Saturday, September 20, 2014

பலி கொடுத்து விடு!


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...... எட்டாவது அத்தியாயம்.

பலி கொடுத்து விடு!

ஒவ்வொரு துறையிலும் மாடசாமிகள் போல உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்த பிறவிகள் உண்டு. இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க பிறருக்காகவே தங்களை அர்ப்பணித்து விட்டு தனக்கென்று எதையும் பார்த்துக் கொள்ள விரும்பாமல் மடிந்தும் போய்விடுகின்றார்கள். 

ஆனால் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் வரம் தரும் சாமியான முதலாளிகளைக் காலி செய்யக்கூடிய ஆசாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.


இவனைப் பலிகொடுத்தால் தான் நாம் இனி பிழைக்க முடியும்? என்று யோசிக்க வைக்கக் கூடிய மோசமான நபர்களும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தானே செய்கின்றார்கள்? திருப்பூர் போன்ற கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஊர்களில் ஒவ்வொரு இடத்திலும் திருட்டுத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்திற்குப் போடப்படுகின்ற விலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஐந்து சதவிகிதம் என்று தனியாகக் கட்டம் கட்டி வைத்து விடுவார்.

மேலும் படிக்க : http://goo.gl/socQC0


தொடரை முழுமையாக வாசிக்க

3 comments:

மகிழ்நிறை said...

சர்வைவல் -of -த-பிட்டஸ்ட்!!! சரி நான் போய் மீதிய பார்கிறேன்:)

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜி அவர்களின் தொழில் பற்றி அருமையான தொடர். அங்குள்ள அரசியல், பிரச்னைகள் பற்றியது. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வாழ்வியல் தொடர் ஐயா
அல்லக்கைகள் எவ்விடத்தும் இருந்து கொண்டு, நன்கு உழைப்பவர்களுக்கும், நேர்மையாளர்களுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்
என்து சிறிய அனுபவத்திலேயே பலரைக் கண்டிருக்கிறேன்
நன்றி ஐயா