Friday, May 06, 2011

இந்த பக்தியை சாமி கேட்டதா?


















கோவை குற்றலாம் செல்லும் வழியில் உள்ள சிறுபூலுவபட்டி என்ற ஊரில் மே 4ந் தேதி நடந்த திருவிழாவில் தெக்கிக்காட்டுப்பயபுள்ள தெகா எடுத்த புகைப்படங்கள்.

27 comments:

roshaniee said...

சமயம் என்ற போர்வையில் மக்கள் முட்டள்களாக நடக்கிறார்கள்
இதை சாமி கேட்கல பக்தன் தான் வலுக்கட்டாயமாக திணிக்கிறான் .இப்படி செய்துதான் கடவுளை சந்தோசபடுத்துவதை கடவுள் கூட ஏற்கமாட்டார்

ராஜ நடராஜன் said...

இதனால்தான் தமிழர்கள் காட்டுமிராண்டிகள்ன்னு பெரியார் சொன்னார்.

துளசி கோபால் said...

சாமி எப்போ கேட்டாராம்? எல்லாம் ஆ'சாமி'கள் தானே உக்காந்து யோசிச்சுச்ச் செஞ்சது:(

தன்னைத்தானே வருத்திக்கிட்டா சாமிக்குப் பிடிக்குமுன்னு யார் ஆரம்பிச்சு வச்சாங்கன்னு தெரியலை!

Anonymous said...

ungalala mudiyala. antha paiyan sirikkiran parunga.

சென்னை பித்தன் said...

எந்தச் சாமியும் இது போன்ற வழிபாடுகளைக் கேட்கவில்லை.”கசிந்துருகிக் கண்ணீர் மல்கினாலே” போதும்.அதுவே பக்தி!

தமிழ் உதயம் said...

என்ன செய்வது. கடவுளே நினைத்தாலும் இந்தப் பக்தியை அப்புறப்படுத்த இயலாதே.

Unknown said...

மிக கொடுரமாக இருக்குதென்பதால் பின் லேடன் படத்தையே பெண்டகன் விடவில்லை.
நீங்க என்னடானா!?!?!

ச்சே கொடுமை!

http://thavaru.blogspot.com/ said...

எல்லாம் பக்திமயம்...எல்லாம் ஈர்ப்புமயம் அன்பின்.

Mahesh, Jawahar Scient and Arts College, Neively said...

கல்லூரி மாணவர்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து கடந்த 20௦ நாட்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் மக்களை சந்தித்து சேகரித்த முடிவின் படி கணிப்பு இது.

சர்வே குழு - 38 ,
மொத்த தொகுதிகல் சென்றது - 110
மொத்த மக்கள் - 13000+

3 கேள்விகள் தான் முன் வைத்தோம்

1. எந்த கட்சிக்கு வாக்களித்தீர்
2. யாருக்கு வாக்களிப்பதாக நினைத்திருந்தீர்
3. முக்கிய பிரச்னை எது

முடிவுகள்

தி மு க விற்கு வாக்களித்தோம் - 40%
அதி மு க விற்கு வாக்களித்தோம் - 51௧
ப ஜ க - 6
மற்றவை - 3

தி மு க விற்கு வாக்களிக்க நினைத்து அதிமுக விற்கு மாறியவர்கள் - 17%

அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து திமுக விற்கு மாறியவர்கள் - 9%

திமுக அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து ஆனால் இரண்டும் பிடிக்காமல் மற்ற கட்சிக்கு வாகளிதவர்கள் 6%

தொகுதிகள்

தி மு க 28
அதிமுக 81
BJP 1

இதன் படி பார்த்தல் தி முக 60௦ம் அதிமுக 172௦ம் , BJP -2

முக்கிய பிரச்சனையாக மக்கள் சொன்னது :

மின் வெட்டு, விலையேற்றம்

spectrum , ஈழம் ஒரு சில தொகிதிகளில் மட்டுமே பிரச்சனையாக சொல்லப்பட்டது.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

மதிமுக வெளியேற்றப்பட்டதால் அதிமுகக்கு வாக்களிக்க நினைத்ததில் 4% பேர் வேறு கட்சிகளுக்கு வாகளித்துள்ளனர்

மதிமுகவினர் பலரும் திமுக விற்கும், சிலர் பாஜக விற்கும் வாக்களித்துள்ளனர், குறிப்பிட்ட சதகிவிததினர் வாகளிக்கவே இல்லை

விஜயகாந்த் பிரச்சாரம் எடுபட வில்லை - விஜயகாந்த் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் தேமுதிக வாக்குகள் சில ப ஜ க விற்கு சென்றுள்ளது

ஜெயலலிதா போக்கில் மற்றம் இல்லை எனினும் இன்றைய சூழலுக்கு அவரே சரியானவர் என்று பலர் சொன்னார்கள்

கருணாநிதி நல்லவர் சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை என்ற கருத்தும் உள்ளது

இலவச திட்டங்கள் கிராமங்களில் நல்ல வரவேற்பு ஆனால் மின்தடை விலை வாசி ஆகியவை பலனை குறைத்துள்ளது

வடிவேலு பிரசாரம் சில தொகுதியில்
எடுப்பட்டுள்ள போதிலும்.. பல இடங்களில் அவரை வேடிக்கை பார்க்க மட்டுமே கூட்டம்

கிராமபுரத்தில் திமுகவிற்கு சற்று வலு கூடியுள்ளது
நகர்ப்புறங்களில் அதிமுக முந்துகிறது.

பிரசாரத்தில் பிடித்தது - கலைஞர், ஸ்டாலின், நல்லகண்ணு, நெப்போலியன்.

ஊனமுற்றோர் பலர் தி மு க விற்கு வாகளித்துள்ளனர்

மதுரையில் இந்த முறை ஆசாகிரிக்கு இறங்கு முகம்
கொமுக பெரிய அளவில் தி மு கவிற்கு உதவிட
வில்லை

அதே போல ச ம க மற்றும் புதிய தமிழகம் அதிமுகக்கு உதவிடவில்லை

ஜோதிஜி said...

மகேஷ் உங்களுக்கு நன்றி. கூகுள் பஸ்ஸில் பகிர்ந்துள்ளேன்.

கரிகாலன் தெகா எடுத்த புகைப்படங்களில் குறிப்பிட்ட சிலவற்றைத்தான் கொடுத்துள்ளேன். இயற்கையின் காதலன் அவர். அவர் பதிவில் விரைவில் வரும். வர வேண்டும்.

தவறு நீங்க சொல்வது உண்மை தான். ஆனால் எதில் ஈர்ப்பு என்பது தான் மிகப் பெரிய கேள்வி. தெகாவிடம் ஒருவரிடம் கேட்டது. என் பையனை எடுத்து விட்டீங்களா? எந்த பத்திரிக்கையில் இருந்து வர்றீங்க? எப்பூடி? திருவிழாவில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்ட ஆண்களின் வாயிலிருந்து மதுவாடை. டாஸ்மாக் ரொம்பி வழியுது.

உண்மைதான் தமிழ்உதயம். ஆண்டவப்பெருமாள் வந்தாலும் இவங்க அக்கட நகர்த்தி விடுறாங்களோ இல்லை கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருக்கும் கூட்டங்கள் அடித்து விரட்டி விடுவாங்க போலிருக்கு.

சென்னை பித்தன் அற்புதமான ஆழ்ந்த புரிந்துணர்வை உருவாக்கும் விமர்சனம். நன்றி.

துளசி கோபால் நாடார் வரலாறு குறித்த புத்தகங்களை எழுதியவர் ஒரு அமெரிக்கர். பாரபட்சம் இல்லாமல் எழுதியுள்ளார். இந்த வழிபாட்டு முறைகளை, மக்கள் அடித்துக் கொண்டு சாவதை பல இடங்களில் போற போக்குல சொல்லிக் கொண்டே செல்கிறார். அடித்தட்டு மக்களிடம் தான் பலிகொடுத்து வழிபடுவது தொடங்கி அது காலப்போக்கில் இது போன்ற சித்ரவதை செய்து கொண்டு இறைவனை மனதில் கொண்டு .......

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

நீண்ட நாளைக்குப் பிறகு பார்த்த திருவிழா. மக்களை ஒன்றிணைக்கவும் இதே வகையில் தாங்கள் செய்து கொண்டிருப்பதே சரி என்றே யோசிக்கவும் வைக்கிறது போலும்.

Dr. Selvaganesan said...

உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரவர் நம்பிக்கைக்கேற்ப இந்த மாதிரி வழிபாடுகள் நடைபெறத் தான் செய்கிறது.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!அது யாருங்க நெய்வேலி பார்ட்டி மகேஷ்!கொஞ்சம் முன்னால வரச் சொல்லுங்க பார்க்க்லாம்...

பதிவு போட்டு லட்டு,ஹிட்டு வாங்குற பதிவை திட்டு வாங்குவோம்ன்னு இங்கே வந்து கொட்டிட்டுப் போயிட்டாராக்கும்?

நிகழ்காலத்தில்... said...

இதெல்லாம் மனம் சார்ந்த விசயங்கள்..

உங்கள் பார்வையில் இது தவறு
அவர்கள் பார்வையில் இது சரி:)))

Mahesh said...

Rajanatarajan Sir, We really do not have a blog. Again, we had the option to open a blog and post this. but it will take its own time to get in to tamilmanam or any other blog aggregator. so decided to post it here.

morever, it will be shared with many if it is posted in a blog(s) which is already popular.

no other intention behind it.

if needed let me know, i can give u my gmail id.

Anonymous said...

பயமுறுத்தும் படங்கள்...அக்குபஞ்சர் முறை வைத்தியம்..உடலுக்கு நல்லது..-))

தாராபுரத்தான் said...

படம் பார்த்த மாதிரியும் ஆச்சு.தொகுதிகளின் கணிப்பு தெரிந்த மாதிரியும் ஆச்சு..

செந்திலான் said...

தமிழன் ஒரு காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது சரியாத்தான் இருக்கு நல்லா பாத்தீங்களா ? இது தெலுங்கரா அல்லது கன்னடரா என்று ஏனெனில் அவர்களின் சவுடாம்பிகை அம்ம்மன் பண்டிகையில் இது போல செய்வார்கள்

Anonymous said...

தமிழர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் தான்; பெரியார் தமிழர்களை அப்படிச் சொன்னால் ஆவது உரைக்கட்டும் என்று நினைத்தார். நாம் தான் உப்பை அதிகமாகப் போட்டுத் திங்கிறோமே அதனால் கரித்ததே ஒழிய உரைக்கவில்லை....

இந்தப் பழக்க வழக்கம் எல்லாம் மிகப் பழமையான பழக்க வழக்கங்கள். பிற்கால ப்ராமணர்களால் இந்து மதத்தில் இவற்றையும் இணைத்துக் கொண்டார்கள் - பிழைப்பு ஓடணுமல்லவா....

தீமிதி, காவடித் தூக்கு என்பவைப் போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்து ஆசிய சமூகங்களிலும் மதம் கடந்து இருக்கு.... சிலுவையில் அறையும் பிலிப்பைனர்கள், தோலிரித்து ரத்தம் எடுக்கும் சியா முஸ்லிம்கள் என இருக்கின்றது.

ஆனால் மேல் நாடுகளில் இப்படியான கொடுமைகளை நான் பார்த்ததே இல்லை.. இதனை அரசும் அனுமதிப்பது இல்லை. அமைதியாக கோவிலுக்கு சர்சுக்கு மசூதிக்கு சென்றுவிட்டு வந்துவிடுவார்கள்.

உள்நாட்டில் இவை தேவை இல்லை மாத்துங்கனு சொன்னால் --- அடிக்க வராங்க.. இல்லாட்டி அக்குபஞ்சர் நல்லது அது இதுனு புருடா விடு|றாங்க.. அலகு குத்தலுக்கும் அக்கு பஞ்சருக்கும் அறிவியல் நிரூபணம் இல்லை.

தன்னை வருத்திக் கொண்டால் தான் கடவுள் நன்மை செய்வார் என்பது எல்லாம் பழைய மதக் கோட்பாடுகள். நாலு பேருக்கு நல்லது செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்பதே புதிய சிந்தனை சொன்னால் கேட்க மாட்டங்க.....

Unknown said...

:-)

a said...

என்ன சொல்ல..

ஊரான் said...

வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி தெரியாத காரணத்தால் அவர்களுக்குத் தெரிந்த பரிகாரங்களைத் தேடுகிறார்கள். அதில் ஒரு வகைதான் இது.

அறியாமையும் இயலாமையும் எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இதைப் பார்க்கலாம்.

பாமரர்கள் செய்வது நமக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றுகிறது. ஆனால் படித்த மேதாவிகள் இதையே வேறு வடிவங்களில் செய்தால் அதற்கு அறிவியல் முலாம் பூசப்படுகிறது.

ஜாதகம், வாஸ்து போன்றவைகளை அதிகம் நம்புபவர்கள் படித்தவர்களே. படித்தவர்களே திருந்தாத போது பாமரர்கள் மட்டும் எப்படி திருந்தி விடுவார்கள்?

மக்களின் இத்தகையப் போக்கிற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அதைக் களைவதுதானே நமது கடமை.

நமக்குக் கடமைகள் ஏராளம் என்பதைத்தான் இந்தப் படங்கள் உணர்த்துகின்றன.

ஜோதிஜி said...

ஊரான் நான் அந்த திருவிழாவில் இருந்த போது என்ன மாதிரியான மனோநிலை, எண்ணங்கள் என் மனதில் தோன்றியதோ அதை அப்படியே வார்த்தைகளாக கொண்டு வந்து இருக்கீங்க. மிக்க ந்ன்றி.

யோகேஷ் நீண்ட நாளைக்குப் பிறகு. நலமா?

இரவு வானம் சுரேஷ் தப்பித்து விட்டீங்க(?)

செல்வன் நிக்ழகாலத்தில் சிவா வுக்கு நீண்ட பதில் அடித்து முடித்த போது இங்கே மின்சாரம் போய்விட்டது. ஒரு பதிவுக்குரிய விசயத்தை வெகு அற்புதமாக கொடுத்து இருக்கீங்க.

சிவா இந்த கட்டுரைக்கு வார்த்தைகளாக எதையும் எழுதாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொன்றும் அவரவர் மனம் சார்ந்த விசயங்கள். விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சித்தாலும் பிரயோஜனமும் இல்லை.

ஜோதிஜி said...

செந்திலான் நீங்க சொன்னது உண்மை தான். நானும் அந்த மக்களின் வழிபாட்டு முறைகளை கூர்மையாக கவனித்த போது உணர்ந்து கொண்டதும் அஃதே

தாராபுரத்தான் வருக. தொகுதியா? பயமுறுத்துறீங்க?

சதீஷ் இன்னும் பலபடங்கள் உள்ளது.

வீரபத்ரன் said...

ஐயா
சோதி கணேசரே,
சாமி கேட்டு தான் உங்க வீட்ல சாமி கும்பிடுறீங்களா?
சாமி கேட்டால் தான் செய்யனுமா?உங்கள போல நாத்திக பதர்கள் சாமியை திட்டுவதால் சாமி உரு படி தாழ்ந்து விடப்போவதில்லை,இவங்களைப்போல சாமியாடிகள் சாமியை கொண்டாடுவதால் சாமி ஒரு படி உயர்ந்து போவதுமில்லை,நம்மை போல அற்ப மானிடருக்கெல்லாம் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்,ஆனால் தெய்வம் என்றுமே தெய்வம்.
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்.
ஆகவே உங்க வாயையும் அதையும் பொத்திகிட்டு கருணாநிதியை கனிமுலையை திட்டி பதிவு போட்டுட்டு போய்ட்டே இருங்க.ஆமாம்,இந்த மாதிரி மொல்லமாரித்தனம் பண்ணத்தான் பக்கிலுக் மற்றும் கோழிகண்ணன் ,கன்னடஓவியா போன்றோர் உள்ளனர்.

ஹேமா said...

கொடுமை.ஆனாலும் இங்கு விஞ்ஞானம் பேசினால் அங்கங்கு குத்தப்படுவதால் சில நோய்கள் இல்லாமல் போய்விடுகிறதாமே.அதுதான் அக்குப்பஞ்சர் !

Anonymous said...

All enlightened masters against this..
Vallalar, siva vakiar are best examples.


மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி
உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; .

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)


Online Books : TAMIL
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454