அஸ்திவாரம்

Thursday, November 18, 2021

திராவிட கட்சிகளின் இந்து ஆலய அபகரிப்பு அரசியல் - ஹெச் ராஜா - H.Raja

எங்கள் குழுவினர் அழைத்த போது மறுக்காமல் உடனே ஏற்று வந்து பேசினார் மரியாதைக்குரிய ஹெச். ராஜா அவர்கள். 

எனக்கு இந்தத் தலைவர் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்லக்கூடியவர்கள் அனைவரும் இந்த உரையைப் பொறுமையாக கேட்க வேண்டும்.  

பத்திரிக்கையாளர்களுடன் எப்போதும் மல்லுக்கட்டும் திரு. ராஜா அவர்கள் இந்தப் பேச்சில் ஞானி போல ரிஷி போல ஆசிரியர் போல அமைதியாக பேசி உள்ளார். 

கட்சி பாரபட்சம் இன்றி கோவில்கள், அதன் அமைப்பு, சொத்துக்கள் எப்படிச் சூறையாடப்பட்டது என்பதனை அழகாக புரிய வைத்துள்ளார். 

பக்தியை நம்பக்கூடியவர்கள் அவசியம் இந்த உரையை முழுமையாக கேட்க வேண்டும். 

தமிழகம் முழுக்க எத்தனை கோவில்கள் உள்ளன? 
அதற்கு எத்தனை ஆயிரம் லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன? 
தற்போது என்ன நிலையில் உள்ளன? 
ஏன் சிலைகள் திருடப்படுகின்றது? 
யார் காரணம்? 
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள்? 
மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவில்கள் மூலம் சூறையாடப்பட்ட சொத்துக்களின் அளவு சுமார் 10 லட்சம் கோடி 

என்றால் நம்ப முடிகின்றதா? கேட்டுப் பாருங்களேன்.

1 comment:

  1. தெளிவான, ஆதாரங்களுடனான பேச்சு.  நிதானமாக எடுத்துரைக்கிறார்.  இந்துக் கோவில்களின் கதி என்ன ஆகுமோ..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.