இன்று ஆசிரியர் தினம். ஒரு வருடத்தில் வருகின்ற வெவ்வேறு தினங்கள் குறித்து நான் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. அம்மா தினம். அப்பா தினம் என்று மேற்கத்திய கலாச்சாரம் உருவாக்கித் தந்ததை அப்படியே பற்றிக் கொண்டு பொய்யாய் அன்பு செலுத்துவது நம் பண்பாடு அல்ல. ஆனால் தொடக்கம் முதல் நேற்று வரை தேவியர் இல்லத்தில் என் ஆசிரியர்கள் குறித்து எழுதியது இல்லை என்பதால் இன்று இதனை எழுதி வைத்து விடலாம் என்று தோன்றியது.