Tuesday, November 24, 2009

சூழ்ச்சியில் தொடங்கிய வளர்ச்சி

இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து  விடுதலை பெற்ற ஆண்டு 1948 பிப்ரவரி 4.
இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றது சேனநாயகா (சிங்களர்களின் தந்தை)  1947 செப்டம்பர் 23.

ஆனால் ஆங்கிலேயர்கள் , படித்த மக்களின் மூலமும் , ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட  இலங்கை நாடாளுமன்ற செயல்பாடுகளும் தொடங்கிய ஆண்டு 1931  ஜுலை 10.

மற்றொரு ஆனால் என்பதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.  சிங்களர்களின் தந்தையான சேனநாயகா உருவாக்கிய கட்சியின் பெயர்  (1946 ஜுன் 4) "ஐக்கிய தேசிய கட்சி".  இவர் ஏற்கனவே இருந்த கட்சி மொத்தமாக தமிழர்களும் சிங்களர்களும் இருந்த, தமிழரால் உருவாக்கப்பட்ட "சிலோன் தேசிய காங்கிரஸ் கட்சி".

சர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் (பொன்னம்பலம் இராமநாதனின் சகோதரர்) தொழிலாளர்களுக்கென்று ஒரு நல வாரியம் முதல் முதலாக உருவாக்கப்பட்டு.  இலங்கையில் தமிழர்களுக்கென்று உருவானதும், மொத்தமாய் இன துவேசம் இல்லாமல் மொத்த தமிழர் சிங்களர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் என்று தொடங்கியவரும் இவர் தான்.

தொடக்க காரண கர்த்தாவும், தொடர்ந்து போராடியவரும் இவரே தான்.   "சிலோன் சீர்திருத்த அமைப்பு", "சிலோன் தேசிய சங்கம்"," யாழ்பாண சங்கம் " என்று தனித்தனியாக இருந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து "சிலோன் தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை நிறுவினார்.

தமிழர் உருவாக்கிய இந்திய இந்த "சிலோன் தேசிய காங்கிரஸ்" பிறகு (1920) சிங்களர்கள தலைவர்களின் கைக்கு மாறி அதுவே சிங்களர்களின் கட்சியாக மாற்றம் அடைந்தது.

தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த சிங்களர்களுக்கும் உரிமை என்பதை எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறவேண்டும் என்று பாலபாடம் நடத்தியவர் சர். பொன்னம்பலம் அருணாச்சலம்.

இவர் கேம்ப்ரிட்ஜ்ல் படித்தது கூட சிறப்பாக தெரியவில்லை.  மொத்த இலங்கையிலும் முதன் நபராக சிவில் சர்வீஸ் பதவியில் அமர்ந்தவரும் இவரே தான். இவருடைய தனிச்சிறப்பு தமிழர்கள் அனைவரையும் ஒரே பார்வையில் பார்த்து கொண்டு வந்ததோடு மொத்த சிங்களர்களையும் பாகுபாடு பார்க்காமல் ஒரே ஆளுமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நம்பியது?

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட  மக்களுக்கான பிரதிநிதிகள்(1920) என்ற பொதுப் பார்வையில் உருவாக்கிய முன்னேற்பாடுகள் தமிழ் தலைவர்களால் முன்னெடுத்து கொண்டு செல்லப்பட்டது.

காரியம் ஆகும் வரைக்கும் இவர்கள் பின்னால் இருந்த சிங்கள தலைவர்கள், ஒரு அளவிற்கு மேல் திரும்பி விட ஆரம்பித்தனர்.  காரணம் உருவாக்கிய செடியில் பழுத்த பழம் உருவாகப்போகும் காலகட்டம் அது. சிங்களர்கள் இதற்கு கூறும் காரணம் "தன்னுடைய அரசியல் செல்வாக்கை இதன் மூலம் இவர் உயர்த்திக்கொள்கிறார்"

தமிழ் தலைவர்களை விட சிங்கள தலைவர்கள் மிகத் தெளிவாக இருந்தனர்.  தொடர்ந்து கொண்டுருந்த சிங்கள அவதூறுகளைக் கண்டு ஒரு அளவிற்கு மேல் சகித்துக்கொள்ள முடியாமல், பொது வாழ்க்கையில் இருந்து  "நான் மறுபடியும் சட்டமன்றத்தில் இடம் பெற விரும்வில்லை. ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்கிற அளவிற்கு நாசுக்காக நகர்த்தி விட்டனர்.

தனியாக கட்சி தொடங்கி அடுத்த அரை வருடத்திற்குள் திடீர் என்று பிரதமராகவும் சிங்களர்களின் தந்தையாக உருமாற்றம் அடைந்த சேன நாயகா ஏறக்குறைய முகமது அலி ஜின்னாவின் லக் பெற்று கிக்காக மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களில் இடம்பிடித்த கிங் தானே?

இலங்கை சுதந்திர வரலாற்றுக்கும் இலங்கை வரலாற்றுக்கும் உள்ள வித்யாசங்கள் குழப்பமாக இருக்கிறதா?   இதில் தான் ஆங்கிலேயர்களின் புத்திசாலித்தனமும், தொடக்கம் முதலே சிங்களர்களின் தந்திரங்களும் அடங்கி இருக்கிறது. மேலும் மொத்தமாக "பாடுபட்டுக் கொண்டுருந்த"  தமிழ் தலைவர்களின் தீர்ககதரிசனமும் நமக்கு பல விசயங்களை உணர்த்துகிறது.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது இலங்கை ஒரே நாடு.  பெரும்பான்மையினர் சிங்களர்கள்.  தமிழர்கள் என்பவர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்கள்.  இதன் அடிப்படையில் ஆங்கிலேயர்களால் சட்ட மன்றத்தில் பிரதிநிதிகளுக்காக உருவாக்கப்பட்டது தான்  சிங்களர்களுக்கு இரண்டு,  ஒரு பங்கு தமிழர்களுக்கு. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் படித்த மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிகள் இவர்கள்.

அப்போது நடந்து கொண்டுருந்த  (கரைச்சல்) சட்டமன்ற நடவடிக்கைகள் திருப்தி அளிக்காத பிரிட்டன் ஆட்சியாளர்கள் டெக்னமோர் பிரபு (1927) மூலம் நேரிடையாக ஆராய்ந்து அறிக்கை அளிக்கச் சொன்னது.

அப்போது இருந்த நிலைமை.

கண்டியில் வாழும் சிங்களர்கள் தன்னாட்சி வேண்டும் என்றனர்.  பெரும்பான்மையான சிங்களர்கள் சொத்துக் கணக்கு, இலங்கையில் வாழ்ந்த கணக்கு அடிப்படையில் அத்தனை சிங்கள மக்களுக்கும் வாக்குரிமையை பரவலாக்கபட வேண்டும் என்றனர்.

மொத்த சிங்களர்களுக்கும் ஓட்டுரிமை என்றால் சிறுபான்மையினரான தமிழர்கள் தங்கள் மக்களின் ஓட்டு உரிமையில் சிறப்பு அதிகாரங்கள் வேண்டும் என்றனர்.  ஆனால்  இதை தொடக்கத்திலேயே டெக்னமோர் குழு நிராகரித்து விட்டது.  காரணம் , இதே போல் ஒவ்வொருவரும் பின்னால் வந்து நிற்பார்கள் என்று?

வாழ்ந்து கொண்டுருந்த தமிழர்கள், முஸ்லீம்கள் மக்களிடம் கருத்துக்கள் எதையும் கேட்காமல் (1928) பிரிட்டன் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய அறிக்கை இது.  இதில் ஒரு ஆச்சரியம் ஆங்கிலேயர்கள் தோட்டத் தொழிலாளர்களையும் வாக்குரிமை பெற்றவர்களாக அறிவித்தார்கள்.

இந்த அறிக்கையின் மொத்த சாகத பாதக அம்சங்களை வயதான காலத்தில் கூட பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த சர் பொன்னம்பலம் ராமநாதன் லண்டன் சென்று வெள்ளையர்களுக்கு புரிய வைத்த போதிலும் அவர்கள் மனம் எப்போதும் போல கருப்பாகத் தான் இருந்தது.

அப்போது சிங்களர்கள் கையில் இருந்த "சிலோன் தேசிய காங்கிரஸ்" தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை உரிமையைப் பற்றி சொன்ன வாசகம் இது.  காரணம் தொடக்கத்தில் பத்து சதவிகிதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை மொத்த தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையையும் சேர்த்தால் வருவது 33 சதவிகிதம்.

"அவர்கள் நாட்டிலே அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. வாழ வந்த நாட்டில் வாக்குரிமையா?"

பிரதிநிதிகளிடையே வாக்குவாதங்கள். கடுமையான அமளி துமளி.

பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, பல்வேறு உபவிதிகள் உருவாக்கப்பட்டு (ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஏதாவது ஒன்ற பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும்........) உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் மேலே சொன்ன 1931.

ஆனால் இந்த பிரதிநிதிகளின் தேர்தலை உருவாகியிருந்த "யாழ்பாண தேசிய காங்கிரஸ்" முற்றிலும் புறக்கணித்தது.  அவர்களின் எண்ணம் தொடக்கம் முதலே (1915) மொத்தமாக வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவர்களின் இந்த சிந்தனைகளுக்குப் பிறகு தான் சிங்களர்களுக்கே அந்த எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது.
இங்கு உருவான சர் பொன்னம்பலம் ராமநாதன், சர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு பிறகு வந்தவர் தான் ஜீஜீ பொன்னம்பலம்.
உள்ளே நுழைந்த அத்தனை சிங்கள தலைவர்களும் தங்களை, தங்கள் அரசியல் வாழ்க்கையை வளர்த்துக்கொள்வதற்காக சாம்பிராணி புகை போல் கொண்டு வந்து கொண்டுருந்தது தான் தமிழர்களுக்கான எதிர்ப்பும், பௌத்த மதமே இலங்கையின் மதம் என்பதும்.
சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு சாதகமாகவும், இன துவேசத்தை வளர்ப்பதிலும் மிக கவனமாக 1910 முதல் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும்  சிறப்பாக செயல்பட்டனர்.

இவர்கள் யார்?  அவர்கள் பின்புலம் என்ன?  அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள்?  சுய ஓழுக்க வாழ்க்கை கோட்பாடுகள் எதையும் சிங்களர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை.  பின்னால் வரப்போகும் பண்டாரா நாயகா என்ற தலைவருக்கு சிங்கள மொழி கூட சரியாக பேச வராது.  எவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அதிகமாக்குகிறாரோ அவரே அப்போது சிறந்த தலைவர்.  ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் போட்டி போட்டுக் கொண்டு அச்சப்படும் அளவிற்கு அவர்களால் முடிந்தவற்றை கர்மசிரத்தையோடு சொற்பொழிவுகள், கூட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் மிகத் தெளிவாக விதையை செடியாக்கி வளர்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் "அவர்கள் நாட்டுக்கு ஓடிப்போக வேண்டியவர்கள்" என்ற கணக்கில் கொண்டு வந்தது முதல் இன்றைய இலங்கை பிரச்சனையின் மொத்தமும், மூலமும் முழுமையாக இங்கு தான் ஆரம்பம் ஆகின்றது.

பிரதமர் ஆனதும் தோட்டத் தொழிலாளர்களை நாடோடியாக்கியது சிங்கள முதல் பிரதமர் சேனநாயகா.  செய்வதற்கு ஆதரவு அளித்து மொத்த முழு காரணமாய் இருந்த தமிழர். ஜீஜீ.பொன்னம்பலம். 

இவர்தான் அப்போது இலங்கையில் வாழ்ந்த தலைவர்கள் மறைவுக்குப்பிறகு  (1931) தமிழர்களுக்கு ஆதர்சன தலைவராக உருவாகிக்கொண்டுருந்தார்.    தன்னை திராவிடன் என்று மொத்தமாக சொல்லிக் கொண்டாலும், தமிழர்களை  பார்த்தது என்னவோ அவர்களின் ஜாதி ரீதியாகத்தான்.  அவருடைய பார்வையில் இந்தியாவில் வந்த தொழிலாளிகள்  பூர்வகுடி தமிழர்களுக்கு  கீழே?  யாழ்பாண தமிழர்கள் மேலாதிக்கம் செய்பவர்கள் என்று "தெளிவற்ற புரிதலை" உருவாக்கியவரும் இவரே.

மேல்நாட்டுக்கல்வி.  மேல்தட்டு வர்க்கம். சற்று மேம்பட்ட சிந்தனைகள்?

இதே சமயத்தில் சிங்களர்களுக்கு என்று உருவான தலைவர் சந்திரிகா குமார துங்காவின் தந்தை (ஆக்ஸ்போர்டு கல்வி) SWRD பண்டார நாயகா. இவரின் பிறப்பு மூலமும் தமிழ்த் தோன்றல் வழியாகத் தான் இருக்கிறது.  இன்று வரையிலும் பண்டாரம் என்று சொல் குறித்து தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.  இவருடைய முன்னோர்கள் (1454) தலைமை கோவில் பூசாரியாக இருந்துள்ளனர்.  சரித்திரத்தில் சிங்களரான யஸ்வின் குணரத்னே என்ற சிங்களர் தெளிவாக விளக்குகிறார்.

தொடக்கத்தில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்க,  என்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆண்டு முழுக்க வேலையிருக்காது.  அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட தென்னை, காபி எஸ்டேட், இரயில் தண்டவாளம் அமைக்கும் பணி, மற்ற கட்டுமானப்பணி என்று ஒவ்வொரு மொத்த இலங்கையின் வளர்ச்சியிலும் இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் உயர்ந்து கொண்டே இருந்தது.  சிங்களர்கள் அச்சப்படும் அளவிற்கு.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அன்று ஆங்கிலேயர்கள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்ததற்கு அவர்களின் யுத்த நெருக்கடியால் உருவான பொருளாதார திவால் நிலையும் ஒரு முக்கிய காரணம். இலங்கையிலும் தொடர்ச்சியாக அப்போது உருவாகிக் கொண்டுருந்த அத்தனை போராட்ட எழுச்சியும் அவர்களை யோசிக்க வைத்துக்கொண்டுருந்தது.

பிரிட்டன் ஜெர்மன் மீது(1939) படையெடுக்க தொடங்கிய போதே மொத்த இலங்கை நிர்வாகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து.  தோட்டத் தொழிலாளர்களுக்கு  என்று அப்போது இருந்த பல வேறு சங்கங்கள் ஒவ்வொரு சமயத்திலும் முட்டி மோதிக்கொள்வதும், பிறகு சூழ்நிலை சகஜமாவதும் வாடிக்கை என்ற போதிலும் ஒரு காவலரால் (மூல் ஓயா எஸ்டேட்)சுட்டுக்கொல்லப்பட்ட (கோவிந்தன்) சம்பவம் மொத்த நாட்டுக்கும் பரபரப்பு தீயை பற்ற வைத்து விட்டது.  இதே ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டமும் தொடங்கியது.

அப்போது இலங்கையில் உருவான வெள்ளம், போராட்டத்தை மட்டுப்படுத்தினாலும் (1940) மொத்த தொழிலாளர் பேரணி வரைக்கும் பல் வேறு இயக்கங்களால் மீட்டு எடுத்தி நடத்திக் கொண்டு வரப்பட்டது.

மற்றொரு மிகப்பெரிய ஆச்சரியம்.  தொடக்கத்தில் உருவான சிங்களர்கள் முஸ்லீம்கள் கலவரத்தில் ஆங்கிலேயர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு அன்று சிறையில் இருந்த அத்தனை சிங்களர்களையும் வெளியே கொண்டு வர போராடியது சர் பொன்னம்பலம் ராமநாதன்.

சிகிச்சைக்காக கொடைக்கானலில் இருந்தவரை கெஞ்சிக்கூத்தாடி சிரமமான கப்பல் பயணத்தை தொடங்க வைத்து லண்டன் அனுப்பி பேச வைத்தனர் சிங்கள தலைவர்கள்.  திரும்பி நாட்டுக்குள் வந்தவரை இழுத்து வந்த குதிரைகளை கழட்டி விட்டு தாங்களே வீதி முழுக்க ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அன்று முஸ்லீம் மக்கள் குறித்து சிங்கள தலைவர்கள் கூறியுள்ள அச்சப்படுத்தும் வாசகங்கள், அதுவே பின்னாளில் பிரபாகரன் மேல் ( முல்லை மார்க்கெட் இடம் பெயர்தல் காரணமாக) கொண்ட "புரிந்துணர்வு" என்று மொத்தத்தையும் கூர்ந்து பார்த்தால் எல்லாமே சரித்திர பக்கங்களின் எதிர்மறை நியாயங்கள்.

ஆங்கிலேயர்களுக்கு "சிலோன் தேசிய காங்கிரஸி" ல் இருந்த போதே சேனநாயகா மறைமுகமாக "ஆலோசனைகள்" சொல்லிக் கொண்டு வந்தவர் திடீர் என்று "நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்" என்று நட்டாத்தில் விட்டு விட்டு "ஐக்கிய தேசிய கட்சி" யை தொடங்கி ஏற்கனவே மறைமுகமாக உருவாக்கியிருந்த வாய்ப்ப்புகளில் பயணம் செய்து இலங்கை வரலாற்றில் "சிங்களர்களின் தந்தை" என்ற பதவியையும் அடைந்து வெற்றி வீரனார். இன்றைய பிரபல வாசகமான மைனாரிட்டி  அரசாங்கம்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஸ்ரப்புக்கும் இவருக்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை.
பழைய தமிழ் மன்னர்களான பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழ , பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த, சொர்க்க தேசம், லவங்க தேசம், ஈழம், ஈழத்தவரின் கதையானது முதல் பிரதமர் சேனநாயகாவின் ஆட்சிகாலத்தில் முழுமையாக சிங்கள தேசமாக மாற்றம் பெற்றது.  அன்று முதல் இன்று வரையில் மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் கண்ணீர் தேசமாக.

(இரண்டாம் பாகம் முடிவு)