"வறட்டுக் கௌரவம்" என்றால் என்ன?
கொரானா செய்த மாய மந்திரங்களின் விளைவாக அரசுப் பள்ளிக்கூடங்களில் கூட்டம் அலை மோதுகின்றது. தனியார் பள்ளிக்கூடங்களில் விண்ணப்ப பாரம் என்ற ஒற்றை காகிதத்திற்கு ரூபாய் ஐந்து ஆயிரம் கட்டி தங்கள் கௌரவத்தை நிலைநாட்டிய எளிய தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரையும் வரிசையில் பார்த்தேன். எவரெல்லாம் முதல் கட்டணமான இருபது ஆயிரத்தைக் கட்டுகின்றார்களோ? அவர்களுக்கு மட்டும் தான் இணைய வகுப்பு என்ற அறிவிப்பைப் பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அடுத்த இரண்டு வருடச் செயலாக்கத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூடச் சேர்க்கையில் முன் வரிசையில் நிற்கின்றார்கள்.
