Showing posts with label தன்னம்பிக்கை மனிதர்கள். Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை மனிதர்கள். Show all posts

Monday, August 10, 2020

கிஞ்சல், பிரஞ்சல் தன்னம்பிக்கை சகோதரிகளின் கதை

ஒருவருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பதிலடி எது?

காவல்துறை குழு ஒன்று, மார்ச் 12,1982 இரவு கோண்டா - (உத்தரப்பிரதேசம்) கிராமத்திற்குச் சென்று, ராம் மற்றும் அர்ஜுன் பாசி ஆகிய இரு குற்றவாளிகளைத் தேடியது. அங்கு இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகத் துப்பு கிடைத்திருந்தது. அந்த வட்டத்தின் தலைமை காவல் அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி சிங், குற்றவாளி ராம் வீட்டின் கதவைத் தட்டினார். அவர் தட்டும் போது யாரும் பதிலளிக்கவில்லை. சிங் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் திரும்பிச் செல்லும்போது, பக்கத்தில் இருந்த, ​​சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் அவரை மார்பில் சுட, சிங் மருத்துவமனையில் இறந்து போனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கிஞ்சலுக்கு வயது வெறும் ஆறு மாதங்கள். அவளுடைய தந்தை DSP சிங் கொல்லப்பட்ட அந்தச் சமயத்தில் அவளது இளைய சகோதரி தாயின் வயிற்றில் கருவாக இருந்தாள்.