உடுப்புடன் எந்த காவர்களையும் உள்ளே பார்த்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்.  நான் என்ன செய்ய முடியும்? "என்றார்.

ஆனால் இந்த இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் தேவையான உண்மையான குற்றவாளிகளின் பெயர், புகைப்படம் போன்ற சகல விபரங்களுடன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த பூனா டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு. எச்.ராணாவின் மேஜையில் தயாராக இருந்தது.  யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், இத்தனை பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அன்று தான் பணியில் சேர்ந்து இருந்தார்.

நுழைந்த நாளில் அத்தனை கோப்புகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டுருந்தார்?

1948 ஜனவரி 30 காந்திஜியின் கடைசி தினம்.  அன்று அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய ஸ்லோகத்தின் பொருள் இது.

"பிறந்தவர்களுக்கு மரணம் உறுதி.  இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பது உறுதி.  ஆகையினாலே தவிர்கக இயலாதவற்றைப் பற்றி நீ துயரப்படலாகாது"

அன்று மாலை காந்திஜி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டுருந்தார்.  ஐந்து மணிக்கு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டியவர் அன்று பேசிக்கொண்டுருந்ததால் நேரம் போவதே தேரியவில்லை.  எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த போது மணி ஐந்து பத்து.

"நேரமாகி விட்டது.  பிறகு சந்திப்போம்" என்று அவசரமாக கிளம்பினார்.



மறுபடியும் விதியின் விளையாட்டு?

எப்போதும் அருகில் இருக்கும் சுசிலா நய்யார் பாகிஸ்தான் பயண ஏற்பாட்டுக்கு சென்று இருந்தார்.  எப்போதும் அவர் மேல் அக்கறையாக சாதாரண உடையில் காந்திஜியின் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்த டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்குப் பதிலாக இப்போது மற்றொரு அதிகாரி.

யார் காரணம்? காந்திஜியா? நேருவா? ஜின்னா சாகிப்பா? மவுண்ட் பேட்டன் பிரபுவா? கோடு கிழித்த ஆங்கிலேய கணவானா?  பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நேற்று கோடியில் புழங்கிய அடுத்த நாள் புழுங்கியவர்களின் அவஸ்த்தை பேரணி இது.  நாதுராம் கோட்ஸே தொடக்கத்தின் மூலம் இது.  காந்திஜியின் இறப்பு நிர்மூலத்தில் இதுவும் ஒரு காரணம்?

அந்த மாலை வேலையில் அவரும் அவசரமாக கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்திற்காக வெளியே சென்று விட்டார்.

மனுகாந்தி, ஆபாகாந்தி தோளில் கைப்போட்டுக்கொண்டு சென்ற போது பாதையில் இருந்தவர்கள் இரண்டு புறமும் விலகி வழிவிட்டனர்.  அதுவரையில் ஒரு ஓரமாக அத்தனையும் கவனித்துக்கொண்டுருந்த கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்தவனாக பின்னால் இருந்து சுடுவதை விட முன்னால் நேருக்கு நேர் நின்று சுடுவது எளிது என்று நினைத்து இரண்டே எட்டி முன்னே பாய்ந்து சென்றான்.



வணங்குகிறேன் ஐயா.  வாழ்த்துகிறேன் தாத்தா.  உங்கள் பணியை நீங்கள் முடித்துக்கொள்வதாக தெரியவில்லை.  உங்களை வழி அனுப்ப எனக்கு வேறு வழியும் தெரியவில்லை.  உள்ளே என்னுள் எறியும் தீக்குஎத்தனை மக்களின் விழிநிரைக்கொண்டு ஊற்றி அணைக்க முடியும்? சொல்லாமாலே உணர்த்திய நாதுராம். 

பாதைக்கு நடுவில் நின்றவன் வந்து கொண்டு இருந்த காந்திஜியை பார்த்து "
நமஸ்தே காந்திஜி"  என்றான்

கொண்டு வந்து இருந்த பைபிளில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து கூப்பிய கரங்களுக்குள் வைத்திருந்தான்.  அவன் காந்திஜியின் காலில் விழுந்து வணங்கப்போகிறான் என்ற பயந்த மனுகாந்தி அவசரமாக " சகோதரரே விலகுங்கள்.  பாபுஜிக்கு ஏற்கனவே பிரார்த்தனைக்கு தாமதமாகிவிட்டது  "என்றார்.

அதே வினாடி நாதுராம் வினாயக கோட்ஸேயின் இடது கரம் மின்னல் வேகத்தில் நீண்டு அவளை முரட்டுத் தனமாக விலக்கித் தள்ளியது.  வலது கரத்தில் இருந்து நீண்ட பெரட்டா துப்பாகியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குண்டுகள் கிளம்பி காந்திஜியின் மார்பில் புதைந்தன.




கோட்ஸேவுக்கு பதில் வணக்கம் தெரிவிகக குனிந்த கரங்கள் அப்படியே இருக்க "ஹே ராம்"  என்று திணறிய காந்திஜி இன்னும் முன்னால் செல்ல முயற்சிக்கின்றவரைப் போல மேலும் ஒரு அடி முன்னால் வைக்க முயற்சித்த உயிரற்ற உடலாகக் கீழே சரிந்தார்.

ஆம் காந்திஜி என்ற அந்த எளிய மனிதரோடு அஹிம்சை, சத்தியம், உண்மை அத்தனையும் சரிந்தது.

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்கிற பத்திரிக்கை முதல் பக்கத்தை காலியாக கருப்புக் கட்டம் போட்டு நடுவில் ஒரே ஒரு பாரா அளவுக்கு செய்தி வெளியிட்டு இருந்தது.

" காந்திஜி எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அவர்களில் ஒருவனால் கொல்லப்பட்டு விட்டார்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட அதே வெள்ளிக்கிழமையன்று, 1915 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது சிலுவையேற்றம் நடந்துள்ளது.  ஆண்டவனே, எங்களை மன்னித்து விடு."

பின்குறிப்புகள் அல்லது எழுத்தில் வராத விசயங்கள்

1. காந்தியின் நோக்கங்கள், கொள்கைகள், தனிப்பட்ட வாழ்வில் கடைசி வரையிலும் கடைபிடித்தவைகள், மகனிடம், பேரனிடம் காட்டிய கண்டிப்பின் விளைவாக இழந்தவைகள், மற்ற நகைச்சுவை சமாச்சாரங்கள்.  ஆனால் மொத்தத்தில் அவர் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை உணர்த்தக்கூடிய உள்வாங்கக்கூடிய குறியீடு அல்ல.  தவமில்லா பெற்ற வரம்.  அதனால் தான் சாபக் கணக்கில் வரவு வைத்தோம்.

2. ஜின்னா சாகிப் அவர்கள் பாகிஸ்தான் என்ற தன்னுடைய கனவு கைக்கு வந்ததும், புதிய பாகிஸ்தானின் தொடக்க தேசிய கீதத்தை இவர் தான் இயற்ற வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்த ஒரு இந்துக் கவிஞர்.  முதல் 18 மாதங்கள் அந்த கீதம் தான் ஒலித்தது.

3. ஜின்னா சாகிப் தன்னுடைய கடைசி வாழ்நாள் வரைக்கும் வாழ்நாளில் நான் செய்த மகா மிகப் பெரிய தவறு என்பது இந்தியாவை பிளவு படுத்தியது என்று புலம்பிக்கொண்டுருந்தது.

4.  ஜின்னா சாகிப் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள், குணாதிசியங்கள், உடம்பு முழுக்க நோய் என்பதைத்தவிர வேறேதும் இல்லா போதும் அவருடைய நோக்கத்திற்காக எடுத்துக்கொண்ட பாதைகள்.

5.  பாகிஸ்தான் என்ற நாட்டில் வாழக்கூடிய மக்கள் "  மதம் என்பதைக் கடந்து மனிதப்பண்புகளுடன் வாழ்ந்தால் தான் கடைசி வரை இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்குண்டான் வழியாக இருக்கும்.  எதிர்காலத்தில் இப்போது மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது? " என்ற நிதர்சன குறீயீட்டை அன்றே அவர் வெளியிட்ட மனசாட்சி குறித்து.

6.  நிஜாம் மற்றும் ஹரிசிங் மன்னர் குறித்து.  அளிக்கப்பட்ட தகவல்கள் நாலில் ஒரு பங்கு மட்டுமே.

7,  கலவரத்தின் போது முஸ்லீம் மற்றும் சீக்கியர்களின் முழுமையான கோரத்தாண்டவம், பின்புலம், தனிப்பட்ட நபர்கள் அடைந்த லாபங்கள், குணாதிசியங்கள், மொத்த மக்கள் அடைந்த துன்பங்கள்.

8, வெகுஜன ஊடகத்தால் இன்று வரையிலும் சரியான முறையில் வெளிவராத வீர் சாவர்க்கர் குறித்த குறிப்புகள்.  கடைசி வரையிலும் அவர் ஒரு அவதாரமாகவே வாழ்ந்தார்.  மதப்பற்று என்பது ஜின்னாவைப் போல அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்த போதிலும், தன்னுடைய கொள்கைகளுக்காக ஜின்னாவைப் போல சாமான்யன் வாழ்க்கையை பாதிக்கப்படச் செய்யவில்லை.  அவரது முக்கிய குறிகோள் முஸ்லீம்களாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரது அழிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.  ஆங்கிலேயர்கள் உட்பட.


1. இடுகை என்பதும் பதிவு படைப்புகள் என்பதும் தேவைதானா?  என்ன சாதித்து விடப்போகின்றோம்?

தினந்தோறும் நாள்குறிப்பாக உங்கள் டைரியில் எழுதிக்கொள்ளும் போது அது உங்களின் அந்தரங்கம் குறித்ததாக உங்களுக்கு மட்டும் சொந்தமாகி விடுகின்றது.  அதுவே நீங்கள் உள்வாங்கிய விசயங்களை படைப்புகளாக எழுத முற்படும் போது உங்களின் உண்மையான திறமை, ஆளுமையினால் வளர்ந்துக்கொண்ட உங்களின் சிந்தனைகளில் உள்ளே இருப்பது வெறும் வக்கிர எண்ணங்களா? வடிகாலுக்கான விசயங்களா? படிப்பவர்களை சிரிக்க வைத்து அவர்களின் ஆயுளை கூட்டுவதற்காகவா? இல்லை சமூக அக்கறையினால் உருவாகும் சிந்திக்கக்கூடிய விசயமாக இருக்கிறதா? இல்லை புகழ் போதையினாலா என்பதை உணர்த்தி வாசிப்பாளர்களை உள்வாங்க வைத்து விடும்.

2. நன்றாக எழுத வேண்டும் என்று முற்படும் போது?

நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் எந்த ஊடகமும் உங்களின் உணர்ச்சிகளை தூண்டாது.  உண்மைகளை தேடி அலையத் தொடங்கும். வசதியான வாழ்க்கை அமையாவிட்டாலும் உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழ உங்களை அமைதிப்படுத்தும்.  வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையை குறை நிறைகளுடன் நேசிக்கத் தூண்டும். எழுதுகின்ற எழுத்து என்பது காசு வாங்காத மன நல மருத்துவர்.

3. விமர்சனம் என்பது? ஏன்?

எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், முயற்சித்துக்கொண்டுருப்பவர்களும், முடியவில்லை என்று அங்காலாய்ப்பில் சலித்துக்கொள்பவர்களும் உள்வாங்கியதை விமர்சித்துப்பாருங்கள்.  என்ன விமர்சனம் என்பதை விட உங்கள் உள்வாங்கிய, உள்வாங்கும் தகுதி என்ன என்பதை அப்பட்டமாக உணர்த்திவிடும்.

நீங்கள் அளிக்கும் ஓட்டு முறை என்பது நீங்கள் உள்வாங்கியது பிடித்தமானது என்பதை உலகறியச் செய்வதற்காக நீங்களும் படியுங்கள் என்று படிப்பவர்களை அதிகப்படுத்தும் முயற்சி. 

இவர்கள் என்னை வளர்த்தவர்கள், வாழ்ந்து கொண்டுருக்கின்ற வாழ்க்கையை எழுத்துலக வாழ்க்கையை வளப்படுத்தியவர்கள்.   விமர்சனம் தந்த காரணத்தால் முக்கியமானவர்கள் அல்ல.  இவர்களின் அத்தனை பேர்களின் இடுகையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்து என்னுடைய படபடப்பை குறைத்துக்கொள்கிறேன். காரணம் சிரிக்க வைக்கின்றார்கள், சிந்திக்க வைக்கின்றார்கள், குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள், போக வேண்டிய பாதையை தங்களுடைய எழுத்தால் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  இவர்களைப் போல் நண்பர்களாக இணைந்தவர்கள்,  ரீடரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண் இன்று இரண்டு இலக்கமாக மாறியதற்கு காரணம் அத்தனையும் இவர்கள் தான் முக்கிய காரணம். கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் இவர்களை  உள்வாங்கிப்பாருங்கள்.  இல்லத்தை பிடிக்காதவர்கள் கூட உங்கள் உள்ளத்தில் இவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடும்.

1. அதிகபிரசங்கி தனமான தொடக்க எழுத்துக்களை தன்னுடைய காந்திய தன்மையால் கரை சேர்த்தவர். உறவான வழிகாட்டி.

2. எல்லாமே விஞ்ஞானப்பார்வை என்றாலும் என்னுடைய திசைகாட்டி.

3. உறங்கிய சுதந்திர உண்மைகளை நீங்களும் உள்வாங்கலாம் என்று உலகிற்கு உரைத்த உத்தமர் குழு.

4. அப்பொழுதே நன்றாகத்தான் இருக்கும் என்று வழிமொழிந்தவர்

5. விமர்சனங்கள் தேவையில்லை.  அப்பாற்பட்டது என்று அக்கறையின்பால் சொன்ன பெரிய வார்த்தைகள் தந்த ஆசிரியை.

6. அருகில் இருந்தாலும் அமைதியாய் ரசித்துக்கொண்டுருந்தவர்? சத்திய வார்த்தைகளை எப்படி விமர்சிப்பது என்ற தோழி.

7. இலங்கை குறித்து எழுதியே ஆகவேண்டும் என்று சிந்திக்க சொல்லி தந்தவர்கள் 1, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்கையை மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டுருப்பவர்.   2. பக்கத்து ஊரை பரவசமாக சொன்னவர். அவலத்தை உணர்த்தியதால் பல நாட்கள் தூக்கம் கெடுத்தவர்.
8. அலட்டிக்கொள்ளாமல் ஆச்சரியப்படுத்தியவர் இவர்.

9. கந்தா போற்றி,

10.  முன்னோக்கி உங்களை அழைத்துச் செல்பவர்

11.  பதிவும் சரி இயக்கும் படமும் சரி அளிக்கும் விமர்சனமும் சரி நமக்கு பாடம்.

12. வாழும் நிகழ்காலத்தை உணர்த்தியவர்.

13. சீக்கிரம் உரிக்க மாட்டார்.  உரித்தால் சிரிக்க வேண்டும் அல்லது அழ வேண்டும்.

14. அடுத்த ப்ளைட் பிடித்து வந்து ஆட்டோகிராப் கேட்பாரோ?


16.  வாழும் வாழ்க்கையும் செய்யும் தொழிலும் பகுத்தறிவு பாதை.

17. வலைதள சூட்சமத்தை சொல்லித்தந்த குரு.


19. தமிழ் சொல்லித்தாருங்கள் என்றவர்.

20. நான் எழுதக் காரணமாக இருந்த பிரபல்யம்.

21. என் தகுதியை உணர்த்திய பிரபல்யம்.

22. பேசிய பிரபல்யம்.

23. எழுத வேண்டும் என்ற சக்தியை அளிப்பது.

24.  திருந்தாமல் திசை தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையை அக்கறைபடுத்தியவர்கள். ஆளுமை செய்து கொண்டுருப்பவர்கள்.

ஆனால் படைப்பு என்பதை ஒரு நாள் அத்தனை பேர்களும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று படைத்துக்கொண்டுருப்பவர்.



ஜோதிகணேசன். தேவியர் இல்லம்.  திருப்பூர்.

வணங்குகிறேன்.  வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.  வளர்க நலமுடன்.

Friday, October 16, 2009

அச்சமில்லை அச்சமில்லை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (7)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (50)

" இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி புண்ணாக்கி வைத்து விட்டார்களே?" என்ற வசனம் காந்தி காலத்திலும் நடந்து இருக்கிறது.  காந்திஜி கூட்டும் பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்து கொண்டுருக்கும் ஒரு முஸ்லீம் அன்பர், "  பாபுஜி, பாகிஸ்தானில் இருந்து இங்கு ஓடி வந்த இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் தலைமையில் 50 மைல் தூரத்திற்க்கு ஊர்வலமாக சகோதரர்களாய் கைகோர்த்து நடந்து வருவதை நான் என்னுடைய மனக்கண்களால் பார்க்கின்றேன்,  ஆஹா என்ன ஒரு அற்புதமான காட்சி அது"  என்றார்.

இது போதாதா காந்திஜிக்கு.

ஏற்கனவே காந்தி விரும்பிக் கொண்டுருந்த திட்டம் அது.  பாகிஸ்தானுக்கு போக வேண்டும்.  அங்குள்ள சூழ்நிலையை தானே நேரில் சென்று காண வேண்டும்.  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து சுதந்திரப்போராட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இந்தியாவில் பெரும் பயணம் மேற்கொண்டவர்.  காரணம் பயணம் என்பது நிறைய விசயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

அதுவும் சராசரி மக்கள் பயணிக்கும் பாதையில், அவர்கள் உடன் பயணிக்கும் போது இன்னமும் நம்மை நெருங்கச் செய்யும்.  அதனால் தான் அவர் பிர்லா மாளிகையில் தங்கி இருக்கும் போதே அதிபர் பிர்லாவிடம் கேட்டார்.

"  நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் " என்று.
கேட்டது தான் தாமதம்.  அவர் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓட்டம்பிடித்தார்.  பிறகென்ன அவனவன் கொலை வெறியோடு அலைந்து கொண்டுருக்கும் போது, அவஸ்த்தைகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் போது பயணமாவது ஒன்றாவது என்று பிர்லா மனதிற்குள் நிணைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் காந்தி விடுவதாய் இல்லை.  தன்னுடைய மருத்துவரான சுசீலா நய்யாரிடம்  " எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து முடித்து விட்டு நான்கு நாட்களில் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி வந்து என்னுடைய பிரார்த்தனை கூடடத்தில் கலந்து கொள்  "என்று அனுப்பி விட்டார்.



தன்னுடைய உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட போது தான் கொடுத்து இருந்து ஏழு கொள்கைகளில் ஒன்று ஜனவரி 27ம் நாள் குவ்வாத் உல் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி அவஸ்யம் கொண்டாடப்பட வேண்டும் என்பது.


ஆமாம் அடிமை மன்னரும், டெல்லியின் முதல் சுல்தானுமான குத்புதீன் என்பவரது நினைவு நாள் அன்று.

 டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சிகளை கொண்டாடப்பட வேண்டும் என்பது அவரது ஆசை.  டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூதியில் வருடம் வருடம் அந்த நிகழ்ச்சியை கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால் இப்போது உள்ள கலவர சூழ்நிலையில் அந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதா?  என்று அத்தனை தலைவர்களும் யோசித்துக்கொண்டு இருந்தனர்.


காரணம் பழைமையான   27 இந்து மற்றும் ஜெயின் ஆலயங்களில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மசூதி தான் இந்தியாவிலேயே பழமையானது.  பிரச்சனையான இடமும் கூட.                                                     Qila – e – Kuhna Mosque
(கலாச்சாரம் என்பது வெறும் செங்கல் அல்லது கட்டிடம் மூலம் புலப்படுவது அல்ல.  இடிப்பதும், உடைப்பதும் உங்களுக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.  பின்னால் வருகிறவர்களின் கண்ணீர் காவியங்களுக்கு நீங்கள் எழுதி வைத்த முன்னுரை)
ஆனால் காந்திஜியை போன்றே புரிந்து கொள்ளப்படாத நிகழ்ச்சி அன்று நடந்தது. நடந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வது?

காந்திஜி வெற்றிகரமாக சந்தோசமாக தன்னுடைய பேத்திகள் (கைத்தடிகள்) என்று கூறப்பட்ட அபா காந்தி, மனு காந்தி புடை சூழ மசூதியின் உள்ளே சென்றார்.  அது மட்டுமல்ல.  அந்த இரண்டு பெண்களும் எல்லா இடங்களுக்கும் காந்திஜி உடன் செல்ல அங்கே இருந்தவர்கள் அனுமதித்தது முதல் ஆச்சரியம்.

பதினைந்து தினங்களுக்கு முன்னால் இதே இடத்தில் கிர்பான் என்று வாளுடன், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அலைந்து திரிந்த முஸ்லீம் சீக்கிய மக்கள் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய ஆனந்த ஆசீர்வாத பறிமாற்றத்தை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

மொத்தத்தில் உள்ள வினோதமான ஆச்சரியம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேநீர், சிற்றுண்டி வகைகளை இலவசமாக வழங்கி சீக்கியர்கள் வந்து போகின்ற அத்தனை முஸ்லீம் மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதைப் பார்த்த காந்திஜிக்கு பொக்கை வாய் முழுக்க ஒரே சிரிப்பு தான் போங்கள்?

" இதே போல் அணைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்"  என்று கம்பீர உரை நிகழ்த்தினார்.

பிர்லா மந்திருக்கு திரும்பி வந்த காநிதிஜி பின்வருமாறு அன்று இரவு தமது டைரியில் எழுதினார்.


" இந்த குண்டு வெடிப்பில் இருந்து ஆண்டவனது கருணையால் நான் தப்பித்துக்கொண்டேன்.  ஆனால் எப்போது என்னை ஆண்டவன் அழைக்கிறாரோ அப்போது நான் தயாராயிருப்பேன்.  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நான் டெல்லியை விட்டுப் போகப் போவதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை.  யாருக்குத் தெரியும்?  நாளைக்கு என்ன நடக்கும் என்று?"

அதேசமயம் நாதுராம் கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்து இருந்தான்.

" மொத்தமாக கூட்டமாக சேர்ந்து செயல்பட முடியாது.  நான் ஒருவனே போதும்.  கூட்டணி என்பது எப்போதுமே பிரச்சனை தான்?  அது வீணான சிக்கல்கள் உருவாகும்.  அது போன்ற சிக்கல்கள் இனிமேலும் உருவாகக்கூடாது.  காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.  இறுதி வெற்றி மட்டும் தான் நமக்கு முக்கியம்"  என்று தன்னுடைய கூட்டணி மக்களுடன் கலந்துரையாடினான்.

அனைவரும் நாதுராம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.  ஆனால் நாதுராம் விரும்பிய ஒரு கைத்துப்பாக்கிக்குத் தான் அதிகம் சிரமப்பட்டனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அலைந்தனர்.  அவர்கள் விரும்பியபடி அது அவர்களின் கையில் அத்தனை சீக்கிரம் கிடைத்தபாடில்லை,

அவர்களின் நினைவுக்கு கடைசியாக வந்தவர் ஒரு மருத்துவர்.  குவாலியர் நகரில் உள்ள ஹோமியோபதி டாக்டர். தத்தாராய் பர்க்கூர் என்பவர்.

அவர் தீவிரமான ஆர்.எஸ்,எஸ். அனுதாபி.  இவர்கள் மொத்த பேர்களும் அவர் வீட்டை அலைந்து திரிந்து கண்டு பிடித்த நேரம் நடு இரவு தாண்டி பின் இரவு நேரம்.  ஆனால் வந்தவர்களை ஏமாற்ற விரும்பாமல் (பிதா மகன் (?) ) தன்னிடம் உள்ள கருப்பு பெராட்டா தானியங்கி கைத் துப்பாக்கியை கொடுத்தார்.

அது காந்திஜியை கொல்வதற்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம்.

ஆயுதம் கைக்கு வந்தாகி விட்டது.  ஆனால் கூட்டணியில் உள்ள எவருக்கும் இதற்கு முன் சுட்டு பழக்கம் இல்லை.  என்ன செய்வது?  சுட்டுப் பழக வேண்டும்.  மேலும் இந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யுமா? என்று அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.  டெல்லி வந்தடைந்தனர்.

வந்து இறங்கியதும் சுட்டுப் பழக எந்த இடத்தை தேர்ந்து எடுப்பது? என்று அனைத்து டெல்லி தெருக்களை பார்த்து அலைந்து திரிந்தனர்.  அனைத்து இடங்களில் இடப்பெயர்ச்சியின் காரணமாக


  எங்களை வந்து போட்டோ புடுக்கிறீங்க?  பின்னால பாகிஸ்தானில் இருந்து வர்றவங்க எல்லோரும் ரயில்ல தொத்திக்கிட்டு வர்றாங்க.  அந்தப்பக்கம் போங்க ஜி. (பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் ஒரு சின்ன சாம்பிள்  இது.  ஆனால் ஒரு இடுகை முழுவதும் மொத்த அவலத்தை புகைப்படமாக போட்டால் நாதுராம் உருவான காரணங்கள் புலப்படலாம். )

மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர்.  கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவர்களுக்கு அமைந்த இடம் காந்திஜி தங்கியிருந்த பிர்லா மாளிகையின் அருகே இருந்த காடு போன்ற பகுதி.  ஆள் நடமாட்டம் என்பது
அதிகம் இல்லாமல் இருந்த இடம்.  அவர்களுக்கு வசதியாய் போய் விட்டது.



உள்ளே இருந்த ஒரு மரத்தை தேர்ந்து எடுத்து அதில் ஒரு மனிதன் உருவம் வரைந்து அதில் நாதுராம் இருபது அடி தொலைவில் நின்று கொண்டு சுட்டான்.

டெல்லியின் முதல் மசூதி இது.  அவருக்கு வெற்றிச்சின்னம்.  இன்று வரை அவஸ்த்தை பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு?

ஆச்சரியம்.

இது வரையில் முன் பின் துப்பாக்கியே சுட்டுப் பார்த்து பழகியிருக்காத நாதுராம் கோட்ஸே சுட்ட துப்பாக்கி குண்டுகள் நான்கும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த வரைந்த படத்தின் மார்பில் சரியாக போய் துளைத்து நின்றது.

" அற்புதம்.  அட்டகாசம்.  மிக நன்றாக சுடுகிறாய் நாதுராம் " என்று பாராட்டினார்கள் அவனுடைய நண்பர்கள் ஆப்தேயும் கார்கேயும்.

ஆமாம்.  காந்திஜி இறப்பதற்கு இன்னும் 72 மணிநேரம் மட்டும் தான்
இருக்கிறது.



குறி தவறவில்லை.  ஆனால் மனித மாண்புகள் பெற்ற அத்தனை குறியீடும் மட்டும் தான் தவறி விட்டது.  இன்று வரைக்கும்?

பினாமிக்கு பின்னால் பெரிய ஆணி



இந்திய பாகிஸ்தான் பிரிந்து போவதற்கு முன்னால் உள்ள இந்திய ஆடையின் அளவு இது.

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (6)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (49)

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அவன் உள்வாங்கியதன் உச்சம் என்பதாக கருதப்படுகிறது.  காரணம் அந்த தனி மனிதனின் வாழ்க்கை நீ வெறும் எச்சம் தான் என்று உணரும் போது தான் அத்தனை பேர்களும் அந்த பயத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள்.  அறிந்தவன் மேன்மேலும் உச்சத்தை அடைகின்றான்.  அடையாதவன் அல்லது விரும்பாதவன் அவஸ்த்தைகளை இனம் பிரிக்கத் தெரியாமல் குழப்பம் அடைகின்றான்.

இல்லை இது தவறானது?

வளர்ந்த விஞ்ஞானமும், நாம் கொண்ட பகுத்தறிவும், அறிவு என்பது மட்டுமே உண்மை என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி?

இறப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டது?

இன்றளவும் எந்த நவீன விஞ்ஞானமும் அதை மாற்ற முடியவில்லை.  தள்ளிப்போட வேண்டுமானால் முடியலாம்.  ஆனால் அதைக் கிள்ளி அந்தப்பக்கம் ஒதுக்கிவிட முடியாது?  ஆனால் இந்த இறப்பு என்பது நம்மிடம் வந்து சேரும் போது இயற்கை முறையினாலா? அல்லது உருவாக்கப்பட்ட செயற்கை முறையிலா? என்ற கோட்பாடுகளில் தான் இன்று வரையிலும் அத்தனை நம்பிக்கையாளர்களும் தான் கொண்டுள்ள எண்ணம் சரிதான் என்று உறுதிபடுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவன் இப்படித்தான் போவான் என்று அப்பொழுதே தெரியும்

செய்த பாவம் நிம்மதியா விட்டுடுமா?

அடப்பாவி இவனுக்கு இப்படி ஒரு சாவா?  தப்பித்து விட்டானே?

இவருக்கு இப்படி ஒரு சாவா?  சாமிங்றது சத்தியமா இல்லப்பா?

எத்தனை எத்தனை உரையாடல்கள் நம் வாழ்வில்?

காந்திஜியைப் பொறுத்தவரையில் சராசரி மனிதர்களை விட தன்னுடைய வாழ்க்கை முறைகளை மிகுந்த அக்கறையுடன் முடிந்தவரையிலும் ஒழுக்கமாய் உண்மையாய் வாழ்ந்தவர்.  அவருடைய வாழ்க்கை முறை என்பது மற்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல.  ஏன் தொடக்கத்தில் ஆண்ட தலைவர்கள் கூட எரிச்சல் படத்தான் செய்தனர்.  என்றபோதிலும் அவருடைய இறப்பு என்பதை விதி நோக்கில் பார்த்தால் சற்று வியப்பாகத் தான் இருக்கிறது?

அவருடைய சாவு என்பது குறிப்பிட்ட நாளில் உறுதிபடுத்தப்பட்டது என்றாலும் அவருடைய இறப்புக்கான வழிமுறைகள், முன்னால் நடந்த நிகழ்ச்சிகள், அதன் சார்பான கோர்வை நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கனக்கச்சிதமாக அவரை அந்த இடத்திற்குத் தான் அழைத்துச் சென்று உள்ளது.

ஒரு வகையில் அவருடைய சாவுக்கு அவரே தான் காரணம்.  அதிகமாக உள்ள நல்ல எண்ணங்கள் தான் முதன்மையாக இருக்கிறது.  தேடி வந்த அதிகாரிகளின் அக்கறையை வெறுத்ததும், வெறுக்கப்பட்ட மக்களை விழிப்புடன் பார்க்கத் தவறியதும் என்று தொடரும் அத்தனை விசயங்களும் அவருக்கு அவரே போட்டுக்கொண்டு கயிறு.  ஆனால் அதை பாசக்கயிற்றாக பார்த்த விதத்தை விதி என்பதில் கொண்டு வந்து முடிப்பதா?  அவரின் விவேகமற்ற செயல் என்று ஆத்திரப்படுவதா?

கருப்பருக்காகவே உண்மையாய் போராடிய அமெரிக்க அதிபர் ஏன் குண்டு மூலம் உயிர் போனது?

இன்று ராஜபாட்டை போட்டுக்கொண்டுருக்கும் புதிய பொருளாதார தத்துவத்தை தொடக்கப்புள்ளியில் கொண்டு வந்த ராஜிவ் காந்தியின் மரணம் ஏன்?

ஆளுமை என்றால் என்ன என்று தெரியாத தலைவர்கள் மத்தியில் அன்னை இந்திரா காந்தியின் மரணம்?

அரசியல் காலாவதியான கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்?

அழுது புலம்புவதால் ஒன்றுமில்லை என்ற கீதையை பின்பற்றுவதா?

கற்பித்தவன் அயோக்கியன் முட்டாள் என்ற பெரியாரை பின்பற்றுவதா?

இல்லை இது ஒரு விமோசனம்  என்பவர்களை நம்புவதா?

இது ஒரு சராசரி நிகழ்வு.  அடுத்த கடமையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையை உண்மையாக வாழ வேண்டும் என்பவர்களை பின்பற்றுவதா?

மொத்தத்தில் மரணம் என்பது ஒரு பெரு விடுதலையாகத் தான் தெரிகிறது.

நம்பிக்கொண்டுருக்கும் பாசம், உயிராகக் கருதும் உறவுகள், உன்மத்தம் முழுக்க நிரம்பி வழியும் ஆக்ரோசம், அலைந்து அத்தனை பேர்களையும் தன்னுடைய அகங்காரத்தால் அழிக்க நினைக்கும் நபர்கள், தேடித்தேடி அலைந்து சேர்த்த சொத்துக்கள், தன் பெயர் இல்லாத போதும் கூட பினாமி என்ற கோட்டையை உருவாக்கும் உன்னத தலைவர்கள் என்று எவருமே இந்த விமோசனத்தை பார்த்து இன்று வரை பயப்படாமல் வாழ்ந்து கொண்டுருப்பது மகா பெரிய ஆச்சரியமாய் அதிசமாய் இருக்கிறது.



ரொம்ப குசும்பு தான்.  சின்னதா படத்தை போட்டா எங்களுக்குத் தெரியாதா?  இருட்டுக்குள் ஓளிரும் இந்தியா?

பிண ஊர்வலம் போய்க்கொண்டுருக்கும் ஊர்வலத்தில் கூட அடுத்த அதிகார போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வரும் அழகையை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

இதில் மகள், மகன், மனைவி, அம்மா, அப்பா, நட்பு, உறவு என்ற எந்தவித பாகுபாடும் இல்லை.

அன்றாடம் ஊடக செய்திகளை உள்வாங்கிப் பாருங்கள்.  உன்னத உறவுகள் என்ற போர்வையில் உள்ளவர்களின் யோக்கியதை தெரிந்து விடும்?

கடமைகள் என்ற வார்த்தைகள் என்றுமே நமக்கு கலக்கம் என்ற வார்த்தைகளை அறிமுகம் செய்யாது.  கண்ணீரில் கூட கிளிசரின் கண்ணீர் என்று பல வகை கண்ணீர்  இருக்கிறது.  ஆனால் விமோசனம் பெற்றவர் உருவாக்கிய வழி அல்லது வலி என்பது காலம் காலமாக நம்மை கழுவேற்றிக்கொண்டுதானிருக்கிறது.




அண்ணே நீங்க கவலைப்படாதீங்க?  கீழே உள்ள படத்தைப் பாருங்க.  அந்த திட்டம் முடிந்தவுடன் உங்க நலவாழ்வு திட்டம் தான் கையில எடுத்துக்கப் போறோம்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

கொள்கையாளர்களின் பார்வை என்பதில் எந்த தவறும் இல்லை.

காரணம் அத்தனை வலி நிறைந்த வாழ்க்கை அனுபவம் அது.  அதிகமான வலி என்பது இறுதியில் வன்மத்தை தரும்.  இல்லாவிட்டால் புத்தியை பேதலிக்கச் செய்து விடும்.  வன்மத்திற்கு அறிவாளி, படிப்பாளி, பாமரன் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை.  அதனால் ஒரு வகையில் அவர்களின் புத்தி பேதலித்த காரணத்தால் உணர்ந்தவைகளை தரம் பிரிக்கத் தெரியாமல் தராதரம் இல்லாத இந்த செயல்களை செய்து விட்டார்கள் போல?

ஆனால் இன்று காந்தி இல்லை.

இன்றைய நிலைமையில் காந்தியின் கொள்கைகள் என்பது கூண்டுக்கு அருகே சென்று நிற்பவனுக்கு மட்டும் தான்?  காரணம் நீதி வழங்குபவர் கூட பார்க்க முடியாது.  அவருக்குப் பின்னால் இருப்பதால் அவருக்கும் கவலையில்லை.

காந்தி காலத்தில் வாழ்ந்த இயங்கிய இயக்கங்கள் இன்று வரையிலும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்று அவர்கள் கண்களுக்குத் தெரிந்து அத்தனை அயோக்கியத்தனமும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

சொல்லப்போனால் இப்போது தான் அதிகமாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இந்த இயக்கங்களின் பங்களிப்பு என்பது என்ன?  எவரின் நல்வாழ்வு இவர்களால் முன் நிறுத்தப்படுகிறது?  அடிப்படையில் எந்த வசதியும் இல்லாமல் வாடிக்கொண்டுருக்கும் பாமரன் பரம ஏழையாகத் தானே இன்று வரையிலும் உழன்று கொண்டு இருக்கிறான்?

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் எந்த மதமாக இருக்கட்டும்.  நாங்கள் உங்களுக்காகத்தான் என்று சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் என் சாதித்தார்கள்?  என்ன சாதிக்கப் போகிறார்கள்?

அப்படி என்றால் அன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்று விட்டால் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்து விடுமா?  நோக்கம் தான் என்ன?

ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வைத்துருக்கும் கணக்கில் வராத சொத்துக்கள் என்பதும், புழங்கிக்கொண்டுருக்கும் பணம் என்பதும் எத்தனை எத்தனை கோடிகள்.  உழைத்து சம்பாரித்து கள்ளப்பணமாக வரிக்கு பயந்து கொண்டு வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் தவறானவர்களாக தெரியவில்லை?  ஆனால் நல்வாழ்வு தொண்டு நிறுவனங்களின்  நோக்கம் என்பது மக்களின் நல்வாழ்க்கை என்றால் நல்ல வாழ்க்கை வாழாமல்  தெருக்கோடிக்கு வந்தவர்களை எப்போது சேர்த்த பணத்தை இவர்களுக்காக செலவழிக்கப் போகிறார்கள்?

மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு?  தலைவர்கள் கொண்டு வாழும் கொள்கை என்பதும் வேறு?



அன்றும் இன்றும் என்றும்?

நோக்கம் ஒன்று மட்டும் தான்.

நல்வாழ்வு.

தலைவர்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?  மக்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?

அதனால் தான் இதையெல்லாம் மனதிற்குள் உணர்ந்த காந்திஜி ஒரு அளவிற்கு மேல் யோசித்து மண்டை உடைத்துக்கொள்ளக்கூடாது என்பது போல் அவருடைய அடுத்த நிறைவேற்ற வேண்டிய கனவுக்கு காத்துக்கொண்டுருந்தார். ஆனால் கனவில் இருந்தாரே தவிர அவரை நோக்கி வந்து கொண்டுருந்த காலனை கண்டு கொள்ளாமல் தான் வாழ்ந்தார்.

இந்தியா வளர்ந்து கொண்டுருக்கும் நாடு.  வெளியே இருந்து பார்க்கும் போது.  சுதந்திர காலத்தை விட இன்று இந்தியா வளர்ந்த நாடு.  உள்ளே இருந்து பார்க்கும் போது?


உண்மை தான் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அலைபாயும் மொத்தக்கூட்டம் 50 கோடி.  காலில் செருப்பு கூட போட வக்கில்லாமல் வாழும் கூட்டம் 40 கோடி.  அப்படி என்றால் மீதி கணக்கு.  அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்த வாழும் மகாத்மாக்கள்

Wednesday, October 14, 2009

எப்போது ரீலிஸ் ஆகும்?

தொடர்ந்து வரும் தொழில் நுட்ப தொல்லையே?  நீ எப்போது என்னை விட்டு போவாய்?
 தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கை என்னை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.  ஆனால் சம்மந்தம் இல்லாத இந்த துறைக்கு வந்த எனக்கு மட்டுமல்ல மொத்த கணிணி அறிவு படைத்த நண்பருக்கும் இந்த பீடர் பிரச்சனை பெரிய சவாலாக அமைந்து விட்டது.  என்னுடைய எழுத்துரு, செய்த சிறிய தவறுகள் என்று எல்லாமே சீர்படுத்தியும் இந்த நிமிடம் வரைக்கும் அதன் மூலம் எது? என்று அவரால் உணர முடியாத அளவிற்கு வினோதமாக பிரச்சனையாக அவருக்கு சவாலாக ஆக்கிரமித்து விட்டது.

அவரை அவஸ்த்தைக்குள்ளாக்கி விட்டது.  இரண்டு நாட்களாக எதிலும் இணைக்காமல் வரும் நண்பர்களின் சிந்தனைகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.  வேறு வழி ஏதும் தெரியவில்லை.  தலைப்பைப் போலவே, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை போலவே இதில் இருந்து எப்போது ரீலீஸ் ஆகும் என்று எங்களுக்கு புரியவில்லை.

 ஒரே காரணம் முதல் நாள் தொடர்பவர்களின் பட்டியல் அடுத்த எகிறி இருப்பதை பார்க்கும் போது அவர்கள் அத்தனை பேர்களும் படிக்க வைக்க வேண்டிய கடமை இருப்பதால்

காந்தி ஆன்மா அதற்குள் அவசரமாய் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போல் தான் தெரிகிறது.  பொறுத்தாள்வார்.  பூமி ஆள்வார்.  தாத்தா சொன்னது புரியவில்லை.  இடுகை புரியவைத்துவிட்டது.  விரைவில் ரீலீஸ்?


தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூன்று தலைப்புகள் மட்டும் மீண்டு வருகிறது.  உருவான கோளாறு என்னை உணரவைத்து விட்டது.  உரையாடலில் என்னை உணரவைத்தவருக்கு நன்றி.  இன்னமும் என்னால் மீண்டு வரமுடியவில்லை ஐயா.  கசப்பு தான் என்றாலும் கண்ணியம், கடமையின் தொடக்கப்புள்ளியாக கருதுகிறேன்.  இந்தப் புள்ளி அழைத்துச் செல்லும் பாதையை சமர்பித்து செயலில் காட்டுகிறேன்

Monday, October 12, 2009

கொலை கொலையாய் காரணமாம்


























மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்(3)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (46)

(முதன் முதலாக காந்தி தங்கிய ஆடம்பர மாளிகை தான்.  ஆனால் கடைசி மாளிகையாகவும் ஆகிவிட்டது)

கல்கத்தாவில் அப்போது கிளர்ந்தெழுந்த கலகத்தை எல்லோரும் சேர்ந்து நிறுத்தாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் என்று காந்தியின் பிடிவாதத்தைக் கண்டு ஒவ்வொருவராக தங்களுடைய ஆயுதங்களைக் கொண்டு வந்து காந்திஜியிடம் ஒப்படைத்து இனி இங்கு மத துவேச அடிப்படையில் எந்த கலவரமும் உருவாகாது என்று சொல்ல மோசமான அவரது ஆரோக்கியமற்ற உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் டெல்லி வந்து (1947 செப் 9) இறங்கினார்.

காந்திஜி எப்போது டெல்லி வந்தாலும் நகர சுத்திகரிப்பில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் வசிக்கக்கூடிய சேரியில் (பங்கி காலணி) வந்து தங்குவது வழக்கம். ஆனால் இப்போது இந்திய பாகிஸ்தான் இடப்பெயர்ச்சி காரணமாக, கலவரத்தின் தொடக்கத்தின் காரணமான அத்தனை பேர்களும் மலத்தில் ஈ மொய்பபது போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தனர்.  மேலும் மேலும் ஜனத்தொகை நாள்தோறும் கூடிக்கொண்டு இருந்ததால் சிகித்துக்கொள்ள முடியாத வாழ்க்கை அமைந்து இருந்தது.

ஆனால் காந்தி எப்போது போல நான் அவர்களுடன் தான் போய் தங்குவேன் என்றதும் அத்தனை பேர்களுக்கு வியர்த்து விட்டது.  நேருவும் படேலும் மொத்த நிலைமையை எடுத்துச் சொல்லி அதற்கு மேல் அவர் உடல் நிலைமையை அவருக்கு புரியும் விதத்தில் அக்கறையை உணர்த்தி அவரை பிர்லா மாளிகையில் தங்க வைப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

முதன் முதலாக காந்தி தங்கிய ஆடம்பர மாளிகை அது தான்.  ஆனால் கடைசி மாளிகையாகவும் ஆகிவிட்டது.

காந்தி பிர்லா மாளிகையில் தங்க சம்மதம் சொன்னாரே தவிர அங்கிருந்த எந்த சொகுசு சமாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் எப்போதும் போல தான் கொண்டு வந்த கோரைப்பாயை தரையில் விரித்து வசிக்கத்தொடங்கினார்.

உண்ணும் உணவும் பாத்திரங்களைக்கூட அவர் மாற்றிக் கொள்ள தயராய் இல்லை.  கைப்பிடி உடைந்து மூங்கில் குச்சி வைத்து கட்டப்பட்டுருந்த ஸ்பூனைக்கூட அவர் மாற்றிக்கொள்ளவில்லை.  காரணம் அவரை மாற்றவும் முடியாது.  மாற்ற எவருக்கும் துணிச்சலும் இல்லை என்பது தான் உண்மை.

அங்கு இருந்தவர்கள், அவரைத் தேடி வந்து கொண்டுருந்தவர்கள் அத்தனை பேருமே  நீங்கள் இங்கு அவஸ்யம் நீண்ட நாள் தங்கியிருக்க வேண்டும்.  இந்த கலவர பூமியை கல்கத்தா போல் பிரார்த்தனை பூமியாக மாற்ற வேண்டும் என்றனர்.

அவருடைய அன்றடாட கடமை என்பது, தினசரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்ப்பது, ஆறுதல் கூறுவது, முடிந்தவரைக்கும் சுகாதாரமாக இருக்கும் இடத்தை தாமே பாதுகாத்துக்கொள்வது என்று அங்குள்ள அனைவருக்கும் ஆலோசனை கூறுவது.  ஆனால் காந்தி இறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விதி என்பது முடியும் தருவாயில் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் அது குறித்து நம்பிக்கை இல்லாதவர்களும் நிச்சயம் அதன் உணர்வுகள் ஒவ்வொன்றும் அறிகுறியாக தெரிவித்துக்கொண்டுருக்கும்.  அத்தனையும் மறைமுக பொருளாகத்தான்.  அதை உணர்ந்தவர் காந்திஜி.

ஆனால் அவரைக்கொல்ல வேண்டும் என்று கொள்கையாளர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பார்த்து விடுவது அவஸ்யம்.

1. காந்திஜி இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை ஆதரித்தார் என்பது முதல் முக்கியமான குற்றச்சாட்டு

மொத்தமாக உள்வாங்கி பார்க்கும் போது அது உண்மை அல்ல.  பிரிவினை காரணமாக நீங்கள் கூறுகின்ற அத்தனை பாதகமும் நடந்து முடிந்த பிறகு எஞ்சி நிற்கும் இந்தியா அது எத்தனை விதங்களில் பலவீனமாக இருப்பினும் பரவாயில்லை.  ஆனால் அப்போது ஒற்றுமை கொண்ட பிரிவினை கோராத மக்களைக் கொண்ட இந்தியாவாகவே இருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்து இருக்கிறார்.

2. இந்தியா போன்ற நாடுகளில் அப்போது ஏற்பட கலவரத்தின் போது காந்திஜியின் கொள்கையான அஹிம்சை என்பது தவறானது.

காரணம் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்களே.  அத்தனை பேருமே காந்திஜியின் போதனைகளால் கெட்டுப்போனவர்கள்.  துன்பம் வரும் போது தன்னை தன் இனத்தை பாதுகாத்து தெரிந்து கொள்ளாதவனுக்கு காந்திஜியின் அஹிம்சை எதை உணர்த்தியது?
என்ன கற்று கொடுத்தது?

3.  ஜின்னா சாகிப்பின் நேரிடை நடவடிக்கையின் தளபதியான வங்காள அரசியல்வாதி சுஹ்ரவர்த்தி காந்திஜியின் ஆசிரமத்தில் வந்து அடைக்கலம் புகுந்தார்.  தன்னையும் காப்பாற்றிக்கொண்டு தன்னுடைய மக்களையும் காப்பாற்றி விட்டார்.  அது சரியாகவே இருக்கட்டும்.  அதே போல் பாகிஸ்தானில் உள்ள நகரகங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்களையும் காந்திஜியின் கூற்றுப்படி அங்கிருந்த முஸ்லீம் தலைவர்கள் காப்பாற்றி இருக்க வேண்டும் அல்லவா?

காந்திஜி எப்போதும் முஸ்லீம்களின் நண்பன். அப்போது நடந்த இந்துக்கள் படுகொலையை தடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்தார்?  எப்போதுமே முஸ்லீம்களுக்கே சலுகை காட்டும் மனிதர் தான் காந்தி.

இந்த மூன்று முக்கிய கொள்கைகள் போல வேறு சில விசயங்கள்.

ஜம்மு மற்றும் எல்லைப்பிரச்சனைகள் முடிவாக தீரும் வரையிலும், பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய 54 கோடி ரூபாயை கொடுக்கக்கூடாது.   காரணம் அந்த பணத்தை இப்போது இந்தியா கொடுத்தால் அவர்கள் நல்வாழ்வுக்கு என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.  அத்தனையும் ஆயுதங்கள் வாங்கி இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்துவார்கள் என்று நேரு முதல் படேல் வரையிலும் மறுத்துப்பார்த்தார்கள்.

ஆனால் காந்திஜி அவர்கள் என்னமோ செய்து விட்டு போகட்டும்.  அது நம்முடைய கடமை என்று தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் கொடுக்க வைத்தார்.  ஆனால் உண்மையிலே மற்ற அத்தனை தலைவர்களும் சொன்னபடி தான் நடந்தது.  அப்போது பதவியில் இருந்த வெள்ளையர் ஜெனரல் மெஸர்வி ஆயுதங்கள் வாங்குவதற்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

அன்று அடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை இந்து மக்களுக்கும் அரணாக நின்று மொத்த உதவிகளை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்தவர்கள் சுயம் சேவக் சங்கத்தை சேர்ந்தவர்கள்.  அன்று அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் கோரத்தின் சுவடு என்பது இன்னமும் அதிகமாக இருந்து இருக்கும்.  போராட்டம் என்பது நீண்டு கொண்டே இருந்து இருக்கும்.

ஆனால் எல்லாமே சரிதான்?  இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் கேட்டுக்கொண்டுருக்கும் கேள்விகள்?

எல்லாமே முடிந்து விட்டது.  எதையும் மாற்ற முடியாது.  மறுக்கவும் முடியாது.  ஆனால் இந்த காந்திஜி என்ற தனிப்பட்ட ஒரு மனிதரை தீர்த்துக்கட்டியதும் என்ன சாதிக்க முடிந்தது?  என்ன பழைய நிலைமைக்கு கொண்டு வர முடிந்ததுள்ளது?  இவர்களின் மொத்த நோக்கமும் நிறைவேறியதா?

இந்து என்று சொல். அது தான் நம்முடைய உந்து சக்தி.  ஆனால் உள்ளுக்குள்ளே ஆயிரம் ஜாதிப்பிரிவுகள்.  ஒற்றுமை வேண்டாம்.

இந்த தலைப்பு காந்தியை கொலை செய்யக்காரணம் என்ற நிலையில் இருந்தாலும் என்னுடைய கருத்துக்கள் கொலை களத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்பது காலத்தின் கட்டாயம் போல.  காரணம் எனக்குத் தெரியாமல் அல்லது புரியாமல் இருந்த தொடர்ந்து கொண்டுருப்பவர்களின் வரிசைப்பட்டியலைப் பார்த்த போது திகைத்துவிட்டேன். நேரிடையாக மறைமுகமாக என்று.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூன்று தலைப்புகள் மட்டும் மீண்டு வருகிறது.  உருவான கோளாறு என்னை உணரவைத்து விட்டது.  உரையாடலில் என்னை உணரவைத்தவருக்கு நன்றி.  இன்னமும் என்னால் மீண்டு வரமுடியவில்லை ஐயா.  கசப்பு தான் என்றாலும் கண்ணியம், கடமையின் தொடக்கப்புள்ளியாக கருதுகிறேன்.  இந்தப் புள்ளி அழைத்துச் செல்லும் பாதையை சமர்பித்து செயலில் காட்டுகிறேன்.



Thursday, October 08, 2009

ஒழுக்கமானவன் ஆனால் உயிரை பறித்தவன்






நாதுராம் கோட்ஸே ஒரு பார்வை?

மகாத்மா காந்தி வாழ்க்கை-கொள்கை-இறப்பு சில உண்மைகள் (2)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (45)



நாதுராம் வினாயக கோட்ஸே பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற ஒரு தலைவரை சுட்டுக் கொல்லும் கொலைகாரனகாக மாறப் போகிறான் என்பதற்கு ஒரு அடையாளமும் இருந்திருக்கவில்லை.



நல்ல குடும்பத்தில் பிறந்தவன், நல்லவன், பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். அடிக்கடி காபி (?)குடிக்கும் பழக்கத்தை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் பல வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி, கிறிஸ்துவ மிஷினரி மூலம் தையல் வேலைக்கான பயிற்சி பெற்று கடைசி வரை அந்த தையல் தொழில் செய்து வந்தவன்.



ஆனால் சிறு வயது அரசியல் என்பது அவனுக்கு ஒரு சுவாரசியமான விஷயம். மகாத்மா காந்தியின் கொள்கையினால் கவரப்பட்டு 1937ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவன். ஆனால் சிறையிலிருந்து வௌியே வந்தவுடன் அவனது மொத்த சிந்தனையிலும் மாற்றம் உருவானது. வீர் சாவர்க்கர் பேச்சைக் கேட்டு, கிரகித்து தன்னை ஒரு தகுதியான அரசியல் பார்வையாளனாக, நோக்கராக மாற்றிக்கொண்டான்.



அதுவும் மிக குறுகிய கால கட்டத்திற்குள். ஆனால் முட்டாள் தனமான பாமரத்தனமாக தொண்டன் அல்ல. எது குறித்தும் தீர்மானமான கொள்கை இருந்தது. தான் எப்போதும் படிக்கும் ஸ்லோகங்கள் போல வீர் சாவர்க்கரின் பேச்சை அத்தனை அட்சரம் சுத்தமாக உள்வாங்கி வைத்து இருந்தான். வெகு விரைவிலேயே நல்ல எழுத்தாளனாக, ஆவேசமான பேச்சாளனாக உருவாகியிருந்தான்.



ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தான் சந்தித்த நாராயண ஆப்தே என்ற நண்பன் மூலம் வீர் சாவர்க்கரின் உள்வட்டத்தில் நுழைந்து " தி அக்ரானி " என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்கள். கோட்சே தான் ஆசிரியர்.

1947ல் இந்திய பிரிவினையை எதிர்த்து வீர் சாவர்க்கரைத் தலைவராகக் கொண்ட இந்து மகாசபை (1947 ஜுலை 3) கறுப்பு தினமாக அனுசரித்து வௌியிடப்பட்ட மிகத் தீவிரமான கட்டுரைகளால் அன்றைய இடைக்கால பம்பாய் சர்க்காரால் பத்திரிக்கையை தடை செய்யப்பட்டது. ஆனால் அதிகார வர்க்கத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆதரவாளர்களால் இந்த பத்திரிக்கை "ஹிந்து ராஷ்டிரா" என்கிற பெயரில் பத்தே (?) நாட்களில் மீண்டும் வௌிவந்தது. இந்த பத்திரிக்கைக்காக சொந்தமாக அச்சகம் வைத்துக்கொள்ள வீர் சாவர்ககர் அன்றைய தினம் 15,000 கொடுத்து உதவினார்.



கோட்சே சுத்தமான பிரம்மச்சாரி. சிறந்த பழக்கவழக்கங்களைக் கொண்ட நேர்மையான மனிதன். ஆனால் பத்திரிக்கையின் பதிப்பாளரான நாராயண ஆப்தேவோ மது, மாது,விருந்து,கேளிக்கை போன்ற அத்தனை சகவாசங்களையும் ஒருங்கே பெற்றவன்.



தான் ஆசிரியராக தொடங்கிய பத்திரிக்கையின் தொடக்க விழாவில் வந்து கலந்து கொண்ட அத்தனை பேர்களிலும் மிக முக்கியமான மற்றொரு நண்பன் விஷ்ணு கார்கே. அஹமத் நகரில் லாட்ஜ் என்று குடியிருப்பு வளாகம் வைத்திருந்த உரிமையாளர். விஷ்ணு கையில் வைத்திருந்த மற்றொரு நபர் மதன்லால் பாவா என்ற 20 வயது இளைஞன். பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தவன். முஸ்லீம்களை விஷம் போல் வெறுத்தவன். அன்றைய நாட்களில் அஹமத் நகரில் நடந்த ஒரு முஸ்லீம் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு வந்தவனை விஷ்ணு கார்கே அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வந்தான்.



புதிய அச்சகத்தின் தொடக்க விழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் கோட்சே பேசினான்.



" என் பிணத்தின் மீதுதான் இந்தியப் பிரிவினை நடைபெறும் என்றார் காந்திஜி. இப்போது பிரிவினை ஏற்பட்டு விட்டது. ஆனால் காந்தி இன்னமும் உயிரோடு தானே இருக்கிறார். துன்பங்களை கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தான் உண்மையிலேயே வெற்றியாளர்கள் என்கிறார். இது என்ன கொடுமை? பாதிக்கப்பட்டவர்களில் என் அன்னையும் ஒருவராக இருக்கலாமே? எதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டும்? "



" எனது தாய் நாடு கூறு போடப்பட்டு விட்டது. பினம் தின்னிக் கழுகுகள் போன்ற பேய்கள் ஹிந்துப் பெண்களின் மாமிசத்தைக் கிழித்து அவர்களது கற்பைச் சூறையாடுகின்றன. திறந்த வௌி மைதானங்களில் இவையெல்லாம் நடக்கின்றது. காங்கிரஸ் பேடிகள் மௌனமாக இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது ஆன்மீகத் தலைவரான காந்தி, "பொறுத்துக்கொள்ளுங்கள்" என்கிறார். எத்தனை காலத்திற்கு நாம் இப்படி பொறுத்துப் பொறுத்து வாழ்வது?"



" எல்லாவற்றையும் ஒத்திவைத்து விட்டு அல்லது அடியோடு உதறிவிட்டு ஒரே ஒரு வேலையில் நாம் இனிக் கவனம் செலுத்த வேண்டும். ஹைதராபாத்தில் கொரில்லாப் போர் நடத்தி நிஜாம் மன்னரைக் கொல்வது, ஜின்னா சாகிப் ஜெனிவாவுக்கு வந்தால் அங்கே சென்று அவரை தீர்த்துக் கட்டுவது இவையெல்லாம் இப்போது எனக்கு முக்கியமில்லா இரண்டாம் தர விஷயங்களாகத் தோன்றுகிறது. இப்போது நமது ஒரே இலட்சியம் காந்தியைக் கொல்லுவதுதான். ஆப்தே அதற்கான ஏற்பாடுகளை நாம் இன்றே ஆரம்பிக்க வேண்டும். இதில் தாமதம் என்பதே கூடாது " என்றான் கோட்ஸே.



" ஆம் நீ கூறுவது தான் சரி. உடனே செய்வோம் என்றான் நாராயண ஆப்தே.

உங்கள் திட்டங்கள் அத்தனையும் திகட்டி விட்டன. திருத்தி எழுத வேண்டிய தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் மக்கள் அதற்குள் திருந்திவிட்டால் நீங்கள் திண்டாடிவிட மாட்டீர்களா?



http://thamizmanam.com/bloglist.php?id=5625

Wednesday, October 07, 2009

100.வீரம் விளைஞ்ச மண்ணு



புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (44)

மகாத்மா காந்தி வாழ்க்கை.- கொள்கை.- இறப்பு.- சில உண்மைகள் (1)

காந்திஜியின் கொலைக்கான திட்டங்கள் பம்பாயிலிருந்து 190 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பூனா நகரில் இறுதி வடிவம் பெற்றது. பூனா நகரம் இந்து மத கொள்கையாளர்களின் கோட்டையாக விளங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


பூனாவின் உட்பகுதியில் உள்ள மலைபிரதேசங்களிலிருந்து, இந்து சாம்ராஜ்யம் அமைக்கப் பாடுபட்டவரும், சக்கரவர்த்தி ஓளரங்கசீப்புக்கு எதிராக கொரில்லாப் போர்கள் நடத்தி அவரைக் கலங்க அடித்தவருமான சத்ரபதி சிவாஜி தோன்றிய மண் அது.

அவரது வாரிசுகளாகக் கருதப்பட்ட பேஷ்வாக்கள் 1817 ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டார்கள். பாலகங்காதர திலகரும் இங்கிருந்து வந்தவர்தான். பிராமணர்களிலேயே மிக உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சித்பவான் பிராமணர்கள் பழைய பேஷ்வாக்களைத் தொடர்ந்து ஒரு கட்டுக் கோப்பான அகண்ட இந்த சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைமையில் ஏற்பட்டதுதான் ஹிந்து மகாசபை. ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தலைவராக இருந்த பாளாசாஹிப் தியோரஸ் முதல் இன்று இருக்கும் தலைவர் வரை அத்தனை பேர்களும் சித்பவான் பிராமணர்களே. ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் என்பது இதன் செயலாற்றும் பிரிவு. ஆர்.எஸ்.எஸ் இன் அதி ரகசிய உட்பிரிவுக்கு "இந்து ராஷ்டிர தளம்" என்று பெயர்.

அகண்ட இந்து சாம்ராஜ்யக் கனவு கண்டு கொண்டுருந்தவர்களுக்கு அப்போது ஒரு புதிய தலைவர் தோன்றினார். மகாராஷ்டிராவின் சர்ச்சில் என்று புகழப்பெற்ற இந்த தலைவரின் பேச்சுகள் வேதவாக்காக் கருதப்பட்டது. அவரது ஒவ்வொரு அறிக்கைகளும் கால் புள்ளி, அரைப்புள்ளி என்பது கூட விட்டுப்போகாமல் மிக கவனமாக, பக்தியோடு படிக்கப்பட்டு அவரது தொண்டர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.

விநாயக தாமோதர வீர் சாவர்க்கர் என்பது அவரது முழுப் பெயர்.

சத்ரபதி சிவாஜியின் நேரடிடையான வாரிசுகள் என்று கருதப்பட்ட இவர் அன்றைய காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா, பூனா நகரில் மிக அதிகமான செல்வாக்குடன் திகழ்ந்தார். இன்னும் வௌிப்படையாக சொல்லப்போனால் இந்த இடங்களில் மகாத்மா காந்தி, நேரு அவர்களெல்லாம் மூன்றாம் நான்காம் இடங்கள் தான். இவருடைய செல்வாக்கு, சொல்வாக்கு அத்தனை பிரபல்யம். கேள்வியே இல்லை. கேள்விக்கு அப்பாற்பட்ட தெய்வத்துக்கு சமமானவராக கருதப்பட்டவர்.

இவர் மட்டும் காங்கிரஸில் இணைந்து இருந்தால் மகாத்மா காந்தி, நேதாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டு இருக்கக்கூடும். வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற தேசபக்தர். ஒரே ஒரு குறை. பல்வேறு கலாச்சார சீரழிவுகளை தந்து கொண்டுருக்கும் முஸ்லீம்கள் வாழக்கூடிய பூமி இந்த பூமி அல்ல என்பதில் அத்தனை உறுதியாக இறுதிவரையில் இருந்தவர். ஆனால் அவர்கள் எங்கே போகமுடியும்? என்று அவரை கேட்டவரும் இல்லை. அதற்கான பதிலும் எவரிடமும் இல்லை.

காந்தி, நேரு, படேல்,ஜின்னா இவர்களைப் போலவே இவரும் லண்டனில் சட்டம் படித்து அத்தனை மேலிட பிரிட்டிஷ் மக்களிடம் பழகியவர் தான். ஆனால் இங்கிலாந்தில் இருந்த படித்த எந்த சட்டமும் இவருக்கு உடன்பாடில்லை. அவருக்கென்று தனி சட்டங்கள், நியதிகள், கொள்கைகள், கோட்பாடுகள். அவை அத்தனையும் இந்தியாவுக்கு, இந்து மக்களுக்கு, குறிப்பாக இந்து சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் சட்டங்கள்.

சாவர்க்கர் தீவிரமான தேசபக்தர் என்பதில் எந்த தலைவருக்கும் சந்தேகம் இல்லை. பல தேசிய தலைவர்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகமாக இருந்தது. கடைசி வரையிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், முஸ்லீம்களை ஒரே மாதிரியாகத் தான் கருதினார், வெறுத்தார்.

கண் முன்னே அக்கிரமம் என்றால் அடுத்த நொடியே அதன் முடிவு தெரிந்து விட வேண்டும். லண்டனில் படித்துக்கொண்டுருந்த போது டெல்லியில் வரம்பு மீறி பல அக்கிரமங்களுக்கு துணை போய்க்கொண்டுருந்த வௌ்ளை அதிகாரியை அங்கிருந்தபடியே தூக்கியவர்.


அவர் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பலர். ஆனால் அத்தனை பேர்களும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வரிசையில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள்.

காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், ஜின்னா சாகிப் இவர்களின் இந்திய அரசியல் பிரவேசித்திற்கு முன் (1910) பிரிட்டிஷ் அதிகாரியை படுகொலை செய்யப்படுவதற்கு சதி திட்டம் தீட்டியவர் என்று அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஏற்றிக்கொண்டு வந்த பிரிட்டிஷ் கப்பலில் இருந்து ஒரு கண்காணிப்பு துவாரம் வழியாக தப்பி வந்த அவரை பிரான்ஸ் அரசு கைது செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான சிறையில் வைக்கப்பட்டார்.

முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைத்தது.

காந்தியையும், காங்கிரஸையும் வெறுத்த சாவர்க்கர் குமரி முதல் இமயம் வரையிலும் அப்பாற்பட்டும் இந்து அகண்ட சாம்ராஜ்யம் அமைய வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தார். இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். மற்ற உட்பிரிவுகள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாக விளங்கினார்.

வீர் சாவகர்க்கர் மேடை பிரசங்கம் என்பதும் அறிக்கைகள் என்பதும் கேட்பவர்களை மூளைச் சலவை செய்வதற்கு சமமாக இருக்கும். நெருப்பை உமிழ்வது போன்ற பேச்சில் வீரம் இல்லாதவனுக்கும் வீரம் அந்த நிமிடமே வந்து விடும். அத்தனை தூரம் கவர்ந்து இழுக்கும்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக கோட்சேயும், உதவியாய் இருந்த விஷ்ணு கார்க்கரே போன்ற இந்து அபிமானிகள் அத்தனை பேர்களுமே சித்பவான் பிராமணர்களே?

முகத்தில் தோன்றினோம். முகவரியை மாற்ற முனைந்தோம். முக்கலும் முனங்கலும் வந்தால் என்ன? முடிவு இல்லாமலா போய்விடும்?