Monday, January 11, 2021

பணம் இனி தேவையில்லை

தொற்று நோய் குறித்த அச்சமும் தமிழகப் பொருளாதாரப் புழக்கமும் எப்படியுள்ளது?
வருகின்ற 13 ஆம் தேதி திருப்பூர் ஸ்ரீ சக்தி திரை அரங்கத்தில் மொத்தம் 47 காட்சிகள் (ஒரே நாளில்) மாஸ்டர் படம் திரையிடப்படுகின்றது. முன்பதிவு செய்யவில்லை. சும்மா பார்க்கிறேன் என்று விஜய் ரசிகை சென்று பார்த்தார். ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 380. ஓர் இருக்கை தள்ளி மற்றொரு இருக்கை என்கிற விதத்தில் தயார் செய்து உள்ளனர். அதாவது பாதிக்குப் பாதி. 47 காட்சிகளில் அதிகாலை 7 மணி காட்சியில் மட்டும் சில இருக்கைகள் மட்டும் உள்ளது. மற்ற அனைத்துக் காட்சிகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதுவே அடுத்த நாளும். அதற்கடுத்த நாளும். பொங்கலோ பொங்கல்.
ஒரு நாள் தொகை (அனைத்துக் காட்சிகள் சேர்த்து) என்னவாக வரும் என்று உத்தேசமாகக் கணக்கிட்ட போது இருபத்தாறு லட்சத்து எழுபத்து ஒன்பதாயிரம் ரூபாய் மட்டுமே. எழு நாட்கள் முழுமையாகக் கணக்கிட்டால் ஒரு கோடியே என்பத்தி எட்டு லட்சம். விஜய் தாராளமாக ஜிஎஸ்டி போக நூறு கோடி சம்பளமாக வாங்கத் தகுதி உள்ளது.


+++++


2020 ஆம் ஆண்டு நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று மின்ணணு வர்த்தகம் மூலம் நடந்த பரிவர்த்தனைகள். சின்ன பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரைக்கும் அட்டை தான் பேசுகின்றது. அட்டைகளும் ஸ்கேன் செய்யக்கூடிய பரிவர்த்தனைகளும் இனி இந்தியர்களின் எதிர்காலம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு விதத்தில் நன்மை தான்... இதற்கு முன்னோடி கமலும் சேரனும்...