Showing posts with label இராமநாதபுரம் மாவட்டம் தொடர். Show all posts
Showing posts with label இராமநாதபுரம் மாவட்டம் தொடர். Show all posts

Tuesday, May 03, 2011

கல்வி -- பலமான ஆயுதம்

1899 ஜுன் 6

திட்டமிட்டபடி மறவர்கள் அதிகாலை வேலையில் சிவகாசியின் நான்கு புறமும் சூழந்து கொண்டனர். இப்படி ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து நாடார்களும் தயாராகவே இருந்தனர். முந்தைய நாட்களில் வெளிப்புறங்களிலிருந்து படுக்கை விரிப்புக்குள் சுற்றி முடிந்தவரைக்கும் பலவிதமான ஆயுதங்களை கடத்தி வந்திருந்தனர். அத்துடன் அதிக அளவில் துப்பாக்கிகளையும் கொண்டு வந்திருந்தனர். மறவர்கள் வரும் பாதையில் மரங்களை வெட்டி பல தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் வருபவர்கள் தங்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்திருந்தனர். 

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த என்றொரு பாவத்தை தவிர வேறொன்றும் அறியாத சமூகத்தின் ஒரு சான்று இந்த புகைப்படம். முட்டிக்கு மேல் அணிய வேண்டும். மேலாடை கட்டாயம் கூடாது.

வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முன்னேற்பாடாக தங்கள் பணம், நகை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் கொண்டு போய் பதுக்கி வைத்தனர். ஏழை மக்களை, வயதானவர்களை நகரின் மத்திம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான் வெவ்வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். உள்ளேயிருக்கும் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பாக தெற்கு ரத வீதியில் அரண் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

அரண் போன்ற பகுதியில் உயரத்திலிருந்து கீழே பார்க்கும் மறவர்கள் மேல் வீசி எறிய வேண்டி மிளகாய்ப் பொடி, கற்கள், கொதிக்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். மறவர்கள் வருவதை தெரியப்படுத்த உயரமான பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்திருந்தனர். தொலைவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தொலைநோக்கி கருவிகளும் வழங்கப்பட்டு இருந்தது. 

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகின்றது என்பதாக ஏராளமான புகார் மனுக்கள் அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர் ஸ்காட் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.  அவரோ தேவைப்படும் அத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் திருநெல்வேலியைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். இவர்களைப் போலவே அதிகாரியாக இருந்த ஸ்காட் கூட நாடார்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவில்லை. நாடார்களை எதிர்த்த அத்தனை பேர்களும் ஆதிக்க சாதியாளராக இருக்க வெள்ளையர்கள் இவர்களிடம் பெயருக்கென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டனர்.  மறவர்களின் ஆட்டம் மே மாதம் 23ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த நாடார்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றியதோடு சிவகாசியை நோக்கி முன்னேறிச் சென்றனர். 

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழவேண்டும்.  ஏன் மறவர்களுக்கு இத்தனை ஆத்திரமும் கோபமும் நாடார்கள் மேல்? அதற்கு வெள்ளைச்சாமி தேவரைப் பற்றி இந்த இடத்தில் சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவஸ்யமாகும்.

இப்போது நாம் அடுத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முக்குலத்தோர் பிரிவில் வருகின்றவர்கள் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அறிமுகம் ஆகின்றார்கள். காரணம் இருக்கிறது.  இப்போது அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இவர்களின் ஆதிக்கம் அதிகம்.  இவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றது.  வேகமும், வீரமும், கோபமுமாய் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை தற்போது ஓரளவுக்கு சகஜநிலைக்கு மாறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளலாமே தவிர இன்றும் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.  முக்குலத்தோர் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது.  கள்ளர், மறவர், அகமுடையார் என்பதாகும்.  விலாவாரியாக பிறகு பார்ப்போம்.  இப்போது நாம் தேவரிடம் செல்வோம். 

வெள்ளைச்சாமி தேவர்.  

இப்போது ஜாதி அரசியல் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரை தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? 


இவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தாத்தாவின் பெயர் தான்  வெள்ளைச்சாமி தேவர். வெள்ளைச்சாமி தேவிரின் அப்பா பெயரும் முத்துராமலிங்கமே.  கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  தனது தந்தை முத்துராமலிங்கத் தேவர் உருவாக்கி வைத்திருந்த மிகப் பெரிய சொத்துக்கு சொந்தகாரர். மொத்தில் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தார். மறவர் இன மக்களைப் போலவே மற்ற இன மக்களும் தன்னை மதிக்க வேண்டும் என்ற வெள்ளைச்சாமி தேவரின் கொள்கையில் தான் நாடார்களும் மறவர்களுக்கும் உண்டான விரிசலின் தொடக்க அத்தியாயம் உருவானது.  

இதே காலகட்டத்தில் இவரைப் பார்க்கும் மற்ற இன மக்கள் தங்கள் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அல்லது கீழே இறக்கி மரியாதை செய்வது வழக்கம். ஆனால் நாடார் இன மக்கள் இது போன்ற விசயங்களை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாகவே நாடார் இனமக்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த வண்ணார் இன மக்களை நாடார்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று மறைமுக கட்டளை பிறபித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் நாடார்களுடன் எந்த வரவு செலவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதிலிருந்து தொடங்கி பல நாடார்களுக்குண்டான எதிர்ப்பு சமாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். உச்சகட்டமாக மறவர்கள் தாங்கள் தெருவில் பார்க்கும் நாடார்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவற்றை இறந்தவர்களுக்கு கைவிரல்கள், கால் கட்டைவிரல்களில் கட்டுவதைப் போல கட்டி பழித்துக் காட்டினர். 

ஏறக்குறைய 16 மாதங்கள் இதுபோலவே நடக்க இறுதியில் எதிர்ப்பு வலுக்க வெள்ளைச்சாமி தேவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிறகே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.. இவற்றைப்பற்றி மேற்கொண்டு பல விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.  

ஆனால் இப்போது நடக்கப் போகும் கலவரத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கும் மறவர்களை அடக்க வெள்ளைச்சாமி தேவருக்கு நாடார் சங்கத்திலிருந்து ஒரு வித்யாசமான கடிதம் அனுப்பப்பட்டது.

"4000 பேர்களுக்கு தலைவராக இருக்கும் வெள்ளைச்சாமி தேவர் உண்மையிலேயே மறவராக இருந்தால் நாடார்களை தாக்குவதற்கு மறவர் கூட்டம் பகலில் வர வேண்டும்.  எந்த இடம் என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரம் ராஜாவின் பெயர் ராஜா எம். பாஸ்கர சேதுபதி. இவர் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் கமுதியும் ஒன்று. இவரும் மறவர் இனத்தை சேர்ந்தவரே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ஏழாயிரத்திற்கும் குறைவான பேர்களே இருந்தனர். கமுதியைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் மறவர்களே அதிகமானோர் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த வியாபாரங்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் நாடார்களையே சார்ந்து இருந்தது. நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த கால கட்டத்தில் நாடார்கள் தங்களை பிராமணர்கள் போலவே மாற்றிக் கொண்டு செழிப்பான முறையில் வாழ்ந்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜாவின அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்தது. நாடார்கள் திருவிழா காலங்களில் வழிபாடு சம்மந்தமான விருந்தொன்றை கமுதி பகுதியில் வைக்க ராஜாவின் அறக்கட்டளைக்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தனர். 

நாடார்கள் ஆலய பிரவேசம் செய்யாமல் குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் இது போன்று ஒவ்வொன்றாக எல்லை மீறிக் கொண்டிருந்த நாடார்களின் பழக்கவழக்கங்களினால் வெள்ளைச்சாமி தேவர் நாடார்களுக்கு எதிர்ப்பு அணி ஒன்றை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். காரணம் பொருளாதார ரீதியாக வளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும். இதே வாய்ப்பு சிவகாசி கலவரம் மூலம் லட்டாக வந்து சேர்ந்தது.  நாடார்கள் அனுப்பி கடிதமும் வந்த சேர எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல கலவரத்தீ கொளுந்து விட்டு எறியத் தொடங்கியது.

சிவகாசியில் நடந்த கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்தது.  கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மறவர்கள் தங்களுடன் 12 மாட்டு வண்டிகளையும் கொண்டு வந்து இருந்தனர். 886 நாடார்களின் வீடு அழிக்கப்பட்டது. சுமார் 21 நாடார்கள் கொல்லப்பட்டு இருந்தனர்.  

கலவரம் முடிந்த பிறகே சொல்லிவைத்தாற் போல் வெள்ளையர் ஸ்காட் வந்து இறங்கினர். இந்த கலவரம் மேற்கொண்டு நகர்ந்து மறவர்களின் அடுத்த இலக்கு விருதுநகராக இருக்கக்கூடும் என்பதற்காக 50 சிப்பாய்களை அங்கு அனுப்பி வைத்தார். இதே ஸ்காட் தன்னுடைய பொறுப்புகளை தனக்கு கீழேயிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்த விசாரனை கமிஷன் அதிகாரியிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.  

காரணம் மறுபடியும் மறவர்கள் சிவகாசியை மற்ற பகுதிகளை மீண்டும் வந்து தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தென்காசியில் தொடங்கி செங்கோட்டைப் பகுதியில் நுழைந்து தாக்கத் தொடங்கினர்.  ஒவ்வொரு தாக்குதல்களும் மிருகத் தனமாக இருந்தது. இந்த இடத்தில் ம்ற்றொரு ஆச்சரியம் மதம் மாறிய நாடார்களின் வீடு தாக்கப்படவில்லை. அடையாளம் வைத்து தாக்குவது அப்போதே இருந்து இருக்கிறது. ஜுலை மாதம் கலவரம் முடிவுக்கு வந்த போது 150 கிராமங்கள் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது.  கலவரம் நடந்த ஆறு வார காலத்தில் 2000 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரிக்க தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டனர்.  ஏழு பேர்களுககு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  குற்றவாளிகளில் ஒருவர் கூட நாடார்களின் பெயர் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக் விசயமாகும். இவர்கள் வைத்திருந்த பொருளாதாரம் காப்பாற்றியதா இல்லை தெளிவான திட்டமிடுதலா போன்ற குறிப்புகள் தென்படவில்லை.

ஏறக்குறைய 19 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த நாடார்களின் சமூக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது.  காரணம் அரசாங்கத்தில் பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவித்து வந்தபோதிலும் மதம் மாறிய நாடார் இன மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கல்வி வசதிகளைப் பார்த்த நாடார் இன மக்கள் முதல் முறையாக தங்கள் இனமக்களின் கல்விக்கான விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 

கிறிஸ்துவ மதபோதகர்களின் சார்பாக பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரி போன்று பல இடங்களிலும் தொடங்க வேண்டும் என்று ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

ஆனால் இராமநாதபுரத்தில் ஆறு நகர நாடார்கள் வியாபாரத்தில் முன்னேறிய பிறகு உறவின் மூலம் கிடைத்த மகமையின் மூலம் முதன் முதலாக திறந்தது தான் விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலை (1885) உயர்நிலை பள்ளியாகும். இதுவே தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டு கல்வி கூடங்களில் அணைத்து இடங்களிலும் நிறுவவதில் முழுமூச்சாக இறங்கி அடுத்தடுத்த முன்னேற்ங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த நாடார் இனமக்களின் சமூக வாழ்க்கை குறிப்புகள் இத்துடன் முடிவுக்கு வருகின்றது.  இவர்களின் வேறு சில குணாதிசியங்களை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இவர்கள் பொருளீட்ட உதவிய சாராய தொழில்கள், மற்ற தொழில்கள், இவர்களின் முரண்பட்ட நியாயங்கள், கோவில்களுக்கு அடித்துக் கொண்ட இவர்களின் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் இடையிடையே பார்க்க வேண்டிய அவஸ்யம் உள்ளது. 

அடுத்த பஞ்சாயத்து? விரைவில்.?

Saturday, April 30, 2011

கலவர பூமியில் மலர்ந்தவர்கள்

ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

நாம் இராமநாதபுர மாவட்ட வரலாற்று தொடரில் மேலே சொன்னது வலையை கழட்டி விட வாங்க என்ற தொடரின் நிறைவுப்பகுதி இது. 

இந்த தொடரின் ஆரம்ப பகுதிகளை படிக்க விரும்புவர்கள் இங்கே இருந்து பயணிக்கவும்.  

1860 ஆம் ஆண்டு ( இதில் உள்ள படங்களும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய தொகுப்பு)


ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல.

தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்த பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது.  உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது.


இராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை  என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களை சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்கு பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாக பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படி தடுப்பது?  இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது.  

இன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்கு பெரிதான சுமைகள் இல்லை.  ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.

அருப்புக்கோட்டை,பாலையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.  1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார்.  நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னை பலவந்தப்படுத்தி கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார்.  இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது.

1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார்.  நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார்.  ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும்.  மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார்.

நாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட எப்படி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.  எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களை பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்த பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர். 

காரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்த கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது.  இது அடுத்த கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்க கல்வீச்சு முதல் தொடங்கி பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.  உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாக களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.

இது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது? 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது.  ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர். 

இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த கலவரங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர். 

சிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான்.  ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே.  பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும்? இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட்டம் வகுப்பது ஒருவர். இதை கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்கு பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.

காரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்கு பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை.  நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்த பிராமணர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  இதற்கு மேலாக தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்கு தூக்குவதற்கு மறவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.  

இதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.  தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது. 

சமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களை பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்த கோவில்களே முக்கிய காரணமாக இருந்தது.  

சிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை.  இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  

ஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது.  கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களை பழிதீர்க்க, அடக்கி வைக்க சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது.  இந்த கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் மறவர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர்.  

இதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களை கொண்டு வந்து இறக்கினர். சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளை சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்து சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்ற சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

Sunday, February 27, 2011

வலையை கழட்டிவிட வாங்க?

நாடார் மக்கள் கோவிலுக்குள் நுழைவோம் என்று உரிமைப் போராட்டம் நடத்த தொடங்கும் இந்த நேரத்தில் வேறு சில விசயங்களையும் பார்த்து விடுவோம்.  வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதை தாண்டி வர முடியாத அளவிற்கு தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். இதற்கு மேலும் அவ்ரவர் செய்து கொண்டிருந்த தொழில்களை அடிப்படையாக வைத்து இதை முன்னெடுத்துச் சென்றனர். தொழிலை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்டமைப்பு மாறிவிடாதபடி கடத்தவும் செய்தனர். ஆனால் இது போன்று உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பு மாறி விடாதபடி இந்த ஆலயங்கள் தான் பெருமளவில் ஒவ்வொரு சமயத்திலும் உதவிபுரிந்தன. 

உருவாக்கப்பட்ட கோவில்கள் மூலம் நம்முடைய முன்னார்கள் வாழ்ந்து கொண்டிருந்த சமூக கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமே ஆகும். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று ஏன் இத்தனை மதங்கள்? ஏன் இத்தனை தெய்வங்கள்?  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழிமுறைகள். சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து அதிலிருந்து மற்றொருன்று பிரிந்து அவரவர்களுக்கு தோன்றிய வகையில் சுயநலமாய் பொதுநலமாய் இந்த வலைபின்னல் உருவாகி இன்று வரையிலும் மிகப் பெரிய மாயவலை உருவாகி மனித மனங்களுக்குள் நீக்கமற நிறைந்து உள்ளது. இதற்கு மேலும் தொடர்ச்சியாக அது தவறு இது சரி என்பது போல பல கிளைநதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக இந்த வலை பின்னல்கள் தனி மனிதர்களின் கழுத்தை நெறிக்கவும் தொடங்கியது. 

கோவில் என்பது தமிழர்களின் வரலாற்றில் ஏன் இத்தனை முக்கியமாக மாறியது?

நம்முடைய வரலாற்றுப் பக்கங்களில் இந்த கோவில்கள் உருவாக காரணம் என்று வேறு சில அவஸ்யமும் இருந்தது என்று சொல்கின்றது.  மக்கள் அணைவரும் மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதற்கு மற்றும் போர்க்காலங்களில் மக்கள் அடைக்கலம் புக என்று சமூக நோக்கில்  உருவாக்கப்பட்டதாகவும் சொல்கின்றது. ஆனால் இந்த கோவில்களை உருவாக்க பாடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் சமூகத்தில் இருந்த அடித்தட்டு மக்களே ஆவர்ர்கள். இவர்களே முக்கிய உழைப்பாளர்களாக இருந்துள்ளனர். 

இன்றைய நவீன வசதிகள் ஏதுமில்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தஞ்சை பெரிய கோவில் முதல் நாம் இன்று வரையிலும் கண்டு கொண்டுருக்கின்ற ஒவ்வொரு கோவில்களுக்குப் பினனாலும் முழுக்க முழுக்க மனித சக்தியே முக்கிய காரணமாக இருந்துள்ளது.  ஆதிக்க சாதியினர்களும், பிராமணர்களுமா இந்த கோவில் நிர்மாண பணிகளுக்காக தங்கள் உடலை உழைப்பை கொடுத்துருக்க முடியுமா?  உழைத்த அத்தனை பேர்களும் கோவிலுக்கு வெளியே நின்றனர்.  உழைப்பை வாங்கியவர்கள் உள்ளே நுழைந்து சாமியுடன் உறவாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த இடத்தில் தான் தென்னிந்தியாவிற்குள் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்களும் பிராமணர்களின் புத்தியும் நமக்கு பல விசயங்களை புரியவைக்கின்றது.  உலகில் அன்று முதல் இன்று வரையிலும் புத்தியை மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு.  ஆனால் இந்த மதம், சாதி, சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்கு கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போக காரணமாக இருந்தது.  இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது.


ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்கு புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர்.  அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்கு குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.  நாடார்களின் தொடக்க பாரம்பரிய தொழிலான இந்த பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்த சரித்திரத்தில் உள்ளது.   

பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாக பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தை தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின.  எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது.

கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா?  

இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களை சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது.  எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர்.  இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். 

இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கிய பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல.  தங்கள் வாழ்க்கை முக்கியம்.  அதற்காக உருவாகும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர்.

நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களை சரித்திரம் வைத்துள்ளது.  தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது.  ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.  

பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர்.  மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர்.  எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாக தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றி திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது.

பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாக கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர்.  இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாக கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர்.

ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்த கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்த கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது.  வெளியே நின்று வணங்க வேண்டும்.  பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம்.  குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம்.  இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர்.


பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம்.  மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது.  இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர்.  இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்?  இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்கு பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம்.  மக்களுக்கு தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது.

பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள்.  அவரவர்களும் தங்களுக்கு பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர்.  சிலர் ஜெயித்து பெரும்புள்ளியாகத் தெரிந்தனர்.  ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர். 

குறிப்பிட்ட சாதி மக்களை தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்க சாதியினர்களுக்கு பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதார பலத்தை பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம்.  எதிர்த்து பேச முடியாது.  பேசினால் தெய்வ குற்றம்.  அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். 


உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம்.  கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும்.  இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களை சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர்.  

ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

Thursday, February 24, 2011

பணம் வந்தால் பல்லாக்கு தேவைப்படும்

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் செயல்பாடுகள் எப்போது மாறத் தொடங்கின்றது?  பொருளாதார ரீதியாக வளரும் போது அல்லது தன்னிறைவு நிலைக்கு அடையும் போது அவரவரின் சிந்தனைகளும் மாறத் தொடங்குகின்றது.  இதுவே தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஏறக்குறைய இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கிறது.  முதலில் பொருள் தேடி அலைய வேண்டிய நிலையில் இருந்தனர். பொருள் சேர்க்கத் தொடங்கிய போது அதை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.  தொழிலில் வளர்ந்த நிலைக்கு வந்த பிறகு சமூகத்தில் தங்களின் இழிநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  இந்த சமயத்தில் தான் இவர்களின் பொருளாதார பலம் பலவிதங்களிலும் உதவியது என்பதோடு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.  

செல்வத்தை சேகரிக்க ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்களுக்கு தங்களது இனப் பெருமை குறித்து கவலை ஏதும் வந்து விடவில்லை.  ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் செல்வந்தராக, மதிப்பு மிக்க வியாபாரிகளாக மாறிய போது தங்களுக்கான அடையாளங்களையும் அவரவர் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.  

தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்கள் இவர்கள் வாழ்விலும் பல அடிப்படை விசயங்களை மாற்றத் தொடங்கியது.எண்ணங்கள் மாறத்தொடங்க   பிணங்களை புதைத்துக் கொண்டிருந்தவர்கள் எறிக்கத் தொடங்கினர், கனமான உலோகப் பொருட்களை காதுகளில் அணிந்த பெண்கள் சிறிய அளவில் நாகரிகமாக தங்க ஆபரணங்களை அணியத் தொடங்கினர். 

தொடக்கத்தில் இந்த இன பெண்களின் காது மடல்கள் தோள்பட்டை வரைக்கும் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.  இந்த நீட்சியின் அளவு பொறுத்து இதையும் ஒரு பெருமையாக சொல்லப்பட்டது. ஒவ்வொரு பழக்க வழக்கமும் வெவ்வேறு காலகட்டத்தில் மாறத் தொடங்க இவர்களின் பேச்சு, செயல்பாடுகளும் நாகரிகம் என்ற போர்வையில் மாறத் தொடங்கியது.

1860 ஆம் ஆண்டு பார்ப்பனர்களை போலவே வேட்டி கட்டவும், குடுமி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். தலையில் எடுத்துக் கொண்டு செல்லும் தண்ணீர் பானைகளை இடுப்பில் கொண்டு செல்ல அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் இதிலும் இவர்களின் புத்திசாலித்தனம் ஆச்சரியமானதே.  தாங்கள் உருவாக்கிய குளம் மற்றும் கிணறுகளில் பெண்கள் எடுத்துச் செல்லும் பானைகள் இடுப்பில் வைத்து கொண்டு செல்கிறார்களா என்பதை கவனிக்க தனியாக ஒரு ஆளை நியமித்து கண்காணிக்கத் தொடங்கினர்.  இதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது.

பலரும் சைவத்திற்கு மாறத் தொடங்கினர். சமஸ்கிருத பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் முற்பட்ட சாதியினரைப் போல கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லாவிட்டாலும் கூட பல கோவில்களுக்கு செல்வந்தர்கள் தான தர்மங்களை வழங்கினர்.  இதன் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களுக்கு கோவில் சார்ந்த பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மிகப் பெரிய கௌரவமாக கருதினர். இதன் தொடர்ச்சியாக பிராமணர்களைப் போலவே பூணுல் அணிந்து கொள்ளத் தொடங்கினர். 


இந்த பூணூல் இப்போது அழைத்துக் கொண்டிருக்கும் பெயரான ஷத்திரியர்களுக்கு உரிய கௌரவமாகவும், மறுபிறவி அடையக்கூடிய அம்சமாகவும் கருதிக் கொண்டனர். ஆனால் இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தது? எவரால் உருவாக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பிராமணர்கள் இந்த நாடார்களின் வாழ்க்கையில் மதச் சட்ங்களுகள் செய்வதும், உபநயன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளீட்டுவதும் நடக்கத் தொடங்கியது. 

திருச்செந்தூர் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடார் இனமக்கள் திருமண வைபோகங்களில் பல்லாக்குளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இது உயர்குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. தங்கள் செல்வ நிலைப்பாடுகளை சமூகத்திற்கு காட்ட மறவர்களை பல்லாக்கு தூக்கியாக பயன்படுத்திக் கொண்டனர். 

இது போன்ற பல சமூக மாறுதல்கள் நாடார்கள் தங்கள் ஷத்திரியர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்பது மெதுமெதுவாக ஆலமர விழுதுகள் போல் பரவத் தொடங்கியது. இந்த மாறுதல்கள் எங்கே கொண்டு போயநிறுத்தியது தெரியுமா? 

1874 ஆம் ஆண்டு மதுரை நாடார்கள் தங்களது ஆலய நுழைவு உரிமைக்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மேல் கிரிமினல் வழக்கொன்றை மூக்கன் நாடார் என்பவர் தொடர்ந்தார். கோவிலுக்குள் நுழைந்த என்னை பலாத்காரமாக வெளியே தள்ளிக் கொண்டு வந்து துணிக்கடை நிறைந்த பகுதியில் நிறுத்தி அவமானப்படுத்தினார்கள் என்று வழக்கில் சொல்லியிருந்தார். எங்களுக்கு ஆலயங்களில் உள்ளே நுழைய எழுத்துப் பூர்வ அனுமதி வேண்டும் என்றார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாடார்கள் ஆலய உள் நுழைவுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதே போல 1876 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகாவில் திருத்தங்கல் என்ற இடத்திலும் நடந்தது.   இதுவும் தோற்றுப் போனது. 

முறைப்படி 1878 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் திருத்தங்கலில் உள்ள நாடார்கள் ஆலயங்களில் உள்ளே நுழைவதற்கும், தெய்வங்களுக்கு தேங்காய் உடைப்பதற்கும் தடை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாடார் இன மக்கள் தெருக்களைச் சுற்றி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதுவே சாத்தூர் பகுதியில் உள்ள நாடார்கள் தெருக்களில் ஊர்வலம் நடத்த அங்குள்ள உயர்சாதியினரும் ஜமீன்தாரர்களும் அனுமதி கொடுக்காமல் எதிர்த்து நின்றனர்.

இந்த கோவில் விவகாரம் தான் திருநெல்வேலியில் வடக்குப் பகுதியில் உள்ள நாடார்களுக்கும் மறவர்களுக்கும் பகைமையுணர்ச்சியை உருவாக்கிய கலவரமாக மாறியது. கலவரத்தில் (1887) நான்கு மறவர்களை ஒரு நாடார் கூட்டம் கொலை செய்ததாக காவல்துறை அறிக்கை தெரிவிக்க ஏராளமான நாடார்களை கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியபோதும் வலுவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வெளியே வந்தனர்.  ஆனால் மறவர்கள் மூன்று நாடார்களை கொலை செய்து கணக்கை நேர் செய்தனர்.

இது போன்ற பகைமையுணர்ச்சி இந்த மாவட்டத்தின் சகல இடங்களிலும் பரவி இருந்தது.  ஆனால் நாங்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்றோம் என்றவர்களைப் போலவே நாடார் இன மக்களும் எங்களை சமஉரிமை மனிதர்களாக அங்கீகரிக்க வைக்கும் வரையிலும் ஓய மாட்டோம் என்று ஒவ்வொன்றாக செய்து கொண்டே வந்தனர். 

இதன் தொடர்ச்சியாக 1898 ஆம் ஆண்டு சிவகாசி நாடார்களின் தலைவர் செண்பகக்குட்டி இனி நாடார் இன மக்கள் அத்தனை பேர்களும் பூணூல் அணியுங்கள் என்றார். நாம் பிரமாணர்களின் தகுதிக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்று புரியவைத்தார். இப்படி சொல்லியதோடு மட்டுமல்லாமல் நாடார்கள் ஒவ்வொருவரும் பிராமணர்களைப் போலவே தினந்தோறும் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கோவிலுக்கு அருகே குளியல் வசதியுடன் கூடிய நந்தவனம் உருவாக்கப்பட்டது. 

இத்துடன் ஆச்சரியப்படக்கூடிய சமாச்சாரம் தாங்கள் உருவாக்கிய அம்மன் ஆலயங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த நாடார் பூசாரியை நீக்கிவிட்டு சிவகாசி நாடார்களுக்கென்று பிராமணர் ஒருவரை திருச்சிக்கு அருகேயிருந்த கோவிலில் இருந்து வரவழைத்தார். 

1911 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுத்த அதிகாரியான மாலினி என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

"நாடார்கள் மாட்டிறைச்சியை உணவாகக் கொள்ளாமையால் அவர்கள் ஷத்திரியர்கள் என் அழைக்கபடுகின்றனர்"


காரணம் 1860 ஆம் ஆண்டு தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர். 1891 கணக்கெடுப்பில் தங்களை ஷத்திரியர்கள் என்று பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 24000 பேர்கள். ஆனால் இதுவே படிப்படியாக பல இன்னல்களைத் தாண்டி வந்து 1911 ஆம் ஆண்டு இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த ஷத்திரியார்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உயர்ந்து தாங்கள் விரும்பிய ஷத்திரியர் என்ற பெயரையே அரசாங்க குறிப்பேடுகளில் நிலைபெற வைத்தனர். இவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக முன்னேறி ஜனத் தொகையும் பலமடங்கு பெருகியிருந்தைப் போலவே தாங்கள் விருப்பப்டியே மாற்றிக் கொண்டதும் ஆச்சரியமே..

Tuesday, February 22, 2011

கோவில்கள் - முரண்பாடுகளின் தொடக்கம்

ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதை கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நாடார்கள் படிப்படியாக தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டதை பார்த்ததைப் போலவே இதற்காக அவர்கள் உழைப்பிற்கு அப்பாற்பட்டு பல கொள்கைகள் மற்றும் உருப்படியான விசயங்களையும் கடைபிடித்து உள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தாங்கள் வாழும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அந்தந்த உறவின்முறை உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் நிதி தெளிவான முறையில் பாதுகாக்கப்பட்டது.  இது போக ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும் நிதி ஆதாரம் எல்லாமே பொது நல நிதியாக மாறியது.  இந்த நிதி ஆதாரத்தை கவனிக்கும் குழுவில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் இருந்தனர். இதற்கு உறவின்முறை என்று பெயர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணமான குடும்பத்தலைவர்கள் இதில் இருந்தனர். இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முறைகாரர் என்று பெயர். முக்கிய பொறுப்புகள் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாறி மற்றவர்களுக்கு வழிவிட ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் வந்தமர பிரச்சனைகள் உருவாகாமல் இந்த அமைப்பு முன்னேறத் தொடங்கியது 

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த நாடார் இன மக்களிடம் கல்வி அறிவு இல்லை. ஒவ்வொரு செயல்பாடுகளுமே அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவானது. இது போன்ற கணக்கு வழக்கு போன்ற சமாச்சாரங்களுக்கு நாடார் தவிர்த்து மற்ற இனமான வேளாளர் குலத்தில் உள்ளவர்களை கணக்கர்களாக தேர்ந்தெடுத்து மகமை தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்தனர். இது போன்ற சங்கங்களில் பெரும் செல்வந்தர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால் நடுத்தர வர்க்க வியாபார குடும்பத்தினர் முழு மூச்சில் செயல்பட்டனர். ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மகமை செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அளவிற்கு கெடுபிடியாக நடந்து கொண்டனர். 

ஒவ்வொரு கிராமத்தில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களை தாங்கள் கூடுமிடமாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் கூட்டப்படுகின்றது என்பது அந்த ஊரில் உள்ள நாவிதர் மூலம் அழைப்பு அனுப்பப்படும். கலந்து கொள்ளாதவர்களுக்கு அபதாரத் தொகையும் உண்டு.

குடும்பம் மற்றும் பொதுவான அத்தனை பிரச்சனைகளும் இது போன்ற கூட்டத்தின் மூலமே தீர்க்கப்பட்டு வந்தது.  வெளி ஆட்களை இது போன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.பெண் சம்மந்தமான பிரச்சனைகளின் போது சம்மந்தப்பட்ட பெண்ணும் நிறுத்தப்படுவாள்.  இது போன்ற பிரச்சனைகளில் சம்மந்தப்பட்டவர்கள் மூன்று காவி நிற கோட்டின் மேல் நிறுத்தப்படுவார்கள்.  இது அவர்கள் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. வாதம், பிரதிவாதம் என்று எத்தனை நடந்தாலும் இந்த சமூகத்தில் முக்கியமானவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு சம்மந்தப்பட்டவரை உறவின் முறையில் முன்னிலையில் நாவிதர் குற்றவாளியை செருப்பால் அடித்து தண்டனையை நிறைவேற்றுவார். களவு போன்ற குற்றங்களுக்கு குற்றவாளியை ஓடவிட்டு இருமருங்கிலும் உள்ள இளைஞர்கள் நின்று கொண்டு தொடர்ச்சியாக அடிப்பார்கள். கடைசியாக மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டத்தை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றவாளி அபராதத்தை கட்ட முடியாவிட்டால் அவர் வீட்டில் உள்ள பொருட்களை உறவின் முறை சென்று கைப்பற்றுவர்.  உறவின் முறை சங்க அமைப்பை எதிர்ப்பவர்களின் குடும்பத்தை மொத்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த உறவின் முறை அமைப்பு திருநெல்வேலியில் ஒரு மாதிரியாகவும் சிவகாசியில் ஒரு மாதிரியாகவும் இருந்தது.  

தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் சாகும் வரைகும் அந்த பொறுப்பில் இருந்தனர். தலைவர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.  குறிப்பாக கோவிலுக்குள் இவர்கள் நுழையும் போது தனது மேல் துண்டை இடுப்பில் எடுத்து கட்டிக் கொள்ளப்பட வேண்டும்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விருதுநகர் பகுதியில் ஜனத்தொகை காரணமாக ஆறு வெவ்வேறு உறவின்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதியில் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது. பஞ்சு வியாபாரிகள், மளிகைக்கடை தாங்கள் செய்து கொண்டிருக்கும் வணிகம் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தது.. 


ஆனால் நாடார்களுக்குச் சம்மந்தமில்லாத மதுரையில் 1831 ஆம் ஆண்டு தங்களது வியாபார அபிவிருத்திக்காக கிழக்கு மாசி வீதியில் நிலம் வாங்கினர். இதுவும் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி நாடார்கள் முன்னின்று செயல்பட்டனர். 1890 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடார்கள் தங்கள் இருப்பிடங்களை மதுரைக்கு மாற்றினர். 20 ஆண்டு தொடக்கத்தில் தான் மதுரைக்கு பலரும் நகர்ந்து வரத் தொடங்கினர்.  அதற்கும் ஒரு காரணம் உண்டு.  வெள்ளையர்கள் உருவாக்கிய ரயில் பாதைகள் முக்கிய காரணமாக இருந்தது.. மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் பாதைகள் மூலம் இணைப்பு உருவாக இரண்டு விளைவுகள் உருவாகத் தொடங்கியது. இராமநாதபுரத்தின் பல பகுதிகள் வியாபாரம் பாதிப்பாகத் தொடங்கியது.  வளர்ந்து கொண்டிருக்கும் விருதுநகர் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதனால் மொத்தத்தில் சிவகாசி ரொம்பவே பாதிப்பானது. இதன் காரணமாக மதுரையில் குடியேறும் நாடார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.

1880க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவகாசியும் ரயில் பாதை இணைப்பு மூலம் எளிதாக மதுரைக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கைகள் இன்னமும் அதிகமாகத் தொடங்கியது. சிலர் தங்களது நிறுவனங்களின் கிளைகளை உருவாக்கி தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். எந்த இடத்திற்குச் சென்றாலும் தன் ஊரின் உறவுகளை விடாமல், மகமை, உறவின் முறை போன்ற அமைப்பை சிதைக்காமல் தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர்.

நாடார்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1885 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறையால் உருவாக்கப்பட்ட கூத்திரிய வித்தியாசாலை உயர்நிலை பள்ளியாகும். இது முழுக்க முழுக்க மகமை நிதியால் மட்டுமே உருவாக்கப்பட்டது.  முதல் முறையாக நாடார் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடமும் இது தான்.  இதனைத் தொடர்ந்து தான் 1889 ஆம் ஆண்டு கமுதியில், அதன் பிறகு அருப்புக்கோட்டையில் உருவானது. கல்வி அறிவு இல்லாமல் வளர்ந்தவர்களின் தலைமுறை கல்வி அறிவோடு வளர உருவான வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆனால் இதுவரைக்கும் இவர்களின் அருமை பெருமைகளை பார்த்தது போல இவர்களின் சில வினோத செயல்பாடுகளையும் பார்த்துவிடலாம்.  பொருளாதார ரீதியாக வளர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் உருவாகும் கௌரவம் இவர்களுக்கு வந்து அதன் தொடர்பாக பல விசயங்களையும் செய்துள்ளார்கள்.  இவர்களின் அடிப்படை வாழ்க்கை முறை பனை மரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருந்தது.  ஆனால் காலம் செல்லச் செல்ல தங்களை பனையேறிகள், சாணார்கள் என்று மற்றவர்கள் அழைப்பதை கௌரவக்குறைவாக கருதினர்.  குறிப்பாக தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர்.  பனை ஏறுபவர் என்பதும், தங்களின் முன்னோர்கள் கருவாடு விற்று வளர்ந்தவர் என்பதையும் மிகப் பெரிய அவமரியாதையாக கருதினர்.  நாடார் என்ற பட்டப் பெயருடன் தான் அழைக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். 


இதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. இவர்கள் தங்களை தாங்களே உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டாலும் சமூகத்தில் மற்ற இனத்தினர் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட அத்தனை சுலபமாக பெறமுடியவில்லை. 1872 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஏழு நாடார்கள் மீது பார்ப்பனர்களும், வேளாளர்களும் சேர்ந்து வழக்கொன்று தொடுத்தனர். இந்த ஏழு நாடார்களும் இறுதியில் குத்திக் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய கலவரம் உருவாகி ஊரட்ங்கு உத்திரவு வரைக்கும் அமலில் இருந்தது.

இது குறித்து (?)) தனியாக பார்க்கலாம்.

இவ்வாறு போராடியவர்கள் தான் தான் இன்று நிலைபெற்று சகலதுறையிலும் காலூன்றி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

Friday, February 18, 2011

களம் இறங்கினால் கணக்குகள் மாற்றப்படும்

இந்த தோள் சீலை போராட்டமென்பது வெறுமனே நாடார் இன மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைக்கான முன்னேற்பாடுகளாக மட்டும் தெரியவில்லை.  இதன் மூலம் கண்களுக்கு தெரியாத பல வலைபின்னல்கள் உண்டு.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உரிமையைக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதில் ஆதிக்க சாதியினர் எத்தனை கவனமாக இருந்தார்களோ அதே அளவிற்கு நாங்களும் சரிசமம் என்று தான் போராடத் தயாராய் இருந்த நாடார் இன மக்களை இங்கே நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

உரிமையை நிலைநாட்டுதல் என்பது வெறும் எழுத்து பேச்சு என்பதோடு மட்டும் இருந்து விட்டால் அதற்குப் பெயர் வாய்ச்சொல்லில் வீரரடி. .  இந்த இடத்தில் வேறொன்றையும் நாம் பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான நாடார் இன மக்களுக்கு முறைப்படியான கல்வியறிவு கூட இல்லை.  ஆனால் 'கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்' என்பதில் உறுதியாக இருந்தனர். பின்னால் நாம் பார்க்கப் போகும் இந்த மக்களின் சமூக வாழ்க்கை என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எவர் ஒருவருக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்றும் அதற்காக நாம் முறைப்படியான உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரின் ஜாதி என்பது இரண்டாம் பட்சமாகத் தான் ஆகிவிடுகின்றது என்பதை இவர்களின் வரலாற்று காலடித் தடங்கள் நமக்கு உணர வைக்கின்றது. 


இன்று வரைக்கும் நாயர், நம்பூதிரிகளின் ஆச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. இப்போது உள்ள கேரளா மாநிலங்களில் அதிகப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் இன்று வரையிலும் கடைபிடிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் வித்யாசமானது.  இவர்களின் ஆதிக்கம் நிறைந்த பழைய திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார்களின் வாழ்க்கை என்பது மிக அவலமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த பகுதியில் ஊடுருவிய கிறிஸ்துவமே. மதமாற்றம் என்று எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்தாலும் இதுவே நாடார்களின் சமூக வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் எண்ணிலடங்காதது. அடிமைப்புத்தியும், முரட்டு சுபாவமும் கொண்ட நாடார் இன மக்களை அத்தனை எளிதாக மாற்றுவதும் அத்தனை சுலபமாய் இல்லை என்பதும் உண்மை தான். தாங்கள் வாழ்ந்து வந்த மூதாதையர்களின் வாழ்க்கையை விட்டு விட்டு வெளியே வர மனம் ஓப்பாமல் ஒவ்வொருவரும் தாங்கள் போட்டுக் கொண்ட கோட்டுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் முதன்மையான விசயம் ஒன்று உண்டு.  ஒருவன் எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனின் மன ரீதியான அழுக்குகளை, தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர தூண்டுதல்.  இதற்காகத்தான் தொடக்கம் முதல் பாடுபட்டனர்.  காரணம் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே நாடார் இன மக்களை மேலாடை அணிவதற்க்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விசயத்தில் இப்போதுள்ள உள் ஒதுக்கீடு போலவே அப்போது வேறொரு வகையில் புதிய தத்துவத்தை உருவாக்கினார்கள். நாடார்களுக்கென்று பருமனான இழை கொண்ட தனித் துண்டொன்று ஒதுக்கப்பட்டு இருந்தது.   நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அம்மாதிரியான துண்டுகளை முழங்காலுக்குக் கீழ் வராதபடியும், இடுப்புக்கு மேலே போகாமலும் அணிய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  

இது போன்ற சமயங்களில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாறற்ங்களினால் ஒன்றன் பின் ஒன்றாக மாறத் தொடங்கினர்.   மதம் மாறிய நாடார்களுக்கு கிறிஸ்துவ ஆலயங்கள் மூலம் பல விசயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.  வெளி இடங்களில் ஒரு மனிதன் எப்படி தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பாடங்கள் உருவாக்கிய புரிந்துணர்வு ஆதிக்க சாதியினரின் பார்வையில் தீயாய் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.. கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றவர்கள் வெளி இடங்களில் தங்களை சிறப்பாக வெளிப்படுத்த தலைப்பட பல மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாறுதல்கள் உருவாக பிரச்சனைகளும் ஒன்றன் பின் வரத் தொடங்கியது.

உலகில் வாழும் மற்ற கிறிஸ்துவ மக்களைப் போல இங்குள்ள கிறிஸ்துவ பெண்களும் தங்கள் மார்பகங்களை ஆடைகளால் மறைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் 1812 ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கர்னல் மன்றோ வழங்கினார். இதற்கான சுற்றறிக்கை 1814 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  ஆனால் இந்த சட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்ற முடியவில்லை.  இதற்கும் மாற்று ஏற்பாடுகளை கிறிஸ்துவ மதகுருமார்களின் மனைவியர் செய்தனர்.  இப்போது தான் தொள தொள ரவிக்கை அறிமுகமானது. இந்த மாற்றங்கள் நாயர்களின் ஒட்டு மொத்த கிளர்ச்சியை உருவாக்க 1822 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் வாழ்விலும் ஏராளமான துன்பங்களை கொண்டு வந்து சேர்த்தது.  சாலையில் செல்லும் போது, சந்தையில், மற்ற பொது இடங்களில் கூடும் போது குறிப்பாக மதம் மாறிய கிறிஸ்துவ பெண்மணிகளை நோக்கி கிண்டலும் கேலியுமாக தொடங்கிய கிளர்ச்சி பெண்மணிகளில் ரவிக்கையை கிழித்து எறியும் வரையும் தொடர்ந்தது. 1823 ஆம் ஆண்டு பத்பநாபபுரத்தில் புறச்சமயத்தைச் சார்ந்த நாடார்கள் என்ற பெயரின் மீது கள்ளுக்கான வரிப்பாக்கி செலுத்தாதயும் நாடார் பெண்மணிகள் மேலாடைகள் அணிந்ததற்குரிய வரி செலுத்தாதையும் எதிர்த்துப் புகார்கள் செய்யப்பட்டன.

1828 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் மேல் முறைப்படியான வன்முறைகள் உருவாகத் தொடங்கியது. கிறிஸ்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  உருவாகியிருந்த கல்வி கூடங்களை தீயிடத் தொடங்கினர். பள்ளிகளின் உள்ளே நுழைந்து புத்தகங்களை கிழித்து எறிந்தனர். மார்புச் சேலை அணிந்து வந்தவர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கினர். பொதுவிடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அச்சுறுத்தல்களும் அவமானங்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சியாக மாறத் தொடங்கியது.  இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் பார்க்க வேண்டும்.  இது வெறுமனே மார்ப்புச் சேலை அணிவது சம்மந்தப்பட்ட விசயங்கள் மட்டுமல்ல.  இதற்குப் பின்னால் பொருளாதார விசயங்களும் உண்டு.  இது தான் இந்த கலவரத்தை உருவாக்க தொடர்ச்சியாக நடத்திச் செல்லவும் காரணமாக இருந்தது.  கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். உரிமைகளைப் பற்றி பேச் தொடங்கினர். சம்பளமின்றி வேலை செய்ய மறுத்தனர். வரி கட்ட மாட்டோம் என்றனர். கிறிஸ்துவம் துணை கொண்டு தங்களின் சமூக மதிப்புகளை உயர்த்திக் கொள்கின்றனர் என்ற ஆதிக்க சாதியினரின் கோபமே இது போன்ற அச்சுறுத்தல்கள் உருவாக காரணமாக இருந்தது.

1829 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நாடார்களுக்கும் நாயர்களுக்கும் சில குழப்பங்கள் உருவாகியுள்ளது.  நாடார் பெண்மணிகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் பழங்கால பழக்க வழக்கங்களுக்கு மாறாகவும் மேலாடை அணிந்ததாலும் நாடார்கள் ஏனைய நபர்களைப் போன்று பொதுவாக அரசாங்கத்திற்குத் தேவையான தொண்டு செய்ய மறுத்ததாலும் உருவாகியது. 

எனவே கீழ்க்கண்ட பேரறிக்கையை வெளியிடுகின்றோம்.

முதலாவதாக நாடார் பெண்மணிகள் மேலாடை அணிவது நியாயமற்றதாகும். இது தடை செய்யப்படுகின்றது. வருங்காலத்தில் மேற் குறிப்பிட்டப்படி நாடார் பெண்மணிகள் இடுப்பின் மேல் பகுதியை மேல் துண்டால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே 1814 ஆம் ஆண்டு நாடார்களின் உரிமைகள் என்று வெளிவந்த அறிக்கைக்கும் இப்போது வந்துள்ள முரணனான அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்த நாடார்கள் ஒன்று சேரத் தொடங்கினர். இதில் மற்றொரு தில்லாலங்கடி வேலையும் உண்டு.  கிறிஸ்துவ மத மாற்றத்தில் உள்ளவர்களும் தாங்கள் ஏற்கனவே இருந்த குல வழக்கப்படிதான் செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.

இந்த வர்க்கப்பேத வர்ணாசிரம பாகுபாடுகளால் உருவான கோபங்கள் கலவரமாக மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் நாடார்கள் அல்ல. 1859 ஆம் ஆண்டு கிராம சந்தையொன்றில் நின்று கொண்டுருந்த சிறிய நிலையில் உள்ள  அதிகாரி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நாடார் பெண்மணிகளை குறிவைத்து அவர்கள் அணிந்திருந்த மேலாடைகளை அரசாங்கம் கிழிக்கச் சொல்லி உத்திரவு இட்டுள்ளது என்று கருமமே கண்ணாக செயலில் காட்டத்  தொடங்கினார். இது இருபது நாட்கள் தொடர்ச்சியாக கலவரக் காடாக மாற்ற உதவியது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1858 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள கிறிஸ்துவ ஆலயங்களை தீயிட கொளுந்து விட்டு பரவ ஆரம்பித்தது.  ஒன்பது கிறிஸ்துவ ஆலயங்களும், மூன்று பள்ளிகளும் முழுமையாக அழிக்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் விளைவால் கீழ்க்கண்ட அறிக்கை 1859 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ந் தேதி வெளிவந்தது.

மாட்சிமை தாங்கிய மன்னரின் கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  நாங்கள் இதனால் தெரிவிப்பது என்னவென்றால் கிறிஸ்துவ நாடார் பெண்மணிகளைப் போன்று ரவிக்கை அணிந்து கொள்வதில் அல்லது அனைத்து மதங்களையும் சார்ந்த நாடார் பெண்மணிகளைப் போன்ற பருமையான இழைய கொண்ட ஆடைகளை நாடார் பெண்மணிகள் இணிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.  மேலும் அப் பெண்மணிகள் முக்குவச்சிகளைப் (கீழ் சாதி மீனவப் பெண்கள்) போன்று அல்லது வேறெந்த மாதிரியிலும் தங்கள் மார்பை மூடிக் கொள்ளுவதிலும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.   ஆனால் உயர் சாதி பெண்களைப் போன்று மட்டும் ஆடைகள் அணியக் கூடாது.

இதிலிருந்து கிடைத்த படிப்படியான வெற்றி தான் நாம் இன்று கண்டு கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் பல சமூக மாறுதல்கள்.   மானத்திற்கு மறைக்க வேண்டிய ரவிக்கை இன்று தான் விகாரமாக மாறி சகல இனத்திலும் வேறு விதமாக மாறி வந்து நிற்கிறது.  நிலைப்படி, கதவு, ஜன்னல் மற்றும் முக்கால் நிர்வாண ரவிக்கைகள் வரை பெண்களின் சுதந்திரம் இன்றைய சூழ்நிலையில் கொடிகட்டி பறக்கிறது,

மற்றொன்றையும் இப்போது பேசியாக வேண்டும். சமூகத்தில் நாம் காணும் மதமாற்றம் என்பது ஒரு வகையில் வினோதமான மாறுபாடே ஆகும். முதல் நாள் இரவு வரைக்கும் தான் வணங்கிக் கொண்டிருக்கும் சாமி படங்களை தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் எல்லாமே ஏசு தான் என்று சொல்ல வைக்கும் ஆச்சரய நிகழ்வு. ஆனால் இப்போது படித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ குருமார்களின் சேவையையும் தற்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றங்களையும் உங்கள் கணக்கில் கொண்டு வந்து விடாதீர்கள். தொடக்கத்தில் உருவான ஒவ்வொரு மதமாற்றத்திற்கும் பின்னாலும் ஒரு இனத்தின் நல்வாழ்வு ஏதோவொரு வகையில் பூர்த்தி செய்யப்பட்டது. குறிப்பிட்ட இன மக்களின் சமூக அந்தஸ்த்தை பொருளாதார வாழ்க்கையை உயர்த்த உதவியது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் என்பது தனிநபர்களின் ஆதாயத்திற்காக, வெளிநாட்டு நிதிகளுக்காக என்ற நோக்கத்தில் மேன்மேலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலவாழ்க்கையை பந்தயக்குதிரை போலவே மாற்ற உதவிக் கொண்டிருக்கிறது.  

காரணம் தொடக்க கால ஈழ வரலாற்றில் யாழ்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை இந்த மதமாற்றம் எந்த அளவிற்கு சமூகத்தில் உயர்த்தி வைத்திருந்தது என்பதை ஈழவரலாற்றை முழுமையாக படித்தவர்களுக்கு புரிந்த ஒன்றாகும். இரண்டு தலைமுறை முடிவதற்குள் 80 சதவிகித மக்கள் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் அத்தனையிலும் அமர்ந்திருந்தனர். ஏறக்குறைய அங்கு நிலவிய முன்னேற்றங்களைப் போலவே இந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையிலும் இந்த கிறிஸ்துவம் பல மாறுதல்களை உருவாக்கியது.  கிறிஸ்தவ மதகுருமார்கள் மதமாற்றத்தில் ஈடுபட்ட அளவிற்கு நாடார் இன மக்களின் சமூக வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டியுள்ளனர்.  மற்ற இந்துக்களுடன் கூடிய தொடர்பினை வளர்த்த காரணமாகவும், அவரவர் வியாபாரங்களுக்கு உதவக் கூடிய வகையில் உருவாக்கிய பல நல்ல திட்டங்களினாலும் ஒவ்வொரு கிறிஸ்துவ சபைக்குட்ட பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டது.  இது போன்ற பல கிறிஸ்துவ சபையின் காரணமாக பல் வேறு இடங்களில் பரவியிருந்த நாடார்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கூட்டங்கள் வழியாக பல புதிய மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறத் தொடங்கினர். பல குடும்பங்களின் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கத் தொடங்க அதுவும் மதமாற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவத் தொடங்கியது.

மேலாடை அணிவது குறித்து உண்டான எழுச்சியும் களத்தில் இறங்கிய போராடிய விதமுமே தான் இந்த நாடார் இனமக்களின் அடுத்த கட்ட சமூக வாழ்க்கையில் பெற வேண்டிய உரிமைக்கான வழித் தடத்தை அமைக்க காரணமாக இருந்தது. இந்த எழுச்சி இவர்களின் ஒற்றுமையை பேணிக்காத்தது போலவே தங்களது கலாச்சாரத்தின் மகிமையை உணர காரணமாகவும் இருந்தது.

ஒரு வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது.

Thursday, February 17, 2011

தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்

இந்தியாவில் தொடக்கத்தில் சாதி என்ற பெயரால் எவ்வளவு பாரபட்சம் நிலவியதோ அந்த அளவிற்கு அந்த சாதியை வைத்துக் கொண்டே பல திருகுதாள வேலைகளும் நடந்து கொண்டுருந்தது. நீ இந்த சாதியில் பிறந்து இருக்கிறாயா?  இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் தொடங்கி உன்னுடைய வட்டம் இதற்குள் தான் முடிகின்றது.  இதற்கு மேல் நீ வெளியே வரமுடியாது என்பதாக ஒவ்வொரு இன மக்களுக்கும் ஆதிக்க சாதியினர் கோடு கிழித்து வைத்திருந்தனர்.  தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இந்தியாவில் அடக்கி வைக்கப்பட்ட இன மக்களின் வாழ்வியல் சோகத்தை எந்த வார்த்தைகளாலும் எழுதி விட முடியாது. வாழ்க்கை முழுக்க மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சங்ககால மன்னர்கள் காலம் முதல் இருந்து வந்த இது போன்ற கொடூரங்கள் இன்று வரைக்கும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.  மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவனின் குலத்தை அடிப்படையாக வைத்து, ஒருவர் செய்து வந்த வேலைகளை வைத்தே இது போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டது.


இன்று நாடார்கள் என்பவர்கள் சமூகத்தில் தங்களை மையப்புள்ளியாக மாற்றிக் கொண்டவர்கள்.  பொருளாதார ரீதியாக தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள். இன்று இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் இவர்கள் தாங்கள் பெற வேண்டிய சமூக உரிமைகளை அத்தனை எளிதாகவும் பெற்றுவிட வில்லை. ஒவ்வொரு சமயததிலும் உருவான அத்துமீறல்களும், இதனால் உருவான கலவரங்களும் தான் இவர்களின் இன்றைய வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ளது.  

முற்பட்ட சாதியினர், ஆதிக்க சாதியினர் என்ற நிலையில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் இந்த நாடார் இனமக்கள் மேலே வந்து விடமுடியாதபடி உருவாக்கிய பல வலைபின்னல்களைப்பற்றி சரித்திரம் விலாவாரியாக சொல்லிக் கொண்டே செல்கிறது.  அதில் ஒன்று தான் இந்த 'தோள்சேலை' போராட்டம்.  நாடார் இன பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்பதாகும். ஆனால் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கலவரத்தையும் நாம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மனித மனங்களில் உள்ள வக்கிரங்கள் தான் நாம் கண்கூடாக பார்க்கமுடியும். வெறும் சாதிக்கலவரம் என்று மேலோட்டமாக பார்த்தாலும் ஒவ்வொரு கலவரங்களின் அடிப்படை நோக்கமே பொறாமை என்ற வார்த்தையில் இருந்து தான் உருவாகின்றது.  

தங்களுக்கு கீழே வாழ வேண்டியவர்கள், தாங்கள் சொல்லும் செர்ல்லுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய கடமைப்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு வாழும் ஆதிக்க சாதியினர் மனதில் உருவாகும் பொறாமைத்தீயே இது போன்ற கலவரங்களை உருவாக்க காரணமாக இருக்கிறது.  தங்கள் உழைப்பால் உயர்ந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பொருளாதார வளர்ச்சி ஏனைய சாதிக்காரர்களின் பார்வையில் விகாரமாகத் தெரிந்தார்கள்.  இத்துடன் நாடார்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் பல தாக்கங்கள் உருவானது. சமூகத்தில் தங்களின் சமூக பிடிமானங்களை ஆழ அகல ஊன்றி கிளை பரப்பி மேலேறி வந்த நாடார் இன மக்களை மற்றவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள எவருக்கும் மனமில்லை. 


தொடக்கத்தில் தென் திருவிதாங்கூர் பகுதியில் லண்டன் மதகுருமார்கள் உருவாக்கிய மாற்றங்கள் ஆச்சரியமானது.  பல காலமாக சிந்தனையாலும் செயலாலும் தாழ்ந்து கிடந்த இந்த இன மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட ஆரம்பித்தனர். 1820 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் கிறிஸ்துவ ஆலயம் தொடங்கப்பட்டது.  அன்றைய சூழ்நிலையில் 3000 நாடார் இன மக்கள் இந்த கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் போலவே திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் பனை தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் இதற்குள்ளும் அவரவர் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இரண்டு பிரிவாக இருந்தனர். திருவிதாங்கூரில் தென் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் நாயர் நிலபிரபுகளின் நிலங்களை எடுத்து குத்தககைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் மற்றவர்களை விட சற்று மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருந்தனர்.  இதைப் போலவே நெல்லை மாவட்டத்தின் எல்லையோரமாக அதாவது தென் திருவிதாங்கூரின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார்கள் வேளான் நிலபிரபுகளிடம் இருந்து பெற்ற நிலங்கள் மூலம் குத்தகைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். 

மொத்தத்தில் நாடார் என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அவரவர் பெற்றிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு தான் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கருதும் நிலையில் தான் இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தது.  

திருவிதாங்கூர் பகுதி மற்ற பகுதிகளை விட சற்று வளமாக இருந்த பகுதியாகும். மன்னர்கள் ஆட்சி புரிந்த 16 ஆம் நூற்றாண்டு முதல் குடியேறிய நாடார்கள் மற்ற இடங்களை விட சற்று அதிகமாக கூலி பெற்று வாழ்ந்து வந்த போதிலும் சமூக இழிநிலைகளை பொறுத்துக் கொண்டு இந்த பகுதியில் பனை தொழிலாளர்களாக வாழ்ந்தனர். இந்த பகுதியில் தீண்டாமை கொடுமை என்பது உச்சமானது. தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது 12 அடிகள் தள்ளி நின்று தான் பேச வேண்டும். குடைகள் பயன்படுத்தக்கூடாது. காலணிகள், தங்க ஆபரண்ங்கள் எதுவும் அணியக்கூடாது. கட்டும் வீடுகளில் மாடி வைத்து கட்டக்கூடாது. பசுக்களில் பால் கறக்க அனுமதியில்லை. தண்ணீர் குடங்களை இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது. மேலாடைகளை அணிந்து கொள்ள போர்த்திக் கொள்ள அனுமதியில்லை. இது தவிர தாழ்ந்த சாதியினருக்கு கடுமையான வரிகள் என்று தனியாக உண்டு. பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாடார்களையும் தள்ளி வைத்து தான் பார்த்தனர். உழைப்புக்கேற்ற ஊதியமின்றி நாட்டு நலன் என்ற போர்வையில் நாடார்களின் உழைப்பு ஊதியம் கொடுக்காமல் சுரண்டப்பட்டது.  

ஆனால் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும், நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டு வந்தவர்கள் தாங்கள் நாயர்களின் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை உடைக்கத் தலைப்பட்டனர். மற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடம் சமூக ரீதியான தொடர்புகள் உருவாக அப்போது தான் கிறிஸ்துவ மத குருமார்களின் தொடர்பும் இவர்களுக்கு உருவாகத் தொடங்கியது.  இதுவே தான் இங்கிருந்த மதகுருமார் லண்டன் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாடார்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.  காரணம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வழியில் நாம் இந்த இழிவான நிலையில் இருந்து மேலே வந்து விட முடியாதா? என்று காத்துக் கொண்டிருந்தனர். 


கிறிஸ்தவ மதத்தை தழுவிய நாடார்களும், மத குருமார்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கிக் கொண்டவர்களுக்கும் அரசாங்க ஆதரவு எளிதாக கிடைத்தது. பல வரிகளில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். ஏராளமான பொருள் உதவிகளும் கிடைக்கத் தொடங்கியது.  நிலங்களும், வணிகத் தொடர்புகளும் உருவாக தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் சுய தொழில் மூலம் வரத் தொடங்கியது.  சமூகத்தில் விரைவாக முன்னேறத் தொடங்கினார்கள். ஆதிக்க சாதியினரின் கோபப்பார்வை நாடார்கள் மேல் திரும்பிய அளவிற்கு இந்த மத குருமார்களின் மேலும் திரும்பத் தொடங்கியது.  மற்றொரு அம்சம் மத குருமார்களின் ஆதரவுடன் கல்வி கற்றவர்களின் முயற்சியினால் அடுத்து வருபவர்களுக்கு வழிகாட்ட பல விதங்களிலும் இவர்களின் வளர்ச்சி பிரமிக்கக்கூடியதாக இருந்தது.  இந்த சூழ்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ந்து விட்ட சமூகமாக நாடார்கள் தங்களை கருதிக் கொள்ள மேலாடை அணிவது பற்றிய வாக்குவாதத்தை எழுப்பத் தொடங்கினர்.

Sunday, February 13, 2011

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள்

இராமநாதபுர மாவட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க ஏன் இந்த சாதி வேறுபாடுகளை விலாவாரியாக பேசிக் கொண்டிருக்கிறோம்?  காரணம் இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகத்திற்காக உள்ளே வந்து படிப்படியாக தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பதை பார்க்கும் போது இது போன்ற பல காரணிகள் இவர்களுக்கு பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது.  ஒருவருடன் ஒருவர் ஒன்று சேராமல் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேயர்கள் அல்ல.  இந்த சாதி என்ற ஒரு வார்த்தையே காரணமாகும்..  

'சும்மா வரவில்லை சுதந்திரம்' என்றொரு வாசகத்தை படித்த நாம் மற்றொன்றையும் இப்போது கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களும் அத்தனை எளிதாக இந்த நாட்டை ஆண்டு விடவும் இல்லை.  காரணம் நம் மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகள் மேலும் உள்ளே ஒவ்வொரு இன மக்களிடமும் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டு மிகக் கவனமாகத்தான் கையாண்டிருக்கிறார்கள். இங்கு தொடக்கத்தில் பாளையக்காரர்களாக, ஜமீன்களாக பல்வேறு கூறுகளாக பிரிந்து ஓற்றுமையில்லாமல் இருந்தவர்களை விரட்ட எப்படி பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி வென்றார்களோ அதன் பிறகு பல சவாலான விசயங்களையும் இங்குள்ளவர்களை வைத்தே சாதித்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு பகுதியிலும் அந்த வட்டார சமூக அமைப்பை முன்னிலைப்படுத்தி தான் அதிகார வரம்புகளை உருவாக்கி ஆட்சி செலுத்தி உள்ளனர்.   

இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை.  அதற்கான வசதிகளும் மிகக் குறைவு.  உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு.  இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது. 


ஆனால் தொடக்கம் முதல் ஒவ்வொருவரின் பொருளாதாரம் தான் இந்த சாதி மூலக்கூற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கிய பிரச்சனைகள் தான் தொடக்கத்தில் பலரையும் மதம் மாற வைத்தது.  ஆனால் அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சனைகளை சந்தித்து எப்படியோ பலரும் மேலேறி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையோர மக்கள் தான் மத மாற்றத்திற்கு முதல் காரணமாக இருந்தனர்.  இப்போது நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இராமநாதபுர மாவட்டத்தில் தொடக்கத்தில் ஒன்று சேர்ந்திருந்த திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். இங்கு ஆதிக்கம் செலுத்திய நாடார் இன மக்கள் மற்றும் அவர்கள் வாழ்வியலில் சந்தித்த சவால்களில் இருந்து நம்மால் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்... தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இது போன்ற இடத்தில் இருந்து தான் தங்களின் புனிதப் பணிகளை தொடங்கினர். 

1600 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் உள்ள வந்த ஆங்கிலேயர்கள் வணிகத்தில் எப்படி கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே 1680 முதல் கிறிஸ்துவ பாதிரியார்கள் ஒரு பக்கம் அவர்கள் வேலையை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் கல்வி என்ற சேவை மனப்பான்மை.  மற்றொரு கையில் பைபிள் என்ற மதமாற்றம்.  இவர்களிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் சமூக வாழ்விலும் பல வகையிலும் முன்னேறத் தொடங்கினர். ஈழத்திலும் குறிப்பாக யாழ்பாணபகுதியில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் இரண்டு தலைமுறைக்குள் முறையான இடத்தை பிடித்தனர்.  இது போன்ற சமயத்தில் தான் ஈழத்திற்கும் இந்த பகுதிகளுக்கும் மிக நெருக்க உறவு உருவானது. 

1830 முதல் ஈழத்தில் உருவாக்கப்பட்ட காபி தேயிலை தோட்டங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள் இந்த அகண்ட இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தான் புலம் பெயரத் தொடங்கினர். 1843 முதல் 1867 முதல் ஏறக்குறைய 15 லட்சம் பேர்கள் ஈழத்திற்கு புலம் பெயர்ந்தனர். சம்பாரித்தவர்கள் திரும்பவும் வந்து பல இடங்களில் இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு சமூகத்தின் பார்வையில் தங்களை மேம்பட்டவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். இதன் தொடர்ச்சி தான் 1833 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு ரப்பர் தோட்டம் அமைக்க ஆட்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டனர்.

இலங்கை, மலேசியாவில் தொடக்கத்தில் குடியேறியவர்கள் அத்தனை பேர்களும் நாடார் இன மக்களே. குறிப்பாக வாழ வழியில்லாமல் இருந்த திருச்செந்தூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் அதிக அளவில் இது போன்ற வேலைக்கு நகரத் தொடங்கினர்.

நாடார் இன மக்கள் முறைப்படியான கல்வியறிவு இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காரணத்தால் வெள்ளையர்களின் பார்வையில் நாடார்கள் இன மக்கள் சற்று விகாரமாகத்தான் தெரிந்தார்கள். பனைமர தொழில்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த இந்த பகுதி மக்களின் கால் கைகள் போன்றவைகள் கூட வினோத வடிவில் இருந்தது.

ஏறக்குறைய நாடார் இன மக்களின் தொடக்க கால வாழ்க்கை என்பது  மற்றவர்களால் வெறுக்கப்பட்ட குணாதிசியங்கள் உள்ளவர்களாகத்தான் வாழ்ந்து இருக்கின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கைப்பாடுகளுக்கு தேவைப்படும் திறமையைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளவும் இல்லை.  வளர்த்துக் கொள்ள ஆசையில்லாமல் ஒவ்வொருவரும் ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் வாழ்ந்து இருக்கின்றனர். கருப்பு நிறத்தோற்றமும், காதுகளில் கனமாக ஈயத்திலான ஆபரணங்களும் போட்டு பழகிய காரணங்களினால் பெண்களின் காதுகள் தோள் வரைக்கும் தொங்கிக் கொண்டு வினோத வடிவில் இருந்தது. இதைத்தவிர பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்றொரு சட்டம் வேறு. அதையும் திருவிதாங்கூர் பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஆங்கிலேயப் பெண்மணி தான் மாற்றி கடைசியாக தொள தொள ரவிக்கையை அறிமுகம் செய்து ஒரு மாற்றத்தை உருவாக்கினார்.  

19 ஆம் நூற்றாண்டில் தான் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கை சற்று மேலேறத் தொடங்கியது.  காரணம் ஆங்கிலேயர்கள் இந்த பகுதிகளுக்குள் உள்ளே வருவதற்குள் ஆண்டு கொண்டிருந்த பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் என்று ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்த பகையும் விட முடியாத போர்களும் பல விதத்திலும் தொந்தரவாக இருந்தது.  இதற்கு மேலும் பாரபட்சமான அணுகுமுறைகள் பலதும் உண்டு. 

எந்த சாதியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மேலே இருந்தவர்களின் கெடுபிடிதனத்தை மீறி சாதாரணமக்கள் மேலே வரவேண்டும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. சாதாரண மக்கள் தங்களின் வணிக மேம்பாட்டிற்காக ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொள்ளையர்களின் அட்டகாசம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் உள்ளே வந்ததும் தான் கண்டதும் சுட உத்தரவு என்று உருவாக்கி ஒரு வழிக்கு கொண்டு வந்தனர்.  

கிறிஸ்துவ பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாக கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாக கிறிஸ்துவத்தை பரப்ப ஆரம்பித்தனர்.  1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர்.  முதல் முதலாக நாடார்  இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார். இதைப் போல ராயப்பன் என்பவர் 1784 ஆம் ஆண்டு இரு குடும்பங்களை திருமுழுக்கு அளித்து திருச்செந்தூர் அருகே உள்ள கிராமமக்களை புரொட்டஸ்டான்ட் என்ற கிறிஸ்துவ மதப்பிரிவின் தொடக்கத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த மதமாற்றம் அத்தனை எளிதாக நடக்கவில்லை. பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தல்கள் அந்த அளவிற்கு இருந்தது.  சாத்தான்குளத்தில் பிறந்த சுந்தரம் என்பவர் தான் தன்னுடைய பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டு நாடார் சமூகத்தில் முதல் மத போதகராக மாறியவர். இவரின் சாவும் மர்மத்தில் தான் முடிந்தது. 

1810 ஆம் ஆண்டு இராமநாதபுர மாவட்டத்தில் உருவான வெள்ளப்பெருக்கில் உருவான காலரா, மலேரியா நோய்க்குப் பிறகு உண்டான அழிவுகளைப் பார்த்த மதகுருமார்கள் பள்ளிக்கூடங்களை கட்ட கிறிஸ்துவம் இந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது. நிலங்களும், பனை மரங்களும் தராத வாழ்க்கையை இந்த கல்விக்கூடங்கள் கொடுக்க ஆரம்பித்தது. பலரும் மதம் மாறத்தொடங்கினர். 1877 ஆம் ஆண்டு உருவான பஞ்சத்திற்குப் பிறகு திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மதமாற்றம் இரண்டு மடங்கு அதிகமாகி தங்களின் பராம்பரிய கலாச்சாரத்தை விட்டொழித்து முழுமையாக கிறிஸ்துவத்திற்கு அர்பணிக்கும் தலைமுறையாக மாறத் தொடங்கினர். இதில் மற்றொரு சிறப்பு அம்சமும் இருந்தது.  எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டு புதிய மனிதராக சமூகத்தில் மாறத் தொடங்கினர். அவர்களின் எண்ணங்களில் ஆழமாக இந்த கிறிஸ்துவம் ஒன்றிப் போனதாக மாறத் தொடங்கியது..