Friday, November 05, 2021

கு. அண்ணாமலை எனும் நான்/ ஜோதி கணேசன்

குடும்பம், தேசம், அரசாங்கம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு இத்தகைய பிணைப்பு சார்ந்த பிரக்ஞை அவசியம். இத்தகைய புரிதலைக் கொண்டே இயற்கையையும் பூமியையும் கூட நாம் பேரழிவிலிருந்து காக்க முடியும். (உலக அளவில் சுற்றுச்சூழல் இயக்கமே பெரிதாகத் தொடங்கியிராத 1960களில் தீன்தயாள்ஜி இக்கருத்தை வைத்தது குறிப்பிடத் தக்கது.)  

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மதிப்பிற்குரிய கு. அண்ணாமலை அவர்கள் முன்னால் இருக்கும் சவால்கள். இதுவரையிலும் செய்த சாதனைகள். அதிகாரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள்.
 
இந்தியாவின் பொருளாதார அமைப்பு அறத்தின் அடிப்படையில் பாரதியப் பண்பாட்டை அடியொற்றி அமையவேண்டும். மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாததாகவும் (decentralized), 
பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் சுதந்திரத்துடன் இயங்க வழிசெய்வதாகவும் இருக்கவேண்டும். 

அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் அப்பால், மேற்கத்திய பாணியிலான அதீத நுகர்வுக் கலாசாரம் ஊக்குவிக்கப்படக்கூடாது. 

****

பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் அமைப்பு சட்டத்தில் (BJP Party Constitution) அதன் அதிகாரபூர்வக் கொள்கையாக ‘ஒருங்கிணைந்த மானுடவாதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவ வாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

அரசின் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தன்னிறைவு அடையச் செய்வதுடன் அவர்கள் யாரையும் நம்மி இருக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வழி காட்டுதல்.


Wednesday, November 03, 2021

2021 தீபாவளி வாழ்த்துகள்

04.11.2021


நாளைய தினம் தீபாவளி (2021). 

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


Tuesday, November 02, 2021

தளபதிகள் நண்பர்களாக , நண்பர்களே தளபதி

நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் தான் அரசியல் தரும் பரிசு என்பார்கள்.  

ஆனால் மோடி அவர்களுக்கு தளபதிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள். நண்பர்களே தளபதியாகவும் உடன் பயணிக்கின்றார்கள்.  கடந்த 7 வருடங்களில் மோடி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணங்களிலும் நடந்த, நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

நிர்வாகம் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும். 

திட்டமிடுதலின் உச்சம்.  

பார்த்துப் பார்த்து அலங்கரிக்கும் சிற்பி யாரோ  இருக்கின்றார்கள் என்றே நினைத்துக் கொள்வதுண்டு.  

இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை.  மன்மோகன் சிங் அரசாங்கத்தில் கொத்து கொத்தாக கொத்தவால்சாவடிக்கு டவுன்பஸ் ல் செல்லும் கூட்டம் போலவே சென்று வந்தார்கள்.


@annamalai_k  எழுதும் கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

இது கூடத் தெரியலையா?

பெயர் வைத்த நாள் எப்படிப் பிறந்தநாளாகும்! - 39

1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பிறந்தநாள் தற்போது சர்ச்சையாக்கப் பட்டுள்ளது. வரலாற்றுப்படி பார்த்தால் தமிழ்நாடு உருவாக்கப்படவே இல்லை. தென்னக மாநிலங்கள் ஒன்றாக மதராஸ் ராஜதானியாக தொடர்ந்தபோது,  ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவை மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணம் பிறந்தது.

தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.